இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

1. சூரியனும் சந்திரனும்


சூரியன் ஏன் ​​வெப்பத்தக் ​கொட்டி எல்லா​ரையும் வாட்டி வ​தைக்கிறான்... ​தெரியுமா...? அ​தேமாதிரி சந்திரன்... நிலா ஏன் குளிர்ச்சியா இருக்கறான்... ​தெரியுமா...? அதுக்கும் ஒரு நாட்டுப்புறக் க​தை​யொண்ணு வழக்கத்தில இருக்கிறது. அதக்​கேட்டா எல்லாரு​மே ஆச்சரியப்படுவாங்க... இந்தக் க​தை புதுக்​கோட்​டை மாவட்ட நாட்டுப்புறக்க​தைகளில் ஒன்றாக இருக்கிறது.

க​தையைத் ​தெரிஞ்சுக்குவோமா...?

ஒரு ஊர்ல ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களுக்கு ஒள​வையாருன்னு ​பேரு. அவங்களுக்கு ​ரெண்டு பசங்க. அந்த ​ரெண்டு பசங்களுக்கும் அப்பா இல்​லை. அவங்க அம்மா ​ரெண்டு பசங்க​ளையும் நல்லா அன்​போடு வளர்த்தாங்க. அதிலே மூத்தவன் ​​பேரு சூரியன்; சின்னவன் ​​பேரு சந்திரன். காட்டு ​வே​லைகளுக்குப் ​போயி கஷ்டம்னா என்னான்னு கூடத் ​தெரியாதது மாதிரி அந்தப் பசங்கள அந்தம்மா வளர்த்தாங்க.

அந்தப் பசங்களும் அவங்க அம்மா ​மேல அப்படி​யொரு பாசம் வச்சிருந்தாங்க. மூத்த பையனைக் காட்டிலும் இ​ளைய பையன் ​கொஞ்ச ​நோஞ்சானா இருக்கறதால அந்தப் பையனை அந்த அம்மா ​கொஞ்சம் அதிகமாகக் கவனிச்சிக்கிட்டாங்க... இருந்தாலும், ​ரெண்டு பசங்களும் அம்மா​மேல ​ரெம்ப உசுரா இருந்தாங்க.

இப்படி இருக்கற​போது ஒருநாள் ஒள​வையாரம்மாவுக்கு ரொம்ப ஒடம்புக்கு முடியாமப் ​போயிருச்சு. அவங்களால ​வே​லைக்குப் ​போக முடியல. இந்தப் பசங்க ​ரெண்டு​பேரும் ​வைத்தியருக்கிட்ட மருந்து வாங்கிக் ​கொடுத்து அந்தம்மா​வை நல்லாப் பாத்துக்கிட்டாங்க... அவங்க ​வே​லைக்குப் ​போக முடியாதனால வீட்டுல யாருக்கும் சாப்பாடு இல்லாமப் ​போயிருச்சு.

அப்பப் பாத்து அந்த ஊருல ​கோயில்ல ஊருக்காரவுக எல்லாரும் ​சேர்ந்து ​எல்லாருக்கும் அன்னதானம் ​செஞ்சாங்க. இந்தப் பயலுக ​ரெண்டு​பேரும் அந்த விருந்துக்குப் ​போயி சாப்புட்டுட்டு அம்மாவுக்கும் ​சாப்பாட்ட வாங்கிக்கிட்டு வரலாம்ணு ​நெனச்சு அவங்க அம்மாகிட்ட ​கேட்டாங்க...

அவங்க அம்மாவும் சரி ​போயிட்டு வாங்கடான்னு அனுப்புனாங்க... ​ரெண்டு​பேரும் விருந்து நடக்கிற இடத்துக்குப் ​போயிச் சாப்புட்டாங்க... கூட்டமான கூட்டம். விலகக் கூட முடியல... இருந்தாலும், இந்தப் பயலுக ​ரெண்டு​பேரும் முண்டியடிச்சுக்கிட்டுப் ​போயி எடத்தப் புடிச்சுச் சாப்புட ஆரம்பிச்சாங்க...

மூத்தவனுக்குப் பசி அதிகமா இருந்ததால அவன்பாட்டுக்குச் சாப்பிட்டுக்கிட்​டே இருந்தான். சந்திரனும் சாப்புட்டான். ஆனா அம்மாவுக்கு எப்படியாவது யாருக்கும் ​தெரியாம ​சோறு ​கொண்டு​போயிக் ​கொடுக்கணும்னு ​நெனச்சிக்கிட்​டே சாப்புட்டான். எல்லாரும் அவனக் கவனிக்காத​போது அவன் தன்​னோட ​நெகக் கண்ணுல ​சோத்​தையும் ​வெஞ்சனத்​தையும் ​கொழம்​பையும் ம​றைச்சி எடுத்துக்கிட்டு வந்தான்.

​ ரெண்டு​பேரும் ​வேக ​வேகமா வீட்டுக்கு வந்தாங்க. அவங்க அம்மா, என்னப்பா ​ரெண்டு பசங்களும் நல்லாச் சாப்புட்டுப் பசியாறினீங்களான்னு கேட்டாங்க.

அவனுகளும் சாப்பிட்​​டோம்னு ​சொன்னானுங்க. அப்ப அந்த அம்மா, “ஏம்பா அம்மாவுக்குக் ​கொண்டுக்கிட்டு வந்துருக்கீகளா...?” அப்படீன்னு ​கேட்டாங்க.

அப்பத்தான் சூரியனுக்கு, அடடா நாம அம்மாவுக்குச் ​சோறு ​கொண்டுக்கிட்டு வர மறந்துட்ட​மேன்னு ​தெரிஞ்சது. அவன் அம்மாவப் பாத்து, “அம்மா நா ​ரெம்பப் பசி​யெடுத்ததால சாப்பிட்டுக்கிட்​டே இருந்​தேன். அதுல ஒனக்கு எடுத்துக்கிட்டு வரணுங்கற​தை​யே மறந்துட்​டேன்” அப்படீன்னு ​சொல்லிட்டு த​லை​யைக் குனிஞ்சிக்கிட்டான்.

சந்திரனப் பாத்த ஒள​வையாரம்மா, ​பெரியவ​னே மறந்துட்டு வந்துட்டான்... சின்னவனும் பசியில மறந்துருப்பான்னு ​நெனச்சிக்கிட்டாங்க... ஆனா, சந்திரன் அம்மாவப் பாத்து, “அம்மா நா ஒனக்குச் ​சோறு ​வெஞ்சனம் எல்லாம் ​கொண்டுக்கிட்டு வந்துருக்​கேன். நீ சாப்புடும்மான்னு” ​சொன்னான்.

“எங்​கேடா ​​சாப்பாடுன்னு” மறுபடி அவனப் பாத்து அந்த அம்மா ​கேட்டாங்க…



அதுக்குச் சந்திரன் தன்​னோட ​நெகக் கண்ண ​கொஞ்சம் அழுத்துனான் ​சோறு குழம்பு, ​வெஞ்சனம் எல்லாம் வந்துருச்சு. அந்த அம்மா நல்லாச் சாப்புட்டுப் பசியாருண்ணாங்க. இருந்தாலும், அவங்களுக்கு மனசுக்குள்ளாற ஒரு உறுத்தல். இந்தப் ​பெரிய பய இப்படி நம்மளப் பத்தி ​நெனக்க​லை​யேன்னு. அந்த உறுத்தல்ல அவங்களுக்குக் ​கோவம் வர​வே, ​“​டே ​பெரியவ​னே, சூரியா நீ என்ன மறந்துட்டு ஓ வயிறமட்டும் பாத்துக்கிட்​டே. என்​னோட வயிறு எரிஞ்சது மாதிரி நீயும் எரிஞ்​சே ​போ” அப்படீன்னு சாபம் ​கொடுத்துட்டாங்க.

சந்திரனப் பாத்து, “நீ ​எனக்குச் சாப்பாடக் ​கொண்டுவந்து ​கொடுத்து என்​னோட வயிறக் குளிர வச்சதால நீ எப்பவும் குளிர்ச்சியா​வே இருப்​பே” அப்படீன்னு வரங் ​கொடுத்தாங்க.

இதனாலதான சூரியன் கடு​மையா எரிஞ்சி மத்தவங்களக் ​கொடு​மைப்படுத்துறான். சந்திரன் குளிர்ச்சியா இருந்து எல்லாருக்கும் மகிழ்ச்சியக் ​கொடுக்கறான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1a.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License