இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


42. உணர்வுகளின் வெளிப்பாடு

ஊட்டி காவல் நிலையத்தில் அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக ஒருவித சோக அலை அடித்துக் கொண்டிருந்தது. எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆனந்தும் அமுதாவும் பல மாதங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், பார்க்க முடியாமல் திணறினார்கள். தலை கவிழ்ந்திருந்த இருவரது கண்களில் இருந்தும் எக்குதப்பாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"அரை மணி நேரம் ஆச்சு. நீங்க ரெண்டு பேருமே இப்படி பேசாம அமைதியா இருந்தா, நாங்க எப்படி விசாரணை பண்ண முடியும். உங்களோட இந்த மவுனத்தால நாங்க வேற ஒரு முடிவு எடுத்து இருக்கோம். இந்த அறையில இன்னிக்கு முழுக்க நீங்க ரெண்டு பேரும் மட்டும்தான் இருக்கப் போறீங்க. முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனம்விட்டு பேசுங்க. நாங்க விசாரணைக்கு ஓ.கே-ன்னு நீங்க சொன்ன பிறகு நாங்க உள்ளே வர்றோம்" - இப்படிச் சொல்லிவிட்டு, சக போலீஸாரை அழைத்துக் கொண்டு வெளியேறினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

இப்போது அந்தக் காவல் நிலைய அறையில் ஆனந்தும் அமுதாவும் மாத்திரமே இருந்தனர். நீண்ட நேரம் மவுனத்துக்குப் பிறகு இருவரும் நேருக்குநேராகப் பார்க்க முயற்சித்தனர். ஆனாலும், அவர்களுக்குள் ஏதோ ஒன்று புகுந்து கொண்டு தலைநிமிர விடாமல் தடுத்தது. இரண்டு பேருக்குள்ளுமே குற்ற உணர்ச்சி! "அன்னிக்கு மட்டும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அமுதாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி, அவளையே கல்யாணம் பண்ணி இருந்தா... இப்படியொரு துர்பாக்கிய நிலை அவளுக்கு வந்திருக்காதே..." என்று ஆனந்த் மனதுக்குள் குமுற... "என்னை முழுசா புரிஞ்சிக்கிட்ட ஆனந்த்தான் எனக்கு வேணும்னு அன்னிக்கு உறுதியா இருந்திருந்தா, நம்ம வாழ்க்கையும் இப்படி ஆகி, என்னையே உயிருக்கு உயிரா காதலிச்சு, வாழ்க்கையில தோத்துப் போயிட்டதா நினைச்சுட்டு வாழ்ற இந்த ஆனந்த்க்கு அப்படியொரு நிலை வந்திருக்காதேன்"னு மனதுக்குள் விம்மி விம்மி அழுதாள் அமுதா.



எவ்வளவு நேரம் இருவரும் அழுது தீர்ப்பது? நேருக்கு நேராகப் பேசும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சோகம் அப்பிய முகத்தோடு இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

பல மாதங்களுக்குப் பிறகான அவர்களின் பார்வை மோதலில் எப்போதும் இல்லாத உணர்ச்சிகள் சுனாமியாய்ப் பொங்கியெழுந்தன. வார்த்தைகள் எங்கோ ஓடிப்போய் ஒழிந்து கொண்டன. நா வறண்டு போனது. தொண்டைக்குழிக்கு மேலே எந்த உணர்ச்சியும் இல்லை. அழுகை மாத்திரமே ஆக்ரோஷமாய் வெடித்துக் கொண்டு வந்தது. குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். அவர்களின் அழுகை, காவல் நிலையத்தின் கான்கிரீட் கூரையையும் பிய்த்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தது.

பாவம்... அவர்கள்! மனதுக்குள் தேக்கி வைத்த சோகங்களை அழுதாவது கரைக்கட்டும் என்று மனதுக்குள் நினைத்து, அமைதியாகவே இருக்கையில் இருந்து கொண்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

மறுபடியும் அரை மணி நேரம் ஓடியிருக்கும். அழுது அழுது ஓய்ந்து போனவர்கள், ஒருவர் மீது ஒருவர் ஆறுதல் பார்வை வீசி நெருங்கி வந்தனர். ஓடிவந்து கதறியபடி கட்டிப்பிடித்து இன்னும் இன்னும் அழ வேண்டும் என்பது போல் இருந்தது, இருவருக்கும்! ஆனால், அமுதாவின் கழுத்தில் ஆதரவின்றி தொங்கிக் கொண்டிருந்த தாலி என்னும் வேலி அவர்களை பிரித்து வைத்தது. உள்ளங்கைகளை முடிந்த மட்டும் இறுக மூடிக்கொண்டாள் அமுதா. ஆனந்தோ, காவல் நிலையத்தின் சுவரில் சாய்ந்து கொண்டு, இரு கைகளாலும் சுவற்றில் குத்தி, உணர்ச்சிகளை விரட்டியடிக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தான்.



அந்த நேரம் -

யாரோ அறையின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது. போலீஸார் யாரும் வரவில்லை. கலங்கிய கண்களுடன் வந்து நின்றாள் ஷ்ரவ்யா.

ஆனந்தையும் அமுதாவையும் மாறிமாறி பார்த்தவள், ஆனந்த் அருகில் வந்தாள். அவனுக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டு, கவிழ்ந்து கிடந்த அவனது தலையை நிமிர்த்த முயன்றாள். பலமான முயற்சிக்குப் பிறகே அவளுக்கு வளைந்து கொடுத்தான் ஆனந்த்.

ஒரு மணி நேர அழுகையில் அவன் கண்களும் கன்னமும் வீங்கிப் போய் இருந்தன. தொடர்ச்சியான வெளியேற்றல் காரணமாக வறண்டு போன அவனது கண்களின் கண்ணீர் குளம், பாலைவனமாய் வறண்டு கிடந்தது. கண்ணீரை தொலைத்த அந்தக் கண்களில் ஆறுதலாய் தனது விரல்களால் வருடி விட்டவள், அடுத்ததாக அமுதா பக்கம் வந்தாள்.

இப்போதுதான் அமுதாவை முதன் முதலாக நேருக்கு நேராகப் பார்க்கிறாள் ஷ்ரவ்யா. அவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் அவள் அழகியாகவே இருந்தாள். அவளை ஆதரவாய் ஷ்ரவ்யா பார்க்க... அவளைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் அமுதா. ஷ்ரவ்யாவின் ஆறுதல் பேச்சுக்களுக்கு நீண்ட நேரத்துக்குப் பிறகே பலன் கிடைத்தது. ஆனந்தும் அமுதாவும் பேசுவதற்கு தயார்படுத்தப்பட்டார்கள்.

ஆனால், அதற்குள் போலீஸ் விசாரணை குறுக்கே புகுந்துவிட்டது. வெகுநேரம் வெளியே காத்திருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், லேப்-டாப் சகிதமாக அறைக்குள் வந்தார்.

அங்கிருந்த மேஜையில் லேப்-டாப்பை வைத்தவர், அந்த வீடியோக் காட்சிகளை மறுபடியும் ஓடவிட ஆயத்தமானார். விசம் என்று நினைத்து தேனை பெப்சி பாட்டிலுக்குள் ஊற்றிவிட்டு ஆனந்த் வெளியேறிய காட்சிக்குப் பிறகு பதிவானவை ஒளிபரப்பாயின.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5ap.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License