இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

43.வள்ளல் மகனுக்கு வந்த கஷ்டம்


எல்லாம் தலைவிதி என்று நினைத்துக் கொண்டு பலர் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். இன்றும் கிராமப் புறங்களில் மக்கள், ”எல்லாம் தலையில என்ன எழுதி இருக்கோ அதன்படிதான் நடக்கும். அதைவிட்டுட்டு நாம நெனக்கிறபடியெல்லாம் நடக்குமா?” என்று மக்கள் புலம்புவதையும் பார்க்கலாம். படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை அனைவரும் விதியை நம்பிக் கொண்டு வாழ்கின்றனர்.

விதியை வெல்ல முடியாதா? விதியை வென்றவர்கள் யாராவது இருக்காங்களா? அப்படீங்கற கேள்விக்கு விதியை மதியால் வெல்லலாம் என்ற கதை வழக்கில் வழங்கி வருகின்றது.

ஒரு ஊருல பெரியவர் ஒருத்தர் வாழ்ந்து வந்தார். அவர் ரெம்ப நல்லவர். இல்லைன்னு யாராவது வந்து எதையாவது கேட்டா ஒடனே அவங்களுக்கு அதைக் கொடுத்துருவாரு. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டாரு. அவரு நெலம்நீச்சுன்னு நல்லா வசதியா வாழ்ந்துக்கிட்டு வந்தாரு.

அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவருக்கு இறைவனருளால் நமக்கு நல்லா ஒரு மகன் பிறந்து இருக்கான்னு மகிழ்ச்சி. அவனுக்கு மார்க்கண்டன்னு பேருவச்சாரு. ஆசையா வளத்தாரு. கூடுதலா தான தருமங்களச் செஞ்சாரு.

அவருக்கு மகனோட சாதகத்தைப் பாத்து வச்சிக்கிருவோம்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அதனால அந்த ஊருலேயே நல்லா சாதகம் பாக்குற ஒருத்தருக்கிட்டப் போயி மகனோட சாதகத்தைக் கொடுத்தாரு. சாதகத்தப் பாத்த சோசியருக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு. என்னடா இப்படிப்பட்ட நல்லவருக்குப் பொறந்த பையனோட சாதகம் சரியில்லாம இருக்கேன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டே இருந்தாரு.

சோசியக்காரரு சாதகத்தையே பாத்துக்கிட்டு இருந்ததைப் பாத்துட்டு, “என்ன சோசியக்காரரே எம்பையனோட சாதகம் எப்படி இருக்கு? எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லுங்கன்னு” கோட்டாரு அந்தப் பெரியவரு.

அதக் கேட்ட சோசியரு, “ஐயா நானும் எத்தனையோ சாதகங்களைப் பாத்துருக்கோன். ஆனா இந்த மாதிரி பாவப்பட்ட சாதகத்தைப் பாத்ததே இல்லை. ஒங்க பையன் பிற்காலத்துல ரொம்பக் கஷ்டப்படப் போறான். அவன் நல்லாப் படிப்பான் எல்லாஞ்செய்வான். ஆனா கஷ்ட சீவனந்தான் நடத்துவான் அப்படித்தான் இருக்குன்னு” பட்டுன்னு சொல்லிப்புட்டாரு.

அதக் கேட்ட அந்தப் பெரியவருக்கு மனசு கலங்கிருச்சு. இருந்தாலும் அதக் காட்டிக்காம எல்லாம் இறைவனோட செயல் அப்படின்னு நெனச்சுக்கிட்டு வீட்டுக்குப் போனாரு. யாருக்கிட்டயும் எதுவும் பேசல, சொல்லவும் இல்ல. இறைவன் விட்டவழின்னு நெனச்சிக்கிட்டு இருந்தாரு.

இப்படி இருக்கயில ஒருநாளு அந்தப் பெரியவரு திடீர்னு இறந்துட்டாரு. காலமும் ஓடிக்கிட்டே இருந்துச்சு. பையனும் கலியாணமாகி நாலஞ்சு பிள்ளைகளுக்குத் தகப்பனாயிட்டான். சொத்துப்பத்தெல்லாம் போயிருச்சு. இவன் படிச்ச படிப்புக்கேத்த வேலை கெடைக்கல. எந்த வேலைக்குப் போனாலும் அவன் விதி அவன அங்க இருக்க விடல பசுமாட்ட வச்சிப் பால்கறந்து வித்துக் குடும்பத்தக் காப்பாத்துனான். வருமானம் போதல. கைக்கும் வாய்க்குமே சரியா இருந்துச்சு.



ஊரே அவனப் பாத்து இரக்கப்பட்டுச்சு. வள்ளல் மகனோட வாழ்க்கை இப்படியா அமையணும்னு உமுறுக் குடிச்சது. அவனும் அந்த வறுமையான வாழ்க்கையிலயும் தன்னால முடிஞ்ச ஒதவிகள மத்தவங்களுக்குச் செஞ்சிக்கிட்டு இருந்தான்.

இப்படி இருக்கயில அந்த ஊருக்கு ஒரு சாமியாரு வந்தாரு. ஊருக்குள்ள வந்தவரு இவன் வீட்டுக்கும் வந்தாரு. தன்னோட வீட்டுக்கு வந்த சாமியாருக்கு எல்லாவிதமான பணிவிடைகளையும் வள்ளலோட மகன் செஞ்சான்.

சாமியாரு அவனோட பணிவைப் பாத்துட்டு அவனோட வறுமைக்குக் காரணம் என்னன்னு கண்டுபிடிக்கணும்னு நெனச்சி அங்க தங்குனாறு. அவனோட வறுமைக்குக் காரணம் அவனப் படைச்ச விதிதான்னு கண்டுபிடிச்சாரு.

பால்மாட்ட வச்சித்தான் அவன் பிழைப்பு நடத்தணும்னு விதி இருக்கு அப்படீங்கறதத் தெரிஞ்சிக்கிட்டாரு. இந்த விதிய மதியால வெல்லணும். வள்ளலோ மகன் வள்ளல் வாழ்ந்த வாழ்க்கைய வாழணும்னு நெனச்சிக்கிட்டு, வள்ளலோட மகனக் கூப்பிட்டு, “மகனே நாஞ்சொல்றத மட்டும் நீயி கவனமாக் கேட்டுச் செய். வேற எதையும் செய்யாதே. மறுக்காதே. ஏன்னும் கேக்காத. நான் சொல்றதத் தட்டாமச் செஞ்சிக்கிட்டே இரு. இப்ப ஒன்னோட மாட்ட வித்துரு” அப்படீன்னாரு.

அதக் கேட்ட வள்ளலோட மகன், “ஐயையோ நான் மாட்ட வித்துட்டு என்ன சாமி பண்றதுன்னு” கேட்டான். அதுக்குச் சாமியாரு, “ஒன்னப் படைச்சவன் எல்லாத்தையும் பாத்துக்குருவான். நான் சொன்னதை மட்டும் செய்” அப்படீன்னு சொன்னாரு.

வள்ளலோட மகனும் சரின்னுட்டு இருந்த ஒத்த மாட்டையும் கன்னுக் குட்டியையும் வித்துட்டான். வித்த காசில வீட்டுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிப் போட்டுச் சாப்பிட்டான். மறுநாளு சாப்பாட்டுக்கே வழியில்ல. சரி இராத்திரித் தூங்குவோம் காலையில பாத்துக்குவோம்னு நெனச்சிக்கிட்டு பேசாமத் தூங்கிட்டான்.

மறுநாளு காலையில மாடுங் கன்னும் கத்துற சத்தத்தக் கேட்டுட்டு எந்திருச்சு வீட்டுக்குப் பின்னால போயிப் பாத்தான். ஒரு பசுமாடும் கன்னுக்குட்டியும் அங்க கட்டிக் கிடந்தது. அவனுக்கே ஆச்சரியம். அன்னைக்குக் காலையில அந்தச் சாமியாரு மறுபடியும் வந்தாரு. வந்தவரு வள்ளலோட மகனப் பாத்துட்டு, “தம்பி இந்த மாட்டையும் கன்னுக்குட்டியையும் வித்துரு. இதேமாதிரி ஒவ்வொரு நாளும் வரக்கூடிய மாட்டையும் கன்னுக்குட்டியையும் வித்துக்கிட்டே இரு. என்னன்னு ஏதுன்னு கேக்காதே” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அவனும் சாமியாரு சொன்னதைப் போல மாட்டையும் கன்னுக்குட்டியையும் வித்துக்கிட்டே இருந்தான். பல நாளா இது நடந்துக்கிட்டே இருந்தது. அவனுக்கு இதெல்லாம் யாரு செய்யிறான்னும் தெரியல. இருந்தாலும் அந்தச் சாமியாரு சொன்னதை அப்படியே செஞ்சிக்கிட்டு வந்தான்.

வள்ளல் மகனப் பிடிச்சிருந்த விதிக் கடவுளுனாலே தெனமும் ஒரு பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் கொண்டு வந்து கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுருச்சு. அதுமட்டுமில்லாம மத்த விஷயத்துல எல்லாம் அந்த விதிக்கடவுளுனாலே கவனஞ் செலுத்த முடியல. சரி இந்தப் பயலுக்கு யாரு சொல்லிக்குடுக்குறான்னு பாத்துட்டு அந்தச் சாமியாருக்கிட்டயே விதிக்கடவுள் போச்சு.

அப்படிப் போன விதிக்கடவுள் அந்தச் சாமியாரப் பாத்து, “ஏஞ் சாமியாரே, அந்தப் பய ஒரு மாட்டோடவும் கன்னோடவும் இருந்து கஷ்டப்படணும்னு விதி இருக்கு. அப்படி இருக்கயில இப்படி நீங்க அவனுக்குச் சூட்சுமத்தச் சொல்லி விதிய மீறலாமா?”ன்னு கேட்டது.

அதக் கேட்ட சாமியாரு, “விதிக்கடவுளே, ஒன்னையக் கும்புடுறேன். ஒரு நல்லவரோட மகன் இப்படிக் கஷ்டப்படக் கூடாதுல்ல. கெட்டவன் கஷ்டப்பட்டா பரவாயில்லை. ஆனா ஒரு நல்லவனும் நல்லவரோட மகனும் கஷ்டப்பட்டா மக்கள் யாரும் தெய்வத்தை நம்ப மாட்டாங்க. தெய்வங்கறது பொய்யி. தெய்வம்னு ஒன்னு இருந்துச்சுன்னா இப்படி நல்லவங்க கஷ்டப்படுவாங்களான்னு நெனக்க ஆரம்பிச்சுடுவாங்க. அதனாலதான் இப்படி நான் செஞ்சேன். நீ இனிமே இந்தப் பயல விட்டுட்டுப் போயிரு. கஷ்டப்படுத்தாத. அப்பத்தான் ஆண்டவன இந்த மக்கள் நம்புவாங்க. நீபாட்டுக்கு அவனுக்குக் கஷ்டத்தக் கொடுத்தியினா யாரும் ஆண்டவன நம்ப மாட்டாங்க. அது மட்டுமில்லாம நானும் அவனுக்கு ஒதவி செய்வேன்” அப்படீனு சொன்னாரு.

இதக் கேட்ட விதிக்கடவுள் கொஞ்சம் யோசிச்சிப் பாத்துச்சு. அவரு சொல்றதும் ஞாயமாப்பட்டது. சரி நாம ஒரு நல்லவரோட மகனும் நல்லவனா இருக்கறபோது அவனச் சிரமப்படுத்தக் கூடாது. நாமளும் வேற வேலையப் பாக்கணும். இதே பொழப்பா இருக்கக் கூடாது. இனிமே இந்தப் பயல விட்டுருவோம்னு நெனச்சிக்கிட்டு சாமியாரப் பாத்து, “நீங்க சொல்றது சரிதான். நான் அவன விட்டுட்டுப் போயிடறேன். ஆனா அவன் கெட்டவனா மாறுனான நான் வந்து அவனப் பிடிச்சிடுக்கிடுவேன். அது மட்டுமில்லாம நீங்களும் அவனுக்கு ஒதவக் கூடாது. நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டத அவனுக்கிட்டயோ மத்தவங்கக்கிட்டயோ நீங்க சொல்லக் கூடாது. இதுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா நான் அவன விட்டுட்டுப் போயிடறேன்னு” சொன்னது.



அதுக்குச் சாமியாரும் சரின்னு ஒத்துக்கிட்டாரு. விதிக்கடவுளும் அவன விட்டுப் போயிருச்சு. விதிக்கடவுள அந்தச் சாமியாரு மதியால ஜெயிச்சுட்டாரு. அதுக்குப் பெறகு சாமியாரு வள்ளல் மகன் வீட்டுக்குப் போயி நீ இனிமே நல்லா இருப்பே. ஒங்க அப்பா மாதிரி நீயும் பலபேருக்கு ஒதவி செய்யி. மேலும் மேலும் ஓங்கிட்ட செல்வம் பெருகும். மத்தவங்களுக்கு எந்தக் காரணங் கொண்டும் ஒதவறத நிறுத்திடாத. ஒனக்குக் கஷ்டமே வராது. நான் இனிமே வரமாட்டேன். போறேன்னு” சொல்லிட்டு அவன வாழ்த்திட்டுக் கௌம்பிட்டாரு.

அந்த வள்ளலோட மகனுக்கு எதுவும் புரியல. அவனுக்குப் பணத்து மேல பணமாச் சேந்துச்சு. அவனும் அதையெல்லாம் தனக்குன்னு வச்சிக்காம பலருக்கும் கொடுத்து ஒதவி செஞ்சான். அந்த வள்ளலப் போல இவனும் நல்ல பேரு எடுத்தான். அடுத்தவங்களுக்கு ஒதவக் கூடிய மனசும் செயல்பாடும் இருந்துச்சுன்னா விதியக்கூட வெல்லலாங்கறதுக்கு இந்தக் கதையச் சொல்வாங்க...

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1aq.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License