இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை பகுதி-3

கவிக்கோ வெல்லவூர்க்கோபால்


1815 மார்ச் 2ம் திகதி கைச்சாத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் ஆங்கில ஆட்சியாளர் சார்பில் ஆளுனர் றொபேட் பிறவுண்றிக் ஆங்கிலத்திலும் எகலப்பொல, கண்டி அரசின் 2ம் அதிகாரியாகவும் சப்பிரகமுவவின் திசாவையாகவிருந்த பிலிமத்தலாவை, நான்கு கோரளையின் திசாவையாகவிருந்த பிலிமத்தலாவை மற்றும் மாத்தளையின் திசாவையாகவிருந்த ரத்வத்தை ஆகிய நால்வர் தமிழிலும் மூன்று கோறளையின் திசாவையான மொல்லிகொட வலப்பனயின் திசாவையான துல்லெவ, வெல்லச மற்றும் விந்தனையின் திசாவையான மில்லெவ ஆகிய மூவரும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளைக் கலந்தும் ஏழு கோறளையின் திசாவையான மொல்லிகொட, ஊவா திசாவையான மொனராவில, தமன்கடுவ திசாவையான கலகம, நுவர-கலாவிய திசாவையான கலகொட ஆகியோர் சிங்களத்திலும் ஒப்பமிட்டனர்.



பண்டிற் கலாநிதி நந்தசேன விஜயசேகர தனது ஆய்வு நூலில் (The Sinhalese Page:392) கண்டியரசின் கீழிருந்த வெல்லச - விந்தன திசாவைப் பிரதேசத்தில் புலிக்கொடியே பறந்ததெனவும் இதனடிப்படையில் அக்காலகட்டத்தே அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களாவே இருந்திருக்க முடியும் எனவும் உறுதிபடக் கூறுகின்றார். உண்மையில் இப்பிரதேசம் வரலாற்று ரீதியாக பண்டைய மட்டக்களப்புத் தேசத்திற்கே உரியதென்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்று மட்டக்களப்புத் தேசத்தே வாழுகின்ற சிங்கள மக்களை இருவேறு பிரிவாக அடையாளப்படுத்த முடியும்.

1. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் மரபுவழிச் சமூகம்
2. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட குடியேற்றச் சமூகம்.



பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் மரபுவழிச் சிங்கள மக்களது வரலாறு ஆரம்ப காலம் முதலே தமிழரோடு இணைவுபட்டுச் செல்வதை நம்மால் அவதானிக்க முடியும். வட கலிங்கமான சிங்கபுரம் சார்ந்து வந்து மட்டக்களப்புப் பூர்வீக சரித்திர ஏடுகளில் சிங்கர் என அடையாளப்படுத்தப்படுகின்ற இம்மக்கள் பற்றிய கவனம் ஆய்வில் முக்கியத்துவம் பெறுவதாகவேயுள்ளது. இம் மக்கள் உன்னரசுகிரி தோற்றம் பெற்ற காலத்தே அச்சிற்றரசுக்கு உட்பட்டும் பின்னர் நாடுகாடுப்பற்று, நாதனைப்பற்று வன்னிமைப் பிரிவுகளிலும் அதன் பின்னர் வேகம் பற்று விந்தனைப்பற்று பிரிவுகளிலும் வாழ்ந்த மக்களின் முக்கிய பிரிவினராகக் கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. இலங்கையின் தொல்லியல் ஆணையாளராக மிக நீண்டகாலமாகப் பணிபுரிந்தவரும் சிறந்த கல்வெட்டாய்வாளருமான கலாநிதி பரணவிதான (Inscription of Ceylon - Dr.S.Paranavitana) மண்முனைப் பற்றில் மியுஸ்ரீன்கணவெகர், வேகம்பற்றில் தமண, பறகாகெல, றஜகல, உகன, உப்பிற்றிகல, வட்டினாகல, கலகம, சம்மாந்துறைப் பற்றில் அம்பாரை, மல்வத்தை, அக்கரைப்பற்றில் கல்லோடை, குருவில, மெட்டையாகல, முல்லைக்கொழுந்து மலை, நாடுகாடுபற்று மற்றும் உன்னரசுகிரியில் தொட்டகல, கிளுவான, கிரிபொக்குணகல, கோணாகல, குடும்பிகல, நிலகிரிசாய, பாணம, திசலானகம, சங்கமன்கண்டி, வெகரகந்த, விகாரகல போன்ற இடங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்தமை பற்றி தனது ஆய்வில் குறிப்பிடுகின்றார;. இம்மக்கள் பொளத்தத்தைப் பின்பற்றியிருப்பர் என்பதை மறுக்கமுடியாது.



இலங்கையில் முக்கியப்படுத்தப்பட்ட மகேச (சிவ) வழிபாட்டில் தேவநம்பிய தீசனின் ஆட்சியில் பௌத்தம் புகுந்தபோது மட்டக்களப்புத் தேசத்தில் தமிழர் பிரதேசங்கள் பெருமளவு அம்மாற்றத்திற்கு உட்பட்டதாக வரலாறில்லை. எனினும், கி.பி 2ஆம் நூற்றாண்டின் பின்னர் பெறப்படும் தகவல்களில் பண்டைய மட்டக்களப்புத் தேசத்தின் சில பகுதிகளில் பௌத்தம் தமிழரது வழிபாட்டியலிலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அறியமுடிகின்றது. புத்தர் பெருமான் மச்சபுராணம் மற்றும் பாகவத புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் இந்துமதக் கடவுளரில் ஒருவரான மகா விஷ்னுவின் மறு அவதாரம் என்ற நம்பிக்கையானது இந்து மதத்தவர் மத்தியில் நிலவியதை நாம் மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் இத்தேசத்தே பெரும்பான்மைச் சமூகமாக அன்று வாழ்ந்த தமிழர்கள் கி. பி 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரை பௌத்தத்திற்கு மதிப்பளித்தே வந்துள்ளனர். மாகோனின் ஆட்சிக் காலத்தினை விடுத்து அதற்கு முன்னதாகவும் பிற்பட்டும் பௌத்த மதம் இப்பிரதேசத்தில் வேர்விட ஆட்சி முறையில் சாதகமான சூழலே இருந்துள்ளது. மகியங்கணை, மகா ஓயா, உதயகிரி போன்ற பண்டைய பௌத்த வழிபாட்டுத் தலங்கள் இக்காலத்தே தோற்றம் பெற்றமை தெரிகின்றது. வழிபாட்டுத் தன்மையில் இந்துவும் மகாயான பௌத்தமும் பெருமளவு ஒத்த தன்மையைக் கொண்டிருந்தமையால் மட்டக்களப்புப் பிரதேசத்தே வாழ்ந்த சிங்கள மக்கள் இந்துக் கோவில்களிலும் வழிபாடு செய்பவர்களாயினர்.


அத்துடன் சுதந்திரத்திற்கு முற்பட்டு வாழ்ந்தவர்கள் தமிழில் சரளமாகப் பேசும் ஆற்றலுடையோராய் இருந்தனர். மேலும் இப்பகுதியில் வாழ்ந்த வேடர் சமூகத்தினரும் தமிழ் மக்களுடன் இணைப்பு பெற்றதைப் போன்றே சிங்கள மக்களும் இணைப்புப் பெற்றனர். இம்மக்கள் கதிர்காமம், கட்டகாமம், முப்பனை (மொனராகலை) அத்தி மலை, பாணமை, பொத்துவில், அக்கரைப்பற்று, தமணை, அம்பாரை, உகனை, கோம்பானை, பக்கி எல்லை (பழையது), மகாஓயா, மன்னன்பிட்டி, முத்துக்கல், தம்பன்கடவை , திரிகோணமடு என விரிவுபடலாயினர். இதன் தாக்கத்தால் அப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் காலப்போக்கில் படிப்படியாக சிங்கள மக்களால் உள்வாங்கப்படலாயினர். அக்காலத்தே தமிழர்களுடன் இவர்கள் கொண்டிருந்த உறவுமுறைகளின் தழும்பு இப்பகுதிகளில் இன்னும் மாறாமலேயுள்ளது. எதிர்மன்னசிங்க வன்னியன், உகன வன்னியன், முத்துக்கல் வண்டையா உடையார், கோம்பானை சபாரத்ன உடையார், உகனை ஜெயசுந்தர உடையார் போன்றவர்களின் வாரிசுகள் இன்னும் இதனை அடையாளப்படுத்துபவர்களாகவே உள்ளனர். இங்கு முக்கியம் பெறுகின்ற தமிழ் சமூகக் குடிவழிகளில் சிங்களக்குடி என ஒரு மரபினர் இன்றும் நிலை பெறவே செய்கின்றனர்.



ஆங்கிலேயரின் ஆட்சியின் தொடக்க காலமான 1824ல் மேற்கொள்ளப்பட்டு 1827ல் வெளியிடப்பட்ட சாதிக் கணக்கெடுப்பில் இப்பிரதேசத்தே வாழ்ந்த 32690 மொத்தச் சனத்தொகையில் இம் மக்களின் எண்ணிக்கை 2026 ஆக இருந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்கு சற்று முற்பட்ட கணக்கெடுப்பில் 202987 ஆன ம்டக்களப்பு பிரதேச சனத் தொகையில் இவர்கள் 11,891 ஆக இருந்தார்கள். அக்காலத்தே வேகம் - விந்தனை மற்றும் பாணமை பகுதிகளில் பரவலாக வாழ்ந்த இவர்கள் சுமார் 6 வீதம் எனக் கணிக்கப்பட்டனர்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p8b.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License