தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
45.சமுதாய நோக்கில் கொல்கத்தா சென்னை சீனத்து கதைகள்
ஏ. எஸ். தமிழரசி
இளவரசியின் பெயர் அபராஜிதா. ராஜா உதய நாராயணனின் அரசவைக் கவிஞர் சேகர் அவனை என்றுமே கண்டதில்லை. ஒரு புதுக்கவிதையைப் புனைந்து அரசனுக்கு அதைப் படித்துக் காட்டும் பொழுது இளம்புலவரின் மதுரமான குரல் சாவேக வாயில் அருகே காத்திருக்கும். ஓர் உள்ளத்தில் இன்பத்தேனை ஊற்றும் நெருங்க முடியாத ஒரு நட்சத்திர உலகை நோக்கிச் சேகரின் தேமதுர கீதம் எழும்பும். அந்த ஜோதி மண்டலத்தின் நடுவில் அல்லவோ அவனுடைய அதிர் தேவதையான அபாராஜிதா வீற்றிருக்கிறாள்.
எப்பொழுதாவது ஒரு நிழல் போல் கவியின் கண்ணில்படுவாள். ஒரு சமயம் அவள் அருகில் எங்கேயாவது இருப்பதைக் கவீரென நூபுத்தின் ஓசை காட்டிவிடும். ‘மலரோ, பஞ்சோ அவள் மஞ்சுச் சீறடிகள்! தென்றலின் இசையோ அருவியின் ஒலியோ மடவரலின் பொற்சதங்கையின் நாதம்? அந்தச் சரண தாமரை தொட்ட இடந்தான் என்ன புண்ணியம் செய்ததோ: என்றவர் இளம் பாவலன், தன் உள்ளத்தில் அவளது மலர்த்தாளினை இருத்தி, அவள் காற் சிலம்போசைக்கு இசையப் புதுப்புதுக் காவியங்களைப் பொழிவார். இத்தகைய மோகத்தின் அனைவருக்குத் தாம் கண்ட நிழல் யாருடையது, சலங்கைலின் ஒலி எவர் காலிலிருந்து வருவதென்று ஞானமே உதயமாவதில்லை.
இளவரசியின் பணிப்பெண் மஞ்சரி நீராடத் துறைகளுக்குச் செல்லும் வழி, சேகரின் அழகிய குடிலுக்குப் பக்கத்தில் தான் இளம் பாவலனுடன் மனங்குளிர இரண்டு வார்த்தை பேசாமல் அவள் போகவே மாட்டாள். மனித நடமாட்டமிராத அந்தி நேரங்களில் சேகரின் அறைக்குள் நுழைந்து ஏதாவது சரசமாடிக் கொண்டிருப்பாள். அவள் நாள் தவறாமல் சேகர் குடிலின் பக்ககமாகச் செல்வதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். நீராடிவிட்டுத் திரும்பும் பொழுது விண்ணில் மேலாப்பும், காதில் மலர்க் குழையும் அவள் அணிவதின் கருத்தென்ன? ஊரில் அவர் எழுந்தது என்ற ஒரு சிறு காவியத்தில், சேகருக்கு இன்பச் செய்திகளை ஏந்தி வருபவள். இளங்கவி தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளவில்லை. பகிரங்கமாக அவளோடு பழகி வந்தான். போதாக்குறைக்கு மஞ்சரி என்ற பெயரில் புதுமையும், காதலின் இனிமையும் மண்டியிருந்தன. இது போதாதா இதை தினிப்பவர்களுக்கு சேகரும் அச்சமின்றி எல்லாரும் அறிய அவளுக்கு வசந்த மஞ்சரி என்ற பெயரையும் சூட்டியிருந்தான். கேட்பானேன் ஊர் வாயை?
வேனில் விடுதூது என்ற ஒரு சிறு காவியத்தில் இன்சொலாள் என் நெஞ்சயாவு மஞ்சரி: என்று எதுகை வைத்துப் பாடுவாள். நாடறிந்த இந்த ஆம்பல் அரசன் செவிக்கும் எட்டியது.
இளங்கவியின் சுவைமிக்க இந்தப் போக்கு உதய நாராயணனுக்கு வேறுபாடாகத் தோன்றவில்லை. ரசிகரையுற்றே மகிழ்வே கொண்டான் இதைக் குடித்துச் சேகரை எப்பொழுதாவது வேடிக்கையாகக் கிண்டுவான்! பாவலனும் கலந்து கொள்வான். அஞ்சிரைத்தும் இளவேனிலைத்தான் பாடுமோ? என வேறு கருத்துப்பட உதய நாராயணன் கேட்டான். கவி விட்டுக் கொடுக்காமல் இளவெனிலும் கொங்கு தேரும் என்பார். சபையினர் இந்த மாதிரிச் சமத்காரமான பேச்சுக்களைக் கேட்டு இன்புறுவர். சாலேகத்தின் மறைவில் இளவரசி அபராஜிராவும் மஞ்சரியைக் கேலி செய்வான் இதற்காக மஞ்சரி கலக்கமுற்றாள்.
இப்படியெல்லாம் பொய்யும், உண்மையும் கலந்தே மனிதர் வாழ்வு கழித்து விடுகிறது. இறைவன் ஆக்கியவை சில; மனிதன் தானே செய்த கொள்வன சில. உலகத்தார் உருவாக்குவது கொஞ்சம் வாழ்வே ஒரு ரசக் கதம்பம். பல சரக்குகள் குழைந்த ஒரு கலவை உண்மையும், கற்பனையும் இல்லாததும் பொல்லாததும் சேர்ந்ததோர் விசித்திரக்கூட்டு.
கவி பாடும் கீதங்களில் வரும் விஷயம் ஒன்றுதான் உண்மையானது. நிறைவானது. அவருடைய கவிதையின் உட்பொருள் ராதையும், கிருஷ்ணனுமே, நித்தில புருஷன் அழியாப் பெண்மை முடிவில்லா இன்பமும் துன்பமும் இது போன்று தத்துவங்களில் விளக்குவதுதான் தன் கவிதையின மூலம். கவி தன்மையை உணர்ந்தான். அந்தக் கீதங்களின் மண்டியிருந்த அபூர்வமான சுவையை அரசன் முதன் ஆண்டி ஈறாக உள்ள மதில் நுகர்ந்து மெய்மறந்தனர். தேசத்து மக்களின் நாவில் சேகரின் திவ்விய காலமே உலவி வந்தது. நிலா மகிழ்வளிக்கும் இரவுகளில் நறுந்தன காற்று மூச்சு விடும்பொழுதும், சந்தி, சதுக்கம், மாளிகை, மாடம் ஆற்றின் நடுவே தெப்பங்கள் எங்கும் சேகருடைய இன்னிசைப் பாட்டுகளே பல கண்டங்களிலிருந்து எழும். எவ்வளவு புகழ் அந்தப் பாவானனுக்கு!
கவி அற்புதமான சிறு காவியங்களைப் புனைவான். அரசனும் கேட்டு மகிழ்வான். ரசிகர்கள் அதன் பொருட்செறிவைக் கண்டு வியப்பர். மஞ்சரியும், கவியைக் கண்டு இரண்டு இனிய வார்த்தைகள் பேசாமல் போக மாட்டாள் அந்தப்புரத்து ஒரு நிழல் உருவம் அரங்கேற்றும் சமயங்களில் பலகனி மூலம் பார்க்கத் தவறவே தவறாது. கல்லென்று காற்சதங்கையை ஒலித்து அபராஜிதா தன் உள்ளக் கிளர்ச்சியைக் காட்டுவாள்.
1950 களில் இந்தியா குடியரசு நாடாக மாறிய காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் அக்காலச் சூழலில் நடந்தவாறு ஏழை என்ற சிறுததையை படைத்துள்ளார். சிறுகதை மாந்தர்கள் எல்லப்பன் செல்லப்பன் இருவரும் அந்தக்காலப் பொருளாதார ஏற்றதாழ்வுகள் சமூக சூழல்களில் எதார்த்தமாக படைக்கப்பட்டுள்ளனர்.
ஏழ்மையின் அடையாளமாக விளங்கும் எல்லப்பன், கடைசிவரை அவ்வூர் மக்களுக்கு துப்பறியும் காவலர் என்று தெரியாமல் இருப்பது அண்ணாவின் புதுமை நடை.
பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பது போல் மதிநுட்பத்தால் தகிடுதத்தம் செய்து ஊரில் பல தொழிலாளர்களை உறிஞ்சி பல்வேறு வகையில் செல்வத்தைச் சூறையாடும் செல்லப்பனின் பேராசை, தான் மட்டுமே அறிவாளி என்று நினைத்து எல்லப்பன் யார் என்று தெறியாமல் ரகசியங்களை வெளியிட்டு காவல்துறையிடம் மாட்டுவது மிகவும் வேடிக்கையான ஒன்று.
புலமை இருந்தும் நேர்மையானவனை வறுமை விடாது என்பதற்குக் கந்தப்பன் ஒரு சிறந்த உதாரணம். பன்னாட்டு கம்பெனிகளின் காப்புரிமை அடாவடி நிலங்களை வளைத்து விவசாயத்தை ஒழிக்கும் செல்லப்பன் செயல், இன்றைய காலத்தின் எதார்த்த சூழ்நிலையை அன்றே அண்ணா விவரித்துள்ளார். அதனால், அவர் மட்டும் அறிஞர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர்.
உண்மையில் ஏழை என்ற சிறுகதை, ஏழைக்குக் காரணத்தை அழகாகச் சொல்கிறது.
அறிஞர் அண்ணா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு முன்னோடி ஆவார். திராவிட நாடு இதழில் அவர் எழுதிய கதைகள் கட்டுரைகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. மேலதிகாரி என்ற சிறுகதை சென்னை மாகாணமாகத் தமிழ்நாடு விளங்கிய காலத்தில் எழுதப்பட்டது. அக்காலத்தில் அலுவலக வேலைகளை மக்கள் நேசிக்கத் தொடங்கிய காலம். உயர் பதவிகள் அனைத்தும் பார்ப்பனர்கள் வசம் இருந்த காலம். அக்காலச் சூழலைப் பிரதிபலிக்கும் அற்புதக்கதை திராவிட நாடு.
கதையில் வரும் உலகநாத முதலியார் மாத்ருபூதம், கோதண்டன்-சாச்சாபிசன் ஆகியோர் முறையே ஆரியர் திராவிடர் வேறுபாட்டில் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
மனித வாழ்வில் பொருளீட்ட ஒரு வேலை அவசியம். ஆனால் தன்னுடைய குடும்பம், பாரம்பரியம், சுயமரியாதை இவைகளை அடகு வைத்து அந்த வேலையைத் தொடர்வது ஒரு கேவலமான செயல் ஆகும் என்பதை அண்ணா அழகாகச் சித்தரித்துள்ளார்.
தற்காலத்தில் அரசு, தனியார் நிறுவனப் பணியாளர்கள், தொழிறசங்கம் நடத்துபவர்கள் பலரிடம் காணப்படும் சாதிவெறியை அண்ணா அறுபது ஆண்டுகளுக்கு முன்பே சாடியுள்ளார். மேலதிகாரி கதையை படித்த ஒவ்வொருவருக்கும் பொதுப்பணிகளில் ஈடுபடும் இனச் சாதிப்பற்றாளர்களை பற்றி மதிப்பிட இக்கதை சிறந்த எடுத்துக்காட்டு.
இ.வி. ராமகிருணன் (1951)
இவர் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் எழுதக் கூடியவர். கவிதைகள், ஆங்கில இலக்கியக் கட்டுரைகள் மலையாளத்திலும் வெளிவந்துள்ளன. இவர்சிம்லா 1999 என்ற நவீன இந்தியக் கவிதைகள் நூலின் தொகுப்பாசிரியர்.
பிரேம் (1965)
இயற்பெயர் பிரேமானந்தன். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழில் படைப்பிலக்கியத்திலும், கோட்பாட்டுத்தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர். தமிழின் பின் நவீனத்துவ, பின் காலனியக் கோட்பாடுகளையும் விவாதங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இவர் கல்விப் புலத்திலும், ஆய்வுத் துறையிலும் பங்காற்றி வருகிறார்.
நாடகவியல் மற்றும் ஊடகவியல் ஆசிரியராகவும் மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் மானுடவியல் மற்றும் தமிழ்மொழி இணையத்தள ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய படைப்புகளாக, இரண்டு நாவல்கள், ஐந்து கதைத்தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுதிகள், பல மொழிபெயர்ப்புகள், இருபத்தெழு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இந்தியச் சிறுகதைகள் (1900-2000)
இருபத்தோரு மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாற்பத்து மூன்று சிறுகதைகள் சிக்கல்களை பிரதிபலிக்கின்றன. இந்த ஆண்டின் சிறுகதைகளை சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிசிர் குமார் தாஸ் (1995)
இந்தக் கதைகளில் மொழிபெயர்ப்பில் நமது சொந்தப்பிரதேசம் பற்றியும் புதிதாகச் சிலவற்றைக் கண்டறிகிறோம். ஆங்கில மொழிபெயர்ப்பில் - வால்டர் பென்ஞ்சமின் வார்த்தையில் ஒரு மறு பிறப்பு மூலத்தின் உயிர்த்தன்மையை வேறொரு காலச்சூழலில் தொடரக் கூடியது.
தாகூர் பிரேம்சந்த், மண்டோ, இஸ்மத் ஜூம்தாய், பஷீர், தகழி, மாஸ்தி, மௌனி, தூமகேது, சலம் காட்கில் இந்தியச் சூழலில் இந்த இலக்கிய வடிவத்தை இந்நூற்றாண்டின் உணர் நிலையில் நிகழ்ந்த மிகப்பெரும் மாற்றங்களின் மீது மேற்கத்திய தாக்கம்
1. மாபசான்
2. செகோவ்
3. கோகோல்
4. அனதோல்
5. பிரான்ஸ்
6. பலரின் கதைகள் முப்பது
அய்ரோப்பிய மொழியிலிருந்து சிறுகதைகள்
1. பொன்குன்னம் வர்க்கி
2. தகழி சிவசங்கரப்பிள்ளை
3. லலிதாம்பிகா
4. சுந்தர்ஜனம்
5. வி. கேசவதேவ்
6. வைக்கம் முகம்மது பஷீர்
இந்தியில் பிரேம் கதையின் மொழிபெயர்ப்பு
1. பிரேம்சந்தின் ஹன்ஸ்
2. அஸ்ஸாமியில் லமிநாத் பேஸ் பரூவாவின் பாஹி.
3. ஒரியாவில் முக்குரா மற்றும் சகாகரா, மலையாளத்தில் கே.பி கேசவமேனனின் மாத்ருபூமி, மராத்தியில் எம்.ஜி. ரங்கனேகரின் சத்யகதா, தமிழில் எஸ்.எஸ். வாசனின் ஆனந்த விகடன், கன்னடத்தின்: காதம்வரி சம்கிரகா போன்றவை எவரென வாசகர்களிடையே காணப்படுகின்றன.
இந்தியச் சிறுகதை
1. தாய்மார்கள்
2. பெண்மக்கள்
3. மனைவிகள்
4. விதவைகள்
5. விலைப்பெண்கள்
இந்நூற்றாண்டில் பெங்காளி, உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகள் மிகச்சிறந்த சிறுகதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில் அதிக அளவில் கிடைத்த பெங்காளிக்காக நான் தாராசங்கர் பானர்ஜியின் ஒரு கதையையே தேர்ந்திருக்கின்றன.
இக்கதைகள் நாடு என்ற நிலையில் தேசியம் என்ற நிலையில்
1. படகோட்டி தரிணிக்கும்
2. படிகோட்டி தரிணிவிற்கும் மங்கம்மாவிற்கும்
3. தயிர்கார மங்கம்மா, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்.
4. ஒரு உள்ளார்ந்த வலிமை (ராமச்சந்திர சர்மா 1995:14)
5. நினைவுகளின் போக்கும் மரணம். லெட்சுமி ஹோல்மஸ்ராம் 1997 - சிறுகதை தொகுப்பு காணப்படுகிறது.
த்ஸீவிர் சீன நானக் கதைகள்
சீனமொழியில் வங்காள எல்லையின் வெற்றிடம் கோழியிலிருந்து முட்டை வந்ததா. முட்டையிலிருந்து கோழி வந்ததா. கொஞ்சம் நேரம் யோசித்தார் ஒருவர். அடுத்தவர் கொஞ்ச நேரம் யோசித்தார். பிறகு சொன்னார், கோழியில் இருந்துதான் முட்டை வந்தது.
முட்டையிலிருந்து கோழி தான் வரவேண்டும், என்பதில்லை. சேவல் கூட வரலாம். கோழியில் இருந்து முட்டை மட்டும்தான் வரும் என்றார்.
விதையிலிருந்து செடி வந்ததா, செடியிலிருந்து விதை வந்ததா. விதைதான் என்றால் விதை எங்கிருந்து வந்தது என்று கேட்கப்படும். உலகின் மூலம் பரம்பொருள் என்றால் அதை தேடிய பல ஆன்மீகவாதிகளின் பதில் அதற்கு ”வெட்டவெளியல்லால் வேறெதுவும் இல்லை கண்டீர்.” என்று பாடுகிறார். அரசு மக்களை ஆளுகிறது. ஆனால் அந்த அரசு மக்களலால் உருவாக்கப்படுகிறது. ஆளும்கட்சி, எதிர்கட்சி இரண்டுமே மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு எதிரெதிர் சலனங்களால் தடையற்ற ஒரு இயக்கம் நடைபெறுகிறது.
உலக இயக்கம் எதிர்மறை சக்திகள் ஒன்றுபட்டு இயங்குவதால் நடைபெறுகிறது. புண்ணியம் - பாவம், நல்லது - கெட்டது, ஏற்பு - மறுப்பு என எல்லா எதிர் சக்திகளும் ஒன்றுபடும்போது சலசலப்பு தோன்றினாலும் முடிவு நல்லதாக இருக்கும் இதுவே ஞானம். அது பரம்பொருளுக்கு முந்தையது, அதுதான் என்பது வா வோ த்ஸீவின் முடிவாகும்.
முடிவுரை
இச்சிறுகதை தமிழ் இலக்கிய வடிவிலும் மனித சிந்தனைக்கேற்ப வாழ்க்கை கேள்வி முறையகளையும் நேரங்களையும் நாம் எண்ணிக் கொண்டு வாழ்கிறோம். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், நடம், கடம் இரண்டையும் உருவாக்குகின்றன என்பதையும் நாம் உணர முடியும். மேலும், பிரேம், அறிஞர் அண்ணா குருதி வாசுதேன் சிறுத்தொகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் சீன மொழிகளிலிருந்து இக்கதை குறிப்பிட்டுள்ளன என்பதையும் பல நதிகள் ஒன்று சேருமிடம் கடல் பல கற்பனை, உண்மை இலக்கியங்களில் சொற்களும் கூட்டு கற்பனை தொடர் கதையாக உருவாகின்றன. இவை பல மொழிகளிலிருந்து எழுதப்பட்டுள்ளன என்பதையும் உணர முடிகின்றன. கற்பனை கதையாய்கின்றன. அவைகள் இலக்கியங்கள் உருவாக்கப்படுகிறது.
துணைநூற்பட்டியல்
1. இந்திய சிறுகதைகள் (1900-2000) தொகுப்பாசிரியர் இ.வி. ராமகிருஷ்ணன் தமிழில் பிரேம்.
2. பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் முதல் பதிப்பு 2005
3. லா. வோத்ஸீ-வின் சீன ஞானக் கதைகள் குருஜி வாசுதேவ். சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
4. மகாகவி தாகூரின் கதைகள் வ.உ.சி. நூலகம் தமிழில் ஆசிரியர், த.நா.குமாரசாமி த.நா. சேனாதிபதி தொகுப்பாசிரியர்: கவிஞர் முத்தமிழ் விரும்பி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.