இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

10. கடல்ல பிடிச்ச தீ


சிலபேரு எதுவாக இருந்தாலும் அடுத்தவங்க நம்பும்படி சொல்வாங்க. பொய்யக் கூட உண்மைன்னு நம்பும்படி சொல்றதுல கெட்டிக்காரங்களா இருப்பாங்க. இவங்க சொல்றத நம்புறதுக்கு ஆளு இருந்தாங்கன்னு வச்சுங்கங்க அவங்கபாட்டுக்கு அளந்து விட்டுக்கிட்டே இருப்பாங்க... சிலபேரு தங்களுக்கு ஆளு இருக்குதுன்னு நடக்காததை எல்லாம் நடந்தது மாதிரி ஜோடிப்பாங்க... அவங்க வழியில போயித்தான் அவங்களத் திருத்த முடியும்.

ஒருத்தன் தன்னோட ஊருலருந்து பக்கத்துல இருந்த டவுனுக்குப் போயி அங்க நடக்கிற சந்தையில நல்ல குதிரையா வாங்கலாம்னு நடந்தே போனான். குதிரைச் சந்தைக்குப் போயி நல்ல குதிரையாப் பாத்து வாங்கிக்கிட்டு நடந்தே வந்தான். அந்தக் குதிரை குட்டி போடுற நெலமையில இருந்தது. அதனால அந்தாளு குதிரைய மெதுவாவே ஓட்டிக்கிட்டு வந்தான்.

அந்தமாதிரி பக்கத்தூருக்கு வர்றபோது இருட்டிப் போச்சு. அதனால அவன் ஊருக்கு வெளியில ஒரு எடத்துல இருந்த செக்குல குதிரையக் கட்டிப்போட்டுட்டு ஊருக்குள்ளாறப் போயி சாப்பிட்டு வந்துட்டு செக்குக்குப் பக்கத்திலேயே படுத்துகிட்டான்.

நடந்து வந்த அசதியில அப்படியே தூங்கிட்டான். நல்லா விடிஞ்சிருச்சு. எந்துருச்சுப் பாத்தான். அப்ப குதிரக் குட்டியப் புடுச்சிக்கிட்டு ஒருத்தன் வெளையாண்டுக்கிட்டு இருந்தான். அதப்பாத்த குதிரைய வாங்கிக்கிட்டு வந்தவன், “யோவ் இது என்னோட குதிரை போட்ட குட்டி அத விட்டுருய்யா’ன்னான். அதக்கேட்ட அந்தாளு, ‘‘வாய்யா வா... என்னோட செக்கு போட்ட குட்டி இது தெரியுமா...? நீபாட்டுக்கு பேசாமப் போயிரு” அப்படீன்னு மிரட்டுனான்.

குதிரைக்காரன், “செக்குக் குட்டி இல்லய்யா, இது குதிரைக் குட்டிய்யா... என்னோட குதிரைக் குட்டிய விட்டுரு... நீ இந்தமாதிரி பேசறது சரியில்லை... யார வேணுமின்னாலும் கேட்டுப்பாரு... இது என்னோட குதிரை போட்ட குட்டி... அதவிட்டுரு... நா என்னோட ஊருக்கு ஓட்டிக்கிட்டுப் போகணும்னு” சொன்னான்.

ஆனா செக்குக்காரன் குதிரைக் குட்டிய விடல. குதிரைக்காரனுக்கு ஒண்ணும் புரியல. அவன் எவ்வளவோ செக்குக்காரங்கிட்ட சொல்லிப் பாத்தான். ஆனா அவன் அதைக் காதுலேயே போட்டுக்கல... அதோடு மட்டுமில்லாம அவன் ஊருக்குள்ளாறப் போயி அவங்க ஆளுகளக் கூட்டிக்கிட்டு வந்து, “என்னோட செக்கு குட்டி போட்டுருச்சு... இது செக்குபோட்ட குட்டி... நீ ஒன்னோட குதிரையப் புடிச்சிக்கிட்டுப் போயிரு... இல்லாட்டி ஒனக்கு வேண்டியவங்கள கூட்டிக்கிட்டு வா... பஞ்சாயத்து வச்சிக்குவோம்”ன்னு சொன்னான்.

குதிரைக்காரனுக்கு ஒண்ணும் புரியல, அவனோட ஊருக்குப் போறதுன்னா ரெம்ப தூரம் போகணும்... சரி மெதுவா நடந்து போயி கூட்டிக்கிட்டு வருவோம்னு நொந்து போயிப் போனான். அவனோட ஊருக்குப் போறதுன்னா ஒரு பெரிய காட்டக் கடந்து போகணும். காட்டுக்குள்ளாற பயந்துகிட்டே போனான். எனக்கு யாரு தொணையா வருவான்னு நெனச்சிக்கிட்டே போனான்.



அப்போதைக்கு அவன் முன்னால ஒரு நரி வந்துச்சு. குதிரைக்காரன் பொலம்பிக்கிட்டும் அழுதுகிட்டும் போனதப் பாத்துட்டு அவன் மேல ரொம்ப இரக்கபட்டு அவனப் பார்த்து, “ஏய்யா இப்படிப் பொலம்பிக்கிட்டும் அழுதுகிட்டும் போற... எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. நான் ஒனக்கு ஒதவுறேன்னு” சொன்னது.

அவனும் பொலம்புறத நிறுத்திட்டு நடந்ததச் சொல்லிட்டு, “ஏஞ்சார்பா பேசறதுக்கு யாரு இருக்கா...ன்னு” திரும்பவும் பொலம்பிக்கிட்டு அழ ஆரம்பிச்சான். அதப் பார்த்த நரி, “நீ கவலப்படாத நான் ஓஞ்சார்பா பஞ்சயத்துல பேறதுக்கு வாரன்னு” சொல்லிட்டு அவனக் கூட்டிக்கிட்டு குதிரை குட்டிபோட்ட செக்கடிக்குப் போச்சு.

அங்கே அந்த ஊருக்காங்க எல்லாரும் ஒக்காந்துகிட்டு இருந்தாங்க. குதிரைக்காரனப் பார்த்துட்டு, “என்னய்யா ஒனக்குப் பேசறதுக்கு யாரய்யா கூட்டியாந்துருக்கே”ன்னு கேட்டாங்க.

அதுக்குக் குதிரைக்காரன், “ஐயா ஏஞ்சார்பாப் பேசறதுக்கு இந்த நரியத்தான் கூட்டியாந்துருக்கேன். ஏஞ்சார்பா அது பேசும்னு” சொன்னான். அதக்கேட்டு அந்த ஊரு ஆளுக சிரிச்சாங்க.

பஞ்சாயத்துத் தொடங்கிச்சு. அந்த ஊருக்காரங்க செக்குக்காரனுக்குச் சாதகமாப் பேச ஆரம்பிச்சாங்க. என்னென்னமோ சொல்லி கடைசியில செக்குத்தான் குட்டி போட்டுச்சு... அதனால இந்தக் குட்டி செக்கு போட்ட குட்டிதான்... செக்குக்காரனுக்குத்தான் இது சொந்தம்னு...” சொன்னானுக.

நரி அந்தச் சமயத்துல கண்ண மூடிக்கிட்டுத் தூங்கிக்கிட்டு இருந்துச்சு. அதப் பாத்த அந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவரு, “என்னய்யா பஞ்சாயத்துக்கு வந்த ஆளு இப்படித் தூங்கிக்கிட்டு இருக்கற”ன்னு கேட்டு சிரிச்சாரு.

அதுக்கு நரி, “ராத்திரி கடல்ல தீப்புடிச்சிருச்சி அத ரொம்ப நேரமா நானே நின்னு அணைச்சிட்டு வந்தேன்... அதனால சரியாத் தூங்க முடியல... இப்ப கொஞ்சம் கண்ண அசத்திருச்சு”ன்னு சொன்னது.

அந்த ஊரு நாட்டாமை கெக்கபிக்கன்னு சிரிச்சிட்டு, “ஏய்யா என்ன காது குத்துரியா... கடல்ல எப்பவாது நெருப்புப் புடிக்குமா... அதுல நீ மட்டும் போயி தனியா அணைச்சிட்டு வர்ரியா... பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு வேணாம்...”ன்னு கேட்டாரு.



உடனே அந்த நரி கோபமா, “ஆமாய்யா, ஒங்க ஊருல செக்குக் குட்டிபோடலாம்... ஆனா கடல்ல தீப்பிடிக்காதா...?”ன்னு கேட்டவுடனே அந்த ஊராளுக ஆஹா நாம ஓரநாயஞ்சொல்றம்னு இந்த நரி கண்டுபிடிச்சிருச்சி...ன்னு எல்லாரும் தலையக் குனிஞ்சிக்கிட்டு இருந்தாங்க.

நரி அவங்களப் பாத்து, “ஏய்யா ஒருத்தன் அப்புராணியா இருந்தா நீங்கள்ளாம் குதிரைக் குட்டியப் புடிச்சி செக்குக்குட்டின்னு பொய் சொல்லி அவன ஏமாத்தப் பாப்பிங்களா... நீங்க சொல்லறது உண்மைன்னா நாஞ்சொல்றதும் உண்மைதான்...” னு சத்தம் போட்டவுடனே அந்த ஊராளுக தப்பு நம்ம மேலதான்னு ஒத்துக்கிட்டு குதிரைக் குட்டிய குதிரையோட குதிரைக்காரங்கிட்ட கொடுத்துட்டு அவங்கிட்டயும் நரிக்கிட்டயும் மன்னிப்புக் கேட்டாங்க.

குதிரைக்காரனும் நரிக்கு மனசாற நன்றியச் சொல்லிட்டு தன்னோட ஊருக்கு குதிரைய ஓட்டிக்கிட்டுப் போனான். நரியும் காட்டுக்குள்ளாற குதிரைக்காரனுக்குத் தொணையா வந்துட்டு பெறகு தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1j.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License