இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

64.மூன்று கற்கள்


வெற்றி என்பது சாதாரணமாக் கிடைச்சிறாது. பல வலிகளையும் தாங்கி, பல தடைகளையும் தாண்டி, கடும் உழைப்பாலதான் அந்த வெற்றி கிடைக்கும். இதப் பத்தின ஒரு கதை ஒண்ணு இருக்கு.

ஒரு ஊருல பெரிய சிற்பி இருந்தாரு. அருமையான சிலைகளை எல்லாம் செய்வாரு. அவரு கடவுள் சிலை ஒண்ணச் செய்யணும்னு மெனக்கெட்டாரு. கடவுள் சிலை செய்யிறதுக்கு நல்ல கல்லே கிடைக்கல. என்னடா செய்யிறதுன்னு அந்தக் கல்லத் தேடித் தேடி அலைஞ்சாரு.

அப்படி அலையிறபோது ஒரு பெரிய மலை அடிவாரத்துக்கு வந்து சேந்தாரு. நெறையக் கல்லு கிடந்தது. அந்தக் கல்லு எல்லாத்தையும் பாத்துக்கிட்டே வந்தாரு.

ஒவ்வொரு கல்லையும் பாத்த ஒடனே அத கையில வச்சிருக்கிற உளியால தட்டிப் பாப்பாரு. இப்படி ஒவ்வொன்னாத் தட்டித் தட்டி பாத்துப்பாத்து ஒண்ணும் சரியில்லைன்னுட்டு மனசு ஒடிஞ்சி போயி ஒரு மரத்தடியில போயி சோர்ந்து போயி ஒக்காந்தாரு.

அப்பப் பாத்து, “ஐயா, ஐயா”ன்னு ஒரு குரலு கேட்டது. அவருக்கு ஒண்ணுமே புரியல. இந்த இடத்துல யாரு நம்மலக் கூப்புடுறதுன்னு சுத்துமுத்தும் பாத்தாரு. அப்ப அவருக்குப் பக்கத்துல கிடந்த ஒரு பெரிய கல்லுல இருந்துதான் கூப்புடுற சத்தம் வந்தது.

அவரு அந்தக் கல்லப் பக்கம் போயிப் பாத்தாரு. அப்ப, “ஐயா நான்தான் கூப்புட்டேன். என்னைய வச்சு கடவுள் சிலையச் செய்யுங்க. வாங்கய்யா”ன்னு சொன்னது.

சிற்பிக்கு ரெம்ப மகிழ்ச்சி. அவரு கல்லுக்கிட்ட போயி, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒன்ன வச்சி கடவுள் சில செய்யிறேன். ஆனா நான் ஒன்னச் செதுக்கறபோது ரொம்ப வலிக்கும். அத நீ பொறுத்துக்கணும். அப்பத்தான் என்னால சாமி செலையச் செதுக்க முடியும்”ன்னு சொன்னாரு. அதுக்கு அந்தப் பெரிய கல்லு சரின்னு சொன்னது.

சிற்பி சாமியக் கும்புட்டுட்டு சிலையச் செதுக்கத் தொடங்கினாரு. உளிய வச்சி கொஞ்சங் கொஞ்சமா தேவையில்லாது எல்லாத்தையும் செதுக்கி ஒதுக்கித் தள்ளிவிட்டாரு. அப்ப அந்தக் கல்லு ஐயோ வலிக்குதே வலிக்குதேன்னு கத்துச்சு. சிற்பி, இந்தபாரு கொஞ்சம் பொறுமையா இரு. இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள இப்படியா “ஆ ஊன்னு கத்துறது”ன்னு சொல்லிட்டு உளியால செதுக்க ஆரம்பிச்சாரு.

அவரு மொதல்ல கல்லுல உளியால வருவுனாரு. அதுக்கு அப்பறம் கொத்த ஆரம்பிச்சாரு. அவரு கொத்த ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அந்தக் கல்லு, “ஐயையோ என்னைக் கொல்லாதிங்க… என்னைய விட்டுருங்க.. என்னால பொறுக்க முடியல”ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுருச்சு.

சிற்பி அந்தக் கல்லு கத்துறதப் பாத்துட்டு, “ஒனக்குக் கடவுளாகப் பிடிக்கலையா? ஏன் இப்படிக் காட்டுக் கத்தலாக் கத்துற. நீ சொன்னதாலதான ஒன்னையச் சிலையா வடிக்க ஆரம்பிச்சேன். ஒனக்கு வேண்டாம்னா விட்டுரு”ன்னு சொல்லிட்டு உளிய எடுத்துக்கிட்டுப் போயிட்டாரு.

கொஞ்ச தூரம் போனபின்னால ஒரு கல்லப் பாத்தாரு. அந்தக் கல்லுல சிலை செஞ்சா நல்லா வரும்னு நெனச்சி அதுக்கிட்டக்கப் போனாரு. அதப் பாத்த அந்தக் கல்லு, “என்ன சிற்பியாரே என்ன வந்து பாக்குறீங்களே! ஏதாவது விசேஷமா?”ன்னு கேட்டது.

அதுக்கு அந்தச் சிற்பி, “கல்லே நான் ஒரு கடவுள் சிலையச் செய்யப் போறேன். அதுக்கு ஒன்னத் தேர்ந்தெடுத்திருக்கேன். ஒன்ன சிலையாச் செதுக்கவா?”ன்னு கேட்டாரு. கல்லு, “என்னையச் செலையாச் செதுக்குங்க. ஆனா எனக்கு வலி அதிகமா வரமாப் பாத்துச் செதுக்குங்க. அப்படிச் செஞ்சா நான் ஒத்துக்குறேன்...” என்றது.

சிற்பியும், “சரி, மெதுவாவே... அதிகம் வலிவராமச் செதுக்குறேன்”னு சொல்லிட்டு உளியக் கொண்டு சிலை வடிக்கத் தொடங்கினாரு. வேகமா சிலை வடிக்கிற வேலை ஓடிக்கிட்டே இருந்துச்சு. அரைவாசி முடிஞ்சிருச்சு. சிற்பி உளியக் கொஞ்சம் வேகமா அடிக்கத் தொடங்கினாரு.

ஒடனே அந்தக் கல்லு, “ஐயையோ என்னை ஏன் இப்படிப் பாடப் படுத்தறிங்க. மெதுவா வலிக்காம செதுக்கச் சொன்னதுக்கு இப்படியா மொரட்டுத் தனமா என்னையப் போட்டுக் கொத்தி எடுப்பிங்க. என்னால இதப் பொறுத்துக்க முடியல. இனிமே எம்மேல கைய வக்காதீங்க. என்னைய விட்டுருங்க...”ன்னு சத்தம் போட ஆரம்பிச்சிருச்சு.

சிற்பி எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. ஆனா அந்தக் கல்லு கேக்கற மாதிரி இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கிட்டு இருந்திருந்தா ஒரு நல்ல சிலை உருவாகி இருக்குமே. இந்தக் கல்லு இப்படிச் செஞ்சிடுச்சே! சே… நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான். இனி எந்தக் கல்ல வச்சி செலையச் செதுக்குறது. நம்மளோட கனவு நெறைவேறாமப் போயிருமோன்னு நெனச்சி ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டே நடந்தாரு.


அப்ப வழியில ஒரு பெரிய கல்லு கிடந்துச்சு. சிற்பியாரு அதைக் கவனிக்காம நடந்துக்கிட்டே இருந்தாரு. அவரைப் பாத்த கல்லு, “ஐயா, என்ன... என்னையப் பாக்காமப் போறீங்க. இங்க வாங்க. ஒங்களப் பாத்தா பெரிய சிற்பி மாதிரித் தெரியுது. இங்க வாங்க. நீங்க ஏதோ கவலையோட போறது மாதிரி தெரியுது. இங்க வாங்க. வந்து என்னன்றத ஏங்கிட்ட சொல்லுங்க. என்னால ஒதவ முடியும்னா... நான் உதவுறேன்”னு சொன்னது.

அதக் கேட்ட சிற்பிக்கு ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு பெரிய கல்லு நம்மள சரியாப் புரிஞ்சிக்கிடுச்சே. நாம நெனக்கிறது சுருக்கமாச் சொல்லிடுச்சேன்னு நினச்சிக்கிட்டு அந்தக் கல்லப் பாக்குறதுக்கு வந்தாரு. வந்தவரு அந்தக் கல்லப் பாத்து, “ஆமா நான் சிற்பிங்கறத... நீ எப்படிக் கண்டுபிடிச்சே...? அதுவும் கவலையோட போறேன்னுங் கண்டுபிடிச்சி சொல்லிட்டியே...? எப்படி...?”ன்னு கேட்டாரு.

அதுக்கு அந்தக் கல்லு, “ஐயா கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்கயோ இருந்து உளிச் சத்தம் கேட்டது. அத வச்சித்தான் நீங்கதான் அந்த உளிச் சத்தத்திற்குக் காரணம்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோடு மட்டுமில்லாம ஒங்க மொகத்தப் பாத்து, நீங்க வருத்தத்துல இருக்கறதையும் தெரிஞ்சிக்கிட்டேன்”னு சொன்னது.

அதைக் கேட்ட சிற்பி நடந்ததச் சொல்லி கடவுள் சிலையச் செதுக்குறதப் பத்திச் சொன்னாரு. கல்லும் என்னைய என்ன வேணுன்னாலும் செஞ்சிக்கிடுங்க. ஆனா என்னைய வச்சிப் பெரிய கடவுள் சிலை உருவாக்கிடுங்க. நீங்க என்ன செஞ்சாலும் அதை நான் பொறுத்துக்குவேன்னு தன்னைச் சிலை வடிக்கிறதுக்குச் சம்மதம் தெரிவிச்சது.

சிற்பியும் ராப்பகலா பாடுபட்டு, கடவுள் சிலைய செதுக்கத் தொடங்கினாரு. அந்த மூணாவது கல்லு எல்லா வலிகளையும் பொறுத்துக்கிடுச்சி. முக்கல மொணகல. அதுபாட்டுக்கு இருந்துச்சு. சிற்பி ரசிச்சு ரசிச்சு சிலையச் செதுக்கி முடிச்சாரு. அவராலேயே நம்ப முடியல. அவரு செதுக்க நெனச்சதுக்கும் மேலாவே சில நல்லா அமைஞ்சி போச்சு.

அந்த அற்புதமான செலைய, அந்த மலையோட அடிவாரத்துல வச்சி ஒரு கோயிலக் கட்டினாரு. அந்தச் சிலைய, அந்தக் கோயிலோட கற்பக்கிருகத்துல வச்சாரு. படிக்கு ஒரு கல்லு தேவைப்பட்டது. இரண்டாவதா சிலைவடிக்க எடுத்த கல்ல எடுத்துக்கிட்டு வந்து கற்பக்கிருகத்தோட படியாப் போட்டாரு. மொதக்கல்ல எடுத்துக்கிட்டு வந்து கோயிலுக்கு வெளியில இருக்கற படியாப் போட்டு வச்சாரு.

அவரு படியாப் போட்டபோது மொதக் கல்லும் ரெண்டாவது கல்லும் “என்னாத்துக்கு எங்கள இப்படிப் போட்டுக் கேவலப் படுத்தறீங்க. நீங்க செய்யிறது கொஞ்சங்கூட நல்லாவே இல்ல. கற்பக்கிருகத்துக்குள்ளாற நிக்கிறது எங்கள மாதிரிக் கல்லுதானே. அது உள்ளாற வச்சிட்டு எங்கள வெளியில போட்டுட்டீங்களே இது நியாயமா?”ன்னு கேட்டது.


அதுக்குச் சிற்பி, “நான் யாருகிட்டயும் பாரபட்சமா நடக்கவே இல்ல. ஒங்களுக்கு நீங்களே இந்த முடிவைத் தேடிக்கிட்டீங்க. மொதல்ல நீ என்ன சொன்ன எனக்கு ஒடம்பெல்லாம் வலிக்குது. என்னைய விட்டுருங்கன்னு கத்துனே. அப்பறம் ரெண்டாவது கல்லான நீயி பாதி செலைய ஒன்ன வச்சி உருவாக்குனபோது எனக்கு இதெல்லாம் தேவையில்லை. செலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு கதறுன. ரெண்டுபேரும் இப்ப இப்படிச் சொல்றீங்க. எல்லா வலியையும் பொறுத்துக்கிட்ட மூணாவது கல்லு சாமியா இருக்கு. வலியப் பொறுத்துக்காத மத்த ரெண்டு கல்லான நீங்க வெறுங்கல்லாவே வெளியில கெடக்குறீங்க... எல்லாம் அவங்க அவங்க எண்ணப்படி தான் நடக்கும். இதப் புரிஞ்சிக்கோங்க. மத்தவங்களக் குத்தம் சொல்லாதீங்க”ன்னு சொன்னாரு. வெளியில கெடந்த அந்த ரெண்டு கல்லும் தங்களோட செயலுக்காக வெக்கப்பட்டுக்கிட்டுக் கிடந்ததுங்க. இன்னவரைக்கும் இந்தக் கதை இந்தப் பக்கக் கிராமத்துல வழக்குல வழங்கி வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1bl.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License