இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

திருக்குறளில் இடைச்சொற்களின் நிலைப்பாடு

முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி(ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.


தொடர்ச்சி - பகுதி 2


விகுதி எதுவும் ஏற்காது வாக்கியத்தின் புறத்துறுப்பாய் வருவது அம்ம, அன்னோ, அந்தோ, நன்றே, அன்றே, ஏ - ஓ - ஔ போன்றவை என மொழியியளார் இடைச்சொல்லைப் பாகுபாடு செய்துள்ளனர்.

‘ஏ’ என்னும் இடைச்சொல் தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை எனும் ஐந்து பொருளில் அமைகின்றது.

“தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந் தேகாரம்மே’ இடையியல்” (9)

எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது.
“தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே” (129)

“அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே” (401)

‘அற்று’ எ- வினைக்குப்பின் வருதல்.

“அறியவற்றுள் எல்லாம் அரிதே” (443)

“துளியின்மை ஞாலத்திற்குஎற்று, அற்றே” (557)

“ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே” (673)

நன்றுநன்று ஏ வினைக்குப் பின் ‘ஏ’ வருதல்.

“நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே” (715) (நன்று + ஏ ( வினை+இ+சொ)

“ஆற்றின் நிலைதளர்ந்து அற்றே”(716)

“இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்காற் பவர்” (779)

“சீரினும் சீரல்ல செய்யாரே” (962)
“இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே” (1064)

“பாலொடு தேன்கலந்து அற்றே” (1121)

“பாடு பெறுதியோ நெஞ்சே” (1237)

நெஞ்சு + ஏ - பெயர்க்குப் பின் ஏ வருதல்

“இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே ” (1294 - நெஞ்சு+ஏ)

“நீரும் நிழல்அது இனிதே” (1309 - இனிது+ஏ)

1241, 1243, 1244, 1247 ஆகிய குறள்களில் ‘ஏ‘ என்னும் இடைச்சொல் ஈற்றசையாகவும் பொருள் சுவைக்காகவும் வந்துள்ளது.

மன், கொல், தில் போன்றவை இன்னொரு விகுதி ஏற்று வருவது ஆகும்.



கொல்

‘கொல்’ என்னும் இடைச்சொல் ஐயம் என்னும் பொருளைத் தருகிறது.‘கொல்லோ ஐயம்’ இடையியல்,20 குற்றி கொல்லோ, மகன் கொல்லோ, நாய் கொல்லோ, என ஐயப் பொருண்மையில் வருவது‘கொல்‘ என்னும் இடைச்சொல்லாகும்.

“கற்றதனால் ஆய பயன்என்கொல்?” (2)

வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் இது அசைநிலையாகும்.

“என் நோற்றான் கொல்எனும் சொல்?” (70)

“என்னைகொல் ஏதிலார் மாட்டு? ”(188)

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்” (228)

“தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான், என்கொலோ?” (318)

“கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ” (1070)

“அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு” (1081)

“தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்” (1103)

“துறைவன் துறந்தமை தூற்றாகொல்” (1157)

“துப்பின் எவனாவர் ? மன்கொல் ?” (1165)

“கண்தாம் கலுழ்வது எவன்கொலோ?” (1171)

“நினைப்பவர் போன்று நினையார்கொல்?” (1203)

“மறப்பின் எவனாவன் மன்கொல்? ” (1207)

“காலைக்குச் செய்தநன்று என்கொல் ? ” (1225)

“புலப்பேன்கொல் ? புல்லுவேன் கொல்லோ?’
கலப்பேன்கொல் ” (1267)

பெரும்பாலும் ‘கொல்’ என்னும் இடைச்சொல் பொருட்பாலில் தலைவன் தலைவிக்கு இடையே ஐயப் பொருளில் வந்துள்ளமையைக் காணமுடிகின்றது.




உரத்த ஓசையைக் குறிக்கும் எழுத்தொலி அல்லது ஒலிக்குறிப்பு ‘ஓ’ என்பதாகும்.

‘ஓ’ என்னும் இடைச்சொல் பிரிநிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலைக்கிளவி, சிறப்பு என்னும் பொருளைப் பெற்று வரும்.

“பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன்று என்ப ஓகாரம்மே” (இடையியல்.8)

எனத் தொல்காப்பியம் ‘ஒ’ என்னும் இடைச்சொல்லுக்குரிய பொருளைச் சுட்டுகிறது.

“முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ?” (707)

இதிலுள்ள உண்டோ என்பதிலுள்ள ‘ஒ’ காரம் வினாவிழி நின்ற இடைச்சொல்லாகும்.

“கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ ?” (1070)

இதுவும் வினாப்பொருளைத் தருவதாகும்.

“கூற்றமோ? கண்ணோ’? பிணையோ? மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து” (1085 - தெரிநிலை)

தலைவியை தலைவன் நோக்கும்போது தலைவனின் கண்களுக்குத் தலைவி கூற்றுவனாக, சாதாரண கண்ணாக, மருண்ட பார்வை கொண்ட பெண்மானாகத் தோன்றுகிறாள். ஆகையால் தலைவன் தலைவியைக் காமநோயை விளைவிக்கும் கூற்றுவனோ எனத் தெரிதல் பொருட்டாய் ஒகாரம் வந்துள்ளமையால் இது தெரிநிலை ஓகாரமாகும்.

“ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ?” (1088)

இரக்கப்பொருளில் வந்துள்ளது.

“எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ ” (1208)

‘அன்றோ ’ இதிலுள்ள ஓகாரம் பிரிநிலைப் பொருளில் வந்துள்ளது.

“பாடு பெறுதியோ? நெஞ்சே! ” (1237)

இக்குறள் வினா வழி நின்ற இடைச்சொல்லைப் பெற்றுள்ளது.



“செற்றார் எனக்கை விடல்உண்டோ?” (1245)

“காமம் விடுஒன்றோ? நாண்விடு நன்னெஞ்சே
“யானோ? பொறேன்இவ் இரண்டு” (1247 - எதிர்மறை)

“காமம் எனஒன்றோ?” (1252)

“மறைப்பேன்மன்! காமத்தை யானோ?” (1253 - எதிர்மறை)

“நிறையுடையேன் என்பேன்மன் யானோ?” (1254 - எதிர்மறை)

1149, 1257, 1258, 1260,1293 ஆகிய குறள்களில் ‘ஒ’ என்னும் இடைச்சொல் வினாப் பொருளையே மிகுதியாகத் தருவதாய் அமைந்துள்ளது. மேலும் ‘ஒ’ இரக்கப்பொருளையும் தருவதாகவும் அமைந்துள்ளது.

அரோ

‘அரோ’ எனும் இடைச்சொல் அசைநிலையாய் வருவதாகும்.

‘‘யா கா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி” (இடையியல்,31)

யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது எனும் ஏழு இடைச்சொல்லும் அசைநிலையாய் வரும் எனத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.

‘‘அரிதுஅரோ தேற்றம்!அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத்துஉண்மை யான்” (1153)

‘‘நோதக இருங்குயில் ஆலுமரோ” (கலித்தொகை, 33.)

‘‘கொடி உவணத்தவரோ”

என ‘அரோ’ என்னும் இடைச்சொல் அசைநிலையாய் வந்துள்ளமையை அறியமுடிகிறது.

மேலும் இந்த அசைச்சொல் உணர்ச்சியை வெளிப்படுத்துபவையாகவும் அமைகிறது.



மன்

‘மன்’ என்னும் இடைச்சொல் கழிவு, ஆக்கம், ஒழியிசை என மூன்று பொருளைத் தருவதாகும் என்பதை

‘‘கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன்று என்ப மன்னைச் சொல்லே” (இடையியல், 4)

எனத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.

‘‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது”(68)

‘‘தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு” (190)

‘‘மன்னுயிர் ஒம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப” (244)

‘‘தன்னுயிர் எல்லாம் தொழும்” (268)

‘‘நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணியர் மேலா யவர்” (1016)

‘மன்’ எனும் இடைச்சொல் பெரும்பாலும் திருக்குறளில் ஒழியிசைப் பொருளைத் தருவதாய் அமைகிறது. பெயரையும் வினையையும் சார்ந்து வருவது மட்டுமல்லாமல் பெயரையும் வினையையும் வேறுபடுத்துவனவாகவும் இடைச்சொற்கள் அமைகின்றன.

ஏ, அரோ, மன்னோ, கொல் போன்றவை பொருளின்றி அசையாக வருகின்றன.

முடிவுரை

தனித்து வராத இடைச்சொல் பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் இயைபு கொண்டு தான் ஏற்ற இடத்திற்கேற்றவாறு பொருளை உணர்த்துகிறது. திருக்குறளில் ஆங்கு, ஆம், ஆல், உம், ஐ,ஓடு, ஓ, ஓரும், கொல், பிற , மற்று, மன், போல, போலும், ஏ, ஓ, காண், குறை போன்ற இடைச்சொற்கள் மிகுதியாகப் பயின்று வந்து இலக்கியச் சுவைக்கு மேலும் மெருகூட்டுவதாய் அமைகின்றது. இவ்விடைச்சொற்கள் திருக்குறளில் பொருள், மற்றும் நயம் கருதி உரையசையாக, உவமஉருபாக, வினைமாற்றாக, ஒழியிசையாக, முற்றாக இழிவு, சிறப்பு, உயர்வு சிறப்பு, அசைநிலை, ஐயம் ஆகிய பொருள் தரும் வகையில் இடைச்சொற்கள் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். இலக்கிய நயத்தோடு இலக்கண நயத்தையும் இணைத்துத் தருவதாக திருக்குறள் அமைகின்றது. இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல்லே’எனும் தொல்காப்பியரின் கருத்து உணர்ச்சிப்பொருள் வேறுபாட்டையும், சொல்லாக்க உருபுகளாக அமைந்து சொற்களின் இலக்கணப்பொருளை வேறுபடுத்தலையும் உணர்த்துகிறது.

(நிறைவடைந்தது)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p155a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License