இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


39. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும்

ம. கார்மேகம்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை; சிலப்பதிகாரத்தோடு தொடர்ச்சியாக இயங்குகின்ற காப்பியம் இது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். இந்தக் காப்பியம் பின்பற்றியுள்ள காப்பிய மரபும் சமய மரபும் குறித்துக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தண்டியலங்காரம் பெருங்காப்பிய நிலை பற்றிப் பேசும் போது,

"வாழ்த்து, வணக்கம, வருபொருள் இவற்றின் ஒன்று
ஏற்புடைத் தாகிமுன் வரவு இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தல் என்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவு இகல் வென்றி
சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” (தண்டி நூற்பா: 8)

என்று கூறுகிறது. அத்துடன்,

“கூறிய உறுப்பில் சில குறைந்து இயலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்” (தண்டி- நூல்-9)

“அறம் முதல் நான்கினும் குறைபா டுடையது
காப்பியம் என்று கருதப் படுமே” (தண்டி-நூல்-10)

என்றும் தண்டியலங்காரம் இலக்கணம் வகுக்கிறது.

முதலில் கூறிய நூற்பாவில் உள்ள அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கியதாக மணிமேகலையைக் கருதுவதற்கு வாய்ப்பில்லை. சில குறைந்து காணப்படுவதாகக் கொள்ளலாம். அந்த வகையில் மணிமேகலையின் காப்பிய மரபைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.



சிலப்பதிகாரத்தைப் போல மூன்று பெருங் காண்டங்களை மணிமேகலை ஆசிரியர் அமைத்துக் கொள்ளவில்லை. முப்பது காதைகள் அமைத்துள்ளார். தண்டியலங்காரம் கூறியது போல் சருக்கம்; இலம்பகம் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் காதை என்ற அமைப்பு உள்ளது. சருக்கம், இலம்பகம் என்பவை பிற்காலத் தண்டியில் அமைந்தவை. எனவே தண்டியலங்காரத்தைப் பின்பற்றி மணிமேகலை எழுதப் பெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எனினும் காப்பிய மரபு மணிமேகலையில் அமைந்துள்ளதைக் காண வேண்டிய கட்டாயமும் உள்ளது.

வாழ்த்துதல்

விழாவறை காதையில் மன்னனை வாழ்த்துகிற பகுதி அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து, இயற்கை வாழ்த்து என்று அமைத்துக் கொள்ளாமல் நேரடியாகக் காதைக்குள் நுழையும் போது மன்னனை வாழ்த்துகிறார் சீத்தலைச் சாத்தனார். ஊரை வாழ்த்தி மன்னனை வாழ்த்துகிறார்.

“முரசு கடிப்பிகூஉம் முதுகுடிப் பிறந்தோர்
திரு விழை மூதூர் வாழ் கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக (விழாவறை 31-34)

என்று வாழ்த்துகிறார்.

ஆயிரங்கண்ணோனாகிய இந்திரனுக்கு நடத்தப் பெறுகின்ற விழா என்பதைக் கூறி அவனுக்கு நடத்தப் பெறும் விழா முறையாக இல்லையெனில் பூதங்கள் துன்பம் செய்யும் என்பதால் எல்லாத் தெய்வங்களையும் வணங்கச் செய்கிறார்.

“நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துகத் தெய்வம் ஈறாக
வேறு வேறு சிறப்பின்”(விழாவறை 54-56)

என்பது மணிமேகலைத் தொடர்



நற்பொருள்

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் பயக்கக் கூடியதாகக் காப்பியம் இருக்க வேண்டும். அந்த வகையில் மணிமேகலை அறத்தைப் பற்றி மிகுதியும் பேசுகிறது. அறம் செய்வதற்கு வேண்டிய பொருள் பற்றியும் பொருளைப் பெற்ற வழி பற்றியும் அதனால் ஏற்படும் இன்பம், வீடு பேறு பற்றியும் காப்பிய மரபிற்கேற்றவாறு சொல்லப்படுகின்றன. ஆனால் சாதாரண உலகியல் இன்ப வாழ்க்கை என்று இல்லாமல் அறத்தின் வழிப்பட்டதாகவே இக்காப்பியம் அமைந்துள்ளது.

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே”

என்ற நிலையில் மணிமேகலை அமுதசுரபி ஏந்தியது அறத்தின்பாற்பட்ட வாழ்க்கைப் பயனைக் கூறுவது ஆகும்.

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென” (மணிபல்லவம் 228-231)

என்று மணிமேகலா தெய்வம் கூறுவதாக அறச்செய்தி அமைகிறது.

தன்னிகரில்லாத் தலைவி

காப்பியத்திற்குத் தலைவன் வேண்டும்; அதுவும் தன்னிகரில்லாத் தலைவன் வேண்டும்; சீத்தலைச் சாத்தனார் தன்னிகரில்லாத் தலைவியைக் கொண்டு இக்காப்பியத்தைப் படைத்துள்ளார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன்னிகரில்லாத் தலைவியாகப் படைக்கப் பெற்றது போல் மணிமேகலைக் காப்பியத்திலும் மணிமேகலை தன்னிகரில்லாத் தலைவியாகப் படைக்கப் பெறுகிறாள்.

“மாபெரும் பத்தினி; மகள்மணி மேகலை தீத்தொழில் படாஅள்”

என்று கூறும் ஒரு தொடரிலேயே கண்ணகியின் மகளாகிய மணிமேகலை தீத்தொழில் எனக் கருதப் பெற்ற கணிகையர் வாழ்க்கையை விட்டுத் தவம் மேற்கொண்ட செய்தி கூறப் பெறுகிறது.

மாதவியின் மகள் மணிமேகலை என்றாலும் கண்ணகியின் மகள் என்று காட்டுவதிலே புலவருக்கு அவ்வளவு ஆர்வம் உள்ளது எனக் கொள்ளலாம். மலர் பறிக்கச் செல்லக் கூறிய மாதவியிடத்தில் சுதமதி கூற்றில் மணிமேகலையின் அழகை வருணிக்கிறார் சாத்தனார்.

“ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்” (மலர்வனம் 24-25)

என்று கூறுவதோடு நின்று விடாமல்

“மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்
நல்லின அன்னம் நாணாது ஆங்குள
வல்லுந கொல்லோ மடந்தை நன்னடை
மாமயில் ஆங்குள வந்து முன் நிற்பன
சாயல்கற் பனசொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக்கு
எஞ்சல கொல்லோ இசையுந கொல்லோ”

என்று மணிமேகலையின் நடைக்கு அன்னம் நாணுவதாகவும் மயில் சாயல் கற்கும் எனவும் மணிமேகலை முன் கிளியின் பேச்சு இனிமையாகுமா என்றெல்லாம் ஒரு தலைவியைப் பாராட்டுவதால் தன்னிகரில்லாத் தலைவியைப் படைத்துள்ளார் சாத்தனார் எனலாம். தலைவியின் அழகைக் காப்பியங்கள் பல கணக்கின்றி வருணித்தாலும் சீத்தலைச் சாத்தனார் ஒரு சில தொடர்களில் மட்டும் தான் மணிமேகலையின் அழகைப் பேசுகிறார். பிற இடங்களில் இந்தத் தலைவி செயற்கரிய செயல்களைச் செய்பவளாகக் காட்டுகிற பகுதியைக் காணலாம்.



உதயகுமரன் என்ற இளவரசனிடமிருந்து மணிமேகலையைக் குலதெய்வமாகிய மணிமேகலை காப்பது, புத்த பீடிகை கண்டு பழம் பிறப்பு உணர்வது, அமுத சுரபியைப் பெறுவது, அதனால் அறம் செய்வது, அறம் செய்து உயிர்களின் பசித் துன்பத்தைப் போக்குவது அனைத்துமே மணிமேகலை என்ற தலைவியின் சிறப்பைத் தாங்கிப் பிடிப்பவையாகச் சாத்தனார் படைக்கிறார். ஒரு காப்பியம் என்பது நன்னெறியைப் புகட்டுவதுடன் அந்நெறியைக் கடைப்பிடித்து எவ்வாறு காப்பிய மாந்தர்கள் உயர்ந்தனர் என்பதையும் குறிப்பாகக் காட்டிச் செல்லவேண்டும் அந்த நிலையில் காப்பியத் தலைவி மணிமேகலை காப்பியம் முழுவதும் விரவிக் காணப் பெறுகிறாள்.

பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் என்பவையெல்லாம் தலைவன் தலைவியர்க்கு உரியவை; இல்லற வாழ்க்கை இன்பத்தை நுகர்வோர்க்குப் பொருந்தும் செய்திகளைச் சாத்தனார் கூறாமல் அறவாழ்க்கைச் செய்திகளைக் கூறுவதால் மலை,கடல், நாடு, வளநகர், பருவம் ஆகியன பற்றிப் புலவர் மிகுதியும் கருதவில்லை என்றே கொள்ளலாம். இருப்பினும் நாட்டு மன்னவனைப் பற்றிப் பேசுகிறார்.

”மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல்இன் றெனின் இன்றால்” (சிறைசெய்காதை 208,209)

கடல் பற்றியதாக ஓரிடத்தில் சங்கு உழுது, முத்து உழுது, மோது நீர் சூழ்ந்த நீலமாக் கடல் என்ற குறிப்பையும் காட்டுகிறார். ஆனாலும் கூடப் பொழில் வருணனையும் இடம் பெறச் செய்கிறார்.

பல்வேறு வகை மலர்வனங்களைப் பற்றிப் பேசும் புலவர்,

“இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்”

என்று பொழில் பற்றி வருணிப்பதைக் காண முடிகிறது.

இருசுடர்த் தோற்றம்

“உலகு துயில் எழுப்பினன் மலர்கதி ரோன்” (கந்திற்பாவை -190)

“காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப” (மணிபல்லவம்-18)

என்று கதிரவன் பற்றிப் பேசுபவர்,

புத்த ஞாயிறு தோன்றும் காலைத்
திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்க”

என்று திங்களையும் ஞாயிற்றையும் ஒரே வழிச் சுட்டிச் சொல்கிறார்.


ஆக எடுத்துக் கொண்ட அறம் பற்றிய செய்தியை விளக்குவதற்குத் தன்னிகரில்லாத் தலைவியைப் படைத்தவர் காப்பியத்திற்கு எநn;தந்தப் பகுதிகள் தேவையோ அவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறார் எனலாம். கிளைக்கதைகள் பலவற்றை இடம்பெறச் செய்கின்ற மரபு வட நூல்களைப் பின்பற்றியதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இளமையும் நில்லாது, யாக்கையும் நில்லாது மிக்க அறமே விமுத்துணையாகும் என்ற கொள்கையை அவர் காப்பிய நோக்கமாக, மரபாக வகுத்துக் கொண்டார் எனலாம்.

சமய மரபு

எல்லாச் சமயங்களிலும் புத்த சமயம் முதன்மையானது என்பதைச் சுட்டுகின்ற காப்பியம் மணிமேகலை எனலாம். அதே சமயம் குலதெய்வம் காக்கும் என்ற கோட்பாடும் உணர்த்தப்படுகிறது. குலதெய்வ வழிபாடும் வற்புறுத்தப்படுகிறது.

கடவுளைப் பிறவிப் பிணி மருத்துவன் என்று மணிமேகலை கூறுகிறது. பிறவிப் பிணி நீங்க அறம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. வினைப்பயன் தான் பிறவிக்குக் காரணம் என்று பேசுகிறது.

“வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” (பளிக்கறை 113)

தெய்வமோ பேயோ யாரையும் வருத்துவதில்லை உயிரை எடுத்துக்கொள்வதில்லை. அனைத்தும் வினையின் பயனே என்ற கோட்பாட்டை மணிமேகலை உணர்த்துகிறது.

“அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது” (சக்கரவாள-150-152)

என்று மணிமேகலை பேசுகிறது.

சக்கரவாளக் கோட்டம், பெருங்கோட்டம், நெடுநிலைக் கோட்டம் என்று பல கோயில்கள் இருந்திருக்கின்றன என்ற குறிப்பையும் காண முடிகிறது. நிலையாமை பற்றிய சிந்தனையும் சுட்டப் பெறுகிறது. ஆசையை அறுப்பது ஒன்றுதான் பிறவாமைக்கு வழி, ஆசையை அறுப்பதற்கு வழி அறம் செய்வதுதான் என்பது பேசப் பெறுகிறது.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக என்று அருளி” (ஊரலர் உரைத்த 64-67)

என்று உரவோன் அருளியதாக மாதவி கூற்றில் வைத்துப் பேசுகிறார் புலவர்.

மணிமேகலை வஞ்சி மாநகர் புக்க போது அந்தந்தச் சமயத்தவர் கூறும் பொருள்களைக் கேட்டு அதன் பின்னர், பெரியோன் பிடக நெறி கடவாய் என்று அறவண அடிகள் கூறியதும் மணிமேகலை வெவ்வேறு சமயத்தவரின் கொள்கைகளைக் கேட்டு அறிகிறாள் என்பதைப் பார்க்கிறோம்.

அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகியோரிடத்தில் அவரவர் சமயங்கள் பற்றிக் கேட்டறிகிறாள் மணிமேகலை.

“வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும்
நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு வென்ன ஐவகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன” (தவத்திறம் 41-45)

மணிமேகலை கேட்டதும் அறவண அடிகள் தம் சமய மரபுகளைக் கூறுகிறார். பிறர் மதம் மறுத்து, தம் மதம் தருமமதம் என்று விளக்குகிறார்.


உள்ளத்தால் விளையும் வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி ஆகியனவும், சொல்லால் விளையும், பொய்,குறளை, கடுஞ்சொல், பயனில சொல் ஆகியனவும், மெய்யால் விளையும் கொலை, களவு, காமம் ஆகியனவும் விலக்கி நிற்பதே தருமமாகும் எனச் சொல்லப் பெறுகிறது. நல்வினைஎன்பது மேற்சொல்லிய பத்து நிலையிலிருந்தும் நீங்கி நல்ல கொள்கையில் தானம் தலைநின்று வாழ்பவரே தேவராக, மக்களாக, பிரம்மராக ஆகி மேவிய மகிழ்ச்சியினால் வினைப்பயனை எய்துவர் என்று மணிமேகலை வற்புறுத்துகிறது. எனவே நல்வினை வயப்படுதலே தருமம் என்று கூறுவது தான் மணிமேகலை உணர்த்தும் சமயம் எனலாம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p39.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License