இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை பகுதி-2

கவிக்கோ வெல்லவூர்க்கோபால்


இன்று இலங்கையில் பெரும்பான்மைச் சமூகமாக வாழுகின்ற சிங்கள மக்கள் கலிங்க தேசத்திலிருந்து கி.மு 5ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த விஜயனின் சந்ததியினரென்ற நம்பிக்கையின்பால் பொதுவாகத் தங்களது வரலாற்றினை வெளிப்படுத்தி வந்துள்ளனர். மகாவம்சம் கூறும் இம்மக்களது சிங்கத்துடன் இணைவு பெற்றதான தொடக்க வரலாறு அறிவுப்பூர்வமானதல்ல என்பதனைப் பொதுவாக எல்லோருமே ஏற்றுக் கொள்வர். மகாவம்சம், தீபவம்சம் மற்றும் வலகக்க ஜாதகக் கதைகள் போன்ற பௌத்த வரலாற்று நூல்களை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் எச். டபிள்யு. கொட்றிங்ரன் (H.W.Codrington) A Short History of Ceylon என்ற நூலில் விஜயனின் கதையானது பல வினோதக் கதைகளின் கூட்டு எனக் குறிப்பிடுவார். சமூக மானிடவியல் பேராசிரிரியர் கணநாத் The Origins and Institutionalization of Political Violance என்ற நூலில் சிங்களவர் மற்றும் தமிழர் இருவருமே ஒரே இனம் சார்ந்தவர்கள் என்றும் தென்னிந்தியாவின் திராவிடர்கள் அதிகம் கலந்துள்ள இனமே சிங்கள இனமென்றும் குறிப்பிடுகின்றார். The Early History of Ceylon என்ற நூலை எழுதிய G.G.Mendis என்ற வரலாற்றாசிரியர் சிங்கள இனத் தோற்றத்திற்கு காரணமாயிருந்த இனங்களுள் முக்கியமாக திராவிடர் அடங்குவதாகக் குறிப்பிடுகின்றார். ஆய்வாளர் B.H.Farmar, A Divided Nation என்ற நூலில் இந்த நாட்டில் சிங்களவராலும் தமிழராலும் பேணப்பட்டுவந்த கராச்சாரம் இங்கு முன்கூட்டியே வாழ்ந்த கற்கால மனிதர்களால் பேணப்பட்டவையென்றும் இங்கு தமிழை அல்லது சிங்களத்தைப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இங்குள்ள ஆதிக்குடிகளின் வழிவந்தவர்களே எனக் கூறுகின்றார்.



The People of the Lions என்ற கட்டுரையில் R. A. L. H. குணவர்த்தன, எந்த ஒரு சிங்கள அரசனும் ஆரியன் என்று விளிக்கப்படவில்லை என்றும் பின்வந்த சிங்களவர்கள் தம்மை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆரியர் என்ற அடையாளத்தை தமக்கு ஏற்படுத்த முனைந்தது வேடிக்கையான விடயம் என்கின்றார். எல்.பியதாச என்ற வரலாற்றாசிரியரும் The Holocaust and after என்ற நூலில், நாசிக் கொள்கையை அடியொற்றியெழுந்த ஆரியரே மேலானவர்கள் என்ற இனவாதப்போக்கு சில சிங்கள இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட தீய விளைவு என்றும் இனத்தைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் ஒன்றேயெனவும் சிங்களப் பிரதேசத்தில் குடியேறிய தமிழர்கள் சிங்களத்தையும் தமிழ்ப் பகுதிகளில் குடியேறிய சிங்களவர்கள் தமிழையும் தங்கள் மொழிகளாகக் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றார். இவ்வாய்வாளரது கருத்தைச் சான்றுபடுத்தும் தன்மையில் மட்டக்களப்புத் தேசத்தில் தமிழரிடையே சிங்களக்குடி என்ற பெயரில் ஒரு குடியினர் வாழ்வதை நாம் காணமுடியும்.



சிங்கள மக்களின் வரலாறு இவ்வாறு அமைய சிங்கள மொழியும் பிற்பட்ட காலத்திலேயே தோற்றம் பெறுகின்றது. இதன் காலத்தை கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டதாகவே ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. வடமொழியின் தாக்கத்தால் தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகள் தோற்றம் பெற்ற காலத்தே சிங்கள மொழியும் எழுத்து வடிவத்தைப் பெறுகின்றது. சிங்கள மொழியின் இலக்கண அமைவு திராவிட மொழிகளை ஒத்திருப்பது இதற்கு முக்கியச் சான்றாக அமையும். அத்தோடு கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதல் சிங்கள இலக்கண நூலான சிதற்சங்கராவ சிங்கள நெடுங்கணக்கில் இரண்டுவகை உண்டென்பதை வெளிப்படுத்துவதைக் காணலாம். அவை எலு மற்றும் கலப்பு நெடுங்கணக்குகளாகும். இதில் எலு நெடுங்கணக்கில் பாளி, சமஸ்கிருத உச்சரிப்புகளில்லை. இதுவே காலத்தால் முந்தியதோடு தமிழ் மொழியுடன் இணைவுற்றதென்பதையும் வெளிப்படுத்தும்.

சிங்களம் - தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மிக்க பாண்டித்தியம் பெற்றவரான டபிள்யு.கே.குணவர்த்தன அவர்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 28.09.1918ல் சிங்கள மொழி பற்றி ( The Origin of the Sinhalese Language - W.K.Gunawardena) ஆற்றிய உரையினை இங்கு குறிப்பிடுவது முக்கியமானதாகும்.



‘விஞ்ஞான ரீதியாக நோக்கும்போது மொழி ஒன்றினைத் தீர்மானிக்கும் காரணி அதனது சொற்றொகுதியல்ல. அது அதனது வசன அமைப்பேயாகும். அதாவது கருத்து வெளிப்பாட்டில் சொற்களை ஒருங்காக்கி பரஸ்பரம் சீராக்குவது பற்றியதாகும். இவ்வாறு நோக்கும் போது சிங்களம் அடிப்படையில் ஒரு திராவிட மொழியே எனக் கூறுதல் வேண்டும். அத்தோடு மட்டுமன்றி இதன் பரிணாம வளர்ச்சியானது தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளமை தெரிகின்றது. சொற்றொகுதியின் அடிப்படையில் சிங்களம் பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளின் குளவி எனக்கொள்ளும் அதே வேளையில் அதன் உருவ அம்சங்களிலும் அமைப்பியலிலும் தமிழ் மொழியின் குளவி எனக் கூறுதலே சாலவும் பொருத்தமானதாகத் தோன்றுகின்றது.’ இவ்வாறு அவர் குறிப்பிடுகின்றார்.



பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமான தேவநம்பிய தீசனின் கி.மு 244 - கி.மு 207 ஆட்சிக் காலத்தில் அனுராதபுரத்தில் பௌத்தத்தைப் போதிக்கும் பீடங்களாக மகாவிகாரையும் அபயகிரி விகாரையும் விளங்கின. வரலாற்று ஆய்வுகளின் படி சுமார் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட காலத்தே மகா விகாரையில் பாளியிலும் அபயகிரி விகாரையில் தமிழிலும் பௌத்தம் போதிக்கப்பட்டது. கி.பி 6ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்த காலத்தே தமிழகத்தில் பௌத்தம் நிலைபெற்றிருந்த காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற பகுதிகளில் சைவ, வைஷ்ணவ மதங்கள் எழுச்சி பெறத் தொடங்கியதும் அங்கு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த பௌத்தத்தில் மகாயாணம் என்ற புதியபிரிவு ஆரம்பமானது. இதன்படி புத்தர் பெருமான் மகாவிஷ்ணுவின் மறு அவதாரம் என்ற மச்சபுராணம் மற்றும் பாகவதப் புராணக் கருத்துக்கள் வலுப்பெற பௌத்த வழிபாட்டுத் தலங்கள் விஷ்ணு வழிபாட்டுத் தலங்களாக மாற்றமடையத் தொடங்கின. இந்த நிலையில் இலங்கையில் பின்பற்றப்பட்ட பௌத்தத்தின் மூலவடிவான தேரவாதம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய அச்சநிலை தோற்றம் பெறலானது. இதில் தமிழ் மொழியில் பௌத்தம் போதிக்கப்பட்ட அபயகிரி விகாரையில் மகாயானத்தின் பாதிப்பு துளிர்விடத் தொடங்கியது. இதனால் அச்சம் கொண்ட மகாவிகாரையின் மகா சங்கத்தினர் தம்ம தீபக் கொள்கையை உருவாக்கினர். இதன் பிரதிபலிப்பாக இலங்கை பௌத்தர்களின் நாடு என்பதுவும் சிங்களவர்கள் தேரவாத பௌத்தத்தின் காவலர்கள் என்பதுவும் வரையறுக்கப்பட்டது. இதன் பின்னனியில் பௌத்தத்தைப் பின்பற்றிய பெரும்பான்மையினர் சிங்களவர் என்ற கட்டுக்கோப்புக்குள் உள்ளாக்கப்பட்டனர். இதனைச் சாதகப்படுத்தும் தன்மையில் அதீத கற்பனையின் பால் கெமுனுவை முதன்மைப்படுத்தி பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் பெருவெற்றி பெற்றதென்றே கூறவேண்டும்.



சிங்கள மக்களது வரலாற்றை வெளிப்படுத்தும் பிறிதொரு நூல் சூளவம்சமாகும். கி.பி 1140 - 1173 வரை பொலன்னறுவையை இருக்கையாகக் கொண்டு நல்லாட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகுவை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட நூல் இது. இவன் பாண்டிய தமிழ்ப் பாரம்பரியத்தின் வழி வந்தவன். இவனது பேராட்சிக்குட்பட்டு மட்டக்களப்புத் தேசம் சிற்றரசு நிலையிலிருந்த போது தருமசிங்கன் இங்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்துள்ளான். பராக்கிரமபாகுவை மட்டக்களப்பு பூர்விக ஏடுகள் சேனன் எனக் குறிப்பிடும். பராக்கிரமபாகுவோடு தினசிங்கன் மிகுந்த நட்புரிமை கொண்டிருந்தவன். இதன் காரணமாகவேதான் தனது உறவுமுறையைக் கொண்ட மதுரைப் பாண்டியனுக்கு பராக்கிரமபாகு தினசிங்கன் தலைமையில் படையணியொன்றினை அனுப்பியிருந்தான். பராக்கிரமபாகுவின் அரண்மனைக் கவிஞராக இருந்தவர் போஷராஜ பண்டிதர். சரஜோதி மாலையைத் தமிழில் எழுதியவர். நளவெண்பாவைப் பாடிய புகழேந்திப் புலவரை பராக்கிரமபாகு தனது அரண்மனைக்கு அழைத்துச் சிறப்பித்ததாகவும் தகவல்கள் உண்டு. அரச கருமங்கள் அனைத்தையும் தமிழிலேயே மேற்கொண்டவனாக அவன் அறியப்படுகின்றான்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p8a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License