இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


26. ‘சூடிய பூ சூடற்க’ சித்தரிக்கும் பன்மிய மானுட வாழ்வு

சு. மகாராஜன்

முன்னுரை

தமிழ்ப் படைப்புலகில் ஒவ்வொரு படைப்பாளியும் தான் ரசித்து வாழ்ந்த சமூக மனிதர்களின் வாழ்வைச் சிறுகதை, புதினம், கவிதை, ஊடகம் எனப் பல வடிவங்களில் நாள்தோறும் படைத்து ஒவ்வொரு மனிதனின் இருத்தலையும் பதிவுகளாக்கி வருகின்றனர். அந்த வகையில் இலக்கியப் படைப்பென்பது எதிர்காலத் தலைமுறையின் வாழ்வியல் முன் நகர்விற்கு, பயனுடையதாக அமையும். இங்கு நாஞ்சில் நாடன் எழுதிய ‘சாகித்திய அகாடமி’ விருதுபெற்ற ‘சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதைத் தொகுப்பு வழி பிரதிபலிக்கும் பன்மிய மானுட வாழ்வை இக்கட்டுரைச் சுட்டிக்காட்டுகிறது.

நாஞ்சில் நாடன்

தமிழ் எழுத்துலகில் தன்னை தனித்ததொரு நிலைப்பாட்டில் அடையாளப் படுத்திக் கொண்டவர்களாகப் பலர் இருக்கின்றனர். அவர்களில் சிறந்த சமூகநோக்கம் கொண்டவராக விளங்குபவர்களில் அதிமுக்கியமானவராகத் திகழும் சி. சுப்பிரமணியம் (எ) நாஞ்சில் நாடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் எனும் ஊர்க்காரர். இவர் படைப்புத் தளத்தில் தனது ஆளமையை வெளிப்படுத்தும் விதமாகச் சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை என எழுதிப் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘சூடிய பூ சூடற்க’ (2007) எனும் சிறுகதைத் தொகுப்பினுடாக வெளிப்படும் ‘பன்மிய மானுடவாழ்வு’பற்றி இக்கட்டுரைச் சொல்ல முற்படுகிறது.



வரிசைக் கிரம்ம வாழ்மனிதர்

கிராமம் என்பது ஓர் நாட்டின் அடையாளம். இங்கே பண்பாடு, நாகரிகம், அடிப்படைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம் இயற்கையோடு அமைந்த மனநிறைவான வாழ்வு என அனைத்துக்கும் ஆதாரத்தளமாகிய நிலையில், நவீனத்துவத்தின் விளைவால் கிராமம் மாறுதலுக்குட்படும் போது மனிதர்கள் நகரமயமாதல் சூழலுக்கு இடம்பெயரும் அவலம் ஏற்படுகிறது. இந்நிலையினை நாஞ்சில் நாடனின் ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனும் சிறுகதையில் நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது பற்றிக் கூறும்பொழுது, “லைன் வீடு எனில் முதலில் பத்துக்குப் பத்தில் ஒருமுறி. பத்துக்குப் பத்து எனும் போது இடைச் சுவர்களின் கனம் முக்காலடிவீதம், நீளவாக்கிலும் அகலவாக்கிலும் கழித்துக் கொள்ளவேண்டும். அதுவே வரவேற்பறை, டைனிங், படுக்கை, பூஜை, விருந்தினர் ஒய்வு அறைகள். எப்பெயரிலும் அழைக்கலாம். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஏகன் தானே” (ப.10) என்ற வரிகளில் விளக்கிக் காட்டுகிறார். மேலும் லைன் வீடுகள் கிடைப்பதற்கான சிரமங்களைக் கூறும்பொழுது, “கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் எனும் எண்ணத்துக்கு உள்ளே இருந்தால் மட்டுமே வாடகைக்குக் கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வீடு கொடுப்பதில்லை என்பதில் அரசாங்கத்தை விடக் கெடுபிடியாக இருந்தனர் வீட்டுக்காரர்கள், வாடகைக்கு வரும் போது குடிவருவோரின் மொத்த எண்ணிக்கை நாலுக்குள் தான் என்றாலும், உத்தேசமாய் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இறந்து போகலாம் என்று எண்ணத்தக்க வயதான பெற்றோர் இருந்தாலும் லைன் வீடுகள் வாடகைக்குத் தரப்படமாட்டா” (பக்.10-11) என்பதான வரிகளில் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதையின் வரியில் மேலும மும்பை போன்ற பெருநகரத்தில் பிழைப்புக்காகச் சென்று லைன் வீட்டில் வாசிப்பவர் நிலையை, “மும்பை தாராவியில், கோவண்டியில், சுன்னாப்பட்டியில், மான் கூர்டில், கோலிவாடாவில் இந்த லைன் வீட்டை மூன்றாகப் பிரித்து வீட்டுக்கு எட்டுப் பேர் ஆணும் பெண்ணுமாய், குழந்தையும், முதியவருமாய், தாயும், பிள்ளையுமாய் பிழைத்து வாழ்வார்கள்” (ப.11) என்று நாஞ்சில் நாடன் தன் சிறுகதையில் எடுத்துரைக்கிறார்.

இரவுநேரக் காவற்பணியாளர்

‘கூர்க்கா’ எனும் சொல் நேபாளத்தில் உள்ள ஒருவகை மக்களைக் குறிக்கும் சொல். இமயமலையின் ஒரு பகுதியான ‘கூர்க்’ பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இப்பெயரடைவு உருவானதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இந்திய, பிரிட்டிஷ் படைப் பணியில் இருந்தவர்கள். தமிழகத்தின் சில இடங்களில் இரவுநேரக் காவற்பணியிலும் ஈடுபட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்தியவர்கள். இவர்களின் வாழ்வை நாஞ்சில் நாடன் ‘தன்ராம்சிங்’ என்னும் சிறுகதையில், “கூர்க்காக்கள் என்போர் வாட்ச்மேன் அல்லர். நாள் பூரா, வாரம் ஏழு நாள் டூட்டி, தங்குவதற்கு தொழிற்சாலை வளாகத்தில் பின்புற மூலையில் சிறியதோர் கூண்டு உண்டு. அவர்கள் அவ்வளவாகச் சிறுவிடுப்புகள் எடுப்பதில்லை. நோய்வாய்ப்பட்டிருந்தாலும், எழுந்து உட்கார்ந்திருந்தால் போதுமானது. நிர்வாகம் காருண்ய அடிப்படையில் கூர்க்காவுக்கு மாத்திரம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எல்லா விடுப்புகளையும் சேர்த்து மொத்தமாக வழங்கும். ஊருக்குப் போகும் போது தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துவிட்டுப் போவான். போகவர பாதிலீவு போய்விடும். ஈராண்டுக்கு ஒருமுறை ஒருமாதம் தாம்பத்யம், தன்ராம்சிங் விடுப்பில் போனதையே நாம் மறந்திருக்கும் போது, ஒருநாள் காலையில் சிரித்தப்படி சல்யூட் அடிப்பான்” (ப.85) என எடுத்துக்காட்டுகிறார். அதாவது, மேற்சுட்டியவற்றில் வாழ்வியல் இயக்கத்தை தங்குமிடம், விடுப்பு, தாம்பத்ய வாழ்வு எனப் பேசும் நாஞ்சில் நாடன் கூர்க்காக்களின் குடும்பத்தில் யாரும் இறந்தால் செய்யும் சடங்குகளையும் தன் சிறுகதையில் பேசுகிறார். அதாவது,“பதினைந்து இருபது நாட்களுக்கு ஒன்று எனவரும் கடிதங்களில் சில மிக வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். தந்தியும் தொலைபேசியும் உதவாத மலைப்பிரதேசங்கள் தாய், தகப்பன் இறந்து போனாலும் பெண்டுபிள்ளைகள் இறந்து போனாலும் தபால் உறைதான். பத்துப் பதினைந்து நாட்கள் சென்று கிடைக்கும் தபால் பார்த்து நேரில் செல்ல வேண்டுமானால் மேலும் பத்துப் பதினைந்து நாட்கள் என்றாலும் உயிரின் பிரிவல்லவா? மாலையில் கூடும் கூட்டாளிகள் மூலம் செய்தி போகும் ஒவ்வொரு உறவுக்காரக் கூர்க்காவுக்கும் ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு சௌபாத்தி கடற்கரையில் கூடுவார்கள். மரநிழல் பார்த்து, வட்டமாய் உட்கார்ந்து, கண்கள் கலங்க நினைவுகளைக் கூறுவைத்து, சடங்குகள் செய்து, தீவளர்த்து, அதில் தகவல் வந்த கடிதத்தை உறைவுடன் சேர்த்து எரித்து, பின்பு நெருப்பை ஆற்றி, சாம்பலைக் கொண்டுபோய் அரபிக் கடலில் கரைத்து, மொட்டை அடித்து, சமுத்திரத்தில் குளித்து, அவரவர் நினைவு சுமந்து பிரிந்து போவார்கள்” (பக்.87-88) என்று குடும்ப உறுப்பினர் இறப்பிற்குக் கூட கலந்துகொள்ள இயலாத நடைப்பிணங்களாக இருக்கும் நேபாளக் கூர்க்காக்களின் சடங்கியல் சார்ந்த வாழ்வையும் சிறுகதை வரிகளில் நாஞ்சில் நாடன் எடுத்துரைத்துள்ளார்.



இறைசேவைவாழ் மனிதர்

‘நம்பியார்’ என்பவர் இறைவழிப்பாட்டு சேவைகள் செய்யும் பட்டர் ஆவார். இவர்கள் ஆதிசைவர்களின் மருவு என்றும் பார்ப்பனர்களின் உட்பிரிவு என்றும் கூறுவர். சாத்தாக்கள் என்று அழைக்கப்படும் வழிபாட்டுத் தீவிரம் இழந்து போன கோவிலுக்கு இறைசேவை செய்து வருபவர். இவர்கள் வாழ்வில் வறுமை சூழந்திருக்கும் அவலத்தை ‘பரிசில் வாழ்க்கை’ எனும் சிறுகதையில் “நம்பியார் போல பூசைக்கான கூலிநெல்லை, பொலியளவு மரக்காலுக்கு அளப்பார்களா கொத்து அளவு மரக்காலுக்கு அளப்பார்களா என்று தெரியாது. கடவுளுக்கு வஞ்சனை செய்வார்களா எனும் நம்பிக்கை உண்டு நம்பியாருக்கு. பொலியில் அளந்த நெல்லானால் காயப் போட்டு குத்தினால் கோட்டைக்கு பத்தரை மரக்கால் பச்சரிசி இருக்கும், குருணையும் சேர்த்து, சண்டு புடைத்த நெல்லானால், எட்டுமரக்கால் அரிசி. இதில் மூன்று கோயில் பூசைச் செலவுகள், சாப்பாடு, துணிமணி, பிள்ளைகளின் படிப்பு, வைத்தியம், நல்லதுகெட்டது, நாள்கிழமை - நாளும் கிழமையும் நலிந்தவர்க்கு ஏது என்றாலும் கைத்தாங்கலாக நடந்து கொண்டிருந்தது குடித்தனம்” (ப.63) என்ற வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் “பூசைநேரம் இடைஞ்சல் இல்லாமல், அவர் பூசை செய்யும் மூன்று கிராமங்களிலும் குழந்தை பிறந்தால், பெண்பிள்ளை சமைந்தால், எவரும் உயிர் நீத்தால் நடக்கும் சடங்குகளில் புண்ணிய நீர் தெளிக்கக் கூப்பிடுவார்கள். தர்ப்பை, ஓமக் குச்சிகளுடன் போகவேண்டும். நாலணா தட்சணையும் பக்காபச்சரிசி, தேங்காய், உருண்டை சர்க்கரை, கால்பக்கா பருப்பு, சீப்புவாழைப் பழம், தண்டு, நாலுகத்தரிக்காய், இரண்டு வாழைப் பழம், சின்னப் பூசணி, இளவன், வெள்ளரி, புடலை, சேனை என அரைக் குட்டிச் சாக்குதேறும். காரியங்கள் முடிந்து குட்டிச் சாக்கை தலையில் சுமந்து, சடங்கு நடந்த வீட்டை திரும்பிப் பார்க்காமல், எவரும் எதிர்ப்பு வராமல் படி இறங்கிப் போகவேண்டும். பின்னாலிருந்து வீட்டு மூதாட்டியின் குரல் கேட்கும் “திரும்பிப் பார்க்காம போவும் ஓய்” என்று இளக்காரத்துடன், பாதையில் கண்ணில் படுபவர் கேட்பார்கள் சற்றும் குறையாத கேலியுடன் “ஓய் நம்பியாரே! நல்லகோளுதான் இண்ணைக்கு! அம்புடையும் அவிச்சுத் திம்பேரா, விலைக்கு குடுப்பேரா ஓய்?’’ என்பார்கள்” என்கிற வரிகளில் வறுமையிலும், ஊராரின் கேலிக்குட்படும் நம்பியாரின் வாழ்வையும் நாஞ்சில் நாடன் தன் சிறுகதையில் சித்தரித்துள்ளார் எனலாம்.

அயலக மனிதர்

தன்னுடைய நிரந்தர இடம் விட்டு பிற இடத்துக்குச் செல்பவர் அயலக மனிதராகக் கருதப்படுவர். இத்தகைய அயலக மனிதகளாகப் பிற மாநிலம் செல்லும் போது பிரச்சினைகளும் சிக்கல்களும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை ‘வளைகள் எலிகளுக்கானவை’ எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதையில், “சவம் காட்டுமிராண்டிக் கூட்டம் எங்கேருந்துதான் வாறானுவளோ?” “போனவருசம் இதேபோல மருத போற வண்டியிலே பத்து அஞ்நூறுவேரு...?” “குளிக்கவும் மாட்டான், குண்டியும் களுவமாட்டான்”, “டிரஸ்ஸீக்கு பஸ்காரத்தைப் பாத்தியா? தார்ப்பாய்ச்சிக் கெட்டும், தொப்பியும் சட்டையும்...” (ப.24-25) என்பதான வரிகளில் எடுத்துரைத்து “எப்படி சம்மணம் போட்டு உக்காந்திருக்கான் பாரு, கெழட்டு கூதிமவன். அவுனுக்கு அப்பன் வீட்டு வண்டிமாரி!’’ “டிக்கட்டு கூட வாங்கமாட்டாணுவோ!” “வேற ஏதாம் பெட்டியிலேமாறி இரியும் வே...” “சொல்லுகம்லாவே” அடுத்த பெட்டிக்குப் போங்கோ...”(ப.26) என்கிற சொற்பிரயோகத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார் சிறுகதை ஆசிரியர். இங்கு கன்னியாகுமரி சுற்றுலா வந்து திரும்பும் பயணியை அயலகமனிதர் என்ற ஒரே காரணத்தால் அதிகாரத்துடன் மனிதநேயமற்ற முறையில் திட்டுவதும், காயப்படுத்துவதுமான போக்கு இருப்பதைத் தன்னுடைய சிறுகதையில் படம் பிடித்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன் எனலாம்.



முடிவுரை

எழுத்தாளர்கள் வெவ்வேறான மனிதர்களின் இருத்தலையும், குணயியல்புகளையும் பதிவுகளாக்கி வருகின்றனர். அந்த வகையில் நாஞ்சில் நாடன் ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதையில் லைன்வீடு வாழ் மனிதர், இரவுநேரக் காவற்பணியாளர், இறைசேவைவாழ் மனிதர் ஆகிய மூவரின் வறுமையான வாழ்வையும், அயலகமனிதர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் சிறுகதையில் வெளிப்படுத்துகிறார் எனலாம். கூர்க்காவின் வாழ்வியலை எடுத்துரைத்து அவர்களுக்கான வாழ்வியல் நெருக்கடிகளையும் நம்முன் விவரிக்கும் விதமாக நாஞ்சில் நாடனின் சிறுகதைத்திறன் அமைந்துள்ளது எனலாம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p26.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License