இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள்

நாங்குநேரி வாசஶ்ரீ


1. அந்தப் பையன் யார் தெரியுமா?

தாமிரபரணிக்கரையில் அமைந்திருக்கும் அந்த ஊரில் அன்று தேர்த் திருவிழா. கரைபுரண்டு ஓடும் வெள்ளம் போல தெரு முழுக்கக் கூட்டம். எல்லார் வீட்டு அழிக்கம்பிகளுக்குள்ளிருந்தும் ஈசிச் சேரில் அமர்ந்திருந்த வயசான பெரிசுகளும் சின்னக் குழந்தைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

ராமனாதன் தன் வீட்டுத் திண்ணையில் நின்று பேரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னிக்கு என்ன விழா தெரியுமோ? தேரோட்டம். தேரோடற வீதிக்கெல்லாம் ரத வீதினு பேரு. நாலு வீதிலயும் சுத்தி வந்து தேர் நிலைக்கு வந்திடும். இந்தக் கூட்டத்துல என்னால தேர் வடம் பிடிக்கறதக் காட்ட கூட்டிண்டு போக முடியாது. நீ தனியாப் போறதும் தப்பு. பேசாம நாம இங்கே நின்னு பாக்கலாம். நம்ம வீட்டுப் பக்கத்துல தேர் வந்தப்புறம் மாடி பால்கனில நின்னு பாத்தா மொத்த கூட்டத்தையும் பாக்கலாம். இப்போதைக்கு இங்க உக்காந்து பாட்டி பண்ணின வடையச் சாப்பிடு.

துபாயிலிருந்து வந்திருக்கும் பத்து வயது நிதினுக்கு வெளியில் போகவேண்டும் என ஆசை. தாத்தா விட மாட்டார்.

அம்மா அப்பாக்கு லீவு இல்லன்னு என்னய மட்டும் விட்டுட்டு போயிட்டாங்க. இந்த தாத்தா போர். சேப்டி சேப்டி னு எங்கயும் போக விடமாட்டேங்குறார்.

வாசலில் டுர் டுர் என்ற சத்தத்துடன் கலர் கலர் மிட்டாய் விற்பவர்கள், சைக்கிளில் வைத்து ரப்பர் , பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பவர். குச்சி ஐஸ் வியாபாரி, சவ்வுமிட்டாய், பலூன்கள், பூ விற்பவர்கள் எத்தனை பேர். கொஞ்ச நேரத்தில் பைப்பில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேர் இழுப்பவர்களுக்கு கால் சுடக்கூடாதாம். பாவம் பாட்டி கஷ்டப்பட்டு போட்ட கோலம் தண்ணீரில் கரைந்தது.

போஸ்ட் கம்புகளில் ஏறி மின்சார ஒயர்களின் கனெக்சனைத் துண்டித்துக் கொண்டிருந்தார்கள்.

இனிமே தேர் வீதியக் கடந்தாதான் கரண்ட். வேர்த்துதுன்னா நீயும் ஒரு ஓல விசிறி வச்சி வீசிக்கோ. பேரனை உபசரித்தார் தாத்தா.



அழிக்கம்பியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு எட்டிப் பார்க்க முயன்றான் நிதின். கம்பி அருகருகே இருந்ததால் அவன் மூக்கு மட்டும் வெளியே நீட்ட முடிந்தது.

ஒவ்வொரு முறை அவன் மூக்கு வெளியில் நீளும் போதும் ஒரு ஈ வந்து அதில் அமர்ந்தது. ஓரிருமுறை பயந்த அவன் அதையே விளையாட்டாக ஆக்கிக் கொண்டான். அவன் உள்ளே நிற்கும்போது அந்த ஈ வீட்டுவாசலில் நிற்கும் பம்பாய் மிட்டாய்க்காரனின் மிட்டாயில் மொய்க்கும்.

பம்பாய் மிட்டாய். நினைச்சாலும் போய் வாங்க முடியாது. வாச் நெக்லஸ் அஞ்சே ரூபாய். போட்டு அழகு பாத்துட்டு சாப்பிட்டுட்டு போங்க. பம்பாய் மிட்டாய். கூவிக்கொண்டே வந்து நிற்கும் தன் வயதொத்த பிள்ளைகளிடம் பணம் வாங்கிக்கொண்டு பையிலிருக்கும் மிட்டாயைக் கையில் வாட்ச் மற்றும் கழுத்தில் நெக்லஸ் அணிவித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச தூரம் போனவுடன் அப்பிள்ளைகள் அவற்றை உருவி எடுத்து சாப்பிட்டுக்கொண்டே சென்றனர்.

தனக்கும் சாப்பிட ஆசைதான். முடியாதே. ஏ...ஈயே நீ திருட்டுத்தனமா நக்கிட்டு வரியே அதோட டேஸ்ட் எப்டி இருக்கு...நிதின் வெகு சுவாரசியமாக மூக்கின் மேல் அமர வந்த ஈயுடன் பேச ஆரம்பித்தான்.

அவன் பேசியது ராமனாதனுக்கு சரியாகக் காதில் விழாததால், நல்ல பிள்ளை. பஜனை பாடுகிறாயா பாடு என தன் பங்குக்குக் பாடிக்கொண்டே உள்ளே எழுந்து போய்விட்டார்.

மீண்டும் வெளியில் பார்க்க ஆரம்பித்தான் நிதின். எப்படி முயற்சி செஞ்சாலும் ரெண்டு பக்கமும் வரிசையா வீடுகள்இருக்கற இந்த தெருவுல நேரெதிரே நடப்பதுதான் நல்லாத் தெரியுது. தள்ளி இருக்குற கோவில எட்டித்தான் பாக்கணும். இந்த அழிக்கம்பிகளால எட்டிப்பாக்க முடியாது. செம போர்.

வெகு நேர முயற்ச்சிக்குப்பின் தூரத்தில் நடப்பது ஒன்றும் தெரியாததால் நேரெதிரே இருந்த ஆளில்லா எதிர் வீட்டைப் பார்க்க ஆரம்பித்தான் நிதின்.

தொடக்கத்திலிருந்து இவனையேக் கவனித்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு இசக்கியம்மாள் அங்கிருந்த மகராசியம்மாளிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

நேரெதிர் வீட்ல வந்திருக்காம்ல அவன் தான் அந்த அய்யாவோட புள்ள வயத்துப்பேரன். உருளக்கிழங்கு கணக்கா இருக்கான் பாத்தியா. எங்கயோ தூர தொலைவுல இருக்காம்னு சொன்னாவ. நம்ம ஓனர் சின்னத்தாயி இருக்கால்ல அவ பேசிக்கிட்டிருந்ததக் கேட்டேன். படிப்பு படிப்புனு எப்பமும் ஊர்ப்பக்கமே எட்டிப்பாக்காத இவுக அப்பா இப்பந்தான் புத்தி வந்து தன் புள்ளயாவது எல்லாத்தையும் தெருஞ்சிக்கிடட்டும்னு ஊர்ப்பக்கம் கூட்டிக்கிட்டு வருதாம்.


பெரியய்யா வெள்ளையத்தேவர் இருக்கையில இப்படியா இருக்கும் திருவிழா.

இப்டி ஒரு சின்னப் புள்ள வீட்டுக்குள்ளார நிக்க முடியுமா. தெருவோட கத்திக்கிட்டே போவாரு. எல்லாப் புள்ளைங்களும் எம்பொறத்தால வாருங்க. நாம் பதனமா கூட்டிப்போயி தேர் காமிச்சுக் கூட்டிக்கிட்டு வாரேம்னு. திரும்பி வாரேல பிள்ளங்க எல்லார் கையிலயும் தின்பண்டம் வெளையாட்டுச் சாமான்னு ரொப்பில்ல கூட்டிக்கிட்டு வருவாக. பெத்ததுங்களும் நம்பிக்கையா அனுப்பி விடுமே. நம்மள விட ஐயா நல்லா பாத்துக்கிடுவாருனு. அதெல்லாம் ஒரு காலம். இப்பல்லாம் நம்பிக்க செத்துப்போச்சு.

இல்லன்னா நான் இப்டி அழிக்குள்ள கெடந்து சீரளியுவேனா சொல்லு.

சரி அண்ணாச்சி அத விடுங்க நாங்கல்லாம் இப்பந்தானே வந்தோம். உங்க அளவு எங்களுக்கு எதுவும் தெரியாதுல்ல. முன்ன நீங்க எம்புட்டோ பாத்திருப்பீக. அதப்பத்தி சொல்லுங்களேன். நேரம் போவும். பேச்சை திசை மாற்றியது சிமெண்ட் தூணும், அழிக்கம்பிகளும் சொல்லுதேன். இந்தாப் போறாம்ல. பிளாஸ்டிக் பொம்ம விக்குதவன். இவன் அய்யாதான் மரிக்கொழுந்து விக்குத மாசாணம்.

அப்பமெல்லாம் தேருக்கு மொத நாள் ராவே வியாபாரிங்க வந்து எல்லார் வீட்டுத் திண்ணையிலயும் படுத்துக்கிடுவாக. அப்டி தான் ஒரு நாள் இவனும் வந்து இங்க படுத்துக்கிட்டான். அதென்னம்போ தேரன்னைக்கு மரிக்கொழுந்து வாங்கி தலையில வச்சிக்கிட்டா நல்லதுன்னு நெனச்ச காலம். இவன் போறாத காலம்


அப்பந்தான் அது நடந்திச்சு.

இந்தா இருக்குல்ல கல்லு படி. அங்ஙன மரிக்கொழுந்து பொட்டிய வச்சிப்போட்டு ஆத்தாகிட்ட ஒரு சொம்பு தண்ணிய வேங்கி குடிச்சிப்போட்டு தெருமுக்குல போடுத படத்தப் பாக்க போயிருக்கான். அப்பமெல்லாம் தேர் அன்னிக்கு மொத ராவே சுத்துப்பட்டி கிராமம் பூராவும் வந்து தங்குமில்ல. அதுக பொழுது போக்குததுக்காவ முக்குல திரை கட்டி சினிமாப் படம் போடுவாக. அத்தினிபேரும் குடும்பத்தோட துண்ட மண்தரையில விரிச்சு ஒக்காந்து படம் பாப்பாங்க. இதுல வயசான ஆச்சிமாருங்க படத்துக்குக்கூட வசனம் வேர பேசுவாக. ஒண்ணு ரெண்டு ஒப்பாரியும் வைக்கும். அப்டித்தான் மாசாணம் போகையில வேலுண்டு வினையில்லை சாமி படம் போட்டாங்களாம். கூட்டமே முருகா முருகா னு கத்திக்கிட்டு பரவசமா இருக்கையில எவனோ களவாணிப்பய நம்ம கோடிவீட்டு மூக்காச்சி பாம்படத்த காதோட அத்துட்டுப் போயிட்டானாம். ஆச்சி வலி தாளாம கத்துததப் பாத்து படத்துல சாமி வேலக் களவாண்டதுக்காவ அழுதானு நெனைச்சி பக்கத்துல இருந்தவ திருநீறத் தலையில போட்டிருக்கா போல. வலி தாங்காம ஆச்சி எந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சிடுச்சு. முன்ன ஒக்காந்த மாசாணம் தனக்கு தெரை மறைக்குதுன்னு சொல்லி ஆச்சியக் கையப் பிடிச்சி ஒக்காரச்சொல்லிட்டாம்போல. பொறவுதான்தெரிஞ்சது சேதி. அவன் கத்தி கதவடைச்சு எல்லாரையும் கூட்டி ஆச்சிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவதுக்கு ஒதவி செஞ்சிருக்கான். கடைசியில பழி அவன் மேலயே விழுந்துபோச்சு. ஆச்சி பாம்படத்தக் களவாண்டுக்கிட்டு ஒதவி செய்யுதது கணக்கா நடிக்காம்னு ஆளாளுக்கு பேசி அவனப் போலிசுல புடிச்சுக்குடித்தாட்டாங்க. நம்ம தேவரய்யா தான் போயி அபராதப்பணம் கட்டி அவன வெளியக் கொண்டு வந்தாக. அன்னிக்குப் போனவன்தான். அப்புறம் இந்த தெசப்பக்கம் திரும்பிக்கூடப் பாக்கல. இம்புட்டு வருசத்துக்குப் பொறவு அவன் புள்ளயப் பாக்குதேன்.

அவன் பொம்மையக் கொண்டு எறக்குதாம்ல. அந்த வீட்டுக் கதையச் சொல்லவா என்று இசக்கியம்மாள் கேட்க, மகராசியம்மாள் நாளைக்கு வந்து அந்தக் கதையைக் கேட்பதாகச் சொல்லிச் சென்றாள்.

(இசக்கி ஆச்சியின் கதைகள் இன்னும் இருக்குது...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/esakki/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License