இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


46. முடிவுதான் என்ன?

மறுநாள் மதியம் 12 மணி. ஆதவனின் உக்கிரத்தை வழக்கம்போல் துரத்திவிட்டுக் குளுமையாக இருந்தது ஊட்டி. விசாரணை முடிந்து கோர்ட்டில் இருந்து ஜோடியாக வெளியேறினர் ஆனந்தும் அமுதாவும்! அவர்களுக்குப் பின்னால் கையை பிசைந்தபடி வந்தாள் ஷ்ரவ்யா. அவளது முகத்தில் ஏகத்துக்கும் குழப்ப ரேகை ஓடியது. லேசாக வீங்கிப்போய் இருந்த அவளது கன்னங்கள், முந்தைய இரவு அவள் தூக்கத்தை தொலைத்திருந்ததை உறுதி செய்தன. ஆனாலும், அவளது கண்களில் லேசான நம்பிக்கை இழையோடியது. ஆனந்த் தனக்கு கிடைத்து விடுவான் என்கிற அந்த நம்பிக்கை பொய்த்து விடக்கூடாது என்று அடிக்கடி தனது இஷ்ட தெய்வம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டாள்.

அமைதியாக ஆனந்துடன் நடந்து வந்த அமுதாவின் முகத்தில் நல்ல தெளிவு இருந்தது. அவளும் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தாள். அதுவும் சரியாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனந்த் தான் எந்த முடிவு எடுப்பது என்று தவித்துக் கொண்டிருந்தான்.

கோர்ட்டுக்கு முன்பு பிரமாண்டமாய் வளர்ந்திருந்த யூகலிப்டஸ் மரத்துக்கு அருகில் வந்துசேர்ந்த ஆனந்தையும் அமுதாவையும் குறுக்கிட்டு மறித்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.



“வாழ்த்துக்கள் ஆனந்த். நான் நினைச்ச மாதிரியே நடந்திருச்சு. எல்லாமே உங்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கு. நீங்க இன்னிக்கே சென்னைக்குப் போயிடலாம். ஒரு மாசத்துக்கு மட்டும் தினமும் எக்மோர்ல இருக்கற கோர்ட்ல சைன் போட வேண்டியிருக்கும். அடுத்த மாதம் இந்த வழக்குல இருந்து நீங்க முழுமையா விடுதலை ஆயிடுவீங்க. அப்படியொரு சம்பவம் நடக்கும்போது, நீங்க யாருக்காவது நன்றி சொல்லணும்னு நினைச்சா... நீங்க அழைச்சுட்டு வந்த ஷ்ரவ்யாவுக்கும், குறிப்பா அமுதாவுக்கும் சொல்லுங்க. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும்தான் உங்களுக்குச் சாதகமா வாதிட்டு இருக்காங்க. குணசீலன் தரப்பு பத்தின எங்களோட விசாரணையில, அவன் தவறான வழிகள்ல போனது உறுதி செய்யப்பட்டு விட்டதால், இந்த வழக்குல இருந்து நீங்க முழுமையாக வெளியே வந்திடலாம். இந்த சந்தோஷமான நேரத்துல, அமுதாவுடனான உங்களோட இல்லற வாழ்க்கை இனிக்க மறுபடியும் என்னோட வாழ்த்துக்கள்...” என்று சொன்னவர், சிரித்தபடியே அங்கிருந்து அகன்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷ்ரவ்யாவின் முகத்தில் திடீர் மாற்றம். தொலைக்கக் கூடாத ஏதோ ஒன்றைத் தொலைத்து விட்டதாக உணர்ந்தாள். அவள் முகக்குறிப்பை அறிந்து கொண்டு விட்டாள் அமுதா. அவள் அருகில் சென்றவள், அவளைக் கரம் பற்றி ஆனந்த் அருகில் அழைத்து வந்தாள்.

“ஷ்ரவ்யா..! வாழ்க்கையில நாம நினைக்கற எல்லா விஷயங்களும் நடந்துட்டா, நம்மளச் சுத்தி இருக்கறவங்கள மட்டுமில்ல, அந்தக் கடவுளையே மறந்துடுவோம். அதனாலதான் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் வெற்றி-தோல்விகள். நான், ஆனந்தைக் காதலிச்சப்போ, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேருவோம்ங்கற நம்பிக்கை இருந்துச்சு. ஆனா, விதி வேற மாதிரி விளையாடி, இன்னிக்கு என்னென்னமோ நடந்து, இங்கே இப்படி நிக்கறோம். அந்த விதி, என்னோட வாழ்க்கையில மட்டுமில்ல, உங்களோட வாழ்க்கையிலேயே விளையாடி, உங்களையும் இங்கே கொண்டுவந்து இருக்கு. இந்தக் கேஸை விசாரிக்க இன்ஸ்பெக்டர், நானும் ஆனந்தும் மறுபடியும் சேர்ந்து வாழணும்னு வாழ்த்திட்டுப் போறாரு. அவரோட வாழ்த்தைக் கேட்டப்போ, நான் என்னையே மறந்துட்டேன். என்னோட வாழ்க்கை முடிஞ்சிப் போச்சுன்னுதான் நினைச்சேன். ஆனா, இனிதான் ஆரம்பிக்கப் போகுதுன்னு இப்போ தெரியுது. நீங்க என்ன சொல்றீங்க ஷ்ரவ்யா?”



“எனக்கும் அப்படித்தான் தோணுது. சூழ்நிலைகளால பிரிஞ்ச நீங்க இனி, ஒண்ணா... கணவன் - மனைவியா வாழப் போறீங்க. நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கப் போகுது. உங்களோட வாழ்க்கை சந்தோசமா அமைய என்னோட வாழ்த்துக்கள் எப்போதுமே உண்டு.”

“ஒரு நிமிஷம் ஷ்ரவ்யா... நீங்க சொல்றத பார்த்தா, மனப்பூர்வமா என்னை வாழ்த்துற மாதிரி தெரியலீயே...”

“அய்யய்யோ... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நடந்த பிரச்னைகளால நானும் மன அளவுல பாதிக்கப்பட்டு இருக்கேன் இல்லீயா? அதுதான், உங்களுக்கு அப்படித் தோணுதுன்னு நினைக்கிறேன்.”

“அதெல்லாம் இல்ல ஷ்ரவ்யா. உங்க மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு இருக்கு. அதை மறைக்கறீங்க.”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல அமுதா. நான் ஆனந்தோட கால் கேர்ளாத்தான் இங்கே வந்தேன். ஆனா, அவர் அப்படியொரு தப்பான எண்ணத்தோடு என்னிடம் பழகல. ஹீ இஸ் எ ஜென்டில்மென். அவரோட வாழ்க்கை, அவரை விரும்புற பொண்ணுகூட அமையப் போகுறதுல எனக்கு சந்தோஷம் இல்லாமல் இருக்குமா?”

“உங்களைப் பார்த்தா அப்படி தெரியலீயே... நீங்களும் அவரை லவ் பண்ணுற மாதிரி அல்லவா தெரியுது.”

“அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. ஒரு நல்லவரோட கொஞ்ச நாள் பழகுறதுக்கு கிடைச்ச வாய்ப்பே எனக்கு போதும்!”

“திரும்பத் திரும்பப் பொய் சொல்றீங்க ஷ்ரவ்யா. உங்க உதடு பொய் சொன்னாலும், உங்க கண்கள் உண்மையை சொல்லிக்கிட்டே இருக்குது. உண்மையைச் சொல்லணும்னா... ஆனந்தைப் பிரியற நிலைமையில நீங்க இல்ல. அப்படியே நீங்க பிரிஞ்சா... தற்கொலை முடிவைக் கூட நீங்க எடுத்துடுவீங்களோன்னு நான் பயப்படுறேன்.”

அமுதா இப்படிச் சொன்னதும்தான் தாமதம், அதுவரை கண்களுக்குள் அடக்கி வைத்திருந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நழுவ விட்டாள் ஷ்ரவ்யா. அமுதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதாள். அவளைத் தேற்றினாள் அமுதா.

”அழாதீங்க ஷ்ரவ்யா. உங்க மனசுக்குள்ள என்ன இருக்குங்கறத வெளியே கொண்டுவரத்தான் இப்படியெல்லாம் பேசினேன். எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி, என்னவெல்லாமோ நடந்து விட்டதே..! இனி, நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கைதான் அமையணும். ஆனந்தோட வாழ நான் ஆசைப்பட்டாலும், அவரோடு மனசுல நான் இருந்த இடத்துல நீங்க படிப்படியா குடியேறிட்டீங்க. அங்கே, புதிய தாஜ்மஹாலை எழுப்பிட்டீங்க. அதனால, நீங்களும் ஆனந்தும் சேர்ந்து வாழ்றதுதான் முறை. நீங்க மட்டுமில்ல, ஆனந்த் ஆசைப்படுறதும் இதைத்தான்.”



அமுதா இப்படிச் சொல்லவும், இன்ப அதிர்ச்சியில் ஆனந்தைப் பார்த்தாள் ஷ்ரவ்யா. அவனும் ஆமாம் என்பது போல் இலேசாகப் புன்னகைத்தான். ஆனால், பேச்சுதான் வரவில்லை.

ஷ்ரவ்யாவின் கையைப் பிடித்து ஆனந்திடம் அழைத்துச் சென்ற அமுதா, ஆனந்தையும் அவளையும் கைகோர்த்து சேர்த்து வைத்தாள். ஆசைப்பட்ட காதல் ஜோடியை சேர்த்து வைத்த திருப்தி இருந்தாலும், அவள் மனம் ஏனோ வலிக்கத்தான் செய்தது.

3 மாதங்களுக்குப் பிறகு...

ஆனந்தின் மச்சான் கார்த்தி, அதாவது... ஷ்ரவ்யாவின் தம்பி வேகமாக ஓடிவந்தான்.

“அத்தான்... இந்தாங்க ப்ளைட் டிக்கெட். நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் கொண்டாட எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. ஒன் வீக் பேக்கேஜ் டூர் இது. ட்ரெயின் எல்லாம் கிடையாது. நீங்க அங்கே போறதும், வர்றதும் ப்ளைட்தான்!”

கார்த்தி தந்த பேக்கேஜ் டூர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தான் ஆனந்த். கோவா செல்வதற்கான டிக்கெட் அது.

அடுத்த நாள் அதிகாலையே எழுந்து குளித்து, ஆனந்தும் ஷ்ரவ்யாவும் சென்றார்கள், இரண்டாம் தேனிலவு!

(நிறைவுற்றது)

*****

நன்றி... நன்றி...!

முத்துக்கமலம் இணைய இதழ் வாசகர்களுக்கு... நெல்லை விவேகநந்தாவின் அன்பான வணக்கங்கள். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை இந்தத் தொடர் மூலம் உங்களோடு இணைந்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தத் தொடருக்கான வாய்ப்பு நல்கிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியரும், எப்போதும் என் நலம் விரும்பும் எனது அருமை நண்பருமான தேனி எம்.சுப்பிரமணி அவர்களுக்கும், நாவலை ஆவலோடு வாசித்து மகிழ்ந்த வாசகர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள்! மறுபடியும், இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களோடு இணைகிறேன்.- நெல்லை விவேகநந்தா.

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5at.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License