இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை - தொடர்
சங்க இலக்கியத் தொடர்கதைகள்

யாழிசை கேளாமல்...- பகுதி - 8.

வாசுகி நடேசன்


"மாலை முன்றில குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித் தம்ம பாணனது யாழே" (ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து)

கார்கால வரவுக்காய் முல்லை காத்திருக்கிறாள். அவளைப் பிரிந்து பாசறைக்குச் சென்ற அவள் கணவன் மாறன் திரும்ப இன்னும் சிலகாலம் இருந்தது. அவனது பிரிவு முல்லைக்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது. பனியில் நனையும் மலர் போன்ற கண்களில் பசலை படர்ந்து கண்கள் முன்னைய அழகை இழந்துவிட்டன. அவன் நினைவு வாட்டியதால் புறத்தில் உள்ளவையெல்லாம் அவளுக்கு வெறுப்பைத் தந்தன. வெறுமை அவள்மனதில் குடிகொண்டது.

அப்பொழுதுதான் முல்லையின் தோழி பாணன் கீரனைக் கண்டாள். கீரன் ஒரு மாணாக்கன். நாடோடியாய் யாழ் இசை கற்றுக்கொண்டு திரியும் அவன் மாறனிடம் முல்லையின் நிலையை உரைப்பான் என அவள் நம்பினாள். அவள் கீரனை அழைத்துப் போய் முல்லையை அறிமுகம் செய்து வைத்தாள்.

“பாணனே கருமேகங்கள் திரண்டு மழை பொழிந்து கார்கால வருகையைச் சொல்லுகின்றன. கார்காலம் என்பதை நிரூபிப்பது போல முல்லைப் பூக்களும் பூத்துக் குலுங்குகிறது. ஆனிரைகளை மேய்க்கும் கோவலர்கள் முல்லை மலர்களைத் தொகுத்துப் படலை மாலைகளாகக் கட்டி மகிழுகிறார்கள். ஆனால் என் கணவனைப் பிரிந்திருப்பதால், இந்த மாலை எனக்குத் துன்பத்தையே மிகுவிக்கிறது. சொல் பாணா, பல இடங்களிலும் சுற்றித்திரியும் உனக்குத் தெரிந்திருக்கும். என் கணவனது பாசறை அமைந்திருக்கும் சிறுமலையிலும் இந்தமாலை இவ்வாறுதான் இருக்குமா?“ குழந்தை போல வினவும் முல்லையின் மொழி அவன் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிறது.


அவன் முல்லைக்காக மாறனிடம் தூது செல்ல உடனே சம்மதித்துக் கொண்டான்.

கீரன் மாறனிடம் செல்கிறான். அங்கு முல்லையிடம் இருந்து அவன் வருகிறான் என்று தெரிந்ததும் அவன் தன்னிடம் வந்த நோக்கத்தை மாறன் விளங்கிக் கொள்கிறான்.

“நான் இங்கு காலம் கடத்துகிறேன் என்ற என் கொடுமையை அவள் தூற்றுகிறாள். வாடிய முகத்துடன் இருக்கிறாள். வேறெந்த நினைவுமின்றி என்னையே நினைத்திருக்கிறாள். என் விருப்பம் மிக்க காதலி, பிரிவு நோயால் மெலிந்து போயிருக்கிறாள். பாணா, இதனைத் தானே நீ சொல்ல வந்தாய்” எனப் படபடப்பாக மாறன் கொட்டித் தீர்த்தபோது, கீரன் சிறிது வியப்பை அடைகிறான்.

ஆனாலும் இவ்வளவு தெரிந்தும், முல்லை வருந்தும் வகையில் அவளைப் பிரிந்து வந்தமை கோபத்தைத் தருகிறது. உண்மையில் அந்தக் கோபத்தில் நியாயம் இல்லைதான், கீரன் மிகவும் இளமையாக ,விடலைப் பருவத்தினனாக இருந்தான். அதனால், அவனால் மாறனின் கடமை உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை.

“மாறா, நான் உன் பாணனும் அல்ல, நீ என்புரவலனும் அல்ல. உன் மனைவியின் துன்பங்களை அறிந்தும் இரக்கமற்று இருக்கிறாய்” என அவனைத் திட்டித் தீர்க்கிறான்.

மாறனும் கீரனின் முதிராத மனநிலையைப் புரிந்து கொண்டவனாக அவனைச் சமாதானப்படுத்துகிறான்.

“பாணா, என்னை மன்னித்துக் கொள். நீ என்னவளைப் பற்றி மேலும் சொல். நீ சொல்பவை என் காதுகளுக்கு இனிமை தரும். பல நாடுகள் இடைப்பட்ட தொலைவில் இருக்கிறேன். வாடைக் காற்று பனித்துளி கலந்து வீசுகிறது. தனிமையை எண்ணி நொந்து கொண்டிருக்கிறேன். இந்த வேளையில் என் பனிமலர் நெடுங்கண்ணாள் கூறிய செய்திகளை எனக்குச் சொல்!” மாறனின் உற்சாகம் கீரனையும் ஒட்டிக் கொள்கிறது.

அவன் மாறனையும் முல்லையையும் வைத்துக் காதல் கீதம் பாடுகிறான். யாழிசையில் முல்லைப் பண் குழைந்து இழைந்து சுகம் செய்கிறது. மாறன் அந்த இசையில் மயங்கியபடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து போகிறான். பிரிவு கூட ஒரு வகையான இன்பம் என்பதை அவன் உணர்கிறான்.

காலங்கள் ஓடி மறைகின்றன. இன்று கீரன் மாணவன் அல்லன். தேர்ந்த யாழிசைக் கலைஞனாகவும் பாடகனாகவும் பரிமளிக்கிறான். மாறனும் பெரும் குடும்பஸ்தனாக மாறிவிட்டான். அவனுக்கு இன்று குழந்தைகள் உண்டு. ஆனாலும் கீரனுக்கும் மாறனுக்கும் இடையே அன்று தோன்றிய உறவு இன்னும் தொடர்கிறது.


கீரன் முற்றத்தில் அமர்ந்து யாழை மீட்டியபடி முல்லைப் பண்ணைப் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் யாழில் இருந்து பிறந்த இனிய இசை மாறனின் முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த மானைக் கவர்ந்திருக்க வேண்டும். அது புல் மேய்வதை விட்டுவிட்டுக் கண்களை மூடிப் படுத்துக் கொள்கிறது. மான் கூட இசையை ரசிப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

முற்றத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் மாறன் அமர்ந்திருக்கிறான். அவனருகில் முல்லை அவனுக்குத் தாம்பூலம் வழங்குகிறாள். அவர்கள் மகன் கபிலன் மாறனின் நெஞ்சில் ஏறி விளையாடியபடி மழலை பேசுகிறான். அம்மழலை மொழியில் மயங்கிய மாறன் குழந்தையை அள்ளி எடுத்து மடியில் வைத்தணைத்தபடி, கண்ணே மணியே என உரத்தக் குரலில் கொஞ்சுகிறான். சிரிப்பும் குதூகலமுமான அப்பொழுதில் கீரனின் யாழிசை நலிந்து போகிறது.

யாழ் இனிமையும், குழல் இனிமையும், குழந்தையின் மழலை மொழி முன்பு தந்தைக்குத் தோற்றுப் போவது இயல்புதான்.

ஆனால்... கீரனுக்குத் தன் இசையில் நனையாதவர் முன்பு பாடுவது மனதின் ஒரு மூலையில் வலியை ஏற்படுத்தியது… அவன் யாழைக் குழந்தை போல் அணைத்தபடி மௌனமானான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/classicalliterature/p8.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License