இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


44.டி. செல்வராஜ் சிறுகதைகளில் கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள்

சா. தங்கமாரியப்பன்

முன்னுரை

பொதுவாக எவ்வகையான படைப்பாளர்களாக இருந்தாலும் தாம் வளர்ந்த, வாழ்ந்த சூழல்களையும் பின்புலத்தையும் தமது படைப்புகளில் வெளிப்படுத்தும் தன்மை என்பது படைப்பாளர்களின் இயல்புதான். அந்த வகையில் சிறுகதை என்பது படைப்பாளர்களின் அனுபவங்களை, கண்கூடாகக் காண்பவைகளை, மாற்றத் தகுந்த சமுதாய நடைமுறைகளை, அவலங்களை வெளிப்படுத்த ஏற்ற இலக்கிய வகையாகும். இக்கட்டுரையானது டி.செல்வராஜ் எழுதிய 'நோன்பு' எனும் தொகுப்பு நூலிலுள்ள சிறுகதைகளின் கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றி ஆராய்கிறது.

டி. செல்வராஜ்

1958-இல் எழுதப்பட்ட ‘நோன்பு’ எனும் சிறுகதைகளின் தொகுப்பு டி. செல்வராஜ் அவர்களின் படைப்பாகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூருக்கு அருகே அமைந்துள்ள மாவடி எனும் சிற்றூரில் பிறந்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்களை புதுமைப்பித்தன், ரகுநாதன் வழியில் உயிர்ப்புடன் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். ஏழு நாவல்களையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களையும் படைத்துள்ள இவர் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் செம்மலர், சரஸ்வதி, சாந்தி மற்றும் தாமரை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிய இவர், தோல் எனும் நாவலிற்காக 2010-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நாவல் விருதைப் பெற்றுள்ளார். இவரின் படைப்புகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் மனிதநேயத்துடன் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை எடுத்துரைத்து அவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறது.

எழுத்தாளர் ஏகாம்பரம்

“இதுவும் ஒரு சரஸ்வதி பூஜை” எனும் தலைப்பில் அமைந்துள்ள சிறுகதையின் நாயகனாகவுள்ள எழுத்தாளர் ஏகாம்பரத்தின் பாத்திரமானது படிப்போர் மனத்தில் பெரும் தாக்கத்தினையே ஏற்படுத்துகின்றது. இந்த எழுத்திருக்கிறதே, இது ஒரு மோகினிப் பேய் மாதிரி யாரையும் பிடிக்காது, பிடிச்சா லேசில விடாது என்று இப்பாத்திரத்திற்கு ஓர் அழுத்தம் தந்தே படைத்துள்ளார் டி.செல்வராஜ்.

தரமான படைப்புகளைத் தரவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுதியும் சம்பாதிக்காமல் மனைவியின் ஏசாலுக்கும் கோபத்திற்கும் ஆளாகின்றவராகக் காட்டப்படுகின்ற எழுத்தாளர் ஏகாம்பரத்தின் அறிமுகம் படித்த மாத்திரத்திலேயே அவரின் தன்மையும் நிலையும் விளங்கிடும் வண்ணம் அமைந்துள்ளது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற சொல்லிற்கேற்ப கதையின் இறுதியில் சம்பளம் கேட்டு வந்த தன்னை உதாசினப்படுத்திய நேரத்தில் பிள்ளை பெருமாளைக் கோபத்தோடு அயோக்கத்தனம் பண்ணுவதிற்கு ஓங்கிட்ட பணம் இருக்கும் எனக்குக் கொடுக்க இல்லையோ எனக் கண்கள் சிவக்கக் கத்திட, கணக்குப்பிள்ளை ஐயரும் பதறிட, கொடுத்த சம்பளத்தைக் கிழித்துப் போட்டுவிட்டுத் தன்மானத்தோடு குடையை இடுக்கிக் கொண்டும் அறுந்துபோன செருப்பை எடுத்துக் கொண்டும் திரும்பிச் செல்லும் ஏகாம்பரத்திற்குப் பயணக் கட்டணம் கூட கையில் இல்லை என்ற நிலையைப் பார்க்கும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உண்மையான படைப்பாளியின் வாழ்வு என்னவாகும் என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.



தொண்டன் ஆறுமுகம்

“தொண்டன்” எனும் தலைப்பில் அமைந்துள்ள கதையின் நாயகனான ஆறுமுகத்தின் பாத்திரத்தை அறிமுகம் செய்யும் போதும் தாக்கம் ஏற்படுகிறது. நாட்டிற்காக உண்மையாக உழைத்து மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து மனைவி பிள்ளையை இழந்து தனித்து வாழும் ஆறுமுகம் ஒரு சிறந்த காந்தியவாதி. தேங்காய் வியாபாரியாக இவர் இருந்தபோது தெருத்தெருவாக முறுக்கு விற்றலைந்த பழனியப்பப் பிள்ளையோ, இன்று பெரும் பணக்காரர்களில் ஒருவர், ஆனால் ஆறுமுகமோ தேசத்திற்காக தனதத்தனையும் இழந்து நிற்பவர். இப்படிப்பட்ட உத்தமனான தொண்டரைப் பார்த்துப் பழனியப்பப்பிள்ளை இவ்வளவு காலமா உழைச்சு நீ சாதிச்சதுதான் என்ன? எனக் கேட்கும்போது ஆடிப்போனதாகக் ஆறுமுகம் காட்டப்படுகிறார்.

சேரிப் பிள்ளைகளுக்காகப் பள்ளிக் கூடத்தைக் கொண்டுவர பாடுபட்ட, எத்தனையோ பிள்ளைகளுக்குக் கட்டணமில்லா இலவசக் கல்வியைக் கொடுக்கப் பாடுபட்ட தன்னைப் பார்த்து, பிறர் தனத்தைச் சுரண்டும் பழனியப்பன் இப்படிக் கேட்டு விட்டானேயென டி.செல்வராஜ் எடுத்துரைக்கும் முறை அந்த ஆறுமுகப் பாத்திரத்தின் மீது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியில் தன் மகனின் வேலைக்கும் முன்னேற்றத்திற்கும் தாங்கள்தான் காரணமென்று இசக்கி எனும் பெண் வந்து பட்டு வேட்டியும் சட்டையும் தந்து செவ்வந்திப் பூ மாலை கழுத்தில் அணிவித்து சாமி என்று சொல்லி தன் மகனோடு நிற்கின்ற நிலையில் பரசவத்தில் ஆடிப் போய் நிற்கின்ற ஆறுமுகம் காந்தியைப் பார்த்து கண்கலங்கி நின்று போலோ மகாத்மா காந்திக்கு ஜே எனக் கோசமிடுகின்ற நிலையிலும் இப்பாத்திரம் வாசகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டு என்பது புகழ் சேர்ப்பதன்று என்று இப்பாத்திரம் புலப்படுத்துகிறது.

தாழம்பூ நித்தியானந்தம்

அக்கூ...... அக்கூ..... அம்மா எனக் கமறல் எடுத்து இரத்தம் கலந்த காறல் துணுக்குகளைத் துப்பிப் புலம்புகின்ற பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ள நித்தியானந்தம் எனும் பாத்திரம் அனுதாபமிக்கதாகும். பிச்சிப் பூவைப் பார்க்கையில், நாம விழுந்த மண்கூட அடுத்தவாளுக்குப் பிரயோஜனப் படணுண்டா என்ற அன்னையின் ஞாபகத்தையும் தாழம்பூவைப் பார்க்கையில் தன்னைப் பிரிந்து வேறொருவனை மணந்து பிறந்த பிள்ளைக்குத் தனது பெயரையேயிட்டுக் கணவனை இழந்து நிற்கின்ற காதலி கல்பனாவின் ஞாபகத்தையும் நினைத்துப் பார்க்கின்றதாகப் படைக்கப்பட்டுள்ளது இப்பாத்திரம். இப்பாத்திரமும் தேசத்திற்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தன் குடும்பத்தையும் தன் காதலையும் இழந்து நிற்கின்ற தன்மையில் உள்ளது.

அதாவது, தேச விடுதலைக்கான காந்தியின் இயக்கத்தில் சேர்ந்து கதர்க்கொடியை எடுத்துச் செல்வதும் சேரிக்குச் சென்று அப்பகுதி மக்களோடு சேர்ந்து இருப்பதும் தெரிந்ததால் தடுத்தும் கேட்காமல் செயல்பட்டு சிறை சென்ற நிலையில் தாய் இறந்து விடுகிறாள். தொழிலாளர்களின் நலம் காக்கும் பொருட்டு செயல்பட்ட நிலையில் காதலி கல்பனாவின் பேச்சைக் கேளாததால் அதையும் இழந்து விடுகிறார். இறுதியில் கல்பா என உரைத்து, அவளின் கரத்தைப் பிடித்த நிலையில் இறந்து விடுகிறார். கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை இந்த நித்தியானந்தம் எனும் பாத்திரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுநலம் என்பது சுயநல இழப்பே என நினைக்கவைக்கிறது.



தேவாசீர்வாதம்

அதோ கழுத்துப்பட்டை கிழிந்து தொங்கும் கருப்புக் கோட்டணிந்து வேதாகமத்தை ஏந்திய வண்ணம் நிலத்தின் ஆழத்தையே கிழித்துப் பார்ப்பதுபோல் குனிந்த தலை நிமிராமல் வறுமையின் திருக்கோமாய் போய்க் கொண்டிருக்கிறாரே இவர்தான் உபதேசியார் தேவாசீர்வாதம் என்று “பணமும் குலமும்” எனும் கதையின் கதாநாயகப் பாத்திரத்தை அறிமுகம் செய்கின்ற உத்தி முறையில் தனித்து நிற்கிறார் டி.செல்வராஜ் அவர்கள்.

தனது மூத்த மகள் அற்புதமணியை விட, ஏழு வயது இளையவளான பாதிரியார் மகளுக்குக் கல்யாணம். ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்று இன்னமும் மூத்தபிள்ளைக்கு மணம் முடிக்காமலிருக்கின்ற நிலையில் திண்டாடுகின்ற இந்த தேவாசீர்வாதத்தின் பாத்திரமானது வாசகர்களின் கண்ணீரையே பெற்றுவிடும் அளவிற்குத் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

மாடசாமியின் மகனான மூக்கன் என்ற பெரிய கருப்பனைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றி யோசேப்பு எனப் பெயரிட்டு பிஷப்பிடம் சொல்லி இலவசப் படிப்பிற்கு ஏற்பாடு செய்கிறார் தேவாசீர்வாதம். இவனும் இவரின் மூத்த பெண் பிள்ளையான அற்புதமணியும் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்குப் போய் வருவதும் ஒருவருக்கொருவர் அன்பாயிருப்பதும் பின்னாளில் காதலை உண்டாக்கி விடுகிறது. இந்த நிலையில் குலம் வேறென்று தடுத்து விடுகிறார் தேவாசீர்வாதம். பின்னர் அந்தப்பையன் நன்றாகப் படித்து திருநெல்வேலி ஜில்லாவின் சப் கலக்டராக வரும்போது தனது மகளுக்கும் அவனுக்குமிருந்த பழைய காதல் மலராதா வளராதா என்று ஏங்குகின்ற நிலையில் காட்டப்படுகிறார். இவர் நினைத்தது போல பல நிகழ்வுகள் நடைபெற்றாலும், இறுதியில் மூக்கன் என்கிற பெரிய கருப்பன் நீதிபதி கோபால் பணிக்கர் மகள் மாதவிக்குட்டியை மணக்கப் போவதாக பத்திரிக்கை தந்திருப்பதைக் கண்டு கலங்கிப்போகின்ற இப்பாத்திரத்தின் நிலை வாசகர்களையும் கலங்கடிக்கப்பதாக உள்ளது. மேலும் சாதி வேறுபாட்டைப் பதவியும் பணமும் உடைத்தெறியும் என்கின்ற புதுக்கருத்தையும் வலியுறுத்துகிறது.

அன்னம்மா

அணை கட்டுகின்ற பணியின் போது பெருமழைக்கு உடையவிருந்த, பாதிகட்டிய அணையைக் காக்கச் சென்று பாறை விழுந்து இறந்தவர்களில் ஒருவனான வைரவனின் மனைவியாக வரும் பாத்திரம்தான் அன்னம்மா எனும் பாத்திரம். “அனாதைகள்” எனும் கதையில் அனுதாபம் மிக்கப் பாத்திரம் அது.

அம்மா அப்பா எங்கேம்மா? என மகன் கேட்பதைக் கூட கவனிக்காமல் அணையின் விளிம்புச் சுவரில் சாய்ந்த வண்ணம் நிற்கின்ற அன்னம்மாளின் மனதில் கணவன் வைரவனின் நினைவு வர தன்னையே மறந்து நிற்கின்ற தன்மையில் குழந்தையை அடிக்கின்றாள். பின்பு, குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகின்றாள்.

இஞ்சினியர் பார்த்தசாரதி தன் மனைவியுடன் வண்டியில் வந்து இறங்கிச் செல்லும்போது, அருகில் சென்று வணக்கம் சொல்ல இஞ்சினியரும் தனக்கு நன்றாகத் தெரிந்திருந்த சூழலிலும் கண்டு கொள்ளாமலிருக்க, அன்னமாளே நான் வைரவரின் பொஞ்சாதியென்று கூறியதையும் கேளாமல் செல்கின்றார்.

உண்மையில் அந்த அணைக்கட்டில் நான் உயிரிழந்தால் என் பெயரைக் கல்வெட்டில் பொறிப்பார்கள் என் மனைவி உனக்குச் சன்மாணம் கிடைக்கும் என்றெல்லாம் வைரவன் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தான். ஆனால் அணைகட்டி முடிந்து திறப்பு நாளில் இஞ்சினியருக்கே பாராட்டுக்கள் அனைத்தும் கிடைத்ததே தவிர, உடையவிருந்த அணையைக் காப்பாற்றிய வைரவனின் பெயர் சொல்லப்படவேயில்லை. இந்த விரக்தியால் மனம் நொந்து கைக்குழந்தையோடு அவ்விடத்தைவிட்டுச் சென்ற அன்னம்மாள் தற்பொழுது அவ்விடம் வந்து கலங்கி நிற்கின்றாள். இஞ்சினியரும் கண்டுகொள்ளாது போகின்றார்.

இப்பெரும் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ள அன்னம்மாளைப் பார்க்கும் போது அனுதாபமே ஏற்படுகின்றது. பணமும் பதவியும் மேலென்று எண்ணப்படும் உலகில் ஓர் உண்மையான உழைப்பாளி உதாசினப்படுத்தப்படுவான் என்பதை இக்கதை விளக்குகின்றது.



முடிவுரை

இதுமட்டுமின்றி சுயேட்சை சுந்தரலிங்கம் எனும் சிறுகதையில் ஊருக்காகப் பிராது எழுதி சேரி மக்களைக் காத்த சுந்தரலிங்கம் இறுதியில் பைத்தியம் பிடித்துப்போய் நிற்கும் சூழலாகக் காட்டப்படும் அப்பாத்திரமும் பேராசை பெருங்கஷ்டம் என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் கிணறு எனும் கதையில் காக்கையன் எனும் பாத்திரத்தின் மூலமாக அரசு என்னதான் சலுகைகளை விவசாயிகளுக்குக் கொடுத்தாலும் அவை முறையாக, முழுமையாக அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்காது என்பதைப் புலப்படுத்துகிறார். இப்படி, தான் படைத்துள்ள ஒவ்வொரு கதையிலும் ஏதாவதொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கதாப் பாத்திரங்களைப் படைத்து முற்போக்குக் சிந்தனைக்கு வழிவகுத்துள்ளார் டி. செல்வராஜ் அவர்கள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p44.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License