இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்

36. எகிப்து பிரமிடுகள்


விமானநிலைய வெளிவாசலுக்கு வந்தோம். பத்துப் பதினைந்து டாக்ஸி டிரைவர்கள் சேர்ந்து கும்மியடித்தனர். ஆர்னிகா அவர்களில் ஒரு டிரைவரை தேர்ந்தெடுத்தார். அவர் பார்க்க பழைய ஹிந்தி நடிகர் அம்ஜத்கான் போல இருந்தார். பழுத்த பப்பாளிபழ முகம்.

எகிப்தியர்கள் அரபிக், நுபியன், பேஜா மற்றும் சிவி மொழிகள் பேசுவர். அம்ஜத்கானிடம் ஆங்கிலத்தில் பேசினார் ஆர்னிகா. அவர் அரபியில் பதில் சொன்னார்.

வாடகை பேசி காரில் அமர்ந்தோம்.

டிரைவரின் பெயர் முகமது.

எகிப்தில் ஐந்து நாட்கள் சுற்றிப் பார்க்க வாடகை பேசினார் ஆர்னிகா. வாட்ஸ்அப்பில் அவரது மகள் பேரம் பேசி முடித்தாள்.

மறுநாள் அதிகாலை ஹோட்டல் வாசலுக்கு வந்து விடுவதாக வாக்குரைத்தார் முகமது. ஹோட்டலில் எங்களை இறக்கி விட்டுவிட்டுக் கிளம்பினார்.

அப்னான் கெய்ரோ ஏர்போர்ட் விடுதி ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அமைந்திருந்தது.

வீடாய் இருந்தததை விடுதியாய் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

வரவேற்பறையில் ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்த்தும் ஆர்னிகாவின் முகத்தில் பல்ப் எரிந்தது.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையுடன் சமையற்கட்டும் குளிர்சாதனப் பெட்டியும் இணைந்திருந்தன.


காப்பி போட்டுக் குடித்தோம்.

பால்கனிக்கு வந்து கெய்ரோவின் கடை வீதியைப் பறவை பார்வை பார்த்தோம்.

எகிப்திய மக்கள் மூவாயிரம் வருடங்கள் பழைமையான பின்னணியில் இயங்கும் பாரம்பரிய மனிதர்களாக தென்பட்டனர்.

கட்டங்களில் எல்லாம் ஒரு புராதனதன்மை மிளிர்ந்தது.

காலப்பயணம் செய்து நானும் ஆர்னிகாவும் பிரமிடு கட்டப்பட்ட காலத்திற்கு வந்தது போலொரு பிரமை பூத்தது.

எகிப்து என்றதும் இஸ்லாமில் குறிப்பிடும் கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன் பற்றியும் மூஸாநபி பற்றியும் நினைவுகள் கிளர்ந்தன.

மறுநாள் காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தோம்.

குளித்தோம்.

புத்தாடை உடுத்தினோம்.

பால்கனியில் எட்டினோம். முகமது வந்திருந்தார். கார் ஹாரனை கீய்ய்கீய்ய் என அடித்தார்.

முகமதின் மகளிடம் அன்றைய தின அட்டவணையைக் கொடுத்திருந்தோம்.


வாட்ஸ் அப் வழி தகவல் பரிமாற்றம்.

காருக்கு போன நாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் முகமது!” என்றோம்.

“வஅலைக்கும் ஸலாம்!”

காரை படுஸ்டைலாக ஓட்டினார். வாய்க்குள் எதையோ ராகமாக முணுமுணுத்தார்.

சாலையில் தென்பட்ட எகிப்து ஆண்கள் பருத்தி அல்லது லினனால் செய்யப்பட்ட கலாபேயா அல்லது ஜலாபியா நீண்ட அங்கி அணிந்திருந்தனர்.

அங்கியின் மேல் சிலர் கப்தான் பட்டு கம்பிளி கோட் உடுத்தியிருந்தனர்.

ஒவ்வொரு ஆணும் தகியா எனும் சிறு தொப்பியோ இமாமா என்கிற தலைப்பாகையோ தலையில் மாட்டி இருந்தனர்.

மேற்கத்திய நாகரிகத்தை விரும்பும் எகிப்து பெண்கள் ஜீன்ஸ், நீண்ட கவுன்கள், முழுக்கைசட்டைகள் உடுத்தியிருந்தனர். தலையில் ஹிஜாப்.

பெரும்பாலான பாரம்பரிய எகிப்து பெண்கள் அபாயா அணிந்திருந்தனர்.


கிராமத்து எகிப்து பெண்கள் கலாபேயா அணிந்திருந்தனர்.

முகமது காரை நேராகக் கொண்டு போய் ஒரு ட்ராவல் ஏஜென்ஸி முன் போய் நிறுத்திவிட்டார்.

அவர்கள் பிரமிடைட் சுற்றி ஒட்டகச் சவாரி செய்து காட்டி பெரும் காசைப் பிடுங்குபவர்கள்.

ஏஜென்ஸி ஆள் ஒருவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது.

“நாங்கள் இந்தியாவில் இருந்து வருகிறோம். நாங்கள் எழுத்தாளர்கள். நெட்டில் எல்லாவற்றையும் அலசி பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். எங்கள் பர்ஸ் மிகவும் சிறிது. கால்களால் சுற்றுலாத் தளங்களைப் பார்த்து விடுவோம். நேராக எங்களை கிஸா பிரமிடுக்கு முகமதை அழைத்துப் போகச் சொல்!” என்றார் ஆர்னிகா அவனிடம்.

அவன் முகமதை தனியாக அழைத்துப் போய் ஏதோ கூறினான்.

அவ்வளவுதான்…

முகமதின் முகம் மாறிவிட்டது. அதன் பின் நாங்கள் கெய்ரோ விமான நிலையம் திரும்பும் வரை நேர்மையாக நடந்து கொண்டார்.

முதலில் கிஸா பிரமிடுக்குப் போனோம்.

நான் ஆர்னிகாவிடம் கேட்டேன். “பிரமிடு என்றால் என்ன?”

“பிரமிடு என்பது ஒரு முப்பரிமாண வடிவம் அல்லது பிரம்மாண்டமான அமைப்பாகும். இவை அரசக் கல்லறைகள். மரணத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வாழ்வு வரும் என்கிற அடிப்படைதான் பிரமிடுகளின் அடிப்படை. சாய்வான முக்கோண வடிவப் பக்கங்கள் சூரிய கதிர்களைப் போல செயல்பட்டு மன்னனின் ஆன்மா மேலே ஏறிச்சென்று தெய்வங்களுடன் குறிப்பாக சூரியக் கடவுளான ராவுடன் சேர உதவும் வகையில் பிரமிடுகள் வடிவமைக்கப்பட்டன”

“ஓ!”

“பிரமிடுகள். முக்கோணம் சதுரம் ஐங்கோணம் போன்ற பக்கங்களைக் கொண்ட அடிப்பக்கம். அடிப்பகுதியிலிருந்து மேல்நோக்கி செல்லும் தட்டையான முக்கோணப் பக்கங்கள். எல்லா முக்கோணங்களும் சந்திக்கும் மிக உச்சியில் உள்ள ஒற்றைப்புள்ளி…”

“பிரமிடுகள் எந்த வகைப் பொருட்களால் கட்டப்பட்டன?”


“சுண்ணாம்புக் கற்கள், கிரானைட் கற்கள், ஜிப்சம் சாந்து, மண் செங்கற்கள் மற்றும் கருங்கற்கள்!”

பேசிக்கொண்டே வந்த ஆர்னிகா கிஸா பிரமாண்டத்தை லாங் ஷாட்டில் பார்த்து விட்டார்.

குதியாட்டம் கும்மாளம் போட்டார்.

“நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா
கொடி மேல் கனியா?”

கவுண்டமணி குரலில் பாடினார் ஆர்னிகா.

கிஸா பிரமாண்ட பிரமிடு 481 அடி உயரமாய் நிமிர்ந்திருந்தது. கிஸா பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் மூத்தது. எகிப்திய மன்னன் பரோ குபுவின் கல்லறை இது. கிமு 2600 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதாவது 4626 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்தப் பிரமிடைக் கட்டி முடிக்க 26 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்பிரமிடைக் கட்டியவர் ஹெமினு எனும் கட்டடக்கலை வல்லுநர் என்கிறார்கள். இப்பிரமிடின் அடித்தளம் 756 அடி.

இது ஒரு யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம்.

பிரமிடின் மொத்தக் கொள்ளளவு 92 மில்லியன் கன அடி ஆகும்.

கிஸா பிரமிடு 23 லட்சம் பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளது.

பிரமிடின் மொத்த எடை 60 லட்சம் டன்.

அரசரின் கல்லறை இருக்கும் இடத்தின் எடை 80 டன்.

இந்த பிரமிடில் மூன்று சேம்பர்கள் உள்ளன.

மன்னர் அறை.

அரசி அறை.

கட்டி முடிக்கப்படாத மூன்றாவது அறை.

பிரமிடைச் சுற்றி ஆயிரக்கணக்கான காஸ்மோ பயணிகள் மொய்த்தனர். பிரமிடைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஸ்கேம் மனிதர்கள் நம் பணத்தைச் சுருட்டி வாய்க்குள் போடுவதிலேயே குறியாக இருந்தனர்.


பிரமிடு பின்னணியில் ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தால் இத்தனை டாலர்.

எகிப்து ஆடை அணிந்து போஸ் கொடுக்க இத்தனை டாலர்.

எதிலும் சிக்காமல் பிரமிடின் நுழைவாசலுக்கு ஏறினோம். பிரமிடின் ஏத்தலக்கா பூத்தலக்கா படிக்கட்டுகளில் ஏறுவது எளிதான காரியமல்ல.

‘பல லட்ச ரூபாய் செலவு பண்ணி பிரமிடு பார்க்க வந்திருக்கிறோம். பிரமிடின் உள்ளும் புறமும் முழுக்க சுற்றி பார்க்காமல் ஊர் திரும்பக் கூடாது’ என்கிற எண்ணத்தில் ஆர்னிகா படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறினார்.

உள்ளே அரையிருட்டு.

காற்று இல்லாத கடும் வெப்பம்.

பலமாக வியர்த்தது.

பிரமிடுக்குள் இருந்த எல்லாப் பொருட்களும் ம்யூசியத்துக்குள் போய் விட்டன. அதனால் உள்ளே அனைத்தும் காலியாக கிடந்தன.

இரண்டு மணி நேரம் உள்ளும் புறமும் பார்த்துவிட்டு காப்ரே பிரமிடு போனோம்.

காப்ரே பிரமிடு 3 பிரமிடுகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. காப்ரே பிரமிடு இரண்டாவது உயரமானது. இரண்டாவது பெரியது. நான்காம் வம்சத்து பிர்அவ்ன் காப்ரே எனும் அரசனின் கல்லறை தான் இது. இது கிமு 2570-ல் கட்டப்பட்டது. இந்த பிரமிடின் உச்சியில் வழவழப்பான துரா சுண்ணாம்புக் கற்கள் இருப்பது தனி சிறப்பு. காப்ரே பிரமிடின் ஒரிஜினல் உயரம் 471 அடி தற்சமயம் 448 அடி.

காப்ரே பிரமிடின் அடித்தளம் நீளம் 707 அடி.

இந்த பிரமிடு கிஸா பிரமிடை விட உயரமாக தெரியும். காரணம் இந்த பிரமிடு 33 அடி உயரமான பாறை அடுக்கின் மீது கட்டப் பட்டுள்ளது.

இந்த பிரமிடு பிங்க் நிற கிரானைட் கற்களாலும் துரா சுண்ணாம்பு கற்களாலும் கட்டப்பட்டது.

இந்த பிரமிடை ஜியோவானி பெல்ஸானி எனும் தொல்லியல் நிபுணர் முதன் முதலில் 02.03.1818 அன்று தொல்லியல் ஆய்வு செய்தார்.

காப்ரே பிரமிடுக்கு இரண்டு தனி தனி வடக்கு நுழைவாயில்கள்.


வளாகத்தின் கிழக்கு விளிம்பில் ஸ்பிங்க்ஸ் அமைக்கப் பட்டுள்ளது. பிர்அவ்ன் காப்ரேவின் முகத்தைதான் ஸ்பிங்க்ஸாக வடிவமைத்து உள்ளனர் எனக் கூறுகின்றனர்.

இங்கு பள்ளத்தாக்கு கோவில் ஒன்றும் உண்டு.

ஸ்பிங்க்ஸ் முகத்தை நான் சுற்றிச் சுற்றி வந்தேன். என்னை புடவை ஜாக்கெட்டில் பார்த்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். என்னைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தனர்.

தன்னை யாரும் சீண்டவில்லை என ஏங்கினார் ஆர்னிகா.

அடுத்து மெம்பிஸ் போனோம். மெம்பிஸ் பண்டை எகிப்தின் தலைநகரம். ஒருங்கிணைந்த எகிப்து ஆட்சியாளர் மெனெஸால் கிமு 3100ல் இந்த நகரம் நிர்வாகத்தலைநகராக அறிவிக்கப்பட்டது. இங்கு 30 கிமீ நீளமுள்ள கல்லறைத் தோட்டம் உள்ளது. நவீன கெய்ரோவில் இருந்து தெற்கே 24 கிமீ தொலைவில் மிட் ரஹினா கிராமத்தில் மெம்பிஸ் அமைந்துள்ளது.

அடுத்து மென்கர் பிரமிடு போனோம். நான்காம் வம்சத்தின் பிர்அவ்ன் மென்கெரேவிற்காக கட்டப்பட்ட கல்லறையே இப்பிரமிடு. 213 அடி உயரம். கிமு2510ல் கட்டப்பட்டது. பிர்அவ்ன் மென்கரோ திடீர் மரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த பிரமிடு மன்னர் ஷெல்செஸ்காப் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.


அன்றைய நாளின் கடைசியாக சாக்குரா பிரமிடுக்குப் போனோம். இதனை ஜோசரின் படிக்கட்டுப் பிரமிடு என்பர். எகிப்தின் மிகப் பழமையான பிரமாண்டமான கற்கட்டடம் மற்றும் உலகின் மிகப் பழமையான நினைவுச் சின்னக் கற்கட்டுமானமாகும். கிமு 2700ல் மூன்றாம் வம்சத்தின் பிர்அவ்ன் ஜோசருக்காக இது கட்டப்பட்டது. 200அடி உயரம். ஆறடுக்கு நினைவுச்சின்னம். இம்ஷோடெப்பால் இது வடிவமைக்கப்பட்டது.

இந்த பிரமிடில் பொன்விழா சடங்குகளுக்காக ஹெட்செட் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

செர்டாப் சிறிய மூடப்பட்ட அறை. இருதுளைகள் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ஜோசரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது.

ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கங்கள். 28 மீட்டர் ஆழமுள்ள செங்குத்து கிணறு. நீள அறைகள்.

இரவு 8 மணிக்கு விடுதிக்கு திரும்பினோம். நானும் ஆர்னிகாவும் கைகோர்த்துக் கொண்டு கெய்ரோவின் கடைவீதிகளை சுற்றி சுற்றி வந்தோம். இரவு விடியாமல் நீண்டது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p36.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License