இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


47.தமிழ் இலக்கியத்தில் சிறுகதை இலக்கணமும் அமைப்பு முறையும்

கா. விஜயா

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டில் தோன்றி சிறந்து விளங்கும் இலக்கியங்களில் சிறுகதையானது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். புனைந்து எழுதப்படும் கதை வடிவம் சிறுகதையாகும். உண்மை நிகழ்வுகள் மற்றும் நகைச்சுவை கலந்தே சிறுகதைகள் எழுதப்படுகின்றன. இவற்றையே தொல்காப்பியர், “பொருளோடு புணராப் பொய்மொழி பொருளொடு புணர்ந்த நகைமொழி” என்று இலக்கணத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

சிறுகதை விளக்கம்

சிறுகதை அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாக அமைந்திருத்தல் வேண்டும். மேலும் தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சக்கட்டம் முடிவு என்ற ஐந்து கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். குதிரைப் பந்தயத்தின் தொடக்கம், முடிவு போல் வேகம் உடையதாக இருக்க வேண்டும். கிளைக்கதைகள் இருக்கக் கூடாது. சிறுகதை படிக்கும் போது படித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு இல்லாமல், சிறுகதை கூறும் கருப்பொருளை சம்பவம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறுகதை படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் தன் கருத்தைப் பாய்ச்ச வேண்டும். கதாசிரியரின் கலை, கற்பனை, சொல்லாட்சி, அவர் கூற விரும்பும் செய்தி போன்றவை பளிச்சென தெரிதல் வேண்டும். சிறந்த சிறுகதை தாமாகவே சிறந்த முறையில் அமைந்து விடுகின்றது.

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் முன்னோடிகளும்

தமிழ்ச் சிறுகதை வடிவம் பெறுவதற்கு முன், உரைநடையில் வீரமாமுனிவர் இயற்றிய ‘பரமார்த்த குரு கதை’, சந்திரவண்ணம் பிள்ளையின் ‘கதாசிந்தாமணி’, வீராசாமிச் செட்டியாரின் ‘விநோதரசமஞ்சரி’, செல்வகேசவராயரின் ‘அபிநவக் கதைகள்’ போன்றவை வெளிவந்து சிறுகதை காலத்தைத் தொடங்கி வைத்தது. “இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராமானுஜீலு நாயுடுவின் ஆசையின் முடிவு (1910), நமச்சிவாய முதலியாரின் புலவர் வறுமை (1911), தாண்டவராய முதலியாரின் பஞ்சதந்திரக் கதைகள் (1915), மாதவையாவின் குசிகர் குட்டிக் கதைகள் (1924) வெளிவந்தன” (மு.அருணாச்சலம், இலக்கிய வரலாறு, ப. 375)


இக்கதைகள் சிறுகதை என்ற வடிவ அமைப்பை பெற்றவையாக இடம் பெறவில்லை. ஆனால் வ.வே.சு. ஐயர் வடிவ அமைப்பைத் தொடங்கி வைத்தார். எனவேதான் சிறுகதையின் தந்தை என்ற நிலையில் போற்றப்படுகின்றார். இவரது முதல் படைப்பான ‘மங்கையர்க்கரசியின் காதல்’ இத்தகுதியைப் பெற்றது. இதில் இடம் பெற்றுள்ள ‘குளத்தங்கரை அரசமரம்’, மரம் கதை சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயரைத் தொடர்ந்தே பாரதியாரும் சிறுகதைகள் படைக்கத் தொடங்கினார். அவரது படைப்புகளில் பூலோகரம்பை, ஆவணி அவிட்டம், வேணுமுதலி சரித்திரம், மன்மதராணி, சுவர்ணகுமாரி போன்றவை பாரதியால் எழுதப்பட்டது. வடிவச் செறிவு மிக்கக் கதைகளாகக் காந்தாமணி, பண்டாரத்தின் கதை, மிளகாய்ச் சாமியார் போன்றவை சிறப்பு பெற்று விளங்கியவையாகும்.

பாரதி

11.12.1882 ஆம் ஆண்டு எட்டையபுரத்தில் பிறந்த பாரதியார் தன் கவிதை மூலம் உலக மக்களை ஒரு குடைக்குள் அமரச் செய்த பெருமைக்குரியவர். இவர் தன் படைப்புகளில், சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் வித்திட்ட பெருமைக்குரியவர். இவரது கவிதை, கட்டுரை அறிந்திட்ட மக்கள் உண்டு. ஆனால் சிறுகதை அறிந்த மக்கள் மிகக் குறைவுதான். தாகூரின் சிறுகதைகளை ரசித்தது, அவற்றை மொழிபெயர்த்தது. அவரது தமிழ்வர்ணனை நடை சிறப்பாக அமைந்திருப்பது ஆகிய மூன்றுடன் அவருக்குள்ளே எழுந்த படைப்பு ஆர்வம், அவரது தேசிய உணர்ச்சி, சமூக சமுதாய ஈடுபாடு ஆகியவையும் சேர அதுவரையும் ஒன்பது ஆண்டுகளாகக் கவிதை எழுதி வந்த பாரதிக்கு சிறுகதையும் எழுதத் தூண்டுதலாக இருந்துள்ளன. அதன் விளைவாகத்தான்‘ஆறிலொரு பங்கு’ சிறுகதை என்கின்றார் சி.சு.செல்லப்பா. இத்துடன் தமிழ் மொழியில் சிறுகதை உதயமாவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சிறுகதை முன்னோடிகள்

சிறுகதை உருவாவதற்கு சில பத்திரிக்கையும், ஆசிரியர்களும் தங்கள் படைப்புக்களைத் தியாகம் செய்துள்ளனர். அவ்வரிசையில் புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், மௌனி, பி. எஸ். இராமையா, ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்பிரமணியன், லா. ச. ராமமிர்தம், சிட்டி, தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், கு. அழகிரிசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம். மேலும் சமுதாயத்தில் பெண்களின் பிரச்சனைகளைத் தங்களது எழுத்துக்களின் மூலம் 1970ல் தடம் பதிக்கத் தொடங்கினர். பெண் சுதந்திரம் என்பது புதிய அர்த்தம் பெற்றது. அவர்கள் கற்ற கல்வி அவர்களைப் புதிய திசையில் செலுத்தியது. பெண்களுக்கே உரிய சிந்தனை தமிழ்ச் சிறுகதைகளில் மையம் கொண்டது.



பெண் எழுத்தாளர்கள்

ஆண்கள் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்ந்ததோடு அல்லாமல், பெண்களும் சிறந்த எழுத்தாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். இந்நிலை 1970 முதல் தொடங்கியுள்ளது. ஆர். சூடாமணி, இராஜம் கிருஷ்ணன், இலட்சுமி, வாசந்தி, சிவசங்கரி, அம்பை, ஆண்டாள் பிரியதர்ஷினி, திலகவதி, உஷா சுப்பிரமணியன், சிவகாமி, உமாமகேஷ்வரி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
சிறுகதை நடை

“தேவையற்ற வருணனைகள் சிறுகதையில் இடம் பெறக்கூடாது. ஆனால் சொற்கட்டு மிக முக்கியமானது. பயனற்ற ஒரு சொல் கூட சிறுகதையில் அமையக்கூடாது. கதையின் நடை எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும். ஒரு கதையைப் படித்து முடித்த பின்னர் அதில் முழுமையும் நிறைவும் இருப்பது புலனாக வேண்டும். இத்தகைய முழுப் பண்பைப் பெறாதவை வெறும் நிகழச்சிக் கோவையாக அமையுமேயன்றி சிறுகதை ஆகா” என்று தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் கா.வாசுதேவன் குறிப்பிடுகின்றார். ஒரு கதையின் பொருளும் நோக்கும் எதுவாகவாயினும் இருக்கலாம். ஆனால் அதன் இயல்பு ஒரு வகையில் உறுதியாக இருக்க வேண்டும். கதையில் இடம் பெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கதையின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைந்திருத்தல் வேண்டும். கதைக்குரிய கருப்பொருளை முடிவு செய்து அது முற்றுப் பெறப் பாத்திரங்களை அமைத்தல், கருவால் வந்த கதை என்பர். குறிப்பிட்ட குணச் சித்திரத்தை முடிவு செய்து கொண்டு நிகழ்ச்சிகளையும் சூழல்களையும் அமைத்தல் குணச்சித்திரத்தால் வந்த கதை என்பர். மேலும் குறிப்பிட்ட உணர்வைத் தோற்றுவிக்க ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலைக் கொண்டு கதை அமைத்தல், உணர்ச்சி பதிவால் வந்த கதை என ஸ்டீவன்சன் கூறுகின்றார்.

சிறுகதை பற்றிக் கூறும் அறிஞர்கள்

இலக்கியத் தரமுடைய சிறுகதைகள் 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது என அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றுள் சில கருத்துக்கள் எட்கர் ஆலன்போ, “சிறுகதை என்பது தன் பெயருக்கு ஏற்ப சிறிய வடிவைப் பெற்றிருத்தல் வேண்டும். ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும். அளவிலும் அது சொல்லும் கருத்திலும் முழுமை பெற்றிருத்தல் வேண்டும்” என்று கூறுகின்றார். ‘சிறுகதை’ என்பது, எளிமையான அல்லது ஒளிமையாக விளங்க வேண்டிய ஒரு படைப்பு ஆகும். கற்பவனது கவனம் ஒருமுகப்பட்ட நிலையில் இடையீடு நேருமுன் அல்லது அயர்ச்சி தோன்றுமுன் முற்றி முடிவுபெற வேண்டும் என்கின்றார். பிராங் ஓ கானர், ‘சிறுகதை’ என்பது பிரச்சினைகளை அலசிடும் படைப்பன்று. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக் கொண்டதன்று. அது மனித சூழமைவு பற்றி உள்ளவாறு கூறுவதாகும்”


அட்சன், “ஒரே மூச்சில் படித்து முடித்தற்குரிய கதையே சிறுகதையாகும்” என விளக்கம் தருகின்றார். ஸ்டீவன்சன், “எனக்குத் தெரிந்த வரையில் மூன்றே மூன்று வழிகளே உள்ளன. ஒரு கதையை மையப்படுத்திப் பாத்திரங்களைப் பொருத்தலாம் அல்லது ஒரு பாத்திரத்தைக் கொண்டு, அதை வளர்ப்பதற்கான நிகழ்ச்சிகளைப் படைக்கலாம் அல்லது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தாக்கத்தை விளக்கும் வகையில் செயல்களையும் மாந்தர்களையும் படைத்து கதையை உருவாக்கலாம் என பல்வேறு அறிஞர்கள் பலவிதங்களில் எல்லாம் சிறுகதை பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறாக சிறுகதை என்பது சீக்கிரத்தில், அதாவது, குறைந்த கால அளவில் சமூகத்தில் காணப்படும் நன்மை, தீமைகளை மையப்படுத்தி, அம்பு தைத்தார் போல் மனித மனங்களில் பதியச் செய்யும் சிறப்புக்குரியது. மேலும் சிறுகதை எவ்வாறெல்லாம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மற்றும் சிறுகதை பற்றி அறிஞர்கள் கருத்துக்கள் ஆராய்ந்து அறிந்து விளக்கப்பட்டுள்ளன.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p47.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License