இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


27. கிளாக்டவர்மியூசியம்

ஆர்னிகாவின் பலூன் முகம் மேலும் வீங்கியது.

“இங்க நூல் வெளியிட முன்னனுமதி பெற்றீர்களா?” அரபியில் கேள்வியை ஹரத்தின் பாதுகாவலர் தூக்கி வீசினார்.

ஆர்னிகா கைகால்களை பிசைந்து சுருளிராஜன் வித்தை காட்டினார். பின் அரைகுறை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் சமிக்ஞை மொழியிலும் பாதுகாவலருடன் பேசினார்.

“நாங்க இந்தியாவில் இருந்து வந்திருக்கம்”

“சரி, அதுக்கென்ன?”

“நாங்க சீனியர் சிட்டிசன்ஸ்!”

“உங்களை விட இருபது முப்பது வயது கூடியவர்கள் எவ்வித சலுகையும் கேட்காமல் ஹஜ் உம்ரா நிறைவேற்றுகிறார்கள்!”

“நான் எழுத்தாளன்!” காற்றில் எழுதிக் காட்டினார்.

“ஓகே!”

“எங்களோட நீண்ட நாள் ஆசை புனிதகாபா முன் எங்க இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுப்பை வெளியிடனும்னு…”

“உம்!”

“அஞ்சே நிமிஷம்… புக் வெளியீடு முடிஞ்சிடும்!”

என்ன புரிந்தததோ அந்த பாதுகாவலர் புன்னகைத்தார்.

“சரி, வெளியிட்டுக்கங்க!” எங்கள் திறன்பேசியை வாங்கி ஒளிப் படம் எடுத்துக் கொடுத்தார்.

“உங்களுடன் ஒரு படம்!”

மறுத்து விட்டார்.


முதல் உம்ரா முடிந்தது. முதல் உம்ரா மகள், மருமகன், மகன், மருமகள், இரு சம்பந்தி வீட்டாருக்காக நிறைவேற்றினோம். அல்-ஹரத்தை விட்டு வெளியே வந்தோம்.

இருவரும் தேநீர் அருந்தினோம். அங்கிருக்கும் கடைகளில் வேலை பார்ப்போர் பெரும்பாலும் இந்தியர்கள், பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகள்.

கிளாக் டவரை அண்ணாந்து பார்த்தோம்.

அந்த மணிக்கூண்டை அப்ராஜ் அஸ்ஸாத் என்றும் அப்ராஜ் அல் பைத் என்றும் அழைப்பர். மணிக்கூண்டு 2002ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2011ல் கட்டி முடிக்கப்பட்டது.

அந்த மணிக்கூண்டு உலகத்திலேயே உயரமான மணிக்கூண்டு என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணிக்கூண்டு கட்டடம் கட்ட ஆன செலவு 15பில்லியன் அமெரிக்கன் டாலர்கள். அந்த மணிக்கூண்டை அரசர் அப்துல் அஜீஸ் அறக்கட்டளை திட்டம் தான் தீர்மானித்தது. மக்கா நகரத்தை அதிநவீனப்படுத்துவதே அரசின் நோக்கம். இது உலகில் நான்காவது உயரமான கட்டடம். சுயமாய் கட்டப்பட்டதில் உலகில் ஆறாவது உயரமான கட்டடமாக திகழ்கிறது.

அந்த மணிக்கூண்டில் ஏழு காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. கிளாக் டவர் உச்சிக்கு சென்று மக்கா நகரை ஒரு பறவை பார்வை பார்க்கலாம். அந்த மணிக்கூண்டின் நான்காவது தளத்தில் தான் கிளாக்டவர் ம்யூசியம் இருக்கிறது.

கிளாக் டவரின் உயரம் 1991 அடி அல்லது 607 மீட்டர். ஆன்ட்டெனா இருப்பு 305 அடி அல்லது 93 மீட்டர். கூரை 1667 அடி அல்லது 508 மீட்டர். மேற்தளம் 1621 அடி அல்லது 494மீட்டர். விண்காண்கூடம் 1589 அடி அல்லது 484 மீட்டர் உயரம். 96 லிப்ட்டுகள் உள்ளன. கிளாக் டவரை நிர்மாணித்த பொறியாளர்கள் எஸ்.எல்.ராஸ்க் ஜிம்ப் மற்றும் தர் அல் ஹன்டாஷா.

கிளாக் டவரின் இணையதளம் theclocktowers.com

கிளாக் டவர் பிரதான மஸ்ஜித்திலிருந்து 980 அடி அல்லது 300 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஒப்பந்தகாரர்களின் பெயர் சௌதி பின் லாடின் குழுமம். கிளாக் டவரை அஜ்யத் கோட்டையை இடித்துதான் கட்டினார்கள்.

அது 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒட்டோமான் கோட்டை. அது மலையின் மேல் இருந்து கொண்டு மஸ்ஜித்தை தூரப்பார்வை பார்த்திருந்தது.

இந்த இடிப்பு 2002ல் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக துருக்கி தனது பலமான எதிர்ப்பை பதிவு செய்தது.

சீன ஸென்ஜென்னின் பிங்க் அன் பொருளாதார மையம். துபாயின் புர்ஜ் கலிபா கோலாலம்பூரின் மெர்டெக்கா 118. கீழ் மன்ஹட்டனின் உலக வர்த்தக மையம். டோக்கியோவின் டோக்கியா ஸ்கைட்ரீ சீனாவின் ஜிபெங் டவர், ஷாங்காயின் ஷாங்காய் டவர், டொரன்டோவின் சி என் டவர், சீனாவின் கான்டன் டவர் எல்லாமே மெக்கா நகரின் கிளாக் டவரின் உயரத்தோடு போட்டி போடக் கூடியவை.

கிளாக் டவரின் ஐந்து தளங்களில் ஷாப்பிங் மால்களும் ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதியுள்ள வாகன நிறுத்துமிடமும் உள்ளன.

கிளாக் டவரில் காணப்படும் கடிகாரங்களை PERROT GMBH & CO KC TURMUHREN UND LAUTEANLAGEN உருவாக்கினர்.

கிளாக் டவரை கட்ட இஸ்லாம் அல்லாதோர் அனுமதிக்கப்பட வில்லை. போலந்து மற்றும் ஜெர்மனி கட்டடக்கலை வல்லுநர்கள் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி டவரைக் கட்டினர்.

இலவச அனுமதி என நினைத்து ஆர்னிகா கவுன்ட்டரில் போய் விசாரித்தார்.

அருங்காட்சியகத்தை பார்க்க ஒருவருக்கு 150 சௌதி ரியால் (இந்திய மதிப்பு 3000 ரூபாய்) விஐபி கட்டணம் தலைக்கு 300 சௌதி ரியால் (இந்திய மதிப்புக்கு 6000ரூபாய்). இருவருக்கும் சாதாரண டிக்கெட் 6000 ரூபாய்.

ஆர்னிகாவுக்குள் கஞ்சத்தனம் தலை விரித்தாடியது.

“வகிதா! நீ மட்டும் போய் ம்யூசியத்தை சுற்றி பாத்து போட்டோ எடுத்திட்டு வந்திடு. நான் வெளியே காத்திருக்கிறேன். மூவாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி விடலாம்!”

ஒரு பெருச்சாளியை முறைப்பது போல முறைத்தேன்.

“யோவ்! மீண்டும் ஒரு முறை மக்கா வருவோமா என்பது சந்தேகமே. இதில எல்லாம் கணக்கு பார்க்காதே”

“இருவரும் பாக்காமல் போய் விடுவோமா?”

“நோ… நாமிருவரும் போகிறோம்! இரண்டு டிக்கெட் எடுங்கள்!”

இரண்டு டிக்கெட் எடுத்தார் ஆர்னிகா.

அந்த அருங்காட்சியகம் அப்ராஜ் அல் பைத் காம்ப்ளக்ஸில் ஐந்து தளங்களாக அமைந்திருந்தது.

உள்ளே போனால் -

உலகம் தோன்றியதிலிருந்து இது நாள் வரை நேரத்தை எப்படி கணித்தார்கள்? பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? விண்வெளி பௌதிகத்தின் பரிமாணங்கள் இவற்றுக்கான விஞ்ஞான ஆன்மிகப் பயணம் கிடைக்கிறது.


இந்த அருங்காட்சியகத்தை மிஸ்க் அறக்கட்டளை நடத்துகிறது.

முதல் தளம் : மெக்கா கிளாக் டவர் உருவாக்கப்பட்ட விதமும் அதன் தொழில்நுட்பமும் காட்சி வடிவங்களாய்

இரண்டாவது தளம்: நேரத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன் அளந்த விதம் (பெண்டுலம் மற்றும் நீர்க் கடிகாரம்)

மூன்றாவது தளம்: விண்வெளி பௌதிகமும் சூரிய மண்டலமும் (சூரியன், பூமி, நிலா)

நான்காவது தளம் : பால்வெளி பிரபஞ்சமும் ட்ரில்லியன் நட்சத்திரங்களும்

அருங்காட்சியகத்தின் காட்சி நேரம் மதியம் 2 மணியிலிருந்து இரவு 11 மணி வரை.

இரண்டு மணி நேரம் சுற்றிப் பார்த்தோம்.

மீண்டும் வெளியே வந்து தேனீர் அருந்தினோம்.

நாங்கள் தங்கி இருந்தது மிகவும் வசதியான ஹோட்டல் தான். ஆனால் ஒவ்வொரு முறை ஹோட்டலிருந்து ஹரம் வருவதற்கும் ஹரத்திலிருந்து ஹோட்டல் திரும்புவதற்கும் நூற்றுக்கணக்கான ரியால்கள் அநியாயமாக செலவழிந்தன.

ஹரத்திலிருந்து ஹோட்டல் போக டாக்ஸி கிடைப்பது குதிரைக் கொம்பு. பெரும் கூட்டம் அலைமோதும்.

ஒரு டாக்ஸிக்கு இருபது ஹஜ்ஜாளிகள் போட்டி போடுவர்.

டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் இறங்கி பாலும் பிரட்டும் கேக்கும் வாங்கினோம்.

ஹோட்டல் அறையில் சமையலறை இருந்தது.

சுடச்சுட காபி போட்டு நானும் ஆர்னிகாவும் பருகினோம்.

அமர்ந்து மறுநாள் நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தோம்.


“முதல் உம்ரா முடித்துவிட்டோம். இரண்டாவது உம்ராவை ஆயிஷா பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நாளை காலை மஸ்ஜித் ஆயிஷா உம் அல் முமினீன் (மஸ்ஜித் அல் தனீம்) போய் இரண்டு ரக்காத்து தொழுதுவிட்டு மீண்டும் இரண்டாவது முறையாக இஹ்ராம் அணிவோம்!”

“ஓகே டன்!” என்றேன்.

போடிம் செயலி அழைப்பு வந்தது. எடுத்தார்.

எதிர்முனையில் ஆன்மிக வழிகாட்டி பைரோஸ்கான்.

“நாளை மாலை மஸ்ஜித் அல் ஹரமில் சந்திப்போம்!” என்றார்.

பைரோஸ்கான் நூல் வெளியிட வரவில்லை. அவரது நண்பரையும் வழிகாட்ட அனுப்பவில்லை என்கிற மனதாங்கலை தூக்கி எறிந்து விட்டு “இன்ஷா அல்லாஹ்! சந்திப்போம்!” என்றார் ஆர்னிகா.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p27.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License