இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

32. மஸ்ஜிதுல் நபவி அமைப்பு


நபிகள் நாயகம் பள்ளிவாசல் அல்லது மஸ்ஜிதுல் நபவி அல்லது குன்பாத் இ கிஜ்ரா 82000 சதுர மீட்டர் பரப்பளவில் விரிந்திருந்து.

மசூதி முதன்முதலில் கட்டப்பட்டதை விட, தற்சமயம் நூறு மடங்கு விரிவடைந்து பிரம்மாண்டமாய்க் காட்சியளித்தது.

இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் தொழலாம். மஸ்ஜித் அல் நபவியில் 42 முதன்மை வாயில்களும் 200 -க்கும் மேற்பட்ட நுழைவுப் புள்ளிகளும் உள்ளன.

ஒவ்வொரு நுழைவாயிலிலும் ‘அமைதியுடனும் பாதுகாப்புடனும் நுழையுங்கள்’ என்கிற திருக்குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

கிங் பகத் வாயில் நபவியின் முதன்மை நவீன நுழைவாயிலாக செயல்படுகிறது.

நுழைவாயில் கதவுகளில் 23 காரட் தங்கத்தினால் ஆன 1500 அலங்கார வட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மொத்த மசூதியும் 100 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரை, தூண், சுவர்கள் எல்லாவற்றிலும் தங்கம்.

மஸ்ஜித் அல் நபவி இஸ்லாமியக் கட்டிடக்கலையும் நவீனப் பொறியியல் தொழில்நுட்பமும் கூடிய மாயாஜாலம்.


நபவி 20 ஏக்கர்களில் பரந்து விஸ்வரூபித்துள்ளது.

இந்த மசூதியில்தான் சுற்றுப்புற சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்தும் கட்டடக்கலை அரங்கேறி உள்ளது.

உள்கட்டமைப்பு எனும் போது,

* ரவ்தா - நபிகள் நாயகம் அடக்கஸ்தலத்திற்கும் மிம்பர் இடத்திற்கும் இடையில் அமைந்துள்ள புனிதமான பகுதியே ரவ்தா எனப்படும். எங்கு பார்த்தாலும் பச்சைக் கம்பளம் அலங்கரிப்பு. பாவ மன்னிப்பு தூண். ஆயிஷா தூண்.

* பச்சை குவிமாடம் - இது தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற நினைவுச் சின்னம். நபிகள் நாயகம், அபூபக்கர் மற்றும் உமர் என்கிற இரு கலீபாக்களின் ஓய்விடம் அடங்கிய புனித அறை இங்குதான் உள்ளது.


* ஒட்டோமான் தொழுகை மண்டபம் - பழமையான தெற்குப் பகுதியான இது, நேர்த்தியான அலங்காரங்கள், கல்தூண்கள் இங்கு உண்டு. சிறிய ஈயம் மற்றும் வெள்ளிக் குவிமாடங்கள் இங்கு காணக் கிடைக்கின்றன.

நவீன விரிவாக்கம் எனும் போது,

செதுக்கப்பட்ட செயற்கைக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட தளங்கள் கூடிய நூற்றுக்கணக்கான வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தூண்களால் தாங்கப்படும் பிரமாண்டமான இரண்டு மாடிக் கட்டிடங்கள் விரிவாக்கத்தில் கட்டப்பட்டுள்ளன.


வெளிப்புற அமைப்பு எனும் போது,

* முற்றங்கள் - வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் அமைந்துள்ள பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட பிரமாண்டமான முற்றங்களில் பகலில் திறந்து இரவில் மூடிக்கொள்ளும் க்ளைமேட் கன்ட்ரோல் குடைகள் இங்கு உள்ளன. மொத்தம் மஸ்ஜிதுல் நபவியில் 262 குடைகள் உள்ளன. வெளியில் 250 பெரிய ஆட்டோமேடிக் குடைகளும் உள்ளே 12 சிறிய குடைகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடையும் 25. 5 - 26. 5 மீட்டர் பரப்பளவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. குடைகளில் மழைநீர் வடிகுழாய்களும், கடிகாரங்களும் நூற்றுக்கணக்கான மின்விசிறிகளும், மின்விளக்குகளும், குளிர் நீர் ஸ்ப்ரேயும் இணைக்கப்பட்டுள்ளன. குடைகளின் வெப்பநிலை 8 டிகிரி சென்டிகிரேட்டிலிருந்து 10 டிகிரி சென்டிகிரெட் வரை. குடைகளில் 436 குளிர் நீர் ஸ்ப்ரே மின்விசிறிகள் இணைக்கப் பட்டுள்ளன. இந்தக் குடைகள், மணல் நிற டெப்ளான் பூச்சு செய்யப்பட்ட பொருளால் செய்யப்பட்டவை. இவை முழுமையான அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சை தடுக்கும் வல்லமை கொண்டவை. இந்தக் குடைகள் அனைத்தும் மையக்கட்டுப்பட்டு அமைப்பின் மூலம் தினமும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நகர்த்தக்கூடிய குவிமாடங்கள் - நவீன விரிவாக்கத்தின் கூரையானது உள்ளறைகளில் இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தை நிர்வகிக்க தண்டவாளத்தில் சறுக்கி நகரும் 27 சதுர அடித்தளமுள்ள நழுவும் நகர்த்தக்கூடிய குவிமாடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.


மினாராட்டுகள் - மம்லூக் ஒட்டோமான் கட்ட்டக்கலை பாணிகளின் கலவைகளாக 341 அடி உயரமுள்ள 10 பிரமாண்டமான மினாராட்டுகள் உள்ளன. மஸ்ஜித் அல் நபவியில் ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹ்ராப்கள் உள்ளன. மிஹ்ராப்கள் என்றால் தொழுகை மாடங்கள் என பொருள். அந்த ஆறு தொழுகை மாடங்களில் ஒன்றை மட்டுமே இமாம் தொழுகைக்காக பயன்படுத்துகிறார். மீதி ஐந்து மாடங்களும் நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் தொழுத இடங்களின் நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஆறு மிஹ்ராப்களின் பெயர்கள் இதோ-

1. மிஹ்ராப் நபவி - நபிகள் நாயகம் தொழுகை நடத்திய இடம்.

2. மிஹ்ராப் உத்மானி - ரவ்தாவில் அமைந்துள்ள இந்த மிஹ்ராப் மூன்றாவது கலீபாவான உத்மான் இப்னு அபான் (ரலி) அவர்கள் மஸ்ஜிதை விரிவுபடுத்திய போது இதனை சேர்த்தார்கள்.

3. மிஹ்ராப் சுலைமானி - (மிஹ்ராப் அல் ஹனபி) உதுமானிய சுல்தான் சுலைமான் தி மேக்னிபிசென்ட் அவர்களால் கட்டப்பட்ட இது பிரதான மிஹ்ராப்பின் இடதுபுறம் அமைந்துள்ளது.

4. மிஹ்ராப் தஹஜ்ஜுத் - ரவ்தாவின் பின்புறத்தில் அமைந்துள்ள இது நபிகள் நாயகம் அவர்கள் இரவுத் தொழுகையை தொழுது வந்த இடத்தைக் குறிக்கிறது.

5. மிஹ்ராப் பாத்திமா - ரவ்தாவிற்கு பின்னால் அமைந்துள்ள இது நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா (ரலி) வழிபட்ட இடத்தை நினைவுபடுத்துகிறது.

6. மிஹ்ராப் பைத் உல்- மக்டிஸ்- இந்த மிஹ்ராப் வரலாற்று ரீதியாக (ஆரம்ப கிப்லா) நோக்கி எதிர்கொண்டது.

முஸ்லிம்களுக்கு மூன்று மசூதிகள் மிகமிகப் புனிதமானவை. அவை;

1. மஸ்ஜித் அல் ஹரம் (மக்கா)

2. மஸ்ஜித் அல் அக்ஸா (ஜெருசலேம்)

3. மஸ்ஜித் அல் நபவி (மதீனா)


மஸ்ஜித் அல் நபவியின் முதல் இமாம் நபிகள் நாயகம்தான். முதல் அதான் கூறி தொழுகையாளிகளை வரவேற்றது நபித்தோழர் பிலால் இபுனு ரபா (ரலி).

நபவிக்குள் ஒரு லட்சம் விளக்குகளும் 2000 சான்ட்லியர் அலங்கார மின்பூக்களும் பதிக்கப்பட்டுள்ளன.

இப்போதைய மஸ்ஜிதுல் நபவியின் தலைமை இமாம் - ஷேக் அலி அல் ஹுதைபி.

இமாம் குழு அறிஞர் - ஷேக் சாலிஹ் அல் மகம்சி

பிரதி தலைமை இமாம் -ஷேக் சலாஹ் அல் புதைர்

குர்ஆன் ஓதுபவர் - ஷேக் அப்துல்லா அல் புய்ஜன், ஷேக் அப்துல் முஹ்சின் அல் காசிம்.

சொற்பொழிவாளர் - ஷேக் அப்துல் முஹ்சின் அல் துபைட்டி, ஷேக் அப்துல்லா அல் குராபி, ஷேக் முஹம்மது பர்ஹாஜி

மஸ்ஜித் அல் நபவியின் வெளிவாசலில் ஒரு சதுர பிரேம் இருந்தது. அதில் என்னை அமர வைத்து ஒளிப்படம் எடுத்தார் ஆர்னிகா.

உள்ளே நடந்தோம். சொர்க்கத்திற்குள் நுழைந்தது போல ஒரு பரவசம் பூத்தது.


நபிகள் நாயகத்திற்கு மிகவும் பிடித்த நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை. சுவனவாசிகள் பச்சை நிறத்தினாலான பட்டாடைகள் அணிந்திருப்பர் என இஸ்லாம் கூறுகிறது. எனக்கோ, ஆர்னிகாவுக்கோ பிரகாசமான நிறங்கள் எதுவென்றாலும் பிடிக்கும். நபவியை சுற்றினோம்.

எங்களைச் சுற்றி லட்சக்கணக்கான காஸ்மோ முகங்கள். நாடுகளும் நாட்டின் எல்லை கோடுகளும் மறைந்து அனைவரும் பூமிப்பந்தின் ஒரே இடத்தில் கூடியிருப்பது போல பிரமை பரவியது. ஓர் ஆப்பிரிக்கப்பெண் எனக்கு சலாம் கூறினாள். நான் பதில் சலாம் கூறினேன். உள்ளே போன நாங்கள் ஒளு செய்து தனித்தனியாக இரண்டு ரக்காத்துகள் தொழுதோம். எழுத்துப்பணி மேம்படவும் மகன் மகள் பேரன் பேத்தி சம்பந்தி குடும்பத்தார் நண்பர் உறவினர் மேன்மைக்காகவும் பிரார்த்தித்தோம்.

மஸ்ஜிதுல் நபவிக்குள் வாசல் எண் 307 வழியில் அமைந்திருக்கும் நபிகள் நாயகம் சுயசரிதை தொடர்பான திருவிழா மற்றும் அருங்காட்சியகத்துக்கு நுழைவு கட்டணம் 30 சௌதி ரியால்கள் அல்லது 900 ரூபாய் என்றிருந்தது. அதனைச் செலுத்தி அதற்குள் நுழைந்தோம்.

ஆர்னிகாதான் மியூஸியம் பைத்தியமாயிற்றே!

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p32.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License