இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

11. பாத்துட்டேன்... பாத்துட்டேன்...!


ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான். அவன் சாமி கும்புடவே மாட்டான். அவனுக்கு அப்பா இல்ல. அவனோட அம்மா தன்னோட மகன் சாமியும் கும்புட மாட்டேங்குறான் திருநீறு கொடுத்தாப் பூசவும் மாட்டேங்கிறானேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. அந்தம்மா எத்தனையோ தடவை சொல்லிப் பாத்துட்டாங்க அவன் கேக்குறமாதிரி இல்ல. அவங்க துணி நெசவு செய்யறவுங்க. பையனும் அவங்க தொழிலயே செஞ்சிக்கிட்டு இருந்தான். அந்த அம்மா மகனக் கூப்புட்டு, “மகனே நீ கோயிலுக்குப் போகாட்டியும் விபூதியாவது பூசிக்க. ஒன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்” அப்படீன்னு சொன்னாங்க.

ஆனா அவன், “அம்மா இதெல்லாம் எனக்குப் புடிக்காது. என்னயத் தொந்தரவு செய்யாதே... பேசாம வேலையப் பாரு”ன்னு சொல்லிட்டான். அந்த அம்மாவுக்கு மனசு கஷ்டமாப் போயிருச்சு. மகன் சொல்லறதக் கேக்க மாட்டேங்குறானேன்னு ரொம்ப நொந்து போயிட்டாங்க. அவங்களுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. படுத்த படுக்கையா ஆகிப் போயிட்டாங்க. அவங்க சாகப் போற நேரத்துல மகனக் கூப்பிட்டு, “மகனே, என்னோட கடைசி ஆசைய நிறைவேத்துறியா? நீ வந்து திருநீறப் பூசமாட்டே. பரவாயில்ல... ஆனா திருநீறப் பூசனவங்கள மட்டும் காலையில பாத்துட்டு அப்பறமா நீ வேலையப் பாரு. தினந்தோறும் இப்படிச் செஞ்சிட்டு நீ வேலையப் பாத்துக்கிட்டு வா... இந்தக் கடைசி ஆசையயாவது அம்மாவுக்காகச் செய்வியா...?”ன்னு கேட்டாங்க.

அவனும் சரி, அம்மா சாகப் போற நேரத்துல கேக்குறாங்களேன்னு திருநீறு பூசுறவங்களப் பாக்க மட்டும்தானே சொல்றாங்க... அது நம்மால முடியும் பாத்துருவோம்னு அம்மாகிட்ட சரின்னு வாக்குக் கொடுத்துட்டான். அந்த அம்மாவும் இறந்து போயிருச்சு.



மறுநாளு அவன் வேலையப் பாக்குறதுக்கு முன்னால திருநீறு பூசுனவனப் பாக்கனுமேன்னு நெனச்சபோது அவனுக்கு அவனோட பக்கத்து வீட்டுல சட்டிபான செய்யறவன் திருநீறு பூசறது ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒடனே ஓடிப்போயி அவனப் போயிப் பாத்துட்டு வந்தான். அந்த சட்டிபான செய்யிறவன். காலையில எந்திருச்சு சாமியக் கும்பிட்டுட்டு நெற்றி நிறையத் திருநீறு பூசிக்கிட்டு சட்டிபான செய்யத் தொடங்குவான்.

அவனப் பாத்துட்டுத் தெனமும் ஓடிவந்து தறிக்கட்டயில ஒக்காந்து வேலையப் பாக்க ஆரம்பிச்சிடுவான். இப்படியே நாளு போயிக்கிட்டே இருந்துச்சு. அப்படி இருக்கறபோது ஒருநாளு இவன் வேலையப் பாக்குறதுக்கு முன்னால அவனப் போயிப் பாத்துட்டு வந்துடலாம்னு அவனோட வீட்டுக்குப் போனான். ஆனா சட்டிபான செய்யிறவன் அங்க இல்ல.

அங்கங்க அவனத் தேடினான். காணோம். பொழுதும் ஆயிருச்சு. சட்டிபான செய்யிறவன் பொண்டாட்டிகிட்ட கேட்டதுக்கு அவன் சட்டி பான செய்யிறதுக்காக கண்மாய்க்கு வண்டியக் கட்டிக்கிட்டுப் போனதத் தெரிஞ்சிக்கிட்டான். சரி கம்மாய்க்குப் போயிப் பாத்துட்டு வந்துருவோம்னு நெனச்சிக்கிட்டு ஓட்டம் ஓட்டமா ஓடுனான். சட்டி பான செய்யிறவன் கம்மாய்க்குள்ளாற உள்ள பெரிய பள்ளத்துக்குள்ள மண்வெட்டியால மண்ண வெட்டிக்கிட்டு இருந்தான். அப்ப டம்னு ஒரு சத்தம் வந்துச்சு. மம்மபட்டியப் போட்டுட்டு அந்த எடத்துல இருந்த மண்ணக் கிளறிவிட்டான். ஒரு வெங்கலப் பான அதுக்குள்ளாற இருந்துச்சு. மண்ண நோண்டி நோண்டி அத மெதுவா வெளியில எடுத்துத் தொறந்து பாத்தான்.

அந்தப் பானை நெறயத் தங்கக் காசு இருந்துச்சு. ஆகா நமக்குத் தங்கப் புதையல் கெடைச்சிருச்சு. இதயாராவது பாக்குறாகளான்னு நெனச்சுப் பள்ளத்துக்குள்ளாற இருந்து மெதுவாத் தலையத்தூக்கி வெளியில பாத்தான். அப்ப அந்த நெசவு செய்யறவன் வேகவேகமா வந்தவன் அவனப் பாத்துட்டு, “ஆகா நாம் பாத்துட்டேன் நாம் பாத்துட்டேன்னு” கத்திக்கிட்டே வீட்டப்பாக்க ஓடுனான்.

சட்டி பான செய்யிறவனுக்கு பயமாப் போயிருச்சு. “அடடா... என்னடா இது வம்பாப் போயிருச்சு. நாம யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நெனச்சோம் இந்தப் பய பாத்துட்டு நாம் பாத்துட்டேன் பாத்துட்டேன்னு கத்திக்கிட்டு வேற போறான். அவனக் கூப்புட்டு இத யாருக்கிட்டயும் சொல்லாதடான்னு சொல்லணும்னு” நெனச்சிக்கிட்டு கொஞ்சம் மண்ண அள்ளிப் போட்டு அந்தப் புதையல் பானை மறைச்சி எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனான்.



வீட்டுக்குப் போனவன் அந்த நெவாளியக் கூப்புட்டான். எதுக்கு என்னான்னு தெரியாம நெய்யிறத விடடுட்டு இவனும் போனான். சட்டி பான செய்யிறவன், “இங்க பாரு... நான் புதையல் எடுத்ததப் பார்த்தத யாருகிட்டயும் சொல்லிப்பிடாத... நாம ரெண்டுபேரும் சமமா வச்சிக்கிருவோம்”ன்னு சொல்லி அந்தப் பானையத் தூக்கிக்கிட்டு வந்து அதுல இருந்த தங்கக் காசக் கீழ கொட்டி சரிசமமா அவனுகிட்ட பாதியக் கொடுத்தான்.

துணி நெய்யிறவனுக்கு ஆச்சரியமாப் போயிருச்சு. அட நாம அவன் திருநீறு பூசியிருக்கறதப் பாத்ததப் பாத்துட்டேன்னு சொன்னோம், இவன் புதையலப் பாத்துட்டதா நெனச்சிக்கிட்டாம் போலருக்கு... பரவாயில்ல... திருநீறு பூசிக்கிட்டவனப் பாத்ததுக்கே ஆண்டவன் இப்படி நெறயப் புதையலத் தந்தாருன்னா உண்மையிலயே திருநீறப் பூசுனம்னா ஆண்டவன் எப்படியெல்லாம் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பாருன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு புதையல அள்ளிக்கிட்டு வந்து அம்மா படத்துக்கு முன்னால வச்சி கும்புட்டான்.

திரும்ப அம்மா படத்தப் பாத்துட்டு, “இனிமே நானும் தெனந்தோறும் திருநீறப் பூசிக்குவேம்மா... நீ சொன்னதக் கேக்குறம்மா... இனி நீ சொன்னதுமாதிரி நானும் கோயிலுக்குப் போறேம்மான்னு” கும்புட்டான். அன்னியில இருந்து அவன் கோயிலுக்குப் போயி சாமியக் கும்புட்டுட்டு திருநீறப் பூசிக்கிடடு வந்துதான் வேலையப் பார்ப்பான். இப்படியே அவன் சந்தோஷமா இருந்தான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1k.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License