Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


50.'வடிகால்' சிறுகதைத் தொகுப்பின் தனித்தன்மைகள்

முனைவர் வாணி அறிவாளன்

கதை, நாடகம், கட்டுரை, கவிதை எனப் பல வடிவங்களில் படைக்கப் பெறுகின்ற இலக்கியங்கள், மனிதகுலத்தின் சிந்தனைகளை நெறிப்படுத்துபவை; வாழ்வை வளப்படுத்துபவை. அவற்றுள் கதை, நாடக வடிவ இலக்கியங்கள், படித்தோர், பாமரர், சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினராலும் விரும்பப் பெறுபவை. கடந்த நூற்றாண்டில் இவ்வகை இலக்கியங்களே, தமிழ்ச் சமுதாயத்தில் வேரோடிக் கிடந்த மூடப் பழக்க வழக்கங்களையும், சமூகக் கொடுமைகளையும் களைந்தெறிந்து, சமூக மறுமலர்ச்சி ஏற்படப் பெரும்பங்காற்றின. இவ்வகைப் படைப்பிலக்கியங்களுள் சிறுகதையானது வார, மாத இதழ்களால் வளர்ச்சி பெற்று, மக்களின் பொழுதை நல்லவழியில் போக்கும் வகையில் என்றும் உதவி வருகின்றது. 'வடிகால்' சிறுகதைத் தொகுப்பு, சிறுகதை உலகத்தற்குப் புதிய வரவு. பொழுதுபோக்கிற்காக விரும்பிப் படிக்கப் பெறும் இச்சிறுகதைகளை, ஆலவிதைகளைப் போன்று, மனித மனங்களுள் நற்சிந்தனைகளை, மாற்றங்களைத் தோற்றுவிக்கும் வகையில் படைப்பது ஒரு கலை. இச்சிறுகதைத் தொகுப்பின் கதாசிரியரான அமுதா பாலகிருஷ்ணன் அவர்களும், அக்கலைநயம் வாய்க்கப் பெற்றவர் என்பதை இச்சிறுகதைத் தொகுப்பு காட்டி நிற்கின்றது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் தனித்தன்மைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கதாசிரியர் - சிறுகுறிப்பு

'வடிகால்' சிறுகதைத் தொகுப்பின் கதாசிரியரான அமுதா பாலகிருஷ்ணன் நாடறிந்த எழுத்தாளர். கி. பக்கிள் நாடார் - ப. ஜெகஜோதி அம்மாள் இணையரின் திருமகனான தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வீரமாணிக்கம் எனும் சிற்றூரைச் சார்ந்தவர். இவர்தம் சிறுகதைகள், தினத்தந்தி-குடும்ப மலர், ராணி, கவிதை உறவு முதலான வார, மாத இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நூலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்லர். தன்முன்னேற்ற நூல்கள், வியாபார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்கள், நல்வாழ்விற்கு வழிகாட்டும் நூல்கள், பயணக்கட்டுரை நூல்கள் எனப் பன்முகப் படைப்பாற்றல் உடைய எழுத்தாளர்; இவ்வாறு இருபத்தி இரண்டு நூல்களை எழுதியுள்ள இவர், சிறுகதைச் சிற்பி, இலக்கியத் தேனீ, இலக்கியத் தென்றல், செந்தமிழ்ச் செம்மல், தமிழ் இலக்கிய மாமணி உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த தொழிலதிபர்; குறைவான கட்டணத்திற்கு நிறைவான கல்வியைத் தரும் பள்ளிக்கூடம் ஒன்றைத் தம் பெயரில் நிறுவிக் கல்விப்பணி ஆற்றி வருபவர்; அனைத்திற்கும் மேலாகச் சமூகப் பொறுப்புணர்வும், நேர்மறைச் சிந்தனைகளும் கொண்ட நல்ல தமிழர். இத்தகைய நற்குணங்களும், ஆற்றல்களும் கொண்டு தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருகின்ற நூலாசிரியர் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் மட்டுமின்றிப் பின்பற்றுதலுக்கும் உரிய எடுத்துக்காட்டு மனிதர்.



கதைகளின் கருக்கள்

'குத்துவிளக்கு' என்ற தலைப்பில் மங்களகரமாகத் தொடங்கும் இச்சிறுகதை நூலின் அனைத்துக் கதைகளின் களமும் வீட்டின் அகமாகவே அமைந்துள்ளது. நல்ல குடும்பங்களே நல்ல சமூகத்தின் தூண்கள். எனவே தம் கதைகளின் மூலம் ஒரு நல்ல குடும்பத்தை எடுத்துக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டு இச்சிறுகதைகளைப் படைத்தளித்துள்ளார். அதனால் குடும்பப் பிரச்சினைகளே கதைகளின் கருக்கள்; குடும்ப உறுப்பினர்களே கதாபாத்திரங்கள். இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஒரு குடும்பத் திரைச்சித்திரத்தைப் (சினிமா) பார்த்த நிறைவு ஏற்படுகிறது.

கதைகளின் தலைமை மாந்தர்

ஒவ்வொரு குடும்பத்தையும் தாங்கி நின்று வழி நடத்துபவர்கள் பெண்களே. அதனால் இவர்தம் கதைகளின் கருக்களும் பெண்களைச் சுற்றியே அமைந்துள்ளன. குறிப்பாக, மருமகள் கதாபாத்திரமே பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளது. மருமகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?, ஒரு குடும்பத்தின் மருமகளின் கடமைகள் என்னென்ன என்பன போன்ற கருக்களை மையமாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ளன. சின்னத்திரையில் எந்த சானலைத் (Channel) திறந்தாலும், குறுந்தொடர், நெடுந்தொடர் என்ற பெயரில் பெண்டிரைக் கொடுமையான மனம் கொண்ட வில்லிகளாகவே காட்டிச் சமூகத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில்,பெண்களை வீட்டின் கண்களாக மட்டுமே அனைத்துக் கதைகளிலும் காட்டியுள்ளமை பாராட்டத்தக்கது. இவர்தம் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள், புதுமைப் பெண்கள் என்ற பெயரிலும், புரட்சிப் பெண்கள் என்ற பெயரிலும் சமூகப் பழக்கவழக்கங்களை, பண்பாட்டை, மண்ணின் அடையாளங்கள் அவமதிப்போர் அல்ல. சென்ற நூற்றாண்டு வரையிலும், அமைதியுடனும், அறிவுடனும், பண்பாடு தவறாமல் குடும்பங்களை ஆற்றுப்படுத்திய தமிழ்ப்பெண்டிர்தான், இவர்தம் கதாநாயகியர். ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த அத்தகைய தமிழ்ப் பெண்டிரை, மீண்டும் தம் கதைகளில் காட்சிப்படுத்துவதன் மூலம், தமிழ்ப் பெண்டிரின் மாண்புகளை தமிழ்ச் சமூகத்திற்கு நினைவூட்டுகிறார். சமூகம் மாறவேண்டும்; நம் நாட்டின் அடையாளமாக உலகமே போற்றிவரும், சமூக விழுமியங்கள் போற்றப் பெற வேண்டும். தமிழ்ப் பெண்டிருக்குரிய இலக்கணம் மாறாமல், பாரதி கண்ட புதுமைப் பெண்களாகத் தமிழ்ப் பெண்டிர் திகழவேண்டும் என்ற ஆசிரியரின் அவா, கதைகளில் பின்னி இழையோடுகிறது.



நேர்மறை உணர்வும், நகைச்சுவை உணர்வும்

படைப்பாளர்தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துபவையே அவர்தம் படைப்புகள். அவ்வகையில் ஆசிரியரின் இந்நூற் சிறுகதைகள் அனைத்தும் இன்பியல் வகையினவாகவே உள்ளன. இச்சிறுகதைகளுள் ஓரிடத்தில் கூட அவநம்பிக்கை அல்லது துன்ப உணர்வைத் தோற்றுவிக்கும் தொடர்களையோ, சொற்களையோ கையாளாத தன்மை அவர்தம் நேர்மறை எண்ணங்களைப் எதிரொலிக்கின்றது. இவ்வாறு நல்ல கருக்களையும் நேர்மறையான முடிவுகளையும் கொண்டு சிறுகதைகள் அனைத்தும் பலாச்சுளைகளாக மணம் வீசுகின்றன. மேலும் கதைகள் கூறப்பெற்றுள்ள நடை எளிமையாக இருப்பதோடு, நல்ல நகைச்சுவை உணர்வுடனும் எழுதப் பெற்றுள்ளன. அவற்றுள் 'விளக்குமாறு' சிறுகதை, முழுநீளத் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளைப் போன்று, முழுக்கமுழுக்க நகைச்சுவைச் சிறுகதையாக அமைந்துள்ளது. 'இணை' சிறுகதை, படிப்போரின் மனத்தை உருக்குவதாய் அமைந்துள்ளது என்றாலும், நல்ல நகைச்சுவையுடன் தொடங்கப் பெற்றுள்ளது. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இச்சிறுகதையைப் படிக்கும் போது, வாசகனின் மனம், தம்மை அறியாமல் நெகிழும். இத்தொகுப்பிற்கு அணிந்துரை நல்கியுள்ள திரைப்பட இயக்குநர் திரு. விசு அவர்கள் இக்கதையைப் பற்றி,'வயது காரணமா? இல்லேன்னா எனக்கு வந்திருக்கிற வியாதி காரணமான்னு தெரியலை... அமுதா, இந்தக் கதையைப் படிச்சதும், எனது அழுகை நிற்க, நீண்ட நேரம் ஆனது' எனக் கூறியுள்ளமை மேலும் மனதை நெருடுகிறது. வயதான இணையர், யார் இக்கதையை வாசிக்க நேரிட்டாலும், இயக்குநர் விசுவுக்கு உண்டான உணர்வே எழும்.

உளவியல் நோக்கு

இத்தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள், ஆசிரியர்தம் உளவியல் அறிவை வெளிப்படுத்துகின்றன. தவறே செய்யாவிட்டாலும், தன்னை எப்போதும் திட்டும் பெற்றோர், தம் தங்கை, தம்பி என்ன தவறு செய்தாலும் ஏதும் கண்டு கொள்ளாமல் இருப்பதேன்? என எண்ணும் ஒரு மகனின் மனப்போராட்டத்தை வடிகால் என்ற சிறுகதையில் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தான் தன் பெற்றோருக்கு வடிகாலாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து மனம் நிறைவடைவதாக முடித்திருப்பது அழகு. இச்சிறுகதைத் தலைப்பே, இத்தொகுப்பின் தலைப்பு. இதுபோன்று, மரகதம், மருமகள், சடங்கு முதலான சிறுகதைகளைப் படைத்திருக்கும் பாங்கும், ஆசிரியரின் உளவியல் பாங்கைக் காட்டிநிற்கின்றன. 'பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்னும் பழமொழியை நினைவுபடுத்துமாறு 'பாறாங்கல்' சிறுகதை அமைந்துள்ளது.



சமூக அக்கறை

இத்தொகுப்பின் அனைத்துச் சிறுகதைகளிலும் நல்லதொரு குடும்பம் எவ்வாறு விளங்கவேண்டும் என்பதற்குரிய இலக்கணம், சமூக அக்கறையுடன் குழைத்துத் தாயன்புடன் தரப்பெற்றுள்ளது. 'குழந்தைகளை இலவசத்திற்குக் கை நீட்டப் பழக்கக் கூடாது', 'படித்த இளைஞர்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு பெற்றோர்களைத் தனிமைப்படுத்தலாகாது' என்பன போன்ற இக்காலச் சமூகத்திற்குத் தேவையான நற்கருத்துகளைத் தம் கதைகள் மூலம் வாசகர் மனத்தில் பதியச்செய்துள்ளமை பாராட்டிற்குரியது.

வட்டார வழக்கு

தென்மாவட்டத்தைச் சார்ந்த நூலாசிரியர், சென்னையில் குடியேறிப் பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், தம் வட்டார வழக்கைத் தன் சிறுகதைகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருவது சிறப்பு. அதனால், சிறுகதைகளைப் படிக்கும்போது, அவற்றில் வரும் கதாபாத்திரங்கள், கிராமியத் தோற்றத்துடன் மனத்துள் பிம்பங்களாகத் தோன்றுவதைத் தடுக்க இயலவில்லை. அதனால், நற்கருக்களை உடைய அக்கதைகள், என்றும் மறக்க இயலாத அளவிற்குக் காட்சிகளாக நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பிடித்து விடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கதாசிரியர், 'நல்ல குடும்பங்கள் உள்ள சமுதாயமே, ஆரோக்கியமான சமுதாயமாக, நற்பேற்றுடன், உலக அரங்கில் ஒளிரமுடியும்' என்ற கருத்துடையவர். அதனால் தமிழ்க் குடும்பங்களின் ஒவ்வொரு உறவுகளும் எங்ஙனம் திகழவேண்டும் என்பதற்கான இலக்கணத்தைக் கதாபாத்திரங்களின் வழிப் படிப்போர் மனத்தில் பதியச் செய்துள்ளார். மொத்தத்தில் இச்சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்து. படைப்புலகில் அரியன சாதித்து வரும் அறிஞர் அமுதா பாலகிருஷ்ணன் மேலும் பல படைப்புகள் படைத்துத் தமிழுக்கு வளமை சேர்க்கட்டும்; சமூகம் பயன்பெறட்டும். சிறுகதை எழுதும் படைப்பாளர் மட்டுமின்றி, எந்த வகைப் படைப்பாளரானாலும் (குறிப்பாகச் சின்னத்திரை, பெரிய திரை முதலான ஊடகங்களில் பங்களிக்கும் படைப்பாளர்கள்) இந்நூலாசிரியர் போன்றே சமூக அக்கறையுடன், படிப்போர் மனத்தில் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில் மட்டுமே படைப்புகளை அளிக்கும் போது, சமுதாயம் நலம்பெறும் என்பது திண்ணம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p50.html



  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               




இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License