இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


13. எகிப்து விசா எப்போது?

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பாரின் மகன் ஆசிப் மீரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் ஆர்னிகா. துபாயில் தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்வதற்கு மீரான் உதவவில்லை. ஆனால் பழைய தமிழ் கிரிக்கெட் வர்ணனையைப் போற்றி இந்நாள் தமிழ் கிரிக்கெட் வர்ணனையை நையாண்டி செய்து ஆர்னிகா எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை மீரானுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார் ஆர்னிகா. அக்கதை மீரானின் வாட்ஸ்அப் மக்களுக்கு இடையே வலம் வந்ததாகக் கேள்வி.

துபாயில் மூன்றரை நாட்கள் தங்க அறை ஒன்றை புக் செய்து, அதன் பின் அதனை ரத்து செய்து ஒன்றை புக் செய்து, அதன் பின் அதனை ரத்து செய்து ஆர்னிகா பல்ப் வாங்கினார்.

முதலில் துபாய் விமான நிலையத்திலிருந்து 36 கிமீ தூரமுள்ள புதிய ஜுமைரா கடற்கரையின் குட்வில் ஹாலிடேஸில் அறை முன் பதிவு செய்தார் ஆர்னிகா.

தினவாடகை 47 திர்ஹாம் இந்திய மதிப்பிற்கு ரூ 1100/- மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வாடகை ரூ 3500/-

அதனை வெகுதூரம் என ரத்து செய்தார் ஆர்னிகா.

அதனையடுத்து பர் துபாயில் இருக்கும் பிளிஸ்புல் பார்ட்டிசன் (புர்ஜ்மான் மெட்ரோ அருகில்) ஹோட்டலில் அறை புக் பண்ணினார் ஆர்னிகா.

துபாய் விமான நிலையத்திலிருந்து எட்டு கிலோமீட்டர்.

தின வாடகை 114 திர்ஹாம். இந்திய மதிப்புக்கு ரூ 2622/. மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வாடகை எட்டாயிரம் ரூபாய்.

அதனையும் ரத்து செய்தார் ஆர்னிகா.

மூன்றாவதாக டெய்ரா க்ளாக் டவருக்கு அருகில் இருக்கும் ராயல் ஹவுஸ் கேப்ஸ்யூலில் புக் செய்தார் ஆர்னிகா.


ஒரு நாளைக்கு ஒரு கேப்ஸ்யூல் வாடகை ரூ 788/- வைபை வசதி.

ராயல் ஹவுஸ் கேப்ஸ்யூலுக்கும் துபாய் விமான நிலையத்துக்கும் இடையே ஆன தூரம் 2. 7 கிமீ.

அப்போதுதான் அக்பர் டிராவல்ஸில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். துபாய் விசா அப்ளை பண்ண அக்பர் டிராவல்ஸ் மூலமாக, அறை முன் பதிவு செய்தல் கட்டாயம் என அக்பர் டிராவல்ஸ் ஏஜென்ட் சிரித்தபடி கூறினார்.

வேறு வழியின்றி ஆர்னிகா ராயல் ஹவுஸ் கேப்ஸ்யூலை ரத்து செய்தார்.

அந்த அபார்ட்மெண்ட் உரிமையாளர் ஆர்னிகாவை திட்டி தீர்த்து விட்டார்.

அக்பர் டிராவல்ஸ் எங்களுக்கு அல் சப்கா சாலையில் உள்ள மவுண்ட் சினாவில் அறை புக் செய்தது.

மூன்று நாட்கள் வாடகை (ரிசப்ஷன் லஞ்சம் சேர்த்து) 14, 000 ரூபாய்.

துபாய் அறை புக் பண்ணுவதிலேயே எங்களுக்கு 9, 500 ரூபாய் நஷ்டம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள்…

உள்நாட்டுச் சுற்றுலாவோ, வெளிநாட்டுச் சுற்றுலாவோ நீங்கள் கிளம்பினால் உங்கள் பட்ஜெட்டில் 20-லிருந்து 30 சதவீதம் வரை வழிப்பறி செய்து விடுவர் இடைத்தரகர்கள்.

‘நான் மிகவும் புத்திசாலி. நான் ஏமாற மாட்டேன்’ என்று சொல்வதெல்லாம் ஒரு பம்மாத்து. மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தால் வழிப்பறிக் கொள்ளையில் பாதிப் பணத்தைக் காப்பாற்றலாம்.


2024 ஆம் ஆண்டில் உலகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 145 கோடி. முப்பது லட்சம் மக்கள் சுற்றுலாத்துறையில் பணிபுரிகின்றனர். 2024 ஆம் ஆண்டில் சுற்றுலாவில் புரண்ட தொகை 460 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள். ஆறு லட்சம் ட்ராவல் ஏஜென்ஸிகள் உள்ளன. ஏஜென்ஸி மூலம் சுற்றுலா செல்வோர் 47 சதவீதம் பேர். உலகின் நம்பர் ஒன் சுற்றுலா ஏஜென்ஸி டியூஐ குழுமம். உலகின் முதல் டூர் ஆபரேட்டர் தாமஸ் குக் (22. 11. 1808 -18.07.1892) சுற்றுலாக்களில் கொஞ்சம் கவனப்பிசகாய் இருந்தால் நாம் நடுத்தெருவில் கோவணத்துடன் நிற்க வேண்டியதுதான். கம்மிங் பேக் டு தி பாயின்ட்.

துபாய் விசா வாங்கியாச்சு, உம்ரா விசா வாங்கியாச்சு, எகிப்து விசா மட்டும் தான் பாக்கி.

அக்பர் டிராவல்லில் முதலிலேயே சொல்லியிருந்தார்கள். ‘எகிப்து விசா கடைசியில் தான் எடுக்க வேண்டும்.’

டிராவல்ஸின் தஸ்தகீர் எங்களை வரவேற்றார். மலையாளமும் தமிழும் சிரிப்பும் கலந்து பேசினார்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“சார்! துபாய், உம்ரா விசாக்களில் நீங்கள் பயன்படுத்தி இருக்கும் ஒளிப்படத்தை எகிப்து விசாவுக்கு பயன்படுத்த முடியாது”

“என்ன செய்ய வேண்டும்?”

ஒரு ஸ்டூடியோ பெயர் கூறி, “அங்க போய் எகிப்து விசாவுக்கென சொல்லி போட்டோ எடுத்திட்டு வாங்க! போட்டோவில் உங்கள் இருவர் காதுகள் தெரியவேண்டும்”

“சரி!”

“துபாய் பிளைட்டுக்கு இன்னும் 22 நாட்கள் உள்ளன. எகிப்து விசா அப்ளை பண்ணும் போது உங்களின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்!”

“கூரியரில் அனுப்புவீர்களா?”

“ஆமாம்!”

“எங்கள் பாஸ்போர்ட்கள் பத்திரமாகப் போய் வருமா?”

“நாங்க ரெகுலரா அனுப்ற கூரியரில் தான் அனுப்புவோம். பயம் வேண்டாம்…”

“எகிப்து விசாவுக்கு எவ்வளவு பணம்?”

“ஒருவருக்கு ஆறாயிரம் இரண்டு பேருக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய்!”

“முதலில் ஒருவருக்கு 4500 ரூ சொன்னீர்கள்!”

“ இப்பக் கூடிருச்சு!”

“ஒரு சின்ன சந்தேகம் சார்!”

“என்ன?”

“ஜனவரி 20 ஆம் தேதிக்குள் எகிப்து விசாவும் எங்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட்டும் எங்களுக்கு வரலைன்னா எங்களுக்கு மொத்தத்தில் குறைந்தது நாலு லட்சம் ரூபா நஷ்டமாகுமே….”

“அப்படி ஆகாது சார்!”


“கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாத்தா திகிலா இருக்கு. பணம் நஷ்டம் நேரம் நஷ்டம் உறவினர் நண்பர்கள் கேலி…”

“ஒரு வாரத்தில் வந்துவிடும்!”

“இடையில் பொங்கல் விடுமுறைகள் உள்ளன!”

“எங்களுக்கு ஏது சார் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லாம்!” சிரித்தார்.

“சிரிக்கிறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. எகிப்து விசால கோட்டை விட்ராதிங்க! என்றேன்.

“அக்பர் டிராவல்ஸ் 1978 ஆம் ஆண்டு கே.வி. அப்துல் நாசரால் தொடங்கப்பட்டது. ஐஏடிஏ அங்கீகாரம் பெற்ற 50 கிளைகள் உள்ளன. தலைமையகம் மும்பை. 3000 ஊழியர்கள் வரை பணிபுரிகின்றனர். எங்களது வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை செய்கிறோம். துளி ஏமாற்றம் இருக்காது!”

“மகிழ்ச்சி!”

“இன்னொரு முக்கியமான விஷயம்!”

“சொல்லுங்கள்!”

“உங்களின் உம்ரா விசாவில் ட்ராவல் இன்ஷுரன்ஸ் கவர் ஆகியுள்ளது. ஆனால் நீங்கள் துபாய் விசாவுக்கும் எகிப்து விசாவுக்கும் தனித்தனியாக ட்ராவல் இன்ஷுரன்ஸ் எடுத்தாக வேண்டும்!”

“எந்த ஏஜென்ஸி பெஸ்ட்?”

“டாட்டா ஏஐஜி, ஐசிஐசிஐ லாம்பார்டு, ஹெச்டிஎப்சி எர்கோ, ஆக்ஸா இதில் எதாவதில் எடுக்கலாம்!”

“தொகை எவ்வளவு?”

“துபாய் ட்ராவல் இன்ஷுரன்ஸ் ஒரு நாளைக்கு 25 ரூபாய். எகிப்து ட்ராவல் இன்ஷுரன்ஸ் ஒரு நபருக்கு ரூ 1500/-”

“எடுத்து விடுங்கள் சார்!”

“நன்றி!”

சொன்னதொகைகளை போன் பே பண்ணினோம்.

07.01. 2025 எகிப்து விசா வரவில்லை.

14. 01. 2025 எகிப்து விசா வரவில்லை.


ஆர்னிகா நடுராத்திரியில் எழுந்து புலம்ப ஆரம்பித்தார். “நாம போட்டு வைத்த பயணத்திட்டம் ஓகே ஆகல கண்மணி. எகிப்து விசா புட்டுக்கிச்சே காதல் கண்மணி!”

அக்பர் டிராவல்ஸ்க்கு போன் மேல் போன் குறுஞ்செய்திக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பி ரகளை பண்ணினார்.

15 01 2025 –நோ. 16 01 2025 – நோநோ. 17.01.2025. நஹி. 18.01.2025- நஹிநஹி.

“19.01.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் ரயில் ஏறி தாம்பரத்துக்கு போய் 20.01.2025 அதிகாலை விமான நிலையம் போக வேண்டும். அத்தனையும் கோவிந்தோ கோவிந்தோ!”

மாலை 4 மணிக்கு திறன்பேசி சிணுங்கியது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p13.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License