இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

76. சுயநலமாக இருக்கலாமா...?


சிலர் தங்களுக்கு எது கிடைத்தாலும் மற்றவர்களுக்கு ஒரு துளி கூடக் கொடுக்க மாட்டார்கள். அதைத் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும். எதற்காக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தன்னலத்துடன் செயல்படுவார்கள். இது குறித்த கதை ஒன்று உள்ளது.

கடவுள் மேல அதிகமான பக்தியுள்ள ஒருத்தன் இருந்தான். அவன் எப்பப் பாத்தாலும் கடவுள் பேரைச் சொல்லிக்கிட்டே இருப்பான். ஆனாலும், அவன் எப்பவும் தான் நல்லா இருக்கணும்னு மட்டுமே நெனைப்பான். அதைத் தாண்டி அவனது சிந்தனை வேற எங்கயும் போகாது. அவன் சுயநலமா இருந்தாலும் கடவுளுக்கு அவம்பேர்ல கொஞ்சம் பிரியம் இருந்துச்சு. அதனால அவன் கேட்டத அவனுக்குக் கொடுத்தாரு. அவனும் அத வாங்கிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தான்.

அப்படி இருக்கறபோது அவனுக்குள்ளாற ஒரு ஆசை வந்தது. அமுதம் அமுதம்னு சொல்றாங்களே! அதை நாம கண்ணால பார்த்தது கூட இல்லையே... கடவுளநேராப் போய்ப் பாத்து அவருகிட்ட இருந்து நாம அமுதத்தை வாங்கிச் சாப்பிடணும். அதுக்கு இந்த ஒடம்போட கடவுளப் பாக்கப் போகணும்னு முடிவு செஞ்சான்.

அமுதத்தை வாங்குறதுக்காக அவன் தினமும் கடவுளுக்கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தான். எப்பப் பார்த்தாலும் அவனுக்கு இதே சிந்தனை. அவனது வாய் ஓயாம அவனோட விருப்பத்தை இறைவன் கிட்டச் சொல்லிக்கிட்டே இருந்தது. கடவுளுக்கிட்ட இருந்து எந்தவிதமான செய்தியும் இவனுக்கு வரல.

அவன் ரொம்ப வருந்தி கடவுளுக்கிட்ட கேட்டான். ‘‘சாமி இந்த ஒடம்போட ஒன்னையப் பார்க்க வந்து ஓங்கையால நான் அமுதம் வாங்கிச் சாப்பிடணும்னு நெனக்கிறேன். நீதான் எனக்கு இந்த ஆசையை நிறைவேற்றணும்”னு மனமுருகி வேண்டினான்.

கடவுளுக்கு அவன் மேல இரக்கம் வந்துருச்சு. சரி இவந்தான் கேட்டுக்கிட்டே இருக்கறான். அவனக் கூப்பிட்டு கொஞ்சம் அமுதத்தைக் கொடுப்போம்னு நெனச்சிக்கிட்டு அவனத் தன்னோட பூதகணங்கள அனுப்பி உடம்போட தன்னப் பாக்குறதுக்காகக் கூட்டி வந்தாரு.

உடம்போட கடவுளப் பாத்த அவனுக்குப் பரம சந்தோஷம். அவரோட காலில விழுந்து விழுந்து வணங்கினான். அவனோட பக்திப் பரவசத்தைப் பார்த்த கடவுள் அவன் கேட்ட அமுதத்தை ஒரு சிறிய குடத்துலக் கொடுத்து, ‘‘மகனே இந்தக் குடத்துல இருக்கற அமுதத்தை இப்பவேக் குடிச்சிரு. நீ கேட்ட அமுதத்தை நீ விரும்பியது போலவே ஒனக்குக் கொடுத்திருக்கேன். அமுதத்தைச் சாப்பிடு”ன்னு சொன்னாரு.

அதக் கேட்ட பக்கதனுக்குத் தலைகாலு புரியாத சந்தோஷம். அமுதம் குடிச்சவங்க நீண்ட நாளு இருப்பாங்கன்னு அவன் நெனச்சான். அதனால தானும் தன்னோட மனைவி குழந்தைகளும் சாப்பிடலாம்னு நெனச்சிக்கிட்டு, ‘‘சுவாமி நான் பூலோகத்துக்குப் போயி சாப்பிட்டுக்கிறேன்னான்’’. அதுக்குக் கடவுள், ‘‘அப்பா அமுதத்தப் பத்தி ஒரு விஷயத்தைச் சொல்றேன் கேட்டுக்கோ. நீ பூலோகத்திற்குக் கொண்டு போறாதா இருந்தா இந்தக் கலயத்தை எக்காரணங் கொண்டும் தரையில வைக்கக் கூடாது. அதோட மட்டுமில்லாம இதை கையில வைத்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக் கூடாது. அப்படிச் செஞ்சா இது மாயமா மறைஞ்சிடும்”னு சொல்லி அனுப்பிச்சாரு.

அமுதக் கொடத்த வாங்கிக்கிட்டவன் அதை ஒரு பெரிய துணியால நல்லாக் கட்டி கையில எடுத்துக்கிட்டுப் பூலோகத்துக்கு வந்தான். அப்படி வந்தவன் தன்னோட வீட்டுக்கு வேகவேகமா நடந்தான். அப்படிப் போயிக்கிட்டு இருக்கற போது அவனுக்கு வெளிய போற மாதிரி கடுமையா வயித்த வலிச்சது. கூடவே ஒண்ணுக்கும் போகணும்னு மாதிரி இருந்துச்சு.


கொஞ்சம் கட்டுப்படுத்திக்குவோம்னு பல்லக் கடிச்சிக்கிட்டு அடக்கிக்கிட்டு நடந்தான். கொஞ்ச தூரம் போயிருப்பான். அவனால எதையும் கட்டுப்படுத்த முடியல. என்ன செய்யிறதுன்னு யோசிச்சான். யாராவது எதுத்தாப்புல வராங்களான்னு பாத்தான். அப்பப் பாத்து தலையில முக்காட்டப் போட்டுக்கிட்டு ஒருத்தன் நடந்து வந்தான். அவன் பாக்குறதுக்கு அசிங்கமா இருந்தான்.

அவனப் பாத்த இவனுக்கு, ‘‘அப்பா கடவுளாப் பாத்து இவன அனுப்பி வச்சிருக்காரு. இவங்கிட்ட கொடுத்துட்டு நாம வெளிய போயிட்டு வந்துருவோம்”னு நெனச்சிக்கிட்டு, அவனக் கூப்பிட்டு, ‘‘ஐயா இது கொடிய நாகப்பாம்போட விஷம். இத ஒருத்தரு கொண்டுக்கிட்டு வரச்சொன்னாரு. அதனால நான் கொண்டுபோறேன். இதக் கீழ வைக்கக் கூடாது. நான் வெளிய போயிட்டு வந்துடறேன். கொஞ்ச நேரம் இத வச்சிருங்க. நான் போயிட்டு வந்துடறேன்”னு சொல்லி அவங் கையில அமுதம் நிறைஞ்ச குடத்தைக் கொடுத்துட்டுப் போனான்.

போனவன் ரொம்ப நேரமா எழுந்திருச்சி வரல. வந்தவன் குடத்தைத் தெறந்து பார்த்துட்டு அதை அப்படியேக் குடிச்சிட்டான். குடத்தைக் கொடுத்தவன் காலு கையெல்லாம் கழுவிட்டு வந்து குடத்தை வாங்குனவனத் தேடினான். அங்க ஒரு கட்டுமஸ்தான அழகான ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான்.

அவனப் பாத்த இவனுக்கு ஒண்ணும் புரியல. என்னடா ரெம்ப கர்ணகடூரமா இருந்த அந்தப் பயலக் காணோமேன்னு சுத்தும் முத்தும் பார்த்துத் தேடுனான். அவன் தேடுறதப் பாத்த இவன், ‘‘ஐயா என்னத்தைத் தேடுறீங்க. நீங்க குடத்தைக் கொடுத்த ஆளத்தானே! அந்த ஆளு நான்தான். வேற யாருமில்லை. எனக்கு குஷ்டரோகம். மேலெல்லாம் பொத்துப் பொத்து வடிஞ்சது. நோயோட கொடூரத்தை என்னால தாங்க முடியல. அதனால தற்கொலை பண்ணிக்கிடலாம்னு நெனச்சிக்கிட்டு சாகறதுக்காகப் போனேன். அப்பத்தான் நீங்க விஷம் நிறைஞ்ச குடத்தைக் கொடுத்தீங்க. சாகத்தானே போறோம். இந்தக் கொடிய விஷத்தைக் குடிச்சிட்டுச் செத்துப் போயிருவேமேன்னு நெனச்சி அதைக் குடிச்சிட்டேன். அதுக்குப் பெறகு என்னோட நோயி வேதனை எல்லாம் போயிருச்சி. இந்தாங்க இந்த விஷம் இருந்த குடம். நீங்க செஞ்ச உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ரொம்ப நன்றின்னு’’ சொல்லிட்டுக் கிளம்பிட்டான்.


இவனுக்கு ஒண்ணும் புரியல. அட நாம ரொம்ப நாளாக் கஷ்டப்பட்டு வாங்கிக்கிட்டு வந்த இந்த அமுதம் இப்ப யாரோ முகந்தெரியாத ஆளுக்கிட்ட போயிச் சேந்துருச்சேன்னு வருத்தப்பட்டான். அந்தக் குடத்தைத் தெறந்து பாத்தான். ஏதாவது மிச்சம் இருக்கும்னு. ஆனால் அந்தக் குடம் வழிச்சி தொடச்சிக் கழுவுனது மாதிரி இருந்துச்சு. அட ஆண்டவனே என்னோட சுயநலத்தால இப்படி ஆயிப்போயிருச்சே. நான் என்ன செய்யிறது. நம்மளோட சுயநலத்துக்குக் கிடைச்ச பரிசு இதுதான்னு நெனச்சி நொந்துக்கிட்டு வீட்டுக்குப் போனான்.

ரொம்பவும் சுயநலமா யாரும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தா நமக்கு எதுவும் கிடைக்காது. நாம கடைசியில எல்லா நல்லவற்றையும் இழக்கறது மாதிரி ஆயிடும். இந்தக் கதை சுயநலத்தோட யாரும் இருக்கக் கூடாதுங்கறதுக்காக பெரியவங்களால சொல்லப்பட்டு வந்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1bx.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License