இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
சிறுகதை

எப்படிங்க எங்க காதல்?

சு. ஸ்டாலின் சீனிவாசன்


இந்த வங்கிப் பணியில் சென்னைக்கு மாற்றமாகி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. தினசரி ஆறு மணி வரை ஆகிவிடுகிறது. இன்றும் அப்படித்தான்.

"அப்புறம் என்ன? என்று தனது முக்கால் மணி நேர அரட்டையை மேலும் விரிக்க ஆரம்பித்த சந்திரனை "மணி எத்தனை?" என்கிற முடிவுரையை வாசித்துக் கிளப்பினேன்.

"மணி ஆறு. பார்க்கலாம்" என்றபடி கிளம்பினார் ரவிச்சந்திரன்.

தனது கடைசி வணக்கத்தை எனக்காகச் சேமித்து வைத்திருந்த காவலாளி முரளியிடம் வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு அலுவலகத்தை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினேன் எனது ஸ்கூட்டரில்.

எனக்காகவே காத்திருந்த சிக்னல் விழுந்தது. வழக்கம்போல் கடைநிலை மக்கள் காத்திருந்தனர். எனக்கென்னவோ அந்தப் பெயர் பிடிக்கவில்லை. பிச்சைக்காரர் என்கிற வார்த்தை தமிழில் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. என்னதான் வணிக நுணுக்கங்களுடன் வாடிக்கையாளர்களைக் கவர நினைத்தாலும் இந்த கடைநிலையாளர்களை மிஞ்ச முடியாது.

காரணம், நான் சில மதிய வேளைகளில் கவனிக்கும் அவர்களின் எண்ணிக்கை காலை மற்றும் மாலை வேளைகளில் சரிபாதியாகக் குறைந்தே இருக்கிறது. காலையின் அவசரத்தில் கோபத்தையும் மாலையில் எரிச்சலையும்தான் வாங்க முடியும் மதிய வேளைகளில்தான் இவர்களின் பசியை ஞாபகப்படுத்த முடியும். அதுவே, அவர்களது வியாபார யுக்தியாகவும் இருக்க முடியும். இறுதியாக இந்த சிக்னல் அம்பானிகள் என்னிடமும் வந்தார்கள். என்னுடனான அவர்களின் டீல் வெறும் இரண்டு ரூபாய்தான்.

அருகிலிருந்த எனது தற்காலிக சகா தனது சமூக அக்கறையை இப்படி வெளிப்படுத்தினார். " சே! இந்த பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடியலை... வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் ஒரே பிடுங்கல். டிராபிக் போலீஸ் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? என்று சொல்ல அவருடைய பேச்சுக்கு அங்கிருந்த ஒரு சிலர் ஆமாம் போட வேறு வழியில்லாமல் போலிஸ்காரர் அந்த கடைநிலை மக்களைத் திட்டி விரட்டினார்.



ஆனால் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. கோபப்பட்ட போலீஸ்காரர் தனது லத்திக் கம்பை துணைக்குப் பய்ன்படுத்தி விரட்டத் துவங்கினார்.

நல்லாப் போடுங்க சார் என்று என் அருகிலிருந்த சகா உட்பட பலரும் அந்தப் போலிஸ்காரரை உற்சாகப்படுத்தினர். எனக்கு அதைத் தடுத்துப் பேச வேண்டும் என்று எண்ணம் வந்தாலும் அந்த இடத்தில் எனக்கு அதைச் சொல்ல மனம் வரவில்லை.

ஆனால் அங்கு "என்ன சார் இப்படி அடிக்கிறீங்க... முடிந்தால் காசு போடப் போகிறோம்... இல்லையென்றால் முடியாதுன்னு சொல்லப் போறோம். இதுக்குப் போய் அவங்களை அடித்து விரட்டுறது சரியில்லை" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன்.

அது வேறு யாருமில்லை... என்னுடன் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த காயத்ரி.

இந்தக் காயத்ரியின் பெயரை எனது உதடுகள் மூன்று தடவை உச்சரித்திருக்கலாம். ஆனால் ஆயிரம் முறையாவது எனது பேனா எழுதிக் குவித்திருக்கும். என் காதலியான அவளுக்கு இது தெரிந்திருக்குமா? என் மனம் சற்று கல்லூரி காலத்திற்குத் தாவ சிக்னல் விழுந்தது தெரியாமல் இருக்க எனனை ஓரப்படுத்திவிட்டு மற்ற வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. எனக்குப் பின்னாலிருந்த நபர் தனது ஹார்ன் ஒலியைத் திருப்பித் திருப்பி அழுத்திக் கொண்டிருந்தார். அப்புறம்தான் சுயநினைவு வந்தது.

காயத்ரி முன்னால் போய்க் கொண்டிருந்தாள்.

நானும் எனது ஸ்கூட்டரின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தி காயத்ரி என்கிற எனது குரலையும் அதிகப்படுத்தினேன்.

எனது குரல் ஐந்தாவது தடவை சற்று அதிகமான போதுதான் அவளைச் சென்றடைந்தது. அவள் ஓரமாய் ஒதுங்க நானும் எனது ஸ்கூட்டரை ஓரப்படுத்தினேன்.

"ஓ வாட் எ சர்ப்ரைஸ்?" என்றபடி "எப்படியிருக்க கார்த்தி?" என்று நலம் விசாரித்தாள்.

கார்த்திகேயன் என்கிற எனது பெயரை கார்த்தி என்று எத்தனையோ பேர் அழைத்தாலும் அவள் வாயிலிருந்து வந்தது எனக்குள் ஒரு புதிய இரத்த ஓட்டத்தை தந்தது.

அந்த மாலை வேளையிலும் என் முகம் வியர்த்தது. அவள் தன் கர்சீப்பைக் கொடுத்து என் முகத்தைத் துடைத்துக் கொள்ளச் சொன்னாள்.



என்னுடைய வியர்வைத் துளிகள் அவளது கர்சீப்பால் ஒற்றி எடுக்கப்பட்டது.

கார்த்தி உங்க ஒய்ப் என்ன பண்றாங்க? பிள்ளைங்க எத்தனை? எங்க ஒர்க் பண்றீங்க? என்று கேள்விகளை ஒரே சமயத்தில் அடுக்க " நான் காலேஜில் கோல்டு மெடலிஸ்ட்தான் அதுக்காக இப்படி ஒரே சமயத்தில் இத்தனை கேள்விகளா?" என்று சொல்ல எதோ நகைச்சுவையைக் கேட்டது போல் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள்.

நான் பேங்கில் ஒர்க் பண்றேன். சென்னைக்கு மாற்றமாகி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. என்னோட மனைவி பெயர் மாலா. ஒரே பெண் சித்ரா அவ பிளஸ் டூ படிக்கிறா." என்றபடி "ஆமாம் காயத்ரி, உன்னோட கணவர் என்ன பண்றார்? உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்று எனது விசாரணையைத் தொடர்ந்தேன்.

"நானும் அவரும் இங்க ஒரே பேங்கில்தான் வேலை பார்க்கிறோம். இரண்டு குழந்தைங்க. பையன் கணேஷ் இன்சினியரிங் பைனல் இயர். பொண்ணு பிளஸ் டூ." என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

சுந்தரேசனைப் பார்த்தேன். அவர்கிட்ட உன்னை விசாரித்தேன். சொன்னாரா?" என்கிற என் மீதான அவளுடைய அக்கறையை நினைவு படுத்தினாள்.

"உம். சொன்னான்." என்ற எனது பதிலுக்கு இடைமறித்து "என்ன சொன்னார்? " என்றாள்.

காயத்ரி சென்னையில்தான் பேங்க்கில் வேலை பார்க்கிறாள். அவளோட கணவர் கூட அதே பேங்கிலதான் வேலை செய்றாராம். இரண்டு குழந்தைகளோட சந்தோசமா இருக்காங்களாம்னு சொன்னார்.

அவளுக்கு நேரமாகிறது என்பது போல் வாட்சைப் பார்த்து "அப்புறம் வருகிறேன்" என்பது போல் பார்க்க நான் என்ன நேரமாயிட்டுதா? என்று கேட்டேன்.

"ஆமாம். அவரு இங்க பக்கத்தில இருக்கிற பிரண்டு வீட்டுக்குப் போயிருக்கிறார். இந்நேரம் வந்திருப்பார். சுந்தரேசன் சொல்லியிருப்பாரே அவரு பயங்கரக் கோபக்காரர்." என்று சொன்ன காயத்ரியின் பேச்சைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. ஆமாம். காயத்ரிக்கு பொய் சொல்லக் கூடத் தெரியவில்லை.



அவள் சொன்ன சுந்தரேசன் எனக்கும் நண்பன்தான்.

"மாப்ளே, காயத்ரிக்கு கல்யாணம் ஆகலடா... உன்னைப் பத்திக் கேட்டா...உனக்குக் கல்யாணம் ஆகலைன்னு சொல்லிட்டேன். ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆயிட்டுதுன்னு சொல்லச் சொன்னா. எனக்கு உன்கிட்ட பொய் சொல்ல மனசு கேட்கல..." என்று போன மாதம் சொன்னது இன்னும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

என் மனம் காயப்படக் கூடாது என்று அவளும் அவள் மனம் பாதிக்கக் கூடாது என்று நானும் பொய் சொல்லியிருந்தாலும் ஒருவருக்கொருவர் உண்மையைக் காட்டிக் கொள்ளவில்லை.

" சரி புறப்படு காயத்ரி" என்று அவளுடைய திரிவீலரைப் பார்த்தேன். அவள் கிளம்பிப் போய்விட்டாள்.

என் காயத்ரியின் காலைப் பார்த்தால் காலிருப்பவர்கள் எனக்கு ஊனமாகத் தெரிவார்கள். எங்கள் கல்லூரி முதல்வர் எங்களுக்கு ஊக்கமளிப்பதற்காக " கடவுள் உங்கள் விஷயத்தில் சிறு தவறு செய்து விட்டார். மற்றபடி உங்களிடம் குறையெதுவுமில்லை." என்பார்.

காயத்ரி கூட தன் தோழியிடம், " நம்ம கார்த்திகேயனுடைய திறமையைப் பார்த்தால் நாங்கள் சிறந்த படைப்புதான். காலிருப்பவர்கள்தான் தவறிய படைப்புன்னு தோணுது..." என்று சொல்லும் போது நானும் கேட்டிருக்கிறேன்.

அவள் என்னைக் காதலிப்பதும், நான் அவளைக் காதலிப்பதும் எங்களுக்குள் தெரிந்தாலும் ஒருவருக்கொருவர் இதை மட்டும் மறைத்து வைத்து விட்டோம். எங்கள் நண்பர்கள் "இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே"என்று வற்புறுத்திய போதும் திருமணம் என்கிற பெயரில் ஒருவருக்கொருவர் பாரமாக இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு ஊனம் என்கிற ஒரு குறை இருந்தாலும் அது ஒருவருக்கொருவர் சுமையாகி விடக்கூடாது என்று இன்னும் ஒருவருக்கொருவர் காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படிங்க எங்க காதல்?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p19.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License