இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


19. ஷேக் ஜாயித் மசூதி

ஆர்னிகாவின் வயதைக் கருதி பாவம் பார்த்து அந்தத் துபாய் போலீஸ் ‘குரங்கு மாதிரி குதித்து கைதட்டக் கூடாது’ என சமிக்ஞை செய்தார்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். குளோபல் வில்லேஜ் வெளிவாசலில் மருமகனின் சித்தப்பாவும் சாச்சியும் காத்திருந்தனர். அவர்களுடன் காரில் போய் அவர்கள் வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டோம். சாச்சி சுற்றுலா தொடர்பான பல டிப்ஸ்கள் கொடுத்தார். ஹோட்டல் வாசலில் விட்டு விட்டு சென்றனர்.

திறன்பேசியின் அலாரம் ஒலித்தது.

முதலில் நான் எழுந்து குளித்து தலைவாரி புத்தாடை உடுத்தித் தயாரானேன். அடுத்து ஆர்னிகா தனது காலைக்கடன்களை முடித்தார்.

சூட்கேஸிலிருந்து ஒரு பிளம்கேக் பாக்கட் எடுத்து ஆளுக்கு நான்கு நான்கு ஸ்லைஸ்கள் சாப்பிட்டோம்.

மாத்திரைகளை விழுங்கினோம்.

சில அடிப்படை அரபு வார்த்தைகளை உச்சரிக்க பழகினார் ஆர்னிகா.

ஆம் - நாம்

இல்லை - லா

தயவுசெய்து - லா சமதா (ஆண்) லா சமதி (பெண்)

நன்றி –சுக்ரன்

ஹலோ – மர்ஹபா

பை – மா-அ- சலாமா

எக்ஸ்க்யூஸ் மீ – அப்வான்

சாரி - ஆசிப் (ஆண்) ஆசிபா (பெண்)

ஓகே -தமாம்


துபாய் ராயல் டூர்ஸ் (தொடர்பு எண் +0529417484) மூலம் ஒரு நாள் அபுதாபி டூர் புக் பண்ணி இருந்தோம்.

காலை 8.00 - 8.30 மணிக்குள் கிளம்பி அபுதாபியைச் சுற்றிப் பார்த்து விட்டு இரவு 7 மணிக்கு துபாய் திரும்ப வேண்டும்.

இரவு 9 மணிக்கு படகு சவாரி விருந்து ஆடல் பாடல்.

அறையை பூட்டி விட்டு வெளியே வந்தோம். சிறிய தேனீர்கடை. தேனீர் பருகினோம். விலை ஒரு தேனீர் 5 திர்ஹாம். அதாவது 115 ரூபாய்.

அபுதாபி ஒருநாள் சுற்றுலாக் கட்டணம் ஒருவருக்கு 3000 ரூபாய்.

“அபுதாபி டூரில் பெண்கள் தலையையும் உடலையும் முழுமையாக மூடி இருக்க வேண்டும். ஆண்கள் டவுசர் அணியக் கூடாது!” எனக் கட்டளையிடப்பட்டிருந்தோம்.

மௌன்ட் சினா ஹோட்டலின் வாசலில் காத்திருந்தோம்.

கார் வந்து சேர்ந்தது .

ஏறிக்கொண்டோம். டூரை நிர்வகிப்பது வட இந்தியர்கள் தான். ஹிந்தி சரளமாக பேசினர். உடைந்த ஆங்கிலம். தேவைக்கு ஏற்ப அரபு.

முதலில் ஷேக் ஜாயித் மசூதி போய் சேர்ந்தோம்.


மசூதி வாசலில் என்னை தடுத்தனர். “ஆர் யூ நாட் அலவ்டு!”

“ஏன்ய்யா ஏன்?”

“உங்கள் கணவரை அனுமதிப்போம். புர்கா அணியாத உங்களை அனுமதிக்க மாட்டோம்!”

“என்ன செய்வது?”

“அதோ ஒரு புர்கா கடை இருக்கிறது. புர்காவை விலைக்கு வாங்கி அணிந்து கொண்டு வாருங்கள்… அனுமதிக்கிறோம்!”

நானும் ஆர்னிகாவும் ஓடினோம். அந்தக் கடைக்கு நல்ல வியாபாரம். டூரிஸ்ட் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் புர்கா வாங்கினர்.


நானும் 50 திர்ஹாம் கொடுத்து ஒரு புர்கா வாங்கி அணிந்து கொண்டேன்.

மசூதியில் நான்கு நிலைகளில் செக்கிங் நடந்தது.

பாஸ்போர்ட் விசா சோதித்தனர்.

தொழுகை நேரம் குறித்து இருந்தனர்.

பஜ்ர் - 05.24

லுஹர் மதியம்- 12. 12

அஸ்ர் சாயந்தரம்- 3.13

மஹ்ரிப் - 5.37

இஷா – 6.54


இஸ்லாமியக் கட்டடக்கலையின் அருமை பெருமைகளைக் காட்சிப்படுத்த ஐக்கிய அரபு நாடுகள் தலைவர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நயான் 1980 ஆம் ஆண்டில் இந்த மசூதியைக் கட்டத் தீர்மானித்து 1996 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பின் 2007 ஆம் ஆண்டில் தொழுகையாளிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் திறந்து வைக்கப்பட்டது. பிற மதத்தினரும் இம்மசூதியைச் சுற்றிப் பார்க்கலாம்.

இந்த மசூதியை வடிவமைத்தவர் சிரியன் கட்டடக்கலை வல்லுநர் யுசேப் அப்தெல்கே. கட்டடப் பொருட்களை இத்தாலி, ஜெர்மனி, மொராக்கோ, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து தருவித்தனர்.

இஸ்லாமை நவீனப்படுத்தவும் நாட்டின் கலாச்சாரத்தை ஒரு வடிவமாக்கவும் இந்த மசூதி கட்டப்பட்டது.

ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நயான் இறந்த பிறகு அவரது உடல் மசூதி வளாகத்தில் புதைக்கப்பட்டது.

மசூதியைக் கட்ட ஆன செலவு 2 பில்லியன் திர்ஹாம் அல்லது 545 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்.

இம்மசூதியில் 41000 பேர் ஒரே வேளையில் தொழலாம். நீளம் 1380 அடி அகலம் 950 அடி. மசூதியில் 82 அழகிய மினாராக்களை எழுப்பியிருந்தனர்.

மசூதியின் வலப்பக்கம் இஸ்லாமிய நூலகம் இருந்தது.

மசூதியில் 60570 சதுர அடி கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கார்பெட்டை 1300 தச்சர்கள் தயாரித்தனர். கார்பெட்டின் எடை 35 டன். அந்தக் கார்பெட்டில் 2268000000 தையல்கள் போடப்பட்டுள்ளன.

முனிச்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸான்ட்லியர் விளக்குகள் தொங்கின.

மசூதியின் தொழுகை சுவரில் இறைவனின் 99 பெயர்களை முகமது மாண்டி அல் தமிமி பொறித்து வைத்துள்ளார்.

மசூதிக்குள் சுற்றிய எங்களைக் கறுப்பினப் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்றனர். நான் இரண்டு ரக்காத்தும் ஆர்னிகா இரண்டு ரக்காத்தும் தொழுதோம்.

இரண்டு மணி நேரத்துக்குப் பின் மீண்டும் கிளம்பினோம்.


அபுதாபி 200 தீவுகளால் ஆனது. அபுதாபியின் பாரம்பரிய கிராமம் சுற்றினோம். பெர்ராரி வொர்ல்ட் போனோம். கடற்கரை ஓரம் நின்று கடலை ரசித்தோம்.

கார் அபுதாபியின் பாப்ஸ் ஹிந்து மந்திருக்கு திரும்பியது. இந்தக் கோவிலை கட்டியவர் போச்சசன்வாசி அக்ஸர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயணன் ஆவார்.

அரபு நாடுகளின் முதல் கோவில் இது. இந்தக் கோவில் இந்தியா- ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே நட்பையும் கலாச்சார நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கிறது.

இந்தக் கோயில் 14.02. 2024 ஆம் நாளன்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட வருடத்தில் 22 லட்சம் பார்வையாளர்கள் கோவிலை தரிசிக்க வந்துள்ளனர்.

இந்தக் கோவிலில் சிவன், பார்வதி, சீதா, ராமன், அய்யப்பா, வெங்கடேஸ்வரா, ஜகனாத் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


கோவில் 27 ஏக்கர் பரப்பளவு. கோவில் இளம்சிவப்பு மணல் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவில் 108 அடி உயரம் 262 அடி நீளம் 180 அடி அகலம்.

கோவில் சுவர்களில் ராமாயணம், சிவபுராணம், பாகவதம், மகாபாரதம் தொடர்பான ஓவியங்களும் அரபியன், எஜிப்சியன், மெசோபட்டோமியன், அமெரிக்கன் நாகரிகங்கள் தொடர்பான ஓவியங்களும் நிறைந்துள்ளன.

இந்தக் கோவில் கட்ட செலவு 700 கோடி. இந்தக் கோவிலை நிர்மாணிக்க 20000 டன் கற்கள் தேவைப்பட்டன. கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது நாங்கள் இரு நீரூற்றுகளைப் பார்த்தோம்.

இரண்டு நீரூற்றுகளும் கங்கை, யமுனை நதிகளை நினைவூட்டுகின்றன. மூன்றாவது நதியான சரஸ்வதியை கோவிலின் ஒளிக் கற்றையாக உருவகப்படுத்தி உள்ளனர்.

இந்தக் கோவிலை ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் தரிசிக்கலாம்.


கோவிலில் மொத்தம் 402 தூண்கள். கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது டூர் கைட் அவசரப்படுத்தினார்.

“கிளம்புங்க… கிளம்புங்க… டயமாகுது?”

“மசூதி பார்க்க இரண்டரை மணி நேரம் டயம் கொடுத்தீங்க. கோவில் பார்க்க ஒரே ஒரு மணி நேரமா? ஏனிந்த ஓரவஞ்சகம்?” என்றனர் சிலர்.

டூர் கைட் வாயை பொத்திக்கொண்டார்.

கார் துபாயை நெருங்கியது.

டூர் கைட் எங்களை ஒரு இடத்தில் இறக்கி விட்டு, “நடக்கிற தூரத்தில் ஒரு இரவு படகு விருந்து நடைபெறுகிறது போய் பாருங்கள்!” என்றார்.

இறங்கி நடந்தோம்.

ஆளுக்கு முப்பது திர்ஹாம் கட்டணம் செலுத்தி குறும்கப்பலுக்குள் சென்றோம்.

பப்பே முறையில் விரும்பிய அயிட்டங்களை எங்கள் தட்டில் சேர்த்துக் கொண்டு டேபிளுக்குத் திரும்பினோம்.

உணவு தரம் சுமார்தான்.

ஆடலும் பாடலும் கொண்டாட்டம் அமர்க்களம்.


ஆர்னிகா எழுந்து ஆட ஆரம்பித்தார். சமிக்ஞை செய்து அவரை அடக்கினேன்.

பக்கத்து டேபிளில் இருந்த மூவர் ஆர்னிகாவையே உன்னித்து பார்த்தனர்.

மெதுவாக அருகில் வந்து “நீங்கள் எழுத்தாளர் ஆர்னிகா நாசர்தானே?”

“ஆம். நீங்க?”

“நாங்களும் தமிழ்நாடு தான். உம்ராவுக்கு போற வழில துபாய் வந்தோம்!”

திறன்பேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம்.

ஆடல் பாடல் கொண்டாட்டத்தை முகநூல் பதிவாய் ஆர்னிகா போட்டார்.

அவ்வளவுதான் பழைமைவாதிகள் ஆர்னிகாவை தூற்றினார்கள்.

ஒருவர், “ஆர்னிகா நாசர் உம்ரா போறாரா? காப்ரேடான்ஸ் பார்க்கப் போறாரா? அவர் போய் வந்ததைப் பயணக்கட்டுரையாய் எழுதினால், நான் அவரது கோவை வீட்டின் முன் தீக்குளிப்பேன்!” சூளுரைத்தார்.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p19.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License