இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

42.வளரும் சூழலைப் பொறுத்தே...!


நாம எந்தச் சூழல்ல இருக்கிறோமோ அந்தச் சூழலுக்குத் தகுந்த மாதிரிதான் நம்மளோட பழக்க வழக்கங்கள் எல்லாம் இருக்கும். அதனாலதான் குழந்தைகளை நல்ல சூழல்ல வளர்க்கணும்னு சொல்றாங்க. இதப் பத்தி ஒரு கத ஒண்ணு இருக்கு.

ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவன் காட்டுக்குப் போறது கிளிக்குஞ்சுகள பிடிச்சிக்கிட்டு வாரது. அதப் பேசுறதுக்குப் பழக்குறது. அப்பறம் அத விக்கிறது. இப்படியே அவனோட வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு. அவன் கிளிகள ஒழுங்கா வளக்கறவங்களாப் பாத்துத்தான் விப்பான். இல்லன்னா யாருக்கும் விக்கமாட்டான். கிளிகள வித்தாலும் அதுக எப்படி இருக்குதுகன்னும் வித்த எடத்துல போயிப் பார்ப்பான். இது அவனோட வழக்கமாவும் இருந்துச்சு. இதுனால எல்லா ஊருலயும் அவனுக்கு நல்ல பேரு இருந்துச்சு.

இப்படி இருக்கயில ஒருநாளு அவன் தான் ஆசையா வளத்த ரெண்டு கிளிகள எடுத்துக்கிட்டு அதுகள விக்கிறதுக்குச் சந்தைக்குப் போனான். ஒவ்வொருத்தரையும் பாத்து, “அற்புதமாப் பேசும் இந்தக் கிளிகள வாங்கிக்கிறீங்களான்னு?” ஒவ்வொருத்தருக்கிட்டயும் கேட்டான். அப்பப் பாத்து ஒருத்தரு வந்து அவங்கிட்ட வந்து தனக்கு ஒரு கிளியத் தாங்கன்னு சொல்லி ஒரு கிளிய வாங்கிக்கிட்டுப் போனாரு.

இன்னொரு கிளி மட்டும் இருந்தது. நெறையப் பேரு வந்தாங்க. ஆனா அவங்களுக்கிட்ட எல்லாம் அவனுக்குக் கிளியக் கொடுக்க மனசு இல்ல. கடைசியில பக்கத்து ஊருல இருக்கற ஒருத்தன் வந்தான். தனக்கு அந்தக் கிளியக் கொடுங்கன்னு கேட்டு அத நல்லா வளக்கறதாகவும் சொல்லிட்டு வாங்கிக்கிட்டுப் போனான். கிளிக்காரனும் சரி இவன் இந்தக் கிளிய நல்லாப் பாத்து வளர்ப்பான்னு நெனச்சிக்கிட்டு அதஅவங்கிட்ட வித்தான்.

கிளிகள வாங்கிக்கிட்டுப் போனவங்கக்கிட்ட அவங்க ஊரைப் பத்தியும் அவங்க வீடு இருக்கற இடத்தையும் தெரிஞ்சிக்கிட்டான் கிளிக்காரன். கொஞ்ச நாள் போச்சு. இந்தக் கிளிக்காரன் தான் மத்தவங்கிட்ட வளக்கக் கொடுத்த கிளிகள் எல்லாம் எப்படி இருக்கு. அத நல்லா வளக்கிறாங்களா? அந்தக் கிளி நல்லாப் பேசுதான்னு? பாக்குறதுக்காகப் போனான்.



மொதல்ல கோவில் குருக்கள் வீட்டுக்குப் போயி அங்க உள்ள கிளியப் பார்ப்போம்னு நெனச்சிக்கிட்டு அதப் பாக்குறதுக்காகப் போனான். அப்பப் பாத்து குருக்கள் வீட்டுல இல்ல. அவரு இல்லட்டியும் பராவாயில்ல. நாம போயி கிளியப் பாப்போன்னுட்டு வீட்டுக்குள்ளாற நுழஞ்சான் கிளிக்காரன்.

அவன் வீட்டுக்குள்ளாற நுழையறதப் பாத்த கிளி, “வாங்க.. வாங்க… நீங்க யாரு? ஐயா வெளியில போயிருக்காங்க. கொஞ்ச நேரம் ஒக்காருங்க. இப்ப ஐயா வந்துருவாரு”ன்னு கிளி பேசிச்சு. அதக் கேட்ட கிளிக்காரன். ஆஹா நாம கொடுத்த கிளிய இந்தக் குருக்கள் நல்லா வளத்து வச்சிருக்காருன்னு நெனச்சிக்கிட்டு அங்க இருந்த ஒரு முக்காலியில கொஞ்ச நேரம் ஒக்காந்தான்.

அப்பப் பாத்து அந்தக் குருக்கள் வீட்டுக்குள்ளாற நொழைஞ்சாரு. அவனப் பாத்து, “என்ன நல்லா இருக்கீங்களா? எப்ப வந்தீங்க? கிளி நல்லா இருக்கா? பாத்தீங்களான்னு?” கேட்டாரு. அதக் கேட்ட கிளிக்காரன், “ஐயா எனக்கு ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் வளக்கிறத விட நீங்க இந்தக் கிளிய நல்லாவே வளத்து நல்லாப் பேச வச்சிருக்கீங்க. ரெம்பச் சந்தோஷம். நான் போயிட்டு வர்றேன்”னு’ சொல்லிட்டு இன்னொரு கிளியப் பாக்குறதுக்காகப் பக்கத்து ஊருக்குப் போனான்.

கிளிய வாங்கிட்டுப் போனவன் சொன்ன அடையாளத்த வச்சி அவன் இருக்குற வீட்டக் கண்டுபிடிச்சிக் கிளிக்காரன் போனான். அங்க அவன் இல்ல. அவன் கடைக்குப் போயிருக்கறதா வீட்டுல சொன்னாங்க. அவனும் கடையில போயி பாத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு அங்க போனான்.

அங்க போனா அது ஒரு கசாப்புக் கடை. ஆட்டை வெட்டி உரிச்சித் தொங்கப் போட்டு கறிய நறுக்கி யாவாரம் பாத்துக்கிட்டு இருந்தான் கிளிய வாங்கிக்கிட்டுப் போனாவன்... கிளிக்காரன் போயி அந்தக் கடைக்கு முன்னால நின்னான். அப்ப, “யார்ரா நீ? கால வெட்டு. கைய வெட்டு. ஈரக் கொலைய வகுந்துப்புடுவேன்”னு ஒரு குரல் வந்தது. அந்தக் குரலக் கேட்டு அண்ணாந்து பாத்த அந்தக் கிளிக்காரன் திகைச்சுப் போயிட்டான்.

அந்தக் கிளிதான் இப்படிப் பேசியிருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டான். அவனப் பாத்த அந்தக் கசாப்புக் கடைக்காரன், “என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? எல்லாம் நம்ம கிளிதான் பேசுது. இன்னும் நல்லாப் பேசும்… கேக்குறீங்களா?"ன்னு கேட்டான். அதுக்குக் கிளிக்காரன், “இல்ல இல்ல... நான் நல்லாவே கேட்டுட்டேன். அடேயப்பா என்னமா கேவலமாப் பேசுது… போதும் போதும் … நான் போயிட்டு வாரேன்”னு சொல்லிட்டு அந்த எடத்த விட்டுக் கௌம்பினான். அவன் கௌம்புறதப் பாத்த கிளி, “வெட்டிப்புடுவேன், குத்திப் புடுவேன், ஈரல புடுங்கிடுவேன்”னு சொன்னது.



அதக் கேட்டுக்கிட்டே போன கிளிக்காரன், “எல்லாம் வளர்ற சூழல்தான் காரணம். குருக்களய்யா தன்னோட கிளிய நல்லாப் பேசுறது மாதிரி வளத்துருக்காரு. ஆனா இந்தக் கசாப்புக் கடைக்காரன் அவனப் போலப் பேசறது மாதிரி கிளிய வளத்து வச்சிருக்கான். சூழல்தான் எல்லாத்தையும் மாத்திப்புடுது. எல்லாம் இருக்குற இடத்தப் பொருத்து”ன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு தன்னோட வீட்டப் பாக்க நடந்து போனான்.

எந்தச் சூழல்ல நாம வளர்றமோ? அல்லது வளக்கப்படுறமோ அந்தச் சூழலுக்கு ஏத்தமாதிரி நம்மளோட பழக்க வழக்கமும் அமைஞ்சி போகுது. நம்மளோட செயல்பாடுகளும் அமைஞ்சிருது. இந்தக் கதை எதுக்கும் பொருந்தும்? நீங்களே தெரிஞ்சுக்குங்க...

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1ap.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License