இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

86. ஆட்டுக்கு வாலு அளந்துதான் வச்சிருக்கான்...


இந்த உலகத்தில் யாரும் திருப்தியோட வாழ்வதில்லை. மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுக் கொண்டே தங்களுடைய வாழ்க்கையை கரடு முரடாக ஆக்கிக் கொள்கின்றனர். மற்றவர்களைப் பார்க்கக் கூடாது. நம்முடைய வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்தல் வேண்டும். யாருக்கு இறைவன் எதைக் கொடுக்க வேண்டுமோ அப்படியே இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றான். இதை வலியுறுத்தும் கதை ஒன்று இவ்வட்டாரத்தில் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.

ஒரு வீட்டுல ஒரு வெள்ளாடும் ஒரு பசுமாடும் இருந்ததுங்க. அதுக ரெண்டும் நண்பர்களா இருந்துச்சுங்க. அப்படி நண்பர்களா அதுக இருந்தாலும் அந்த வெள்ளாட்டுக்கு மனசுக்குள்ளாற ஒரு ஏக்கமும் அதே சமயம் பசுமாட்டுமேல ஒருவிதமான பொறாமையும் இருந்துச்சு. ஆனா அதை வெள்ளாடு வெளியில காட்டிக்காமலேயே பசுமாட்டோடு நட்பா இருந்து வந்துச்சு.

எதுனால இந்தப் பொறாமை வெள்ளாட்டுக்கு வந்தது? அது அந்த வெள்ளாட்டுக்கு இருந்த மனப்பான்மைதான் காரணம். இந்த வெள்ளாடு எப்பப் பாத்தாலும் பசுவோட தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கும். தனக்கும் பசுவுக்கும் எதெதுல ஒத்துமை. எதெதுல வேற்றுமைன்னு பாக்கும். அப்படிப் பாக்குறபோது சிலது வெள்ளாட்டவிட பசுமாட்டுக்கு உயர்ந்ததா இருக்கும் அதை நெனச்சிக்கிட்டு வெள்ளாடு மனம் புழுங்கும்.

அந்த வெள்ளாடு எல்லாத்தையும் பொறுத்துக்கிருச்சு. ஆனா தனக்கும் பசுமாட்டுக்கும் இருக்குற வாலை மட்டும் ஒப்பிட்டுப் பாத்துப் பாத்து அதைமட்டும் பொறுத்துகிட முடியல. இந்த ஆண்டவன் நம்மமேல இப்படி வஞ்சகம் காட்டக் கூடாது. நமக்கு வாலைச் சிறிசா வச்சிட்டு, இந்த மாட்டுக்கு மட்டும் பெரிய வால வச்சிருக்கானே! இந்த வஞ்சகத்தைப் போயி யாருக்கிட்ட சொல்றது. ஆண்டவனுக்கு இப்படி ஓர வஞ்சனை இருக்கலாமா? அடக் கடவுளே! ஏன் இப்படி என்னையப் படைச்சேன்னு மனசுக்குள்ளாறயே மறுகும்.

இப்படியே இருந்துக்கிட்டு இருந்தபோது அந்த வெள்ளாட்டுனால சரிய மேய முடியல. வரவர அது ரொம்ப ஒடம்பு மெலிஞ்சிக்கிட்டே போச்சு. பசுக்கிட்ட கூட அந்த ஆடு சரியாப் பேசல. இதப் பாத்த பசுமாடு அந்த வெள்ளாட்டப் பாத்து, “ஏன் நண்பா ஒனக்கு ஒடம்பு எதுவும் சரியில்லையா? ஒடம்புக்கு என்ன பண்ணுது. வரவர நீ மெலிஞ்சிக்கிட்டே போறியே? ”ன்னு கேட்டது.

அதுக்கு அந்த வெள்ளாடு, “ஒண்ணுமில்லை நண்பா. ரொம்ப நாளா எனக்குள்ளாற ஒரு கேள்வி மனசப் போட்டு அரிச்சிக்கிட்டே இருக்கு. ஆனா அதை ஒன்கிட்ட கேட்டா நீ கோவிச்சிக்குவியோன்னு யோசனையா இருக்கு. சரி ஏன் அதப் பத்திப் பேசற. இத விட்டுரு”ன்னு சொல்லிட்டுத் திரும்பிக்கிடுச்சு. அதுக்குப் பசுமாடு, “இங்க பாரு. நீ எதைச் சொன்னாலும் நான் கோபப்படமாட்டேன். நீ பேசாம இருக்கறதுதான் தப்பு. எதுவாக இருந்தாலும் என்கிட்ட மனசுவிட்டுச் சொல்லு”ன்னு சொன்னது.

அதுக்கு வெள்ளாடு, “சரி சொல்றேன். இந்த ஆண்டவனுக்கு ஏன்தான் இந்த ஓரவஞ்சனையோ தெரியலை? உனக்குப் பெரிய வாலைப் படைச்சிட்டு எனக்கு மட்டும் சின்னதா வச்சிப் படைச்சிருக்காரு? இதுதான் எனக்குப் பெரிய வருத்தமா இருந்துச்சு. உனக்கு இருக்கற மாதிரி எனக்கும் பெரிய வால் இருந்த எப்படி இருக்கும்னு நெனச்சி நெனச்சி எனக்கு மனசு கஷ்டமாப் போச்சு”ன்னு சொன்னது.

இதைக் கேட்ட மாடு, “அட இதுக்குப் போயித்தான் இப்படி வெசனப்படுறியா? ஒனக்கு ஒடம்பெல்லாம் நெறைய முடி இருக்கு. அதனால கொசுவோ ஈயோ ஒன்னக் கடிக்காது. ஆனா என்னைய இந்த ஈயும் கொசுவும் எப்படி கடிக்குது தெரியுமா? ஒடம்பெல்லாம் வலிக்குது. அதுக கடியில இருந்து தப்பிக்கிறதுக்காகத்தான் எனக்கு ஆண்டவன் வாலைப் பெரிசாப் படைச்சிருக்கான். இது தெரியாம ஆண்டவனைக் குறைசொல்றீயே? இது சரியா”ன்னு சொன்னது.

இருந்தாலும் வெள்ளாட்டின் மனசு சமாதானமடையல. மாட்டைப் பாத்து, “இருந்தாலும் என்னோட வாலை ஆண்டவன் இன்னும் கொஞ்சம் பெரிசாப் படைச்சிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன்”னு திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

அதுக்கு பசுமாடு, “இதோ பாரு, திரும்பத் திரும்பச் சொன்னதையேச் சொல்லாதே. சும்மாவா சொன்னாங்க. ஆட்டுக்கும் அளந்துதான் வச்சிருக்கான்னு. பேசாம இருப்பியா? சும்மா சும்மா ஆண்டவனக் கொறை சொல்லிக்கிட்டு இருக்கே”ன்னு சொன்னது.

வெள்ளாடு, “அது என்ன ஆட்டுக்கும் அளந்துதான் வச்சிருக்கான்னு சொல்றே. ஏன் ஒனக்கு மட்டும் அளக்காம வச்சிருக்காறா. இதக் கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்”னு மாட்டைப் பார்த்துக் கேட்டது.


அதுக்கு மாடு, “நண்பா நான் சொல்றதக் கேட்டு மனசு சங்கடப்படாத. உள்ளதத்தான் சொல்லப் போறேன். எனக்கு ஏன் வாலைப் பெரிசாப் படைச்சான்னா என்னைக் கடிக்கிற கொசுக்களையும் ஈக்களையும் விரட்டுறதுக்காகத்தான் தெரிஞ்சிக்கோ. அதுமட்டுமில்லாம நான் தேவைன்னாத்தான் என்னோட வாலை ஆட்டுவேன். ஆனா நீ தேவை இருந்தாலும் இல்லாட்டியும் சும்மா சும்மா வாலை ஆட்டிக்கிட்டே இருப்பே. அது மத்தவங்களுக்குப் பெரிய தொந்தரவா இருக்கும். அதனாலதான் ஒன்னோட வாலை ஆண்டவன் சிறிசாப் படைச்சிருக்காரு. இது தெரியாம நீபாட்டுக்கு ஆண்டவனைக் கொறை சொல்லிக்கிட்டு என்மேலயும் பொறாமைப்பட்டுக்கிட்டு கவலைப்பட்டுக்கிட்டுத் திரியற. இனிமே இப்படி இருக்காத”ன்னு புத்திமதி சொன்னது.

இதைக் கேட்ட பின்னாலதான் ஆட்டுக்குப் புரிஞ்சது. ஆஹா நாம புரியாம எதைஎதையே நெனச்சிக்கிட்டு இருந்துட்டமேன்னு வெக்கப்பட்டு மாடுக்கிட்ட மன்னிப்புக் கேட்டுச்சு.

ஆண்டவன் யாராருக்கு எதை எதைக் கொடுக்கணுமோ அதைக் கண்டிப்பாக் கொடுப்பான். யாருக்கு எதைக் கொடுக்கணுமின்னு அவனுக்குத் தெரியும். இது புரியாம பலரும் குழம்பிக்கிட்டு இந்த உலகத்துல மத்தவங்களக் குறை சொல்லிக்கிட்டுத் திரியறாங்க. யாரையும் புரிஞ்சிக்கிட்டு எதையும் சொல்லணும். அதுதான் சரி. இதைத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1ch.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License