இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

65.கோவலன் கதை


வாழ்ந்து கெட்டவங்கன்னு சில பேரைச் சொல்லுவாங்க. அதே மாதிரி எப்படி வாழணும்னு தெரியாம வாழ்ந்து கெட்டவங்க சிலபேரு ஊருல இருப்பாங்க. இத விளக்கறதுக்காக கோவலனப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.

மாலை சுத்திப் பொறந்தா மன்னனுக்கு ஆகாது கொடிசுத்திப் பொறந்தா கொலத்துக்கு ஆகாதுன்னு ஒரு பழமொழி இருக்கு. இதப்பத்தின கதையும் இந்தப் பக்கத்துல வழங்கி வருது.

பாண்டியராசனுக்கும் பாண்டியராணிக்கும் குழந்தை இல்ல. ரொம்ப நாளா ஏதேதோ தெய்வங்கள வேண்டிக்கிட்டதால அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையும் கொடி சுத்திப் பொறந்துச்சு. அந்தக் குழந்தையப் பாத்த ஒடனேயே மன்னனுக்கு மனசுல சங்கடம் வந்துருச்சு. அரண்மனை சோசியரக் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி பாண்டியராசா என்னென்னு கேட்டாரு.

அந்தக் குழந்தையப் பாத்த சோசியரு, ‘‘மாலை சுத்திப் பொறந்ததால இந்தக் குழந்தை மன்னனுக்கு ஆகாது. கொடி சுத்திப் பொறந்ததால இது குலத்துக்கு ஆகாது. அதனால இத இங்க வளர்க்கக் கூடாது. ஆறோ குளமோ எதுலயாவது கொண்டு போயி விட்டுருங்க. அப்படி இல்லன்னா இதக் கொன்று போட்டுருங்க. அப்பத்தான் இந்த நாடு நல்லா இருக்கும். இல்லைன்னா இந்த நாடு அழிஞ்சி போயிடும்னு’’ சொன்னார்.

அதக் கேட்ட மகாராசாவும் மகாராணியும் மனசொடிஞ்சி போயிட்டாங்க. என்ன செய்யிறதுன்னு தெரியல. மகளக் கொல்லுறதுக்கு மனசு வரல. அதனால அவங்க ஒருத்தங்கிட்ட ஒரு பெட்டியில வச்சி காவிரியாறு ஓடுற பக்கத்துல கொண்டுக்கிட்டுப் போயி விட்டுருன்னு’’ கொஞ்சம் தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்புனாங்க.

அந்தப் பச்சிளங் கொளந்தைய வாங்குனவனுக்குப் பாவமா இருந்துச்சு. என்ன செய்யிறதுன்னு யோசிச்சவன் அத அளுங்காமக் குளுங்காம அழகான ஒரு பொட்டிக்குள்ளாற வச்சி சோழநாட்டுல ஓடுற காவிரி ஆத்துல கொண்டுக்கிட்டுப் போயி விட்டு வந்துட்டான்.

அந்தப் பெட்டி ஆத்துல அப்படியே மிதந்து மிதந்து போனது. அப்படி ஆத்துல போனபெட்டி நேராக் காவிரி ஆறு கடல்ல கலக்குற இடமான காவிரிப்பூம்பட்டினத்து வழியா மிதந்து போனது.

அப்ப காவிரி ஆத்துல குளிக்கிறதுக்காக வந்த மாசாத்துவான் செட்டியாரும், மாநாய்க்கன் செட்டியாரும் மிதந்து வந்த அழகான பெட்டியப் பாத்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மச்சானுமா இருந்தாங்க. அப்ப அதுல மாநாய்க்கன் செட்டியாரு, ‘‘பொட்டிக்குள்ளாற இருக்கறது எனக்கு. பொட்டி ஒனக்குன்னு’’ சொன்னாரு.

அதன்படி பொட்டியத் தொறந்து பாத்த மாநாய்க்கன் செட்டியாருக்கு இன்ப அதிர்ச்சி ஆயிடுச்சு. பொட்டிக்குள்ளாற பட்டுத்துணியில அழகான பெண் குழந்தை இருந்துச்சு. அதப் பார்த்த குழந்தை இல்லாத மாநாய்க்கன் செட்டியாரு சந்தோஷப்பட்டாரு.

பொட்டிய எடுத்துக்கிட்ட மாசாத்துவான் செட்டியாரு, ‘‘இந்தப் பொட்டிய நான் வச்சிக்குறேன். இன்னொன்னையும் சொல்லிடறேன். இந்தப் பொண்ண வளத்து எம்மவன் கோவலனுக்குத்தான் நீ கட்டித்தரணும். சத்தியம் பண்ணுன்னு’’ சொன்னாரு.

மாநாய்க்கனும் அதுக்கென்னன்னு பொண்ணக் கட்டித்தர்றேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாரு. பொட்டியில வந்த கொழந்தைக்குக் கண்ணகின்னு பேரு வச்சு வளத்துக்கிட்டு வந்தாரு மாநாய்க்கன் செட்டியாரு. பொண்ணும் வளந்துக்கிட்டு வந்தா.

பொண்ணுக்கு ஏழெட்டு வயசு நடக்கறபோது கோவலனுக்கு கட்டிக் கொடுத்தாங்க. கண்ணகியவிட கோவலன் பெரியாளு. கண்ணகிக்குக் கல்யாணம்னா என்னன்னே தெரியாது. அந்தப் பருவத்துல அவளக் கோவலனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.


அந்தக் கல்யாணத்துக்கு திருக்கடையூருல இருக்கற மாதவிங்கறவ நாட்டியமாடுறதுக்காக வந்தா. மாதவி பிரம்மாதமா நாட்டியம் ஆடுனா. அவ ஆட்டத்துல எல்லாரும் மயங்கிப் போனாங்க. கோவலனும் நாட்டியத்தை ரசிச்சிப் பாத்தான்.

கோவலன் பாக்குறதுக்கு லட்சணமா இருந்ததைப் பாத்த மாதவிக்கு அவம்மேல ரெம்பப் பிரியம் ஏற்பட்டுருச்சு. மாதவியோட அழகுல கோவலனும் சொக்கிப் போயிட்டான். அத மாதவியும் தெரிஞ்சிக்கிட்டா. அவ நாட்டியத்துக்கு இடையில, ‘‘நான் வச்சிருக்கிற மாலைய இப்ப வீசி எறிவேன். அந்த மாலை யாரு கழுத்துல விழுதோ அவங்க எங்கூட வந்துறணும். எந்த மறுப்பும் சொல்லக் கூடாதுன்னுட்டா’’ அத அங்க இருந்தவங்க எல்லாரும் சரின்னு ஒப்புக்கிட்டாங்க.

மாதவியும் வேகமா நாட்டியமாடியபடி தன்னோட கையில வச்சிருந்த மாலைய வேகமா தான் விரும்பிய கோவலன் இருக்கற எடத்த நோக்கி வீசி எறிஞ்சா. வேகமா சொழண்டுக்கிட்டுப் போன மாலை சரியா கோவலன் கழுத்துல விழுந்தது. அப்படி விழுந்த மாலையை கோவலனால கழட்ட முடியல.

அவன் என்ன செய்யிறதுன்னு முழுச்சிக்கிட்டு நின்னான். அப்படி இருக்கறபோது மாதவியோட தாய்கிழவி கையில வச்சிருத வெத்தலைய மடிச்சி இத வாயில போட்டுக்கோங்கன்னு சொன்னா. கோவலனும் அத வாங்கி வாயில போட்டுக்கிட்டான். அப்பற என்ன நடந்துச்சுன்னே அவனால கணிக்க முடியல.

மாதவி நாட்டியமாடிட்டுக் கிளம்புனபோது கோவலனும் அவபின்னால போயிட்டான். கண்ணகிய மறந்து அவ வீடே குடியாக் கெடந்தான். மாதவி அவனோட சொத்தெல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டா. இப்படி இருக்கயில கண்ணகிக்கு வெவரம் வந்தவுடனேயே ஆஹா நம்மளோட புருஷன் மாதவி வீட்டுலயில்ல இருக்கறான். அவன் எப்ப வருவான்னு எதிர்பாத்துக்கிட்டு இருந்தா.

அப்படி இருக்கறபோது கண்ணகி ஒரு லிகிதத்தை எழுதி கோவலனுக்கிட்டக் கிடைக்கற மாதிரி கொடுத்துவிட்டா. அந்த லிகிதத்தைப் படிச்ச கோவலனுக்கு அப்பத்தான் புத்தி தெளிஞ்சது. ஆஹா நம்ம தொட்டுத் தாலிகட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு இப்படி மாதவி வீட்டுலயே கெடக்குறோமேன்னு நெனச்சிக்கிட்டு சரி கண்ணகியப் போயிப் பாப்போம்னுட்டு மாதவிகிட்ட போயி அனுமதி கேக்குறான்.

அதக்கேட்ட மாதவி நாளக்கிப் போகலாம்னு சொல்லிட்டா. இப்படியோ நாளக்கிப் போகலாம் நாளக்கிப் போகலாம்னு சொல்லியே காலத்தக் கடத்துனா. அப்படி இருக்கறபோது கண்ணகிக்கு ரெம்ப முடியலன்னும் அவள வந்து கோவலன் பாக்கலைன்னா செத்துப் போயிருவான்னும் ஒரு லிகிதம் கோவலனுக்குக் கிடைச்சது.

அதப் படிச்சுப் பாத்த கோவலன் பதறிப் போயிட்டான். அவன் மாதவிக்கிட்ட நான் போயி கண்ணகியப் பாத்துட்டு வந்துடுறேன். என்னப் போகவிடுன்னு சொன்னான். அதுக்கு மாதவி, ‘‘ஐயோ நான் எப்படி ஒங்கள விட்டுட்டு இருப்பேன். என்னால முடியாதே. நீங்க போயிட்டா நான் செத்துப் போயிருவேன். அதனால ஒங்கள மாதிரியே ஒரு பதுமையத் தங்கத்தால செஞ்சிவச்சிட்டுப் போங்கன்னு சொன்னா’’. அப்படிச் சொன்னா ஒண்ணுமில்லாத கோவலனால அந்தச் சிலையக் கொடுக்க முடியாமப் போயிரும். அவன் நம்மகூடவே இருப்பான்னு நினச்சிக்கிட்டு அப்படிச் சொன்னா.

அதுக்குக் கோவலன் அவ்வளவு தங்கத்துக்கு நான் எங்க போவேன்னு புலம்புனான். அப்பப் பாத்து கண்ணகியோட லிகிதத்தைக் கொண்டுக்கிட்டு வந்தவன் ஓடோடிப்போயி கண்ணகிக்கிட்ட மாதவி வீட்டுல நடந்ததச் சொன்னான். அதக் கேட்ட கண்ணகி, ‘‘கோவலன் மாதிரிச் செஞ்ச மரச் சிலையக் கொடுத்து, இந்தச் சிலைய எம்பேரச் சொல்லச் சொல்லி தொடச் சொல்லு ஒடனே மாறிடும். அப்ப அவர வீட்டுக்கு வரச்சொல்லுன்னு’’ சொல்லிப் போகச் சொன்னா.

அந்த மரச்சிலைய எடுத்துக்கிட்டுப் போயி கோவலன்கிட்ட மாதவிக்குத் தெரியாம அந்தாளு கொடுத்துட்டுக் கண்ணகி சொன்னதையும் சொன்னான். கோவலனும் ரொம்ப சந்தோஷப்பட்டு, ‘‘அந்த மரச்சிலையக் கையால தொட்டுக்கிட்டு, என்னோட பொண்டாட்டி கண்ணகி பத்தினின்னா இந்த மரச்சிலை தங்கச் சிலையா மாறணும்னு’’ சொன்னான்.

ஒடனே அந்த மரச்சிலை தங்கச் சிலையா மாறிடுச்சு. அத எடுத்துக்கிட்டுப் போயி மாதவிக்கிட்டக் கொடுத்தான். அந்தச் சிலையப் பாத்த மாதவிக்குத் தூக்கிவாரிப் போட்டுருச்சு. இனிமேலும் கோவலனத் தடுத்தம்னா எதுவும் ஏடாகூடாம நடந்து போயிடும்னு நெனச்சிக்கிட்டு ‘‘சரி போயிட்டு அவளப் பாததுட்டு ஒடனேயே வந்துடணும்னு’’ சொன்னா.


கோவலனும் கண்ணகியப் பாக்கறதுக்காக வந்தான். கோவலன் வெறும் ஆளா எல்லாத்தையும் மாதவிக்கிட்ட இழந்துட்டு வந்து கண்ணகி முன்னால நின்னான். கண்ணகியப் பாத்துட்டு தான் செஞ்சதெல்லாம் சொல்லி கண்கலங்கி அழுதான். அவன் அழுறதப் பாத்த கண்ணகி, ‘‘கவலப் படாதீங்க. அடுத்து என்ன செய்யிறதுன்னு சொல்லுங்க. அதும்படி செஞ்சிறலாம்னு சொன்னா’’.

அதக் கேட்ட கோவலன். ‘‘ஒன்னய எப்படியெல்லாம் கஷ்டப்படுத்திட்டேன். இப்ப கையில ஒண்ணுமில்லாம நிக்கவச்சுட்டேன். இப்ப என்ன பண்றது. வெளியூருக்குப் போயி மறுபடி வியாபாரம் செஞ்சி எழந்தது எல்லாத்தையும் மீட்டுறலாம். ஆனா என்னோட கையில எதுவும் இல்லாம நான் எப்படி யாவாரம் செய்யிறது”ன்னு கேட்டான்.

அதுக்குக் கண்ணகி, ‘‘இதுக்குப் போயா நீங்க கண்கலங்குறது. என்னோட கால்ல கிடக்கிற செலம்ப வித்து யாவாரம் செஞ்சி முன்னேத்தத்துக்கு வந்துரலாம்”னு சொன்னா. இதக்கேட்ட கோவலனுக்கு ரொம்ப சந்தோஷமாப் போயிட்டது. அவன் கண்ணகியப் பார்த்து, ‘‘சரி வா யாரும் பாக்குறதுக்குள்ளாற, நாம இந்த ஊரைவிட்டுட்டு மதுரைக்குப் போயி யாவாரம் செஞ்சி பொழைப்போம்”னு சொல்லி கண்ணகிய அழைச்சிக்கிட்டு மதுரைக்கு நடந்தே போனான்.

அப்படிப் போறபோது ஒரு பெரிய காடு ஒண்ணு வந்துச்சு. அந்தக் காட்டுக்குள்ளாற கோவலனும் கண்ணகியும் நடந்து போறபோது கண்ணகிக்குத் தண்ணித் தாகம் எடுத்துச்சு. அவ கோவலனப் பாத்து, ‘‘ஏங்க எனக்குத் தண்ணித் தாவமா இருக்கு. இந்தக் காட்டுக்குள்ளாற எங்காவது கொஞ்சம் தண்ணி கெடச்சா கொண்டாங்களேன்”னு சொன்னா.

கோவலனும் ‘‘சரி நீயி இங்கயே இரு. நான் போய் தண்ணி கெடைக்குதான்னு பாத்துக் கொண்டுக்கிட்டு வர்றேன்”னு சொல்லிட்டுப் போனான். அவன் போயி காட்டுக்குள்ளாறத் தண்ணியத் தேடுனான். ரொம்ப தூரம் போயிட்டான்.

அப்பப் பாத்து, அந்தக் காட்டுக்குள்ளாற இருந்த கொள்ளக்காரங்க அஞ்சாறு பேரு, அந்தப் பக்கமா வந்தானுங்க. அவங்க மரத்தடியில ஒக்காந்துருந்த கண்ணகியப் பாத்தானுங்க. அவளப் பாத்துட்டு அவகிட்ட இருக்கறத கைப்பத்தணும்னு நெனச்சிக்கிட்டு வேகவேகமா அவ இருந்த எடத்துக்கு வந்தாங்க.

அவங்களப் பாத்த கண்ணகிக்குப் பயம் வந்துருச்சு. இருந்தாலும் அத வெளிக்காட்டிக்காம தைரியமா இருந்தா. வந்தவனுங்க, ‘‘ஏய் ஒன்கிட்ட இருக்கறதக் கொடுத்துரு. இல்லைன்னா ஒன்னக் கொன்னுருவோம்”னு சொல்லிக் கத்திய எடுத்துக் காட்டி மிரட்டினாங்க.

அதப் பாத்த கண்ணகி, ‘‘ஐயா என்கிட்ட ஒண்ணும் இல்ல. எல்லாத்தையும் எழந்துட்டு நான் எம்புருஷனோட பொழைக்கிறதுக்கு மதுரைக்குப் போயிக்கிட்டு இருக்கோம். என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க”ன்னு கையெடுத்துக் கும்பிட்டா. அப்ப அதுல இருந்த ஒரு முரடன், ‘‘இவள இப்படிக் கேட்டா தரமாட்டா. இவள நம்மளோட எடத்துக்குத் தூக்கிக்கிட்டுப் போயி ரெண்டு ஒதை போட்டுக் கேட்டாத்தான் கொடுப்பாள்”ன்னு சொல்லி அவளத் தூக்குறதுக்காக வந்தான்.

அதப்பாத்த கண்ணகி, தன்னோட மனசுக்குள்ளாற, ‘‘நான் கோவலனுக்கு உண்மையான பத்தினின்னா இவனுங்க எல்லாரும் கல்லா மாறிப் போயிடணும்”னு சொன்னா. ஒடனே அவங்க எல்லாரும் கல்லா மாறிப்போயிட்டாங்க.

அப்பப் பாத்து கண்ணகிக்குத் தொன்னயில கோவலன் தண்ணி கொண்டுக்கிட்டு வந்தான். வந்தவன் கண்ணகிக்கிட்ட தண்ணியக் கொடுத்துக் குடிக்கச் சொன்னான். அப்ப பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த கல்லுச் சிலைகளப் பாத்துட்டு என்னன்னு கண்ணகியக் கேட்டான். அதுக்குக் கண்ணகி நடந்ததச் சொன்னா. கோவலன் அவங்க மேல பரிதாபப்பட்டு, ‘‘அவங்கள மறுபடியும் மனுசங்களா மாத்திப்புடு. பாவம் போனாப் போறாங்க”ன்னு சொன்னான்.

அதக்கேட்ட கண்ணகி, ‘‘நான் கோவலனோட உண்மையான பத்தினின்னா கல்லாப் போனவங்க மறுபடியும் மனுசங்களா மாறணும்”னு சொன்னா. ஒடனே கல்லாப் போன திருடனுங்க மனுசங்களா மாறிட்டாங்க. அவங்க, கோவலன் கால்லயும் கண்ணகி கால்லயும் விழுந்து, ‘‘எங்கள மன்னிச்சிருங்க. இனிமே இந்தமாதிரி செய்ய மாட்டோம்”னு சொல்லிட்டுக் கால்ல விழுந்தாங்க.

கோவலனும் கண்ணகியும் அவங்கள மன்னிச்சி அனுப்பிச்சாங்க. பிறகு அவங்க நடந்து நடந்து மதுரைக்குப் போனாங்க. மதுரைக்குப் போயிச் சேர்றபோது இருட்டாயிடுச்சு. அவங்களோட கவுந்திங்க சாமியாரும் வந்தாங்க. அவங்களோட ஒதவியோட கோவலனும் கண்ணகியும் மாதரிங்கற எடைச்சி வீட்டுல தங்குனாங்க.


மாதரி அவங்களுக்கு தங்குறதுக்கு ஒரு எடத்தக் கொடுத்துச் சமச்சிச் சாப்புடறதுக்குரிய அரிசி பருப்பு சட்டி சாமான் எல்லாத்தையும் கொடுத்துத் தங்க வச்சா. கண்ணகி கோவலனுக்கு வக்கனையா சமச்சிப் போட்டா. கோவலன் அவ சமச்சதை நல்லாச் சாப்புட்டான். அப்பத்தான் கண்ணகியோட அருமை கோவலனுக்குத் தெரிஞ்சது. ஐயோ இப்படிப்பட்டவள நாம இத்தனை காலம் தவிக்க விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டான்.

அதுக்குப் பெறகு காலையில எந்திருச்சு கண்ணகிக்கிட்ட இருந்த சிலம்ப வாங்கிக்கிட்டு அதவிக்கிறதுக்குப் பொறப்புட்டான். அப்ப கண்ணகி கோவலனப் பாத்து, ‘‘என்னவரே நீங்க போறது புதுசான ஊருக்குள்ள... நீங்க பத்திரமா வந்து சேரணும். ஒங்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துறக் கூடாது. ஒங்களுக்கு ஏதாவது ஆபத்து நேந்துருச்சுன்னா நான் எப்படித் தெரிஞ்சிக்கிறது. அதுக்கு எதாவது அடையாளம் வச்சிட்டுப் போங்க. அந்த அடையாளத்த வச்சி நான் நல்லது கெட்டது தெரிஞ்சிக்குறேன்”னு சொன்னா.

கோவலனும், நிறை விளக்கு, சந்தனம், மஞ்சள், பூ, பால் எல்லாத்தையும் வச்சிட்டு, கண்ணகியப் பாத்து, ‘‘நான் மதுரைக்குள்ளாறப் போறேன். எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா வௌக்கு அணைஞ்சிடும், சந்தனம், மஞ்சள் ரெண்டு கும்பிக் கருகிப் போயிரும், மலந்துருக்குறப் பூவு வாடிப் போயி கருப்பாப் போயிடும், பால் திரிஞ்சி போயிடும். இத வச்சி நீ தெரிஞ்சிக்குவே. பயப்படாத. நான் போயிட்டு வர்றேன்”னு சொல்லிட்டுப் போனான். மாதரிக்கிட்டயும் கண்ணகியப் பாத்துக்கச் சொன்னான்.

கண்ணகியும் கோவலனுக்கு சிலம்ப விக்கிறதுக்கு விடை கொடுத்து அனுப்புனா. கோவலன் மதுரைக்குள்ளாறப் போயி யாருக்கிட்ட கால் சிலம்ப விக்கலாம்னு நெனச்சிக்கிட்டு போறபோது பொற்கொல்லருக்கிட்ட போயிக் கொடுத்து இத வித்துருவோம்னு நெனச்சிக்கிட்டு பொற்கொல்லர் தெருவுக்குப் போனான்.

அப்ப பாண்டிய ராணியோட சிலம்பு ஒடஞ்சிருந்தத சரிபண்ணிக் கொடுக்குறதுக்கு பாண்டிய ராசா வஞ்சிப்பத்தங்கற பொற்கொல்லனுக்கிட்ட கொடுத்திருந்தாரு. அவன் அரசியோட சிலம்பத் தானே திருடி அத வித்துத் தின்னுப்புட்டான். ராசா எங்கடான்னு கேட்டதுக்கு சிலம்ப திருடன் திருடிட்டான் நான் என்ன செய்யிறதுன்னு பொய் சொல்லிட்டான்.

ஆனா ராசா அவன விடுறமாதிரி இல்ல. எப்படியாவது களவாண்டவன ஒடனே கண்டுபிடிச்சிச் சிலம்பக் கொண்டு வரலைனை்னா ஒன்னக் கண்டதுண்டமா வெட்டிப்புடுவேன்னு சொன்னாரு. வஞ்சிப்பத்தனும் சரி திருடனக் கண்டுபிடிச்சி எப்படியாவது சிலம்பக் கொண்டுக்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தான்.

அரண்மனையில இருந்து ரெண்டு காவக்காரங்கள வேறக் கூடவே கூட்டிக்கிட்டு வந்தான். அவனுக்கு எப்படி ராணியோட சிலம்பக் கொடுக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டே வந்தவனோட எதுக்கப் போயி கோவலன் நின்னு, ‘‘ஐயா இந்தச் சிலம்ப விக்கணும். வித்துத் தர்றீங்களான்னு’’ கேட்டான்.

வஞ்சிப்பத்தன் ஆஹா வசமா இந்தப் பய சிக்கிக்கிட்டான். இவன் ஊருக்குப் புதுசா வேற இருக்காம் போலருக்கு. இவன மாட்டிவிட்டுட்டு நாம எப்படியாவது தப்பிச்சிரணும்’னு மனசுக்குள்ளாறக் கணக்குப் போட்டான்.


பெறகு கோவலனப் பாத்து ஒரு இடத்துல இருக்க வச்சிட்டு அவன் கொண்டு வந்த சிலம்ப எடுத்துக் காட்டச் சொன்னான். கோவலனும் அப்பாவியா சிலம்ப எடுத்துக் காட்டுனான். சிலம்பு அரசியோட சிலம்பு மாதிரியே இருந்துச்சு. சரி இவன மாட்டிவிட்டுருவோம்னு நெனச்சிக்கிட்டு அவனப் பாத்து, ‘‘அப்பா இந்தச் சிலம்ப ராசாவாலதான் வாங்க முடியும். மத்தவங்களால வாங்க முடியாது. அதனால நான் போயி ராசாவப் பாத்துட்டுக் கேட்டுட்டு வர்றேன் நீயி இங்கயே இரு”ன்னு சொல்லிட்டுப் போனான்.

பாண்டியராசா ராணியோட அப்ப அரண்மனையில நாட்டியத்தப் பாத்துக்கிட்டு இருந்தாரு. ராசா நடனமாடுற பொண்ண ரசிச்சிப் பாத்துக்கிட்டு இருந்தாரு. அத பாண்டிய ராணி பாத்துப்புட்டா. ஒடனே கோவமா எந்திரிச்சி அந்தப்புரத்துக்குள்ளாற வேகவேகமாப் போனா. ராசாவுக்கு மனசு ரெம்பச் சங்கடமாப் போயிருச்சு. சரி ராணிய சமாதானப்படுத்துவோம்னுட்டு அவ பின்னாலேயே போனாரு.

அப்ப வழியில வஞ்சிப்பத்தன் ராணியோட சிலம்பக் களவாண்டவன கையிங்களவுமாப் பிடிச்சிவச்சிருக்கறதாச் சொன்னான். அதக் கேட்ட பாண்டியராசா சரி அந்தக் களவானியக் கொன்னுட்டு அவங்கிட்ட இருந்து சிலம்பக் கைப்பத்திக்கிட்டு வா”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

வஞ்சிப் பத்தனும் போயிக் கோவலனக் காளிகோயிலப்பக்கட்டு அழைச்சிக்கிட்டுப் போயி காவக்காரங்களவிட்டுக் கொல்லச் சொன்னான். அவனுகளும் கோவலனக் கொன்னானுங்க. கோவலன் என்ன ஏதுன்னு தெரியாமலேயே செத்துப் போனான்.

கண்ணகிக்கு கோவலன் வச்ச அடையாளம் எல்லாம் அவன் சொன்னது மாதிரி ஆயிப்போயிருச்சு. அவ அழுதா. ஐயோ நம்ம புருஷனுக்கு ஏதோ ஆயிப்போயிருச்சேன்னு வருத்தப்பட்டா. ஒடனே அவ மதுரைக்கு ஓடுனா. அப்ப வழியில வந்த மாதரி கோவலன் இறந்துட்டாங்கறதச் சொன்னா. அவகிட்ட எடத்தத் தெரிஞ்சிக்கிட்ட கண்ணகி அந்த எடத்துக்குப் போயி கோவலனப் பாத்தா. அவனோட தலைய ஒடம்போட ஒட்டவச்சி, ‘‘நான் கோவலனோட உண்மையான பத்தினியா இருந்தா என்னோட கணவன் வாய் திறந்து நடந்ததச் சொல்லட்டும்னு’’சொன்னா. எறந்து கெடந்த கோவலனும் வாய்திறந்து நடந்ததச் சொன்னான்.

கண்ணகி ஒடனே தலைவிரி கோலமா போயி, பாண்டியன அவனோட அரண்மனையில பாத்து முறையிட்டா. பாண்டியனும் அவளுக்கு என்னென்னமோ காரணங்களச் சொன்னான். கடைசியில கண்ணகி தனக்கிட்ட இருக்கிற சிலம்ப ஒடச்சி உண்மைய ராசா உணர்ற மாதிரி செஞ்சா. ராசா தான் தப்புப் பண்ணிட்டத உணர்ந்து உயிர விட்டான். ராணி கண்ணகியப் பாத்தா அப்ப அது அவ பெத்த மகள மாதிரியே இருந்தது. அப்பத்தான் அவளுக்கு உண்மை தெரிஞ்சது. இவளாள இப்ப நம்ம குலமே அழியப் போகுதுன்னு நெனச்சி கணவன் மேல விழுந்து உயிர விட்டா.

கண்ணகி தன்னோட வலது மார்பைத் திருகி வானத்துல எரிஞ்சி மதுரைய எரிச்சிட்டு கணவனோடவே சாமியோட சாமியா ஆயிட்டா.

இந்தக் கதை கோவலன் கதை என்ற பெயரிலும் இன்னைக்கு வரைக்கும் இந்தப் பக்கம் மக்களிடம் வழங்கி வந்துகிட்டு இருக்குது. வாழத் தெரியாமா வாழ்ந்து கெட்ட கோவலங்கதைன்னும் இதைச் சொல்வாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1bm.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License