இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

83. கடவுள் யாருக்கு உதவுவார்?


இறைவன் முயற்சியும் உழைப்பும் உள்ள மனிதர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பான். முயற்சி செய்யாதவங்களுக்கு இறைவன் உதவி செய்ய மாட்டான். இறைவன் மீது பக்தி செலுத்தும் அடியவராக இருப்பினும் முயற்சியும் உழைப்பும் ஒருவனிடம் இருத்தல் வேண்டும். இதைப் பற்றிய கதை ஒன்று இவ்வட்டாரத்தில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

ஒரு கிராமத்துல ரெண்டு பேரு இருந்தாங்க. ஒருத்தன் பேரு சோமு. இன்னொருத்தன் பேரு ராமு. ரெண்டுபேரும் சாமிமேல ரெம்ப பக்தி உள்ளவங்க. தினமும் கோவிலுக்குப் போயி சாமியக் கும்புட்டுட்டு அதுக்குப் பிறகுதான் தங்களோட வேலைங்களைச் செய்வாங்க.

அதிலும் ராமு நல்ல உழைப்பாளி. எதையும் முயற்சி செஞ்சு பார்த்துருவான். ஆனால் சோமு எதுக்கெடுத்தாலும் அடுத்தவங்க வந்து தனக்கு ஒதவி செய்யணும்னு நெனைப்பான். இப்படி இருந்த சோமுவைப் பார்த்து ராமு, ‘‘டேய் சோமு ஒன்னைய நீ மாத்திக்க. எப்பவும் அடுத்தவங்க நமக்கு வந்து ஒதவி செய்வாங்கண்ணு நெனக்காதே. நாமளும் நம்மளால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்யணும். அது நமக்கு எப்போதும் கைகொடுக்கும். நாம கொஞ்சமாவது முயற்சி செய்யாம அடுத்தவங்களையே எப்போதும் நம்பி இருந்தா நாம முன்னேற முடியாது. அதே மாதிரி நாமளும் மத்தவங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் ஒதவி செய்யணும்டா”ன்னு அறிவுரை சொல்லுவான்.

ஆனால் ராமு சொல்றதை சோமு கேக்காம, “டேய் மரத்த வச்ச ஆண்டவன் தண்ணி ஊத்தாமப் போகமாட்டான்டா. நாம முயற்சி செய்யலைண்ணாலும் ஆண்டவன் நமக்கு ஓடி வந்து உதவி செய்வான்டா”ன்னு மறுத்துப் பேசுவான்.

இவங்க பக்கத்து ஊருக்கு ஒவ்வொரு நாளும் தங்களோட மாட்டு வண்டியில விறக ஏத்திக்கிட்டுப் போயி போட்டுட்டு வருவாங்க. அதுல கிடைக்கிறப் பணத்தை வச்சிக்கிட்டு ரெண்டுபேரும் வாழ்ந்துங்கிட்டு இருந்தாங்க.

இப்படி இருக்கறபோது ஒரு நாளு ராமு விறகு ஏத்தறதுக்கு வரல. அவனுக்குக் கொஞ்சம் வேலை இருந்ததால அவனால விறகு ஏத்திக்கிட்டுப் போறதுக்கு முடியலை. அதனால சோமு மட்டும் விறக ஏத்திக்கிட்டு பக்கத்து ஊருக்குப் போய்கிட்டு இருந்தான்.

அப்ப சரியான மழை. கொட்டோ கொட்டுன்னு கொட்டத் தொடங்கிடுச்சி. சோமு வண்டிய ஒரு ஓரமா நிப்பாட்டி வச்சிட்டு மழை நின்னதுக்கப்புறம் போகலாம்னு நின்னுட்டான். மழையும் நின்னது. மறுபடியும் சோமு வண்டிய ஓட்டிக்கிட்டுப் போனான்.

வண்டி போயிக்கிட்டே இருந்தது. அப்ப வழியில ஒரு காட்டாத்துல மழைபேஞ்சதுனால தண்டி ஓடிக்கிட்டு இருந்துச்சு. தண்ணி அதிகமா இல்லை. அதனால சோமு வண்டிய தைரியமா காட்டாத்துல குறுக்க ஓட்டிக்கிட்டுப் போனான்.

அப்படிப் போறபோது வண்டி காட்டாத்தக் கடந்து பக்கத்துல இருக்கற பள்ளத்துக்குள்ளாற மாட்டிக்கிருச்சு. சோமு மாட்ட தட்டி அடிச்சி ஓட்டிப்பாத்தான். வண்டி நகரல. வண்டிச் சக்கரம் நல்லா சகதியில சிக்கிக்கிருச்சு. ரெம்ப தரை ஈரமா இருந்ததால மாடுகளால வண்டிய இழுக்க முடியல.


சோமுவுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. அவன் வண்டியவிட்டு இறங்கி, “கடவுளே என்னோட வண்டிய சகதியில இருந்து தள்ளிவுடு. இப்படி வண்டிச் சக்கரம் சிக்கிக்கிருச்சே நான் என்ன செய்யிறது. கடவுளே கடவுளே இங்க வந்து என்னோட வண்டிய சகதியில இருந்து மேல தூக்கிவிட்டுரு”ன்னு கடவுளுக்கிட்ட மனமுருக வேண்ட ஆரம்பிச்சிட்டான்.

வழியில போறவுங்க வாரவுங்க எல்லாரும் அவனப் பாத்துட்டு என்னமோ இந்தாளு செஞ்சிக்கிட்டு இருக்கான்னு நெனச்சிக்கிட்டு அவங்க பாட்டுக்குப் போயிக்கிட்டு இருந்தாங்க. சோமுவும் ரொம்ப நேரமாக கடவுள வேண்டிக்கிட்டே இருந்தான். கடவுள் வரலை. சோமுவுக்கு ரொம்பக் கோவமாப் போயிருச்சு.

“கடவுளே ஒன்னைய எவ்வளவு நம்பி இப்ப அழைச்சிருப்பேன். ஆனா நீ வந்து எனக்கு ஒதவி செய்யலையே. நான் யாருக்கிட்ட போவேன். எம்மேல ஒனக்குக் கருணையே இல்லையா”ன்னு மறுபடி மறுபடி கடவுள நெனச்சி வேண்டிக்கிட்டே இருந்தான்.

அவனோட வேண்டுதலக் கேட்ட கடவுள், அவன் மேல இரக்கப்பட்டு அவன் முன்னால வந்து நின்னாரு. கண்ணத் தொறந்து பாத்த சோமுவுக்கு தலைகாலு புரியல. சந்தோஷத்தால குதிச்சான். கடவுள் சோமுவப் பாத்து, “எதுக்கு நீ என்னயக் கூப்புட்ட. ஒனக்கு என்ன வேணும் சொல்லு” அப்படீன்னாரு.

சோமு கடவுளப் பாத்து, “கடவுளே என்னோட வண்டிச் சக்கரம் இந்தப் பள்ளத்துல உள்ள சேத்துல சிக்கிக்கிருச்சு. அத நீ தூக்கிவிடணும். இதுக்காகத்தான் நான் ஒங்களக் கூப்புட்டேன்”னு சொன்னான்.

கடவுள் சோமுவப் பாத்து சிரிச்சாரு. “அட முட்டாள். இதுக்குப் போயா என்னையக் கூப்புடணும். வழியில போறவங்க வாரவுங்களப் பாத்து கொஞ்சம் இந்த வண்டியத் தள்ளி விடுங்க”ன்னு சொன்னா வந்து தள்ளிவுடப் போறாங்க. அப்படியே இல்லை. நீயே மாடுகளப்புடுச்சி முன்னால இழுத்துக்கிட்டுப் போயி முயற்சி செஞ்சிருக்கலாம். இல்லை வண்டிப் பின்னால நின்னு நீயே தள்ளி மாட்ட விரட்டி சேத்துல இருந்து வண்டிய ஓட்டி இருக்கலாம். அதெல்லாம் விட்டுப்போட்டு நீ எந்த முயற்சியும் செய்யாம என்னையக் கூப்புடுறியே! இதுக்கெல்லாம் போயி நீ என்னையக் கூப்புடலாமா? ஒன்ன மாதிரி முயற்சி செய்யாதவனுக்கும் ஒழைக்காம இருக்கறவனுக்கும் நான் வந்து ஒதவி செய்யமாட்டேன். நீயா முயற்சி செஞ்சி இதுல இருந்து போகமுடியும் போ முயற்சி செய். என்னையக் கூப்புடாதே”ன்னு சொல்லிட்டுக் கடவுள் மறைஞ்சிட்டாரு.


சோமுவுக்கு அப்பத்தான் புத்தி வந்தது. அடடா. நாமலே முயற்சி செஞ்சிருக்கலாமோ. இல்லை. வழியில போறவங்களக் கூப்புட்டு நாம ஒதவி கேட்டுருக்கலாமோ. இதெல்லாம் நமக்குத் தோணாமப் போச்சே. அது மட்டுமில்லாம நம்ம முன்னால கடவுளு வந்து ஒனக்கு என்ன வேணும்”னு கேட்டபோது முட்டாள் தனமா இந்த வண்டிச் சக்கரத்தத் தூக்கிவிடுன்னு கேட்டுட்டோமே. ச்சே நம்மளோட அறியாமையை என்ன சொல்றதுன்னு நொந்து போயி, இனிமே நாமளே முயற்சி செய்வோம். நாம முயற்சி செஞ்சா நமக்குக் கடவுள் நாம கூப்புடாமலேயே வந்து ஒதவுவாருன்னு நெனச்சிக்கிட்டு வழியில போறவங்களக் கூப்புட்டு வண்டிய சேத்துல இருந்து எடுத்துக்கிட்டுக் கிளம்பினான்.

கடவுள் முயற்சி செய்யிறவனுக்குத்தான் ஒதவி செய்வாருங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1ce.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License