இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


26. ஜம்ஜம் கிணறு

ஒரு புனிதமான இடத்தில் பல அதிசயமான அமைப்புகளும் இணைந்திருக்கும். அப்படி காபாவுடன் இணைந்ததுதான் ஜம்ஜம் கிணறு.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்ராஹீம் நபியின் மனைவி ஹஜரும் மகன் இஸ்மாயீலும் தாகம் தாளாது சபா -மர்வா மலைக்கு இடையே ஏழுமுறை அலைந்து திரிந்தனர்.

அப்போது இஸ்மாயீல் நபி கைகளை மண்ணில் தட்டிய போது வானவர் தலைவர் ஜிப்ரயீல் கட்டளைப்படி பாலைவன மணலில் நீர் ஊற்றெடுத்தது. ஜம்ஜம் நீர் பொங்கி வழிந்தது. தாகம் தீர்ந்த பின் ஹஜர் நீரூற்றை பார்த்து “ஜம்ஜம்!” (நில் தங்கு) எனக் கூறினார்.

கடந்த ஐயாயிரம் வருடங்களாக பாலைவன மக்களின் தாகத்தை தீர்க்கும் ஜம்ஜம் ஒரு வற்றாத நன்னீர் ஆதாரமாகும். புனிதமானதும் கூட.

ஜம்ஜம் நீரூற்றுக்கு பல பெயர்கள் உள்ளன.

1. ஷபாஉ சுப்ம் (Shifa Suqm - நோய்களைக் குணப்படுத்தும் நீர்)

2. ஷுபா (Shuba - பசியைப் போக்கும் நீர்)

3. ஹஃபீரத் (Hafirat abdul Muttalib - அப்துல் முத்தலிப்பின் கிணறு)

4. சுவக்யா அல் ரிவா (Suqya Al- Riwa - தாகம் தீர்க்கும் நீர்)

5. மக்தூமா (Mahtuma - மறைக்கப்பட்ட அல்லது காக்கப்பட்ட கிணறு)

6. மத்னூனா (Madnuna - விலைமதிப்பற்ற நீர்)

7. ஹஸ்மத் ஜிப்ரயில் (Hazmat Jibroil - ஜிப்ரயீலான ஊற்று)

8. தயாபா (Taybah - தூய்மையான நீர்)

ஜம்ஜம் கிணற்றுநீரை முஸ்லிம்கள் குடிப்பதற்கென ஒரு முறை இருக்கிறது.


‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி மூன்று மூச்சாக வயிறு நிறைய ஜம்ஜம் நீர் குடிப்பது சுன்னத். குடித்து முடித்ததும் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூற வேண்டும்.

“யா அல்லாஹ்! பயனுள்ள கல்வியையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் எல்லா நோய்களிலிருந்தும் நிவாரணத்தையும் உன்னிடம் கேட்கிறேன்!” என துஆ ஓத வேண்டும்.

‘ஜம்ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது’ என்கிறது இஸ்லாம்.

ஜம்ஜம் கிணற்றை மீண்டும் கண்டுபிடித்தவர் முஹம்மது நபியின் தந்தை வழி தாத்தா மற்றும் பனு ஹாஷிம் குலத்தலைவர் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதுகாவலர் அப்துல் முத்தலிப். இவருக்கு கனவில் ஜம்ஜம் காட்டப்பட்டு தோண்ட உத்தரவு வந்தது.

தோண்டிய போது ஜம்ஜம் கிணற்றில் ஜுர்ஹும் கோத்தரத்தாரின் வாள்களும் கவச சட்டைகளும் தங்கத்தால் ஆன இரு மான் சிலைகளும் கிடைத்தன.

ஜம்ஜம் கிணற்றின் அமைவிடம். மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம் மசூதிக்கு கிழக்கே சுமார் 20 மீட்டர் தொலைவில் காபாவுக்கு அருகில் ஜம்ஜம் அமைந்துள்ளது.

ஜம்ஜம் கிணற்றின் ஆழம் நூறு அடி. கிணறு இரு பிரிவுகளாக உள்ளது. ஒரு பகுதி 42 அடி ஆழமான பகுதி. மற்றொரு பகுதி வண்டல் மண் கூடிய 56 அடி பகுதி.

ஜம்ஜம் கிணற்றில் மூன்று நீரூற்றுகள் உள்ளன. கிணறு காளான்கள் போன்ற கற்களால் சூழப்பட்ட ஒரு கான்கிரீட் கட்டமைப்பாய் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜம்ஜம் கிணற்றின் பூமிக்கடியில் உள்ள நீர்நிலை Aquifer அடிப்படையாகக் கொண்டது.

கிணற்றின் விட்டம் 3 அடி 7 அங்குலம் முதல் 8அடி 9 அங்குலம்.

இஸ்மாயீல் நபி ஜுர்ஹும் கோத்தாரத்தாரின் பெண்ணை மணந்தார். அவரது மகன் காபாவையும் ஜம்ஜம்மையும் பாதுகாத்தார்.

அவருக்குப்பின் ஜுர்ஹும் கோத்தரத்தார் ஜம்ஜம்மை பாதுகாத்தனர்.

ஒரு காலகட்டத்தில் ஜம்ஜம்மை அப்பாஸ், அவருக்கு பின் அப்துல்லா அவருக்குப் பின் அலி, அவருக்குப் பின் தாவூத், அவருக்குப் பின் சுலைமான், அவருக்குப் பின் இஸா, அவருக்குப் பின் இஸாவின் சகோதரர் அல் மன்சூர், அவருக்குப் பின் உமையாத் பேரரசு பாதுகாத்தது.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையோடு ஜம்ஜம் கிணறு எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்திருந்தது என பார்ப்போம்.

நபிகள் நாயகம் சிறுவனாய் இருந்த போது ஹலிமா அஸ் சாதியா வீட்டில் இருந்தார். அப்போது வானவர் தலைவர் ஜிப்ரயீல் நபிகள் நாயகத்தைத் தனியே கொண்டு போய்ப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் கீறினார். இதயத்தைத் தனியே எடுத்தார்.

இதயத்திலிருந்து சைத்தானுக்குரிய சிறு சதையை அகற்றினார். பின் ஜம்ஜம் நீர் நிறைந்த தங்கதாம்பாளத்தில் நபிகள் நாயகத்தின் இதயத்தை சுத்தம் செய்தார். பின் மீண்டும் அதனை நபிகள் நாயகத்தின் நெஞ்சில் பொருத்தினார்.

பிற்காலத்தில் அனஸ் நபிகள் நாயகத்தின் நடுநெஞ்சில் தைக்கப்பட்ட வடுவை பார்த்ததாக சாட்சியம் கூறியிருக்கிறார்.

ஜம்ஜம் கிணறு அதிநவீன நீர் இறைக்கும் கருவிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. நொடிக்கு 11 லிட்டரிருந்து 19 லிட்டர் நீர் இறைக்கப்படுகிறது. உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரீகர்கள் வருகையின் போது நீர் தேவை அதிகம். கிங் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் ஜம்ஜம் நீர் திட்டம் ஜம்ஜம் கிணற்றை நிர்வகிக்கிறது.

கிணற்று நீரை வடிகட்டுவது. கிணற்று நீரை குடிப்பதற்கு உகந்த கிருமிகள் இல்லாத நீராக மாற்றுவது. அதன் பின் அந்தச் சுத்தமான நீரை விநியோகிப்பது. இந்த நீர்த்திட்டத்தின் செயல்பாடுகள்.

விநியோகிக்ப்படும் நீர் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பைப்புகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஜம்ஜம் நீரின் தரத்தை தினசரி சௌதி அதிகாரிகளும் தேசியச் சுகாதார நிறுவனமும் பகுப்பாய்வுக்கு அனுப்புகின்றன.

தினசரி 80 ஜம்ஜம் மாதிரிகள். ஜம்ஜம் நீரில் கரையக்கூடிய அயனிகள், சுங்கு கூறுங்கள், ஒட்டு மொத்த கோலிபார்ம் பேக்டீரியா எண்ணிக்கை மற்றும் ஈ-கோலை எண்ணிக்கை ஆராயப்படுகிறது.

ஜம்ஜம் நீரில் ஈயம் (Pb), காட்மியம் (Cd), ஆர்சனிக் (As), ஜோலோட்ரானிக் அமிலம் (Za), காப்பர் (Cu), நிக்கல் (Ni), கோபால்ட்(Co), வித்தியம் (Li), இரும்பு (Fe), மங்கனீஷ் (Mn), குரோமியம்(Cr), பாஸ்பேட் (Po₄), நைட்ரஜன் ஆக்ஸைடு (NO₂), புரோமின் (Br), புளோரைடு (F), அம்மோனியம்(NH₄) இருக்கிறதா என ஆராய்வர்.

நீர் தரக் குறியீடு அட்டவணையின் (WQI) படி ஜம்ஜம் நீரின் 94 சதவீத மாதிரிகள் குடிக்கத் தகுதியானவை. இரண்டு சதவீத மாதிரிகள் நைட்ரேட் அயனிடன் காணப்படுகின்றன. அவை குடிக்கத் தகுதி இல்லாதவை.

பொதுவாக ஜம்ஜம் நீரின் உப்புத்தன்மை பெய்யும் மழையுடன் தொடர்புடையது.

1950 ஆம் ஆண்டில் ஜம்ஜம் நீரின் உப்புத்தன்மை 4500 மில்லி கிராம் L ̄¹

2015 ஆம் ஆண்டில் ஜம்ஜம் நீரின் உப்புத்தன்மை 500 மில்லி கிராம் L ̄¹

ஜம்ஜம் நீரின் உப்பு மற்றும் காரத்தன்மை அளக்கப்படுகிறது. உடனடி குளோரின் டெஸ்ட் செய்யப்படுகிறது. நீரில் கலந்துள்ள உப்புகளை பகுத்தறியக் கருவி பயன்படுத்தப்படுகிறது. பேக்டீரியாக்களைக் கண்டறிய நுண்ணோக்கி உபயோகப்படுத்தப்படுகிறது.

உலகச் சுகதார நிறுவனத்தின் வழிகாட்டலும் சௌதி நீர் சுத்திகரிப்பு சார்ந்த தரநிலை அளவியல் அமைப்பின் வழிகாட்டலும் சுத்தமான ஜம்ஜம் நீரின் தரத்திற்கு முக்கிய காரணங்கள் (WHO, SASO (Saudi Standards Metology and Quality Organisation) அபூர்வமான சமயங்களில் ஜம்ஜம் நீரில் அதிகப்படியான ஃபுளோரைடு, கால்சியம் மற்றும் மக்னீசியம் காணப்படுகின்றன.

மஷாத் 2010 அறிக்கை ஜம்ஜம் நீரில் எவ்வித கிருமிகள் வளர்ச்சி கூறுகளும் இல்லை என சான்றுரைக்கிறது.


குடிநீர்த் தரத்தை 5 பிரிவுகளாக நீர் தரக் குறியீடு (WQI) பிரிக்கிறது.

பிரிவு -1 (குடிக்க மிகமிகப் பாதுகாப்பானது) 0-25

பிரிவு – 2 (நல்லது – 26- 50)

பிரிவு - 3 (பரவாயில்லை -51-75)

பிரிவு -4 (மோசமானது – 76- 100)

பிரிவு - 5 (குடிக்க ஆபத்தானது- 100

ஜம்ஜம் நீர் பிரிவு-1ஐ சார்ந்தது.

ஜம்ஜம் நீர் புனிதமானது எனக் கூறிவிட்டு சௌதி அரசாங்கம் சும்மா இருக்கவில்லை. நீரைத் தெளிவான பகுப்பாய்வு செய்துதான் பயன்படுத்துகிறது.

தினம் 16 லட்சம் லிட்டர் நீர் ஜம்ஜம் கிணற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் 400 டன் ஜம்ஜம் நீர் மதினா நகரிலுள்ள நபிகள் நாயகம் மஸ்ஜிதுக்கு அனுப்பப்படுகிறது.

எல்லா விமான நிறுவனங்களும் ஹஜ் உம்ரா பயணிகள் தலைக்கு ஐந்து லிட்டர் ஜம்ஜம் நீர் எடுத்துப் போக அனுமதிக்கின்றன.

கம்மிங் பேக் டு தி பாய்ன்ட்.

“இங்க நூல் வெளியிட முன்னனுமதி பெற்றீர்களா?” என்கிற கேள்வி ஆர்னிகாவின் முகத்தைத் தாக்கியது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p26.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License