இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


15. பயணத் தொடக்கம்

வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சம்பந்தியம்மா பேபி ராணி வந்து இறங்கினார். வயது 52. ரோஜா நிறம். எமோஷனல் பெர்சனாலிட்டி. பள்ளப்பட்டியில் இஸ்லாமியப் பள்ளியில் தலைமை ஆசிரியை.

“அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்!”

“வஅலைக்கும் ஸலாம் சிஸ்டர்!” என்றார் ஆர்னிகா.

“பாத்தியா ஓதி முடிச்சாச்சா?”

“முடிச்சிட்டோம்!”

“உங்க மனாஸ்கார்டன் மக்களுக்கு ஒரு விருந்து சமைச்சுப் போட்டிருக்கலாம் பிரதர்!”

“செலவை சுருக்கிட்டோம்!”

“இன்னைக்கு மதியம் தானே கிளம்புறீங்க!”

“ஆமா… மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் 16160-ல் கிளம்பி தாம்பரத்துக்கு நள்ளிரவில் 2.45 மணிக்கு போய் விடுவோம். ஏழரை மணிக்குத்தான் துபாய் பிளைட்!”

உள்ளே வரும்போது ஆர்னிகாவுக்கு பள்ளப்பட்டியில் வாங்கிய பூந்திப் பொட்டலத்தைக் கொடுத்தார்.

தேநீர் கொடுத்தேன்.

நானும் சம்பந்தியம்மாவும் தனியறை ஒதுங்கினோம்.

“மச்சி! தொழுது முடிச்சவுடனே என்ன சொல்வீங்க?”


“சுபஹானல்லாஹ் 33 தடவை சொல்வேன். அல்லாஹு அக்பர் 33 தடவை சொல்வேன். அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை சொல்வேன். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹமீது வஹுவ அல குல்லி ஷய்இன் கதீரை ஒரு தடவை சொல்லி நூறை நிறைவு செய்வேன்!”

“பிரமாதம்!”

“மகிழ்ச்சி!”

“உம்ரா செய்றது பற்றி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நான் ஒரு தடவை நினைவூட்டுகிறேன். உம்ரா என்பது இஹ்ராம் அணிதல், தவாப், சயீ (தொங்கோட்டம்) தலைமுடி மழித்தல் அல்லது கத்தரித்தல் போன்ற செயல்களை உடைய ஒரு வணக்கம் ஆகும். உம்ரா பூர்த்தியாவதற்குரிய நான்கு விஷயங்கள்;

1. மீக்காத் எல்லையில் இஹ்ராம் கட்டி நிய்யத்து செய்தல்.

2. காபாத்துல்லாஹ்வை தவாப் செய்தல்.

3. ஸபா - மர்வாவுக்கு இடையே சயீ தொங்கோட்டம் செய்தல்.

4. தலை முடி இறக்குவது.”

ஆமோதித்தேன்.

“இஹ்ராமில் இருக்கும் போது விலக்கப்பட்ட எட்டு விஷயங்களை பார்ப்போம்.

1. இச்சை சம்பந்தப்பட்ட வார்த்தைகளைப் பேசுவது இஷாரா செய்வது கூடாது.

2. பாவமான காரியங்கள் செய்யக்கூடாது.

3. சண்டை, சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது.

4. தையல் உள்ள ஆடைகள் அணிவது கூடாது.

5. தலை, முகம், புறங்கைகளை மூடுவது கூடாது.

6. நகம், முடி, அழுக்கு இவைகளை நீக்கக்கூடாது.

7. வாசனைத் திரவியங்கள் பூசுவது, சாப்பிடுவது, குடிப்பது கூடாது.

8. ஹரமுடைய எல்லையில் வேட்டையாடுவது வேட்டைப் பொருட்களை காட்டிக் கொடுப்பது மற்றும் பச்சைப் புற்பூண்டுகளை பிடுங்குவது கூடாது!”

முறுவலித்தேன்.


“மீக்காத் எல்லையில் குளித்து அல்லது ஒளூ செய்து இஹ்ராம் அணிந்து கொண்டு உம்ரா நிய்யத்து செய்து இரண்டு ரக்காயத் நபில் தொழுவது கடமை. இஹ்ராம் ஆடை அணியும்போது செய்ய வேண்டிய நிய்யத்து ‘லெப்பைக்கல்லா ஹும்ம உம்ரத்தன்’ ஆகும். தமிழ் அர்த்தம் – ‘நாயனே! உனக்காகவே உம்ராவை நிறைவேற்றுகிறேன்’ என்பதே!”

“சரி!”

“நிய்யத்து வைத்தவுடன் காபாவை வந்தடையும் வரை தல்பியா கூற வேண்டும். ‘நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். நாயனே! உனக்கு நிகரானவர் எவருமில்லை. உனக்கு இணையாக எதுவுமில்லை. நாயனே! உன்னிடமே வந்துவிட்டேன். நிச்சயமாக புகழ், அருள், ஆட்சி அனைத்தும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை!”

“இந்த நிய்யத்து தெரியும் மச்சி!”

“காபத்துல்லாஹ்வை ஏழு முறை தவாப் செய்ய வேண்டும். முதல் முறை காபாவை பார்க்கும் போது அதிகமாக துஆ செய்ய வேண்டும். காபா ஆலயத்தை அடைந்ததும் வலது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதலாம். ‘அல்லாஹ்வின் திருநாமம் கூறி நுழைகிறேன். கருணையும் ஈடேற்றமும் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக. நாயனே! உன் பாவத்தை மன்னித்துவிடு. மேலும் உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்து விடுவாயாக. மகத்தான நாயனைக் கொண்டும் சங்கையான அவனது முகத்தைக் கொண்டும் பூர்வீக அவனது முழுமையான அதிகாரத்தைக் கொண்டும் சாபத்திற்குள்ளான சைத்தானின் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் பாதுகாவல் தேடுகிறேன்!”

“எனக்கு மனப்பாடமாகத் தெரியும் மச்சி!”

“பிரதருக்கு தெரியாதததை சொல்லிக் கொடுங்கள்… அது மிக நல்லது!”

“சரி!”

“புனித காபாவை ஏழுமுறை சுற்ற ‘உம்ராவுக்கான தவாபை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன்’ என்கிற தூய எண்ணத்துடன் காபாவின் தென்கிழக்கு மூலையில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும். கல்லை கையால் தொட முடியாத அளவுக்கு கூட்டமிருந்தால் அதனை கையால் தொடுவது போல சைகை செய்து கொள்ளலாம்.

“ஹஜருல் அஸ்வத் கல்லை இடப்பக்கமாக்கி தவாபை தொடங்க வேண்டும். ஏழுசுற்றுகளில் முதல் மூன்று சுற்றுகளை வேகமாக நடந்தும் பாதங்களை நெருங்கி வைத்தும் சுற்ற வேண்டும். இதனை அரபியில் ‘ரமல்’ என்பர். பிந்திய நான்கு சுற்றுகள் நடந்து செல்ல வேண்டும். இவ்வாறு தவாப் செய்யும்போது தங்களது மேலாடையை வலது தோள்புஜம் மட்டும் திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது ஒருவர் தமது உடலின் மேற்பகுதியை மறைக்கும் இஹ்ராம் உடைத்துண்டின் நடுப்பகுதியை அவரது வலதுகையின் கீழால் கொண்டுவந்து அதன் இரு தொங்கல்களையும் இடது தோள்புஜத்தின் மேல் பகுதியில் போட்டுக்கொள்ள வேண்டும். இதனை அரபியில் ‘இழ்திபா’ என்பர். இது ஆண்களுக்கான வழிமுறை!”

“ஆமாம்!”

“ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கும் இடையே வரும் போது ‘எங்கள் நாயனே இம்மை மறுமை இரண்டிலும் நன்மையை அருள்வாயாக. மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!’ என ஓத வேண்டும்”

“சரி!”

“காபாவின் வடபகுதியில் இடுப்பளவு அரைவட்டமான ஒரு பகுதி உள்ளது. அதுவும் காபாவுக்கு உட்பட்டது. அதனை ‘ஹிஜ்ர்’ என்பர் இதனையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும். இதற்கு ஹதீம் என்று கூறப்படும்!”

“ஓகே!”

“தவாப் செய்து முடித்தவுடன் காபாவில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று இரண்டு ரக்காயத்துகள் தொழ வேண்டும். முதலாவது ரக்காயத்தில் பாத்திஹா ஸுராவையும் குல்யா அய்யுஹல் காபிருனையும் இரண்டாவது ரக்காயத்தில் பாத்தியா ஸுராவையும் குல்குவல்லாஹு அஹ்தையும் ஓத வேண்டும். தொழுது முடித்தபின் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு ஜம்ஜம் நீரை பருக வேண்டும். அடுத்து சயீ எனும் தொங்தோட்டம் செய்ய வேண்டும். ஸபா-மர்வா குன்றுகள் இரண்டுமே அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்கள். ஸபாமலை ஏறியதும் கிப்லாவை முன்னோக்கி நின்று துஆ ஓத வேண்டும். மொத்தம் ஏழு முறை ஸபா-மர்வாவுக்கு இடையே நடந்தவுடன் தலைமுடியை முழுமையாக மழிக்க வேண்டும். பெண்களுக்கு கட்டாயமில்லை. ஒரு கொத்து முடியை கத்தரித்தால் போதும்”

“மகிழ்ச்சி!”


“நமது உடல் தகுதிக்கேற்ப நான்கைந்து உம்ராக்கள் செய்யலாம். ஒவ்வொரு உம்ராவைவும் மீக்காத் எல்லையில் இஹ்ராம் அணிந்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு உம்ராவுக்கும் மீண்டும் மீண்டும் முடி இறக்க வேண்டும்!”

“தொகுத்துச் சொன்னதற்கு நன்றி!”

“ஏர்போர்ட்டுக்கு நான் வந்து வழி அனுப்பவா?”

“வேண்டாம். நாங்கள் இறைவனின் பாதுகாப்பில் போய் வருகிறோம்!”

மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 2.50மணிக்கு எங்களை தாம்பரத்தில் இறக்கி விட்டது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p15.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License