Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
சிறப்புப் பக்கங்கள்

நவக்கிரகங்கள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


சந்திரன்

இது சூரியனை நோக்க ஒரு உபக்கிரகம். இது பூமியை 27 இலட்சத்து, 38 ஆயிரத்து 800 மைல் தூரத்திற்கு அப்பாலிருந்து பூமியைச் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு 6,800 மைல் எனவும், குறுக்களவு சுமார் 2162 மைல் எனவும் கூறுகின்றனர். இது, பூகோள வட்ட அளவில் எண்பதில் ஒரு பாகம் எனக் கணிக்கின்றனர். இது சூரியனுடைய ஒளியின் பிரதி பலத்தால் பிரகாசத்தை அடைகிறது. இது, 27 நாட்கள், 8 மணி அளவையில் தன்னைத் தான் ஒரு முறை சுற்றி வருகிறது. இது பூமியை 29 நாட்கள், 12 மணிகள், 44 விநாடிகளில் பூமியை ஒரு முறை சுற்றி வருகிறது. இவ்வாறு இது பூமியைச் சுற்றி வருதலால் சுக்ல கிருஷ்ண பட்சங்களும், மாதங்களும் ஏற்படுகின்றன. சந்திரன் பூமி, சூரியன், இம்மூன்று கிரகங்களும் ஒரு நேர் பாகையில் அமைகையில் நமக்குப் பூரணச் சந்திர நிலை தோன்றுகிறது. இது, பூமிக்குப் பின் புறமாகும் போது சந்திரவுதயமும் ஒளியும் முறையே குறைந்து 15 ஆவது தினத்தில் பூமி, சந்திரன், சூரியன் என்ற ஒரு நேர் பாகையில் அமைகையில் சந்திரன், பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நிற்றலால் இரவில் காணப்படுவதில்லை. அத்தினமே அமாவாசை. அது போலவே பூரணச் சந்திர நிலையாகிய பௌர்ணமியும் உண்டாகிறது.

சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வருங்கதி ஒரு மாதம் எனப்படுகிறது. சந்திரன் பூமியைப் போல் உருண்டையான கோளம், இதற்கு ஒளியெல்லாம் சூரியனிடத்திலிருந்து வருகிறது. இது பூமியினும் சிறிது. 50 சந்திரர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் ஒரு பூமியாகும். சூரியனை விட நமக்குச் சமீபத்தில் இருக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் 240,000 மைல். இது பூமியைச் சுற்றியோடும் கிரகம். பூமி சூரியனைச் சுற்றியும், சந்திரன் பூமியைச் சுற்றியும் ஓடுவதால், சில சமயங்களில் சந்திரன் நமக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்படி நேரிடும். இது உருண்டையான வஸ்து அல்லவா? இது பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் வருகையில் அதன் மீது வெளிச்சம்படாத பாகந்தான் நமக்கு எதிரில் காணப்படுகிறது. அந்த தெரியாத நாள் அமாவாசை அ - இல்லை, மா - சந்திரன், வஸ் - இருக்கிறது. சந்திரனில்லாத நாள் அந்த இடத்திலிருந்து தன் வீதியாறா முந்திய இடத்திற்கு நேர் எதிரிலிருக்கும் இடத்திற்கு வரும் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகிறது. அப்போது சந்திரனது வெளிச்சமான பாகம் முழுதும் நமக்குத் தெரிகிறது. அது பௌர்ணமி. இது தேய்வதும் வளர்வதுமில்லை சூரிய வெளிச்சம் அதிகம் படுவது வளர்பிறை, சந்திரன் பூமியைச் சுற்றி வர 29 அரை நாட்கள் ஆகின்றன. இது பூமி தன்னைத் தான் சுற்றும் போது சந்திரன் தன் ஸ்தானத்தை விட்டு 12 டிகிரி நகருகிறது. ஆதலால் இதன் உதயம் பிற்படுகிறது.


சாப வரலாறு - வளர்பிறை, தேய்பிறை

1. தட்சன் பெண்கள் இருபத்து எழுவரை மணந்து அவர்களிடத்து ஒருமித்து ஆசை வைக்காது கார்த்திகை, ரோகணி இவர்களிடம் மாத்திரம் அன்பு வைத்ததால், மற்றையப் பெண்கள் தந்தையிடம் குறை கூறத் தான் தட்சன் நாடோறும் ஒவ்வொறு கலை தேயவும், சய ரோகம் அடையவும், சாபம் தந்தனன். சந்திரன் சாபம் அடைந்து சிவமூர்த்தியால் கலைகள் வளரவும், நோய் நீங்கவும் அனுக்கிரகம் அடைந்தனன். தட்ச யாகத்தில் வீரபத்திரரால் தேய்வுண்டு அநுக்கிரகம் பெற்றவன்.

2. சிவ சன்னிதானத்து சாரதர் கொணர்ந்து கொடுத்த கனியைப் பிரமன் கந்தமூர்திதிக்குக் கொடுக்க வேண்டும் எனக் கணபதி அவரைக் கோபிக்கையில் சந்திரன் விநாயகரைக் கண்டு நகைத்ததால், விநாயகரால் ஒளி இழக்கவும், சண்டாளத்துவமும் பெற்று மீண்டும் அவரால் அச்சாபம் வருடத்து ஒரு நாளில் அடைய வரம் பெற்றவன். அது ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தியாம். இக்காலத்தில் சந்திரனைக் கண்டோர் சண்டாளத்துவம் அடைவர். ஆகையால் அது நீங்கக் கணபதியைப் பூசிப்போர் இட்டசித்தி பெறுவர்.

3. இச்சந்திரன் ஓஷதிகளுக்கு இறைவனாய் அநேக இராசசூயஞ் செய்த கர்ம பலத்தினால் பிரகஸ்பதியின் தேவியாகிய தாரையைப் புணர்ந்தனன். இந்தக் காரணத்தினால் தேவாசுர யுத்தம் உண்டாயிற்று. அந்த யுத்தத்தில் பிரமன் தாரையைப் பிரகஸ்பதிக்குக் கொடுத்தனன். தாரையிடம் இவனுக்குப் புதன் பிறந்தனன்.

4. 12,000 யோசனை விஸ்தாரம் உள்ள மண்டலத்தை உடையவன். இவன் கலையை முதல் பதினைந்து நாள் தேவர் அருந்துவர். மற்றவற்றைத் தென்புலத்தார் அருந்துவர். இவன் தேர்க்குச் சக்கரம் 3. குருந்த மலர் நிறம் உள்ள குதிரைகள் 10. சூரியனது சுகமுனை என்னும் கதிரால் ஒளி பெறுபவன்.

5. இராகு கேதுக்களின் வஞ்ச உருவத்தை மோகினி உருக்கொண்ட திருமாலுக்குக் காட்டினமையால் அவரால் பகைமை பெற்று விழுங்கப் பெற்றவன். அத்திரிக்கு அனுசூயையிடத்துப் பிறந்த புத்திரனாகிய சந்திரபகவான். அது அட்டமூர்த்தத்து ஒன்று. இச்சந்திரனுக்குத் தட்சப்பிரஜாபதி தன் புத்திரிகளாகிய இருபத்தேழு நட்சத்திரங்களையும் மணமுடித்துக் கொடுத்தான். இருபத்தெழுவருள் ரோகிணி பிரிய நாயகி பிருஹஸ்பதி பாரியாகிய தாரையைச் சந்திரன் சோர மார்க்கமாகக் கூடிப் பெற்ற புத்திரன் புதன். இது பற்றிப் புதன் மதிமகன் எனப்படுவன். மற்றொரு காலத்திலே சமுத்திர மதனத்துக்குக்கண் திருப்பாற்கடலிலே இச்சந்திரன் பிறந்தான். தட்சன் தன் குமாரத்திகள் இருபத்தேழு பெயர்களுள் ரோகிணியிடத்து அதிப் பிரீதியும் மற்றையரிடத்து அறப்பிரீதியும் வைத்தொழுகும் சந்திரன் மீது கோபமுடையவனாகி ஷய ரோகத்தால் வருந்துகவென்று சந்திரனைச் சபித்தான்.

சீணசந்திரன் - தேய்பிறை, அமரபட்சத்துச் சந்திரன், தேய்பிறைச் சந்திரன்.


சந்திரனாள்

திங்கட்கிழமை, கலை, திதி, விளக்கம் அன்றியும் சந்திரன் ஒரு கலை. அன்றியுஞ் சந்திரானாறு கலை தெரியுமிராசிநீவாலி: கலை தெரியாவிரா குகு: முன் பக்கத்தின் பெயர் - சுக்கிலம். அன்றியுஞ் சந்திரனாட் கூறுபாடு - கலை. மூன்று நாள் வட்டம் - பக்கம். முதற்பக்கம் - நந்தை: இரண்டாம் பக்கம் - பத்திரை: மூன்றாம் பக்கம் - சயை: நான்காம் பக்கம் - இருத்தை: ஐந்தாம் பக்கம் - பூரணை. சந்திர நாள் - கலை, சுக்கிலம், திங்கட்கிழமை, திதி, பூருவம், விளக்கம், அன்றியும் சந்திரனோடு கலை தெரியும் இரவுக்கு சினிவாலி, என்றும் கலை தெரியாத இரவுக்கு குகு என்றும் பெயர். மற்றும் இருத்தை, சயை, நத்தை, பத்திரை இவைகள் சந்திரன் கூறுபாடுகளாகும்.

சந்திரன் பெயர்

அமுதகதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச்சிகன், அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இடை, கலை, இடை நாடி, இளஞ் சந்திரன், இனன், உடுபதி, உடுவின் வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கன், குபேரன், குமுத நண்பன், குரங்கி, குழவி, சந்திரன், சந்திர பகவான், சம்பவ புதன், சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், தண்ணவன், தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நண்பன், நிசகரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்த்தே, பிறை, மதி, மதியம், மானேந்தி, முயலின் கூடு, விது, வெண்கதிரோன், வேந்தன்,

(தொடரும்)





இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/special/p4b.html



  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               




இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License