இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

27.பன்றிக்குப் பயப்படுவது ஏன்?


நல்லவங்களோடு எல்லாரும் இணைந்து இருப்பாங்க. அவங்க எங்க போனாலும் அங்க இருக்கறவங்க எல்லாரும் அவங்க சொல்றதக் கேப்பாங்க. ஆனா தீயவங்களோட யாரும் சேரமாட்டாங்க. அவங்க எங்க போனாலும் யாரா இருந்தாலும் அவங்களவிட்டு ஒதுங்கியே இருப்பாங்க. இதைப் பத்தின ஒரு கதை ஒண்ணு வழக்கத்துல இருக்குது.

ஒரு ஊருல பெரிய கோவில் இருந்துச்சு. அந்தக் கோவில்ல ஒரு பெரிய யானை ஒண்ணு இருந்துச்சு. அந்த யானை சாமி மேல ரொம்ப பக்தியுள்ளது. தெனந்தோறும் காலையில அந்த ஊருல இருக்கற ஆத்துக்குப் பாலத்தைக் கடந்து போகும். ஆத்துல குளிச்சிட்டு நேராக் கோயிலுக்குள்ளாற வந்து சாமியக் கும்பிட்டுட்டு அந்தக் கோயில்லயே படுத்துருக்கும். சாமிகும்புட வர்றவங்களுக்கு ஆசி வழங்கும்.

அங்க வர்றவங்களும் அந்த யானை மேல ரெம்பப் பாசமா இருந்தாங்க. இப்படி இருந்துக்கிட்டு இருக்கையில அந்த ஊருல ஒரு பெரிய ஊர்ப்பன்றி ஒண்ணு நாந்தான் பலசாலி நாந்தான் பலசாலின்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சது. எந்த மிருகத்தப் பார்த்தாலும் அந்தப் பன்றி தனக்கு மரியாதை செய்யணும்னு கட்டாயப்படுத்திச் சொல்லும். அந்த ஊருக்குள்ளாற இருந்த மிருகங்களும் இந்தப் பன்றிக்குப் பயந்துக்கிட்டுப் பேசாம மதிப்புக் கொடுத்துக்கிட்டு இருந்துச்சுங்க.

அப்படி இருக்கறபோது அந்த ஊருக்குள்ளாற வந்த ஒரு புது நாயொன்னு இந்தப் பன்றிக்கு மதிப்புக் கொடுக்கல. இதப் பாத்த பன்றிக்கு ரெம்பக் கோபம் வந்துருச்சு. அந்த நாய் முன்னால போயி நின்ன பன்றி, ‘‘என்னையப் பாத்துட்டு எல்லாரும் மதிப்புக் கொடுத்துட்டு விலகிப் போறாங்க. ஆனா நீ என்னடான்னா எனக்கு மதிப்புக் கொடுக்காமப் போற? என்னோட பலம் ஒனக்குத் தெரியுமா? நீ ஒன்னோட மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்க?’’ அப்படின்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்த நாயி, ‘‘ஒன்னையப் பத்தி எனக்குத் தெரியாது. ஆமா நீ என்ன பெரிய பலசாலியா? ஒன்னவிடப் பலசாலியா இந்தக் கோயில்ல இருக்கற யானை இருக்குது. அது ஒன்னப் பாத்துட்டு பயந்து விலகிப் போச்சுன்னா நானும் ஒனக்கு மதிப்புத் தர்றேன். அப்ப ஒன்ன பலசாலின்னு ஏத்துக்கறேன்னு’’ சொன்னது.

அதுக்குப் பன்றி, ‘‘நாளைக்குக் காலையில நீ அந்த ஆத்துப்பாலத்துக்கு வா. அந்த யானை என்னையப் பாத்துட்டு பயந்து ஒதுங்கி நிக்கிறதப் பாக்கலாம்னு’’சொன்னது.

நாயும் சரின்னுட்டுப் போயிடுச்சு. மறுநாளு அதிகாலையிலேயே நேராக் கௌம்பி அந்த ஆத்துப் பாலத்துக்கிட்டப் போயி நின்னுக்கிட்டது. அப்ப அந்தப் பன்றி சாக்கடையில பெறண்டு சொட்டச் சொட்ட நனஞ்சிங்கிட்டு வாலவேற ஆட்டி ஆட்டிக்கிட்டே வந்துச்சு.

அப்ப ஆத்துக்குக் குளிக்கப் போன யானை கோயிலப் பாத்து வேக வேகமா வந்தது. அப்படி வர்றபோது அந்தக் குறுகிய பாலத்துல அப்பத்தான் ஏறிவந்த பன்றியப் பாத்துட்டு அது போற வரைக்கும் அந்தப் பாலத்தோடஒரு பக்கமா நின்னுச்சு.

அந்தக் குறுகிய பாலத்துல ஒரு பக்கமா நின்ன நாயி இதப் பாத்தது. அந்த நாயைப் பாத்த பன்றி, ‘‘டேய் இப்பப் பாத்துக்கிட்டியா என்னோட பலத்தப் பாத்துப் பயந்து போன இந்த யானை எனக்கு மரியாதை கொடுத்து ஒடுங்கிப் போயி நிக்கறதப் பாரு. இதைப் பாத்து இனிமே நீயும் எனக்கு மரியாதை தரணும். ஆமா… இப்ப நான் யாருன்னு புரிஞ்சிக்கிட்டியில்ல?’’ அப்படின்னு கேட்டது.

நாயும், ‘‘ஆமா…மா நான் ஒன்னோட பலத்தத் தெரிஞ்சிக்கிட்டேன். இனிமே ஒனக்கு மரியாதை செய்யிறேன்னு’’ சொல்லிட்டு அந்தப் பன்றி போனதையே பாத்துக்கிட்டு நின்னது. பன்றி சவுடலா வால ஆட்டி ஆட்டிக்கிட்டு மெதுவா ராஜநடை நடந்து போச்சு. பன்றி அந்தப் பாலத்தக் கடந்த ஒடனே யானை மெதுவா பாலத்துல ஏறி வந்துச்சு. அப்ப எதுத்தாப்புல வந்த நாயி யானையப் பாத்து, ‘‘ஏன்ணே நீ எவ்வளவு பலசாலி. ஓங்கி ஒரு அடி அடிச்சா இந்த பன்றி எங்க போயி விழும். இப்படி இருக்கையில கேவலம் இந்த பன்றிக்குப் பயந்துக்கிட்டு நீயி ஒதுங்கி நிக்கிறியே. இது ஒனக்கே நல்லா இருக்கா’’ அப்படீன்னு கேட்டுச்சு.



அதைக் கேட்ட யானை, டேய் தம்பி நீ சொல்றது மாதிரி நான் பயந்து போயி நிக்கல. நான் இப்பத்தான் ஆத்துல குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிக்கிட்டு இருக்கேன். அந்தப் பன்றி சாக்கடையில விழுந்து ஏந்திரிச்சு வருது. பத்தாதுக்கு வாலவேற ஆட்டி ஆட்டிக்கிட்டே வருது. அந்தச் சாக்கடைத் தண்ணி என்னோட மேல்ல பட்டுருச்சுன்னா நான் திரும்பவும் ஆத்துக்குப் போயிக் குளிக்கணும். அதனால கால வெரயம் ஆகும். அதை நெனச்சுத்தான் நான் ஓரமா ஒதுங்கி நின்னேன். அந்தப் பன்றிக்குப் பயந்துபோயி இல்ல.’’ அப்படீன்னு சொல்லிப்புட்டு அதுபாட்டுக்கு நடந்து கோயிலுக்குப் போச்சு.

அப்பத்தான் அந்த நாய்க்கு உண்மை புரிஞ்சது. தீயவனைக் கண்ட நாமதான் ஒதுங்கிப் போகணும். ஒதுங்கறது பயத்துனால அல்ல. அப்படீங்கறத யானைமூலம் தெரிஞ்சிக்கிட்டு தன்னோட ஊரப் பாத்து நடந்து போச்சு. தீயவங்களப் பத்திப் பேசுனாலும் பாவம். அதனாலதான் தீயவங்களவிட்டுட்டு ஒதுங்கியே இருக்கணும்னு பெரியவங்க இன்னிக்கு வரைக்கும் சொல்றாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1aa.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License