இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

75. மகான் தூங்கிக் கொண்டிருக்கிறார்


ஒவ்வொரு ஊருலயும் ஒரு சாமியாரு இருப்பாரு. அவங்களப் பத்தின கதைகளும் இருக்கும். அப்படிப்பட்ட சாமியாரப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கத்துல வழங்கி வருது. சாமியாரு ஒருத்தரு ஒரு சமாதிக்குப் பக்கத்துல குடிசையப் போட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு.

எப்பப் பாத்தாலும் அந்த சமாதிய மெழுகி பூப்போட்டு வணங்கிக்கிட்டு இருப்பாரு. அதுக்குச் சூடம், சாம்பிராணி எல்லாம் போட்டு வர்றவங்களுக்குக் காட்டிட்டுப் பக்கத்துல ஒக்காந்து அவங்களுக்குக் குறி சொல்லுவாரு. அப்படி வர்றவங்க அந்தச் சாமியாருக்குக் காணிக்கையைக் கொடுத்துட்டுப் போவாங்க. அதனால அந்தச் சாமியாருக்கு நெறைய வருமானம் கெடச்சிக்கிட்டு இருந்துச்சு. சாமியாரு அந்தப் பணத்தை எல்லாம் தங்கமா மாத்தித் தன்னோட ஆசிரமத்துல வச்சிருந்தாரு. அவரு யாரையும் தன்கிட்ட சீடனாச் சேத்துக்கிறதே இல்லை.

இதப் பாத்த ஒருத்தன் எப்படியாவது இந்தச் சாமியாருக்கிட்ட சீடனாச் சேர்ந்து, அவரு வச்சிருக்கிற தங்கக் கட்டிகளைக் களவாண்டுக்கிட்டுப் போயிடனும்னு நெனச்சான். அப்படித் திருட முடியலைன்னா அந்த சமாதியோட ரகசியத்தையாவது தெரிஞ்சிக்கிட்டு வந்துடணும்னு நெனச்சி அந்த ஆசிரமத்தையும் சாமியாரையும் சுத்திச்சுத்தி வந்தான்.

அதப் பாத்த சாமியாரு இவன் எதுக்கு இப்படி வர்றான். ஏன் இங்கயே பழியாக் கிடக்கிறான்? இத விசாரிக்கணுமேன்னு நெனச்சிக்கிட்டு ஒருநாள் அவனக் கூப்புட்டு, ‘‘ஏப்பா நீ யாரு? எதுக்கு இங்கயே சுத்திச் சுத்தி வர்றே? ஒனக்கு என்ன வேணும்னு’’ கேட்டாரு.

அதுக்கு அந்தத் திருடன், ‘‘சாமி நான் ஒங்ககிட்ட சீடனாச் சேந்துக்கணும். ஒங்களுக்கு நான் பணிவிடை செய்யணும். ஒங்களுக்குத் தெரிஞ்ச வித்தை எல்லாத்தையும் நான் கத்துக்கணும். எனக்குக் கருணை காட்டுங்க’’ அப்படீன்னு சொன்னான்.

அதுக்கு அந்தச் சாமியாரு, ‘‘அப்பா நான் யாரையும் சீடனாச் சேத்துக்கறது இல்லை”ன்னு சொன்னாரு.

அதக்கேட்ட திருடன், ‘‘சாமி அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நீங்க என்னயச் சீடனா ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். இல்லைன்னா நான் இங்க ஒக்காந்து சாப்பிடாமயே இருந்து என்னோட உசிர விட்டுடறேன்”னு சொன்னான்.

சாமியாரும் அவம்மேல இரக்கப்பட்டு, ‘‘சரி, உன்னை என்னோட சீடனா ஏத்துக்கறேன். நான் சொல்றத மட்டும் செஞ்சாப் போதும். வேற எதையும் நீயா செய்யக் கூடாது”ன்னு சொன்னாரு.

திருடனும் சரின்னுட்டு அவருகிட்ட சீடனாச் சேந்துட்டான்.

சாமியாருக்கு வேண்டியதை எல்லாம் அவரு குறிப்பறிஞ்சி செஞ்சான் திருடன். உண்மையிலேயே அவன் நல்ல சீடனா நடந்துக்கிட்டான். அவனோட செயல்களைப் பாத்து அவரு அவன முழுசா நம்புனாரு. ஆனா அவரு தன்னோட பணங்காசெல்லாம் வச்சிருக்கிற எடத்தை மட்டும் அவனுக்குக் காட்டல. அவனும் அதப் பத்திக் கேக்கல. அவனுக்கு இந்தச் சாமாதியப் பத்தி மட்டும் தெரிஞ்சிக்கிட்டுப் போயிடுவோம்னு மெதுவா மெதுவா அந்த சாமாதியைப் பத்திக் கேட்டான்.

அவனோட நச்சரிப்புத் தாங்க முடியாததால அந்தச் சாமியாரு யாரும் இல்லாத சமயத்துல அவனக் கூப்பிட்டு, ‘‘சீடனே! நான் ஒரு கழுதைய வளத்துக்கிட்டு வந்தேன். அதுமேல எனக்கு ரொம்பப் பிரியம். நான் எவ்வளவு சுமைய வச்சாலும் அது தூக்கிக்கிட்டுப் போகும். கொஞ்சங்கூட எடக்குப் பண்ணாது. அதனால அந்தக் கழுதைய நான் நல்லாப் பாத்துக்கிட்டேன். அப்படி இருந்தப்ப திடீர்னு அந்தக் கழுதை செத்துப் போச்சி. அத அப்படியே ஒரு பெட்டியில வச்சி எடுத்துக்கிட்டுப் போயி இந்த ஊருக்கு வந்தேன். அப்படி வந்து இந்த மரத்தடியில அதப் பொதைச்சு மகான் இங்க சமாதி ஆயிருக்காருன்னு சொன்னேன். இந்த ஊரு மக்களும் அதை நம்பிட்டாங்க. நானும் இதை வச்சே இப்பக் காலந்தள்ளிக்கிட்டு இருக்கேன். இதுதான் இந்தச் சமாதியோட ரகசியம். இதை யாருக்கிட்டயும் சொல்லாத. இப்ப இந்தக் கழுதையோட குட்டிதான் இங்க நிக்குது. இப்பத் தெரிஞ்சிக்கிட்டியா”ன்னு சொன்னாரு.


அதுக்கு அந்தச் சீடன், ‘‘சாமி இதெயெல்லாம் வெளியில சொல்லமாட்டேன். எனக்கு அந்தக் குட்டிக் கழுதையத் தந்நீங்கன்னா போதும் இதுதான் நான் ஒங்கக் கிட்ட வேண்டுற பொருளு. இதத் தந்தீங்கன்னா ரொம்பப் புண்ணியமாப் போயிடும்”ன்னு சாமியாருக்கிட்ட வேண்டினான்.

அதைக் கேட்ட சாமியாரு, ‘‘அப்பா அதை என்னால கொடுக்க முடியாது. அதுக்கும் வயசாயிருச்சு. அந்தக் குட்டி நின்னா எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும். அதனால அந்தக் கழுதையக் கேக்காத. போயி வேலையப் பாரு’’ அப்படீன்னாரு.

திருடனாகிய சீடனால எதுவும் பேச முடியல. சரியான நேரத்தை அந்தச் சீடன் எதிர்பாத்துக்கிட்டு இருந்தான். அவனவிட அந்தச் சாமியாரு இவம் மேலயும் அந்தக் கழுதை மேலயும் ரொம்ப ரொம்பக் கவனமா இருந்தாரு. இப்படியேக் கொஞ்ச காலம் போயிருச்சு. அப்போதைக்கு அந்தச் சாமியாரு அசந்த நேரத்துல இந்தச் சீடன் இராத்தியோட இராத்திரியா அந்தக் கழுதையப் புடிச்சிக்கிட்டுக் கௌம்பிட்டான்.

அப்படிப் போனவன் பல மைல் தள்ளி இருக்கிற கிராமத்துல போயி குளத்தங்கரையில சாமியாரா தன்னை மாத்திக்கிட்டு அங்கேயேத் தங்கிக்கிட்டான். அப்போதைக்கு அவன் இழுத்துக்கிட்டு வந்த கழுதை ரொம்ப முடியாம இறந்து போயிருச்சு. இவன் ஒடனே அதை ஒரு மரத்தடியில ஒரு பொட்டிக்குள்ளாற வச்சிப் புதைச்சிட்டான். அப்படிப் பொதைச்சிட்டு அந்த பொதைகுழிய மெழுகி பொட்டெல்லாம் வச்சி கும்புட ஆரம்பிச்சான். அந்தப் பக்கம் போயிக்கிட்டு இருந்தவங்க இதப் பாத்துட்டு இது என்னாதுன்னு கேட்டாங்க. அவன், ‘‘இங்க ஒரு மகான் ஜீவ சமாதியாயி அடக்கமாயிருக்காரு. என்னைய வந்து கும்புடுறவங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுப்பேன். அவங்களோட குறைகளை எல்லாத்தையும் தீத்துவச்சிருவேன். இதை எல்லாருக்கிட்டயும் சொல்லு. நீதான் என்னோட சீடன்னு சொல்லிட்டுப் போனாரு. அதனாலதான் மகான் முத்தி அடைஞ்ச சமாதிய நான் பத்திரமா மெழுகிக் கோலம்போட்டு வணங்கிக்கிட்டு இருக்கேன்”னு சொன்னான்.

அதக் கேட்ட அவன், ‘‘ஐயா என்னோட மாடு ஒண்ணு காணாமப் போயிருச்சு. அதத் தேடிக்கிட்டுத்தான் வந்தேன். இப்ப இந்த மகானக் கும்புட்டுட்டுப் போயித் தேடப் போறேன். அந்த மாடு மட்டும் கெடைச்சிருச்சின்னா இந்த மகானுக்கு என்னால முடிஞ்சதச் செய்யிறேன் சாமி”ன்னு சொல்லிட்டு கழுதையப் பொதைச்ச இடத்தக் கும்புட்டு திருநீற எடுத்துப் பூசிக்கிட்டுப் போனான்.

இப்படியே வர்றவங்க போறவங்கக்கிட்ட எல்லாம் இங்க ஒரு மகான் ஜீவ சமாதி அடைஞ்சிருக்காருன்னும் அவர வணங்குனா நல்லது எல்லாம் நடக்கும்னும் சொல்லிக்கிட்டே இருந்தான். ரெண்டு மூணு நாள்ல அந்த மாடு தேடிப் போனவன் வேக வேகமா வந்தான். வந்தவன் சீடனாகிய சாமியாரக் கும்புட்டுட்டு, ‘‘ஐயா, என்னோட மாடு கெடைச்சிருச்சு. எல்லாம் இந்த மகானோட அருள்தான் காரணம். இந்த மகானுக்கு ஊருக்குள்ள உள்ள எல்லாருக்கிட்டயும் சொல்லி ஒரு பெரிய மண்டபம் கட்டச் சொல்றேன். ஒங்களுக்கும் ஒரு குடிலு கட்டச் சொல்றேன்”னு சொல்லிட்டுக் காணிக்கையும் கொடுத்துட்டுப் போனான்.

அவம் போயி ஊருக்குள்ளாறச் சொன்னவுடன் கூட்டம் அலைஅலையா வர ஆரம்பிச்சிருச்சு. எல்லாரும் சேந்து மண்டபம் எல்லாம் கட்டிக் கொடுத்தாங்க. சீடனாகிய சாமியாரும் நல்ல கொழுத்த பணத்தைப் பார்த்தான். நெறையப் பணம் சேத்தான். இங்க கூட்டம் அலை மோதினதால அவனோட பழைய குருவோட மகான் அடக்கமாகி இருக்கற சமாதிக்கு ஆட்கள் போகல. அதனால அவருக்கும் வருமானம் குறைஞ்சது.

இது எதுனாலன்னு தெரிஞ்சிக்கிறலாம்னு இந்தச் சாமியாரு விசாரிச்சி விசாரிச்சி சீடன் சாமியாரா இருக்கற மடத்துக்கு வந்தாரு. அவரு போன சமயத்துல கூட்டம் இல்லை. சீடச் சாமியாரைப் பாத்த குருவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. சீடனாகிய சாமியாரு தன்னோட குருவப் பாத்துட்டு ஓடி வந்து அவரை வரவேற்று, ஒரு ஆசனத்துல ஒக்காற வச்சான்.

குருவுக்கு ஏகப்பட்ட கடுப்பு. கோபத்தை வெளியில காட்டாம, ‘‘ஏப்பா என்னோட கழுதையைத் திருடிக்கிட்டு வந்துட்டு எப்படியப்பா இந்தமாதிரி ஆனன்னு’’ கேட்டாரு.

அதைக் கேட்ட சீடன், ‘‘குருவே! எல்லாம் இந்த சமாதியில ஐக்கியமாகி இருக்கற மகானோட மகிமை”ன்னு சொன்னான்.

குருவுக்கு ஒண்ணுமே புரியல. புரியாமலேயே, ‘‘ஏப்பா எந்த மகான்? எங்க இருந்தாரு? ஆமா ஏங்கிட்ட இருந்து திருடிக்கிட்டு வந்தியே அந்தக் கழுதை எங்கே? சொல்லப்பா’’ன்னு சொன்ன ஒடனே, சீடச் சாமியாரு, ‘‘ஹஹஹ..குருவே மகான் மகான்னு சொல்லி நீங்க அங்க ஏமாத்துனீங்கள்ள அதே மாதிரி ஒங்கக் கிட்ட இருந்து திருடிக்கிட்டு வந்த கழுதை செத்துப் போயிருச்சு. அதைத்தான் நீங்க சொன்ன மாதிரி இந்த ஜனங்கக்கிட்ட மகான் ஒருத்தரு ஜீவ சமாதி ஆயிட்டாரு. நான் அவரோட சீடன் அப்படி இப்படின்னு நெறையப் பொய்யச் சொன்னேன். எல்லாரும் நம்பி இப்ப பெரியஅளவுல வந்துட்டேன். எல்லாம் ஒங்கக்கிட்ட கத்துக்கிட்டதுதான். பேசாம கொஞ்சநாளு இருந்துட்டு ஒங்க இடத்துக்குப் போயிருங்க”ன்னு சொன்னான்.


அவனோட பேச்சக் கேட்ட குரு அதுக்குமேல பேச முடியாம அங்க இருந்து கிளப்பிட்டாரு. அவங்க ரெண்டுபேரும் தொடர்ந்து மக்கள ஏமாத்தத் தொடங்கிட்டாங்க.

ஏமாறுகிறவங்க இருக்கற வரைக்கும் ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படீங்கறதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டான கதை.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1bw.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License