இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


14. ஹாஜி, ஹாஜியா...?

மோனிகா பாடலுக்கு சௌபின் ஸாகிர் துள்ளாட்டம் போட்டது போல ஒரு துள்ளாட்டம் போட்டார் ஆர்னிகா.

“ஏனிந்தக் குதியாட்டம் ஆர்னிகா?” கேட்டேன்.

“எகிப்து விசா ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் வந்து விட்டது!”

“சபாஷ்!”

ஹஜ்யாத்திரை அல்லது உம்ரா செல்பவர்கள் பல சிறப்பு சடங்குகளைச் செய்வார்கள். உற்றார் உறவினர் நண்பர்களை அழைத்து விருந்து வைப்பார்கள். சண்டை போட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானம் பெறுவார்கள். கடன் வாங்கியிருந்தால் கடனை செட்டில் செய்வார்கள். பொதுவாக ஹஜ் செல்வோர் மகன்மகள் திருமணத்தை முடித்துவிட்டுச் செல்வர். ஹஜ் போய் அங்கு மௌத் ஆவதை பெரிய பாக்கியமாக கருதுவர். ஹஜ்ஜை நடந்தே சென்று ஒருவர் நிறைவேற்றுவதாய் ஒரு கதை கூட எழுதி இருக்கிறார் ஆர்னிகா. ஹஜ் போய் உயிருடன் திரும்பி வருவது நிச்சயமில்லாத ஒரு காலம் ஒன்று இருந்தது. இப்போது அப்படி அல்ல ஹஜ் அல்லது உம்ரா மிகமிக எளிதாகிவிட்டது. வசதி படைத்தோர் பத்து இருபது தடவைகள் ஹஜ் போய் வந்து விடுகின்றனர். மெக்கா, ஜெத்தா, மதீனாவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் நூற்றுக்கணக்கான தடவை மெக்காவைத் தரிசித்து விடுகின்றனர்.

என் தந்தை ஹாஜி எஸ்.என் ஷாகுல் ஹமீது அவரது திருமணத்திற்கு முன்பே கப்பலில் ஹஜ் போய் வந்தவர். அவர் போய் வந்த வருடம் 1953. அப்போதைய தென்காசியில் ஹஜ் நிறைவேற்றியவர் என் தந்தை ஒருவரே. அதனால் அவரை ஹாஜியார் என அழைத்தனர்.

ஹாஜியார் வீடு என்றால் அது எங்கள் வீடுதான். என் தந்தை கமலஹாசனை விட மிக அழகானவர். மிக நேர்த்தியாக ஆடை அணிவார். நிறைய வாசிப்பார். குறைவாக பேசுவார். காதில் ஹியரிங் எய்ட் மாட்டி இருப்பார். தினமும் மாலை நேரங்களில் சாமிசன்னதி தெரு சென்று பெரிய லாலாக் கடையில் சுடச்சுட அல்வாவும் கைப்பிடி மிக்சரும் சாப்பிடுவார்.


மெக்காவுக்கு போய் வந்த ஆண் ‘ஹாஜி’ என பட்டம் சூட்டிக் கொள்வதும் பெண் ‘ஹாஜியா’ என பட்டம் சூட்டிக்கொள்வதும் வீண்பெருமை என்பது ஆர்னிகா எண்ணம். ஆடம்பரத்தை காட்ட ஹஜ்ஜை பல முறை நிறைவேற்றுவது தேவையற்றது எனவும் ஆர்னிகா கூறுவார். ஆன்மிகத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்பார்.

நாங்கள் உம்ரா போவதை வரிசைக்கிரமமாக உறவினர்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்தோம்.

முதலில் மகன் மருமகளுக்கு அடுத்து மகன் வழி சம்பந்தி வீட்டாருக்கு. மகள் மருமகனுக்கு மருமகன் வழி சம்பந்தி வீட்டாருக்கு. என் அண்ணன் கருணைராஜா காத்தநபி மற்றும் அவர் மகன் வீட்டாருக்கு. என் தம்பி ஜெயின்லாப்தீன் மனைவி மக்களுக்கு. என் தம்பி ஜாகிர் உசேன் மனைவி மக்களுக்கு. என் அண்ணன் அருள்ஆலமீனின் மனைவி மற்றும் மக்கள் வீட்டாருக்கு. என் அக்காள் மின்னல் பாத்திமா வீட்டாருக்கு தெரியப்படுத்தினேன்.

மகன் வழி சம்பந்தி கைபேசியில் பேசினார். அவர் பெயர் ரபீக்முகமது.

சென்னையில் நெடுஞ்சாலைதுறையில் உதவிக் கோட்டப்பொறியாளராகப் பணிபுரிகிறார். அவர் ஒரு பயணத்தேனீ. வாராவாரம் சென்னை - மேல்மருத்தூர் – பள்ளப்பட்டி - கோயம்புத்தூர் என மகள்களுக்காக ஷண்டிங் அடிப்பார்.

என் கணவருக்கும் அவருக்கும் ‘யார் சிறந்த தாத்தா?’ போட்டி நிலவும் அர்ஹான் அவருடன்தான் அதிகம் ஒட்டுவான்.

“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!”

“வஅலைக்கும் ஸலாம் மச்சான்!”

“உம்ரா போகும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு இஹ்ராம் இரண்டு செட்டும் உங்கள் மனைவிக்கு இரண்டு செட் ஹிஜாப்களும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு சௌதி பணமும் உம்ராவில் ஓத துஆ புத்தகங்களும் பரிசளிக்கிறேன்!”

“நன்றி மச்சான்!”

“உம்ரா கிளம்புவதற்கு முன் ஒரு இமாமை கூப்பிட்டு பாத்தியா ஓதுங்கள்!”

“சரி!”

“நாங்கள் சின்னப்புள்ளைகளா இருத்தப்ப ஹஜ் போறவங்களை வழியனுப்ப ஒரு பெருங்கூட்டம் மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல கூடும் பாருங்க… கண்கொள்ளாக்காட்சி!”

“ஆமாம்!”


“2025ல் ஹஜ்யாத்திரீகர்கள் எண்ணிக்கை 175025. அதில் எழுபது சதவீதம் பேர் 122518 ஹஜ் கமிட்டி வழியாகத்தான் போனாங்க. ஹஜ் கமிட்டி. 70வயதுக்கு மேற்பட்ட ஹஜ்ஜாளிகளுக்கு முன்னுரிமை தருகிறது. ஹஜ்ஜாளிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தக் குலுக்கல் முறைக்கு குவரா (Qurrah) என பெயர். முதல்முறையாக ஹஜ் நிறைவேற்றுவோருக்கு முன்னுரிமை உண்டு. ஒரு ஹஜ்ஜாளிக்கு 25000ரூபாய் மானியம் அரசு வழங்குகிறது. நீங்கள் உம்ரா போய் வருவது இருக்கட்டும். பின்னாளில் ஒரு முழுமையான ஹஜ் நிறைவேத்துங்கள்!”

“இன்ஷா அல்லாஹ்!”

இம்முறை ஆர்னிகா இப்ராகிம் அண்ணனுக்கு போன் பண்ணினார்.

ஆர்னிகாவுக்கு அவர் அண்ணன் முறை. வங்கி மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். நிலாமகனுக்கு அவரது சிபாரிசால்தான் அழகிய மனைவி கிடைத்தார்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“அண்ணன்! நானும் வகிதாவும் உம்ரா போரோம். துஆ பண்ணுங்க!”

“மாஷா அல்லாஹ். நல்லபடியா போய்வாங்க. எங்களுக்காகவும் துஆ பண்ணுங்க!”

“நிச்சயமா!”

“மச்சிகிட்ட சொல்லிடுங்க!”

“சரி!”

மகன்மகளிடம் பேசினோம்.

மருமகள் பஹிமா ஆப்ரின் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து “மக்கால ஜக்காத் கொடுத்திருங்க!” என்றார்.

நாங்கள் குடியிருக்கும் மனாஸ்கார்டன் மக்களுக்குத் தெரிவித்தோம்.

நான் ஆர்னிகாவிடம் திரும்பினேன். “இன்றிரவு இஷா தொழுகைக்கு பிறகு பாத்தியா ஒத பொன்விழா ஜமாஅத் இமாமை கூப்டுங்க!”


மௌலானா மௌலவி அப்ஜலுல் உலமா எஸ். மிக்தாம் ஹீசைன் கலீமீ ஆமிரி பொன்விழா பள்ளிவாசலின் இமாம். அவரது பயானின் ரசிகர் ஆர்னிகா. அவரது பயான் அரைத்தமாவையே அரைக்காமல் அறிவுப்பூர்வமாக இருக்கும். ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் அவர் அவரது பயானின் ஆடியோ பதிவை ஆர்னிகாவுக்கு அனுப்புவார்.

ஆர்னிகா, “அந்த இமாம் பிசியாக இருப்பார். இங்கு பக்கத்துப்பள்ளியில் ஒரு அஸ்ஸாம் இமாம் இருக்கிறாரே அவரை கூப்பிடுவோம்!”

“சரி!” என்றேன்.

புரோட்டாவும் சிக்கன் கிரேஸியும் செய்தேன். பேரீச்சம் பழங்களைப் பீங்கான் தட்டில் பரப்பினேன்.

பெரிய கம்பளத்தை விரித்தேன்.

அஸ்ஸாம் இமாமுக்கு 28வயதிருக்கும் திருமணமாகாதவர் தத்திதத்தி தமிழ் பேசினார்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

வந்து அமர்ந்தார் இமாம்.

“என்ன ஓத வேண்டும்?”

“நானும் என் கணவரும் உம்ரா போகிறோம் எங்களது உம்ரா பயணம் பாதுகாப்பாக அமைய பொதுவாக ஒரு பாத்தியா ஓதுங்கள்!”

இஸ்லாமில் சில உட்பிரிவினர் பாத்தியாவோ மௌலிதுவோ ஓதுவதில்லை.

சாம்பிராணி புகையை மூட்டி ஊதுவத்தியை வாழைப்பழத்தில் செருகினேன்.

இமாம் திறன்பேசியை உயிர்ப்பித்து அதனை பார்த்தபடியே ஓத ஆரம்பித்தார். அஸ்ஸாமி கலந்த அரபி ஓங்கி ஒலித்தது.

அஸ்ஸாமி முஸ்லிம்கள் ஐவகைப்படுவர்.

கோரியா

மோரியா

தேஷி

ஜுலுகா

சையது

நம் இமாம் கோரியா பிரிவைச் சார்ந்தவர்.

ஓதி முடித்துவிட்டு துஆ ஓதினார்.

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பிலாமீன்!


இமாம் சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்ததும் எங்கள் மருமகள் ஒரு பச்சைநிற மார்க்கர் பேனாவைக் கொண்டு வந்து இமாமிடம் நீட்டினார்.

“என் மாமனார் மாமியார் பாதுகாப்பாய் உம்ரா முடித்துவர ஒரு இறைவசனத்தைச் சுவற்றில் எழுதுங்கள்!”

இமாம் மார்க்கர் பேனாவை வாங்கினார்.

சுவற்றில் ‘இன்னல்லதீ ஃப்ரன அலைக்கல் குர்ஆன லராத்துக இலாம ஆது!’ என எழுதினார். எழுத்துக்கள் அமான்ஷ்யமாக மிளிர்ந்தன!

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p14.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License