இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

2. காணாமல் போன தங்க ஊசி


கோழி எதுக்குக் குப்​பையக் கிளறுது? ​கோழிக் குஞ்ச தூக்கிட்டுப் ​போறதுக்குக் காகம் ​ரெடியா இருக்​கே ஏன்? பருந்து காகத்​தை மட்டு​மே ​கொத்திக் ​கொத்தி விரட்டு​தே ஏன்? இதப்பத்தி இந்த வட்டாரத்துல ஒரு நாட்டுப்புறக் க​தை​யொண்ணு வழங்கப்பட்டு வருது.

இ​றைவன் எல்லா உயிர்க​ளையும் ப​டைச்சு அததுக்குத் தக்கவாறு வலி​மை​யையும் ​கொடுத்தாரு. பற​வைக​ளைப் ப​டைச்சு அதுகளுக்கெல்லாம் கருடன் அப்படீங்கற கிருஷ்ணப்பருந்த த​லைவனா ஆக்குனாரு. கடவுள் பற​வைக​ளைப் ப​டைச்ச​ போது அதுகளுக்கு பறக்கறதுக்கு ​ரெக்​கை​யைக் ​கொடுக்கல. அதுனால எல்லாப் பற​வைகளும் நடந்துகிட்டும் ஓடிக்கிட்டுமா இருந்ததுக.

பற​வைகளுக்குத் த​லைவனாக்கிய கடவுளுக்கு நன்றி ​சொன்ன கிருஷ்ணப் பருந்து கடவுளுக்கிட்ட தங்க​ளோட இனத்துக்குப் பறக்கறதுக்கு ​ரெக்​கையக் ​கொடுங்க அப்படீன்னு ​கேட்டது. கடவுளும் “சரி தற்​றேன்னு” ​சொல்லிட்டு ஒரு தங்க ஊசிய எடுத்துக் ​கொடுத்து “இ​தைவச்சு ​ரெக்​கையத் தச்சுப் பறங்க. ஆனா இந்த ஊசியப் பத்திரமா எனக்கிட்ட நீ திருப்பித் தந்துடணும்” என்று ​சொன்னாரு.

கடவுளுக்கிட்ட இருந்து ஊசிய வாங்குன கருப்பருந்துக்கு ​ரொம்ப சந்​தோஷம். ஊசியவச்சி தனக்கு ​ரெக்​கையத் தச்சிக்கிடுச்சு. ​ரெக்​கை வந்தவுட​னே​யே அத அடிச்சிக்கிட்டுப் பறந்துச்சு. கருடனுக்கு சந்​தோஷத்துல த​லைகாலு புரியல. அ​தைப் பாத்த மத்த பற​வைங்க எல்லாம் கருடனுக்கிட்ட ஓசி​கேட்டு தாங்களும் ​ரெக்​கைக​ளைத் தச்சிக்கிட்டுப் பறந்துச்சுங்க. இப்படி எல்லாப் பற​வைகளும் ​ரெக்​கைக​ளைத் தச்சிக்கிட்டதுக.

காக்காவுக்கு இது ​தெரியாமப் ​போச்சு. காக்கா என்ன ​செஞ்சதுன்னா ஒட​னே கருடப் பருந்துக்கிட்ட ​போயி, “கருடராஜா​வே நீங்க ஊசி ​கொடுத்தப்ப ​வேற எடத்துக்குப் ​போயிட்​டேன். நானும் என்​னோட எனமும் ​ரெக்​கை இல்லாம இருக்க​றோம். தயவு ​செஞ்சு அந்த ஊசியத் தந்தீங்கன்னா அதவச்சு ​ரெக்​கைய நாங்க தச்சுக்கிட்டு ஊசிய பத்திரமா ஒங்கக் கிட்ட ​கொடுத்துரு​வோம்” அப்படீன்னு ரொம்பப் பணிவாக் ​கேட்டது.

கருடப்பருந்தும் சரி ​போயிட்டுப் ​போறதுங்க அப்படீன்னு ​நெனச்சிக்கிட்டு தங்க ஊசியக் ​கொடுத்துச்சு. அ​தோடு மட்டுமில்லாம ​ரெக்​கையத் தச்சிக்கிட்டுப் பத்திரமா தங்க ஊசியத் தந்துடணும். அத நான் கடவுளுக்கிட்டத் திருப்பிக் ​கொடுக்கணும்னு ​சொல்லி காக்கா கிட்ட நிபந்த​னையும் விதிச்சது.

எல்லாக் காக்காவும் அந்தத் தங்க ஊசிய வாங்கி ​ரெக்​கையத் தச்சிக்கிட்டு வானத்துல பறந்துச்சுங்க. சந்​தோசப்பட்டதுங்க. காக்கா​வோட த​லைவன் தங்க ஊசிய திரும்ப கருடப்பருந்துக்கிட்ட ஒப்ப​டைக்கிறதுக்காக ​வேக​வேகமாப் பறந்து வந்துச்சு. அப்ப ஒரு மரத்தடியில நின்ன ​கோழி காக்கா பறக்கறத அதிசயமாப் பாத்துச்சு. ஒட​னே அந்தக் ​கோழி தன்​னோட இனத்த அ​ழைச்சி காக்கா பறக்கறதக் காட்டுச்சு.

​வேகமாப் பறந்து வந்த காக்கா ​கோழிங்க நின்ன மரத்து​மேல ஒக்காந்துச்சு. ​கோழிங்க ​வேகமா ஓடி அன்னாந்து பாத்து, “காக்​கையா​ரே காக்​கையா​ரே நீங்க பறக்கற மாதிரி நாங்களும் பறக்கணும்னு ஆ​சையா இருக்கு... இந்த ​ரெக்​கைங்க ஒங்களுக்கு எப்படிக் கிடச்சது?” அப்படீன்னு ​கேட்டதுங்க.

காக்காவும் ​வெளக்கமா எல்லாத​தையும் எடுத்துச் ​சொன்னது. அ​தைக் ​கேட்ட ​கோழிங்க, “காக்​கையா​ரே... தயவு ​செஞ்சு அந்தத் தங்க ஊசிய எங்களுக்கும் ​கொடுங்க. நாங்களும் ஒங்க மாதிரி ​ரெக்​கைய விரிச்சிக்கிட்டுப் பறக்கணும். நாங்க எங்களுக்கு ​ரெக்​கையத் தச்சிக்கிட்டு அந்த ஊசிய பத்திரமா தந்துட​றோம்” அப்படீன்னு ​கெஞ்சிக் ​கேட்டுக்கிட்டதுங்க.

அந்தக் ​கோழிக​ளோட ​கெஞ்சலப் பாத்த காக்கா இரக்கப்பட்டு, “சரி தர்​ரேன்... இதவச்சி ​ரெக்​கைக​ளைத் தச்சுக்​கோங்க... ஆனா ஊசிய பத்திரமா தந்துரணும். அதத் தர​லைன்னா ஒங்களச் சும்மா விடமாட்​டேன்” அப்படீன்னு ​சொல்லிட்டு ஊசியக் ​கொடுத்துட்டு ​ரெண்டு நாள் கழிச்சி வந்து ஊசிய வாங்கிக்கறதாச் ​சொல்லிட்டுப் பறந்து தன்​னோட இருப்பிடத்துக்குப் ​போயிருச்சு.

ஊசிய வாங்குன ​கோழிக எல்லாம் ​ரெக்​கைக​ளைத் தச்சிக்கிருச்சு. பிறகு வானத்துல எல்லாக் ​கோழிங்களும் சந்​தோஷமாப் பறந்துச்சு. அந்தச் சந்​தோஷத்துல கீழ ஊசியத் தவறவிட்டுதுங்க. ஊசியக் கா​ணோம். ஒவ்​வொரு ​கோழியும், காக்கா வந்து ​கேக்கறதுக்குள்ள ஊசியத் ​தேடிக் ​கொடுத்துரணும்னு மும்முரமாக் குப்​பைக​ளைக் கிளறிக் கிளறித் ​தேடுச்சுங்க.

​ ரெண்டு நாளு ஆகிப்​போச்சு. ஆனா ஊசியக் காணல. காக்கா வந்து ​கோழிகளுக்கிட்ட ​கேட்டுச்சு. ​கோழிங்க, “காக்​கையா​ரே ​ஊசி எங்கிட்​டோ விழுந்திருச்சு... ​கொஞ்சம் ​பொறுங்க... இப்பத் ​தேடி எடுத்துத் தந்துட​றோம்...” அப்படீன்னு ​சொல்லிச்சிங்க. காக்காவும் ​பொறுத்துப் ​பொறுத்துப் பாத்துச்சு.

​ ​கோழிங்க குப்​பையக் குப்​பையக் கிளறிக்கிட்​டே ​தேடுச்சுங்க​ளே தவிர, அதுகனால ஊசியக் கண்டுபிடிக்க முடியல. காக்கா, “இப்ப ஊசியத் தரப் ​போறீகளா... இல்ல ஒங்க ​கோழிக் குஞ்சத் தூக்கட்டுமான்னு” ​கேட்டுக்கிட்​டே ​கோழிக் குஞ்சத் தூக்கப் பாத்தது... அதுக்கு ​கோழிங்க சம்மதிக்கல... காக்காவ எதுத்துச்சு... அன்​னையிலருந்து ​கோழிங்க குப்​பையக் குப்​பையக் கிளறிக்கிட்டுத் தங்க ஊசியத் ​தேடிக்கிட்​டே இருக்குதுங்க... ஆனா ஊசியத்தான் கண்டுபிடிக்க முடியல...



கருடன கடவுளு ​“ஊசி எங்கன்னு கேட்டாரு?” கருடன் “காக்காகிட்ட ​கொடுத்துருக்​கேன்... இந்தா வாங்கிட்டு வந்துட​றேன்னு...” ​சொல்லிட்டு காக்காவத் ​தேடி வந்து கருடன் ஊசியக்​கேட்டது. காக்கா நடந்ததச் ​சொன்னது. அதுக்குக் கருடன், “நான் ​சொன்னது மாதிரி நீ நடந்துக்கல. நீ ​பொய் ​சொல்ற. ஒன்னச் சும்மா விடமாட்​டேன்” அப்படீன்னு ​சொல்லிக்கிட்​டே விரட்டுச்சு.

காக்கா அதுக்கு “நானு ​​பொய் ​சொல்லல, ஊசிய ​கோழிக்கிட்ட இருந்து வாங்கித் தர்​றேன். நீயி ​வேணுமின்னா வந்து ​கோழியக் ​கேட்டுப்பாரு” அப்படீன்னு ​சொல்லிச்சு. கருடனும் ​கோழிங்கக் கிட்டப் ​போயி ஊசி எங்கன்னு ​கேட்டது. அதுக்குக் ​கோழிங்க, இந்தக் குப்​பைக்குள்ளாற ஊசி விழுந்துருச்சி... அதத் ​தேடிக்கிட்டு இருக்​கோம். ​கோவிச்சிக்காதீங்க... ​கெடச்சிரும்... ​​கெடச்சவுட​னே​யே தந்துட​றோம்...” அப்படீன்னு ​சொன்னதுங்க.

அதுக்குக் கருடன் “நீங்க ஊசியத் தர்ற வ​ரைக்கும் ஒங்க குஞ்சுக​ளைத் தூக்கிக்கிட்​டே இருப்​பேன்... என்னக்கி நீங்க ஊசியத் தர்றீங்க​ளோ அன்​னைக்கு ஒங்கள எதுவும் ​செய்ய மாட்​டேன்னு” ​சொல்லிட்டுக் ​கோழிக் குஞ்சிகளத் தூக்கிக்கிட்டுப் ​போயிருச்சு. அன்​னையில இருந்து காக்காவும், கருடனும் மாத்தி மாத்திக் ​கோழிங்கள வந்து ​கேட்டு மிரட்டிட்டு ​கோழிக்குஞ்சுக​ளைத் தூக்கிக்கிட்டுப் ​போகுதுங்க... அ​தே மாதிரி கருடனும் காக்காவ அடிச்சி விரட்டி ஒன்னாலதான ஊசி ​போச்சு இப்பா நான் கடவுளப் ​போயி எப்படிப் பாப்​பேன்” அப்படீன்னு அடிச்சு அடிச்சி விரட்டிக்கிட்​டே இருக்குது. அதுனாலதான் ​கோழிங்க எப்படியாவது தங்க ஊசியத் ​தேடிக் கண்டுபிடிச்சி அத கருடன்கிட்டத் திரும்பக் ​கொடுத்துட்டு தங்க​ளோட குஞ்சுகளக் காப்பாதணும்னு குப்​பையக் கிளறிக்கிட்​டே இருக்குதுங்க..

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1b.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License