இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


25. காபா தந்த இறையுணர்வு!

ஓர் இடைச்செருகல்.

அக்காலத்தில் மக்காவுக்கு வரும் ஹஜ் பயாணிகளிடம் நுழைவு வரி வசூலிக்கப்பட்டது.

அது அந்நகர் ஆளுநர் இட்டிருந்த சட்டம்.

வரிகட்டினால் மட்டுமே ஹஜ்ஜுக்கு அனுமதி என்ற கடுமையான சட்டம்.

வசூலிக்கப்படும் வரிகளே மக்கா நிர்வாகத்தினருக்கான வருமானமாய் இருந்து இருக்கிறது. ‘இது எங்களுக்கு அதிகப்படியான பொருளாதார சிரமத்தை அளிக்கிறது’ என்று மக்கள் தங்களின் கோரிக்கையை சுல்தான் ஸலாஹுத்தீனின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

துரித நடவடிக்கை எடுத்தார் ஸலாஹுத்தீன்.

‘மக்காவின் ஆட்சியாளருக்கு அந்த வரிகளுக்கான இழப்பீட்டை நாம் நமது சொத்தில் இருந்து அளிப்போம். அவருக்கு நிலங்களை ஒதுக்குவோம். அதிலிருந்து அவர் பயனீட்டலாம்’ என அறிவித்தார் சுல்தான்.

வெறுமனே அறிவிப்புடன் நில்லாது மக்காவின் ஆட்சியாளருடன் ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்தினார் சுல்தான்.

ஹஜ் பயணிகளின் வரிகளுக்கு பகரமாய் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் கிலோ கோதுமை மக்கா நிர்வாகத்திற்கு வழங்க உடன்படிக்கை கண்டார் சுல்தான்.


இன்னும் அந்த உடன்படிக்கையின்படி 12 லட்சம் கிலோ கோதுமை மக்கா நிர்வாகத்திற்கு வழங்கப்படுகிறது.

வருடாவருடம் வரும் கோடிக்கணக்கான ஹஜ் பயணிகள் அந்த சுல்தானுக்கு மானசீகமாக நன்றி செலுத்தி கொண்டிருக்கின்றனர்.

நூறு மில்லியன் அமெரிக்கன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியின் மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்காவின் ஹரம் ஷரீப் முதலிடத்தில் உள்ளது. அது எங்களை வரவேற்றது.

ஹரம் ஷரீப் ஒரு மில்லியன் சதுர மீட்டர் கொள்ளளவைக் கொண்டது. ஒரே நேரத்தில் இரண்டு மில்லியன் மக்கள் ஹரம் ஷரீப்பை தரிசிக்க முடியும். ஆண்டு தோறும் 2 கோடி யாத்தீரிகர்கள் இங்கு வருகின்றனர். இந்த ஹரம் ஷரீப் ஒரு நாளின் 24 மணி நேரமும் திறந்திருக்கும். 1400 ஆண்டுகளுக்கு மேலாக இது முழுமையாக மூடப்படவில்லை.

1800 துப்புரவு பணியாளர்களும் 40 எலக்ட்ரிக் சானிடரி கிளினீங் கார்களும் உள்ளனர். 40 ஆயிரம் கம்பளங்களால் மூடப்பட்ட தரை (ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் இடையிலான தூரத்தை விட நீளமானது) 79 கிமீ. 13000 கழிப்பறைகள் தினமும் நான்கு முறை 6 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன. 25, 000 குடிநீர் விநியோகிகள். தினமும் 100 சீரற்ற குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. ஜம்ஜம் கிணற்றிலிருந்து அதிகப்படியான நீர் 17 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் கொள்ளளவு கொண்டு சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது.

ஹராமைன் ஓதுதல் சேவை. குர்ஆன் ஓதுதல் ஒளிபரப்பு. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் குர்ஆன் ஓதுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பத்து முறைகளை பயன்படுத்தி ஓதுதல். 180 நாடுகளில் ஐந்து லட்சம் அத்தியாயங்கள் மூன்று ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்டன.


இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகள். 100க்கும் மேற்பட்ட ஏர் கண்டிசனிங் யூனிட்கள். மசூதியின் தளம் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது. இதனால் வளாகத்தில் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவதற்காக விசேஷ விசிறி சேவை உண்டு.

மசூதியின் எந்தப் பகுதியின் இருப்பிடத்தையும் காட்டக்கூடிய டிஜிட்டல் மின்னணு சுற்றுலா வழிகாட்டி பயன்பாடு. கிராண்ட் மசூதியில் உள்ள ஒலி அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான ஒலி அமைப்புகளில் ஒன்றாகும். ஆடியோ சிஸ்டத்தின் பிழை விளிம்பு பூஜ்யம் சதவீதம். 6000 பேச்சாளர்கள். நான்கு வெவ்வேறு ஆடியோ அமைப்புகள். ஐம்பது ஒலி பொறியியல் பணியாளர்கள். 65 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனின் பிரதிகள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிரசங்கமும் ஐந்து வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு.

மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் வசதிகள் உண்டு. பத்தாயிரம் வழக்கமான சக்கர நாற்காலிகள் இலவசமாய் பயன்படுத்தபடுகின்றன. 400 மின்னணு வழிகாட்டி சக்கர நாற்காலிகள் உண்டு. ரமலான் முழுவதும் ஒவ்வொரு நாளும் நோனபு திறக்க நான்கு மில்லியன் இலவச உணவு. விதைகள் நீக்கப்பட்ட ஐம்பது லட்சம் பேரீச்சம் பழங்கள் ரமலானின் போது மசூதி பகுதியில் ஒவ்வொரு நாளும் விநியோகிக்கப்படுகிறது. நோன்பு திறந்த பிறகு மஹ்ரிப் தொழுகைக்கான இடத்தை இரண்டே நிமிடங்களில் சுத்தம் செய்கிறார்கள்.

ஓர் இந்து மதச் சகோதரன் திருப்பதி, காசி, இராமேஸ்வரத்தில் கால் வைத்தால் என்ன உணர்வைப் பெறுவானோ, ஒரு கிறிஸ்துவன் ஜெருசலேமில் கால் வைத்தால் என்ன உணர்வைப் பெறுவானோ, ஒரு யூதன் டெம்பிள் மவுண்ட்டின் வாசலில் கால் வைத்தால் என்ன உணர்வைப் பெறுவானோ, புத்தர் பிறந்த இடம் லும்பினியில், ஞானம் பெற்ற புத்தகயாவில், முதல் உபதேசம் செய்த சாரநாத்தில், மரணமடைந்த குஷி நகரில் புத்த மதத்தினர் கால் வைக்கும் போது என்ன உணர்வைப் பெறுவார்களோ, அதே மகோன்னதமான உணர்வு எனக்கும் ஆர்னிகாவுக்கும் ஏற்பட்டது.

கோடிக்கணக்கான யாத்ரீகர்களின் மத நம்பிக்கை சார்ந்த அதிர்விசை காற்றில் நர்த்தனமாடிக் கொண்டேதான் இருக்கும். அந்த அதிர்விசை நம் ஆன்மாக்களை தாலாட்டி பாராட்டிச் சீராட்டி மகிமைப்படுத்தும்.


ஆன்மிகத் தலங்களுக்கு நாத்திகர்கள் சென்றால் அவர்களும் கூட பக்தி அதிர்விசையை நேர்மறையாய் அனுபவிப்பர். காபாவை தவாப் செய்பவர்களை 30 நொடிகள் கூர்ந்து கவனித்தேன். நூற்றி இருபதிலிருந்து 190 நாடுகளிலிருந்து ஆன்மிகப் பயணிகள் வந்திருக்கிறார்கள்.

கருத்த உயரமான ஆப்பிரிக்க முஸ்லிம்கள், மஞ்சள் நிற குள்ள சீன மலேசியா முஸ்லிம்கள், சிவந்த உயரமான ரஷ்ய முஸ்லிம்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள். ஏசியா பசிபிக், வட ஆப்பிரிக்கா, மத்தியகிழக்கு முஸ்லிம்கள். இனம், மொழி, நிறம், பிராந்தியம், பொருளாதாரம், உணவு பழக்க வழக்கம் அரசியல் பின்னணி வெவ்வேறானவர்களின் மகா சங்கமம் இங்கே நடக்கிறது.

தாயை முதுகில் சுமந்து கொண்டு தவாப் செய்யும் மகன். தந்தையை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு செல்லும் மகள். ஒருவர் கையை ஒருவர் கட்டிக்கொண்டு மனிதச் சங்கலியாய் நகரும் இஹ்ராம் கூட்டம். யார் யார் மீது மோதினால் யாருக்கும் கவலை இல்லை. ஆண்- பெண் பாகுபாடு இல்லை. தவாப் கூட்டம் அலைஅலையாய்ச் சுற்றிச் சுழன்றது.

அனைத்து பாகுபாடுகளையும் களைந்து விட்டு ஒற்றை சொல் ‘இஸ்லாமியன்’ என்கிற வட்டத்திற்குள் சர்வமும் ஒடுங்கும் பேரதிசயம் அங்கே நடந்தது.

காபாவை நெருங்கி சுற்றுவதில் சிறு சிரமம் இருந்தது. கூட்டத்தில் தவறி விழுந்து மிதிபட்டு விடுவோமோ என்கிற பயம் ஆர்னிகாவுக்கு இருந்தது. அவர் என் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு ஓரமாய் ஒதுங்கி தவாப் சுற்றினார்.

ஏழுமுறை காபாவை தவாப் செய்தோம். மக்கா இப்ராஹீமுக்கு அருகில் ஒரு இடத்தில் இரண்டு ரக்காத் தொழுதோம். ஸபா-மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை சயீ செய்தோம்.

முதலிலேயே பைரோஸ்கான் கூறியிருந்தார்.


“உம்ரா முடிந்தவுடன் நீங்கள் மொட்டையடிக்க வேண்டாம். ஹல்க் தேவையில்லை. சிறு முடியை கத்தரித்துக் கொண்டால் போதும்” (தகஸீர்) ஆனால் ஆர்னிகா பிடிவாதமாக இருந்தார்.

“உம்ரா செய்தால் முழுமையாக செய்ய வேண்டும். மொட்டை அடித்துக் கொள்ளப் போகிறேன்!”

ஏழு ரியால் கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டார். நான் முடி சிறிதைக் கத்தரித்துக் கொண்டேன்.


“ஆர்னிகா! உங்க நண்பர் பைரோஸ்கான் அனுப்பிய வழிகாட்டி வந்து சந்திக்கவே இல்லை. புத்தக வெளியீட்டுக்கும் பைரோஸ் இல்லை! என்ன செய்யலாம்?”

“வகிதா! நீயே புத்தகத்தை வெளியிட்டு விடு. அதுதான் மிகப் பொருத்தம்.. இது நான் உனக்கு செய்யும் கௌரவம்!”

‘கடவுளுக்கு ஆயிரம் பெயர்கள்’ பிரதியை காபாவுக்கு முன்னர் வைத்து வெளியிட ஆயத்தம் பண்ணினோம்.

ஒரு காவல் அதிகாரி குறிக்கிட்டார். அரபியில் வினவினார், “என்ன செய்கிறீர்கள்?” விளக்கினோம்.

“இதனை நீங்கள் இங்கு செய்ய முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும்!” என்றார்.

திடுக்கிட்டோம்.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p25.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License