இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

34. ஜெத்தா


ஜெத்தா. 46 லட்சம் ஜனத்தொகை. சவுதி அரேபியாவின் 50 முக்கிய நகரங்களின் ஜனத்தொகையில் இரண்டாவது இடம் வகிக்கிறது ஜெத்தா. சவுதி அரேபியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகை மூன்று கோடியே ஐம்பத்திரெண்டு லட்சம். சவுதி அரேபியாவில் மட்டும் 21 இலட்சம் இந்தியர்கள் தனியாகவோ குடும்பத்தினருடனோ பணி செய்து வாழ்கின்றனர்.

ஜெத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் எனும் போது;

* அல் பலத் - யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பவள மாளிகை இது. இதன் அருகே உள்ள கபர்ஸ்தானில் ‘எங்கள் அம்மா ஹவ்வா’ என்கிற பலகை தொங்குகிறது. இந்தக் கல்லறைப் பகுதியில் தான் ஆதம் நபியின் மனைவி ஹவ்வா புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

* மிதக்கும் மசூதி - மாற்றுப் பெயர் ரெஹ்மா மசூதி. வெள்ளை நிறப் பேரழகு. சூரியோதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ இந்த மசூதியைத் தரிசிக்கலாம்.

* அரசர் பகத் நீரூற்று - 1985ல் மன்னர் பகத் இந்த நீரூற்றை நகரத்திற்குப் பரிசளித்தார். செங்கடலுக்கு மேல் 260 மீட்டர் உயரத்திற்கு இந்த நீரூற்று நீரைப் பீய்ச்சி அடிக்கும். உலகத்திலேயே உயரமான நீரூற்று அரசர் பகத் நீரூற்றுதான். இரண்டாவது உயரமான நீரூற்று. சியோலின் உலக கோப்பை நீரூற்று. ஒரு நேரத்தில் 16 டன் கடல் உப்பு நீர், மணிக்கு 375 கிமீ வேகத்தில் காற்றில் பீய்ச்சிடிக்கப்படுகிறது.

* ஓபர் கடற்கரை - ஜெத்தாவின் வடக்கு பகுதி செங்கடலில் அமைந்துள்ளது.

* அல் ஷவால் தீம் பூங்கா - 60000 சதுரமீட்டர் பரப்பளவு. வருடத்திற்கு 10 லட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவிற்கு வருகின்றனர்.

நானும் ஆர்னிகாவும் ஜெத்தாவின் ஒரு பிரபல விடுதியின் அறையில் போய்த் தங்கினோம். குளித்தோம். புத்தாடை உடுத்தினோம்.

“ஆர்னிகா நம்ம ஒரிஜினல் திட்டத்ல ஜெத்தா டூர் இல்லவே இல்லையே?”


“ஆமாம். ஜெத்தாவுக்கு பதில் தாயிப் நகரை சுற்றிப் பார்க்கத்தான் நினைத்தோம். நம்ம மகள் ஜாஸ்மின் கூட ஷெகாத் அல் தாயிப் விடுதியில் நமக்காக ஒரு அறை புக் பண்ணினாள். ஒரு நாளைக்கு ரூபாய் 4500/- வாடகை. தாயிப் ஹிஜாஸ் மலையில் அமைந்துள்ள ஒரு ரோஜா நகரம். 900 ரோஜா பண்ணைகள் உள்ளன. அரிதான அத்தர் அங்குதான் தயாரிக்கப்படுகிறது. கேபிள் கார் பயணம் உண்டு. ஒட்டகத் திருவிழாக்களும் உண்டு. ஒவ்வொரு வசந்தக் காலத்திலும் 30 கோடி ரோஜா மலர்கள் அறுவடை செய்யப்பட்டு அத்தர் தயாரிக்கப்படுகின்றன”

“அதெல்லாம் விடு ஆர்னிகா. ஜெத்தாவில் நாம் என்ன பார்க்கப் போகிறோம்?”

“ஜெத்தாவில் நாம் இருக்கப்போவது வெறும் அரை நாள் தான். தெய்பாட் அருங்காட்சியகம் பார்த்துவிட்டு கெய்ரோவுக்கு விமானம் ஏற வேண்டியதுதான்”

“எகிப்தில் நாம் தங்கப் போகும் ஹோட்டல் பெயர் என்ன?”

‘கெய்ரோவின் அப்னான் கெய்ரோ ஏர்போர்ட்டில் தான்!”

“இவன் ஏதோ ஆன்லைன் பிராடு பண்ணப் பார்த்தான் என்று சொன்னாய் அல்லவா ஆர்னிகா?”

“இந்த ஹோட்டலை நம் மகன் நிலாமகன்தான் புக் பண்ணினான். ஆறு நாள் மொத்த வாடகை 17, 000 ரூபாய். இந்த ஹோட்டல்காரன் இடையே இதே ஹோட்டலில் நாம் இன்னொரு அறை புக் பண்ணி இருப்பதாகவும் அதற்கு இன்னொரு 17, 000 அனுப்ப வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பினான். கேன்சல் பண்ணினாலும் 17, 000 ரூபாய் தர வேண்டுமாம். அவனுடன் குறுஞ்செய்தி போர் நடத்தினேன். இரண்டாவது அறையை நாம் புக் பண்ணியதற்கு ஆதாரம் கேட்டேன். நீங்களாகவே டபுள் என்ட்ரி போட்டுக் கொண்டு கூடுதல் பணம் கேட்காதீர்கள். நாங்கள் எழுத்தாளர்கள். உங்கள் நாட்டின் மீது பேரன்பு கொண்ட அபிமானிகள். நாங்கள் உங்களின் விருந்தாளிகளாக வருகிறோம். எங்களை ஏமாற்றலாமா? நாங்கள் மூத்த குடிமக்கள்- என குறுஞ்செய்தியை அனுப்பி அந்த பிராடுகாரனை ஆப் பண்ணினேன்!”

“பேசிப் பேசி மயக்கிடுவ நீ. ஆனா எப்ப கொஞ்சுவ எப்ப கடிப்பன்னு அந்த கடவுளுக்கும் தெரியாது.”

சிரித்தார் ஆர்னிகா.


“எகிப்தில் சுற்றிப் பார்க்க கைடு தேடினாயே.. கிடைச்சாங்களா?”

“நெட்டுல தேடி நாலஞ்சு கைடுகளைப் பிடிச்சுப் பேசினேன். ஒவ்வொருத்தியும் ஒரு நாளைக்கு 10, 000 ரூபா கேட்டாளுக. வேண்டாமப்பா சாமி நாங்களே பாத்துக்கிரம்னு அவங்களைக் கத்தரிச்சு விட்டுட்டேன்!”

“எகிப்து பாதுகாப்பான நாடா?”

“இல்லை!”

“பின்னே?”

“எகிப்தில் தீவிரவாதம் அதிகம். எகிப்தின் பிரதான பயங்கரவாத அச்சுறுத்தல் வடக்கு சினாய் பிராந்தியத்தில் உள்ள ஐஎஸ்ஐஎல்- சினாய் தீபகற்ப அமைப்பிடமிருந்து (ஒரிஜினல் பெயர் அன்சார் பைத் அல் மக்திஸ்) வந்துள்ளது. இந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படைகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சூடுகள் நடத்தியுள்ளனர்”

“ஓஹோ!”

“கிசா பிரமிடுகளைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கூட இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்!”

“அடக்கடவுளே!”

“ஹரகாத் சலாத் மிஸ்ர் எனப்படும் ஹஸ்ம் இயக்கம் தீவிரவாதத் தாக்குதலில் தனி ஆவர்த்தனம் புரிகிறது. எகிப்து இராணுவமும் அமெரிக்கா பயிற்சியுடன் தீவிரவாதிகளை எதிர் கொள்கிறது!”

“பெண் பயணிகளுக்கு எகிப்து பாதுகாப்பானதா?”

“எகிப்து ஆண்கள், பெண்பயணிகளை வாய்வழி கேலி கிண்டல்கள் சீண்டல்கள் செய்வர். வியாபாரிகளும் அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டிகளும் பணம் ஏமாற்றுவர். பெண்கள் உடம்பை மூடிசாடி ஆடை உடுத்த வேண்டும். தேவையற்ற பேச்சுகளுக்கு லா சுக்ரன் (வேண்டாம் நன்றி) என சொல்லி நகர வேண்டும். இடது மோதிர விரலில் மோதிரம் அணிந்து ‘நான் திருமணமானவள் எட்டிப் போங்கள்’ என எச்சரிக்கை செய்ய வேண்டும். கண்ட வாகனங்களில் செல்லாமல் உபர் அல்லது கரீம் வாகனங்களில் செல்வது பாதுகாப்பானது!”

“நல்லது!”

“எகிப்துக்கு சுற்றுலா செல்வதற்கு முன் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதாவது எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா என அவதானிக்க வேண்டும்!”

“எகிப்து பணக்கார நாடா, ஏழைநாடா?”

“எகிப்து இந்தியா மாதிரியே ஒரு கடன்கார நாடு. எகிப்திய கரன்ஸியின் பெயர் எகிப்தியன் பவுண்ட். ஒரு எகிப்திய பவுண்டு 1.92 இந்திய ரூபாய். ஒரு அமெரிக்கன் டாலர் வாங்க 52 எகிப்தியன் பவுண்ட் தேவை”

“ஊப்!”

“எகிப்தில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை மிக அதிகம்.”

“இதற்குக் காரணம்?”


“பெரிய அளவில் வெளிநாட்டுக் கடன், சூயஸ் கால்வாய் வருமானக் குறைவு, தீவிரவாதம், கழுத்தை இறுக்கும் இறக்குமதி. எகிப்தின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள்!”

“எகிப்தின் வெளிநாட்டுக்கடன் எவ்வளவு?”

“169 பில்லியன் அமெரிக்கன் டாலர்!”

“இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் எவ்வளவு?”

“மயங்கி விழுந்து விடாதே. இந்தியாவின் வெளிநாட்டு கடன் 763 பில்லியன் அமெரிக்க டாலர்!”

“ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகம்!”

“சரி விடு!”

“எகிப்து பிரதானமாக என்ன இறக்குமதி செய்கிறது?”

“கோதுமையும் குரூட் ஆயிலும். எகிப்தில் அவர்களது பவுண்டுக்கு மதிப்பில்லை. அமெரிக்கன் டாலரில்தான் எல்லாப் பரிவர்த்தனைகளும். நான் கூட கையில் ஐயாயிரம் எகிப்தியன் பவுண்டுகளும் ஆயிரம் அமெரிக்கன் டாலர்களும் தான் மாற்றி வைத்திருக்கிறேன்!”

“ஆர்னிகா! எகிப்து தீவிரவாதிகளை வைத்து நீ கல்கண்டில் ‘திகில் ஒத்திகை’ எனும் தொடர்கதை எழுதினாய் அல்லவா?”

“ஆமாம் இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறாய்?”

“எகிப்தில் ஆறு நாட்கள் ஊர் சுற்றிப் பார்த்தல். பாதுகாப்பாக இந்தியா திரும்புவோமா? அல்லது மம்மிபிகேஷன் செய்யப்பட்டு பிரமிடில் புதைக்கப்படுவோமா?”

“லெட்டஸ் ஸி அண்ட் வெயிட்!”

கிளம்பும் நேரத்தில் கோவை அக்பர் டிராவல்ஸின் பிரஜீஷ் அரபு மொழியில் ஒரு தகவலை அனுப்பி இருந்தார்.

அத்துடன் ஆங்கிலத்தில் ஒரு துணைச்செய்தியும் அனுப்பி இருந்தார்.

‘நீங்கள் மெக்காவிற்கு அனுமதிக்கப்படாத டாக்ஸி பயணம் செய்திருக்கிறீர்கள். அபராதம் பத்தாயிரம் ரூபாய் அதனைக் கட்டாமல் நீங்கள் எகிப்துக்குப் போக முடியாது. ஜெத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்!’ எனக்கும் ஆர்னிகாவுக்கும் தலை சுற்றியது

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p34.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License