இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

29. சங்ககால இலக்கியத்தில் மகளிரின் விளையாட்டுகள் மற்றும்
ஆடை-ஆபரணங்கள் - ஓர் பார்வை


கு. சங்கீதா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, பரமத்தி-வேலூர். நாமக்கல் மாவட்டம்.

சங்க இலக்கியம் தமிழர்களின் இலக்கியக் கரூவூலம். மானுட விழுமியங்களின் அமுத சுரபி. ஆரியக் கருத்துக்களை அள்ளித்தரும் தங்கச் சுரங்கம். குறிப்பாகத் தமிழரின் நாகரிகப் பண்பாட்டு அடையாளம். நாகரீகத்தின் படிநிலையில் மகளிர், தான் வாழ்ந்த நிலம் சார்ந்த பண்புகளை ஒழுகலாகினர். சங்ககால மகளிரின் விளையாட்டுகள் மற்றும் ஆடை-ஆபரணங்கள் பற்றிச் சங்க இலக்கியத்தில் காண்போம்.

சங்க கால விளையாட்டு

சங்க கால மக்களின் விளையாட்டுகள் ஐவகை நிலமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பாகுபாட்டை ஒட்டி அமைந்துள்ளன. அந்நிலத்திற்குரிய பொருள்கள், விளையாட்டிற்குரிய பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால இலக்கியங்களில் தமிழ்கூறும் நல்லுலகம் இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருந்தது. இதனை;

“மாயோன் மேய காடுரை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல்.பொ.நூ.951)

என்ற பாடல் வழி அறிய முடிகிறது.



சங்ககால மகளிரின் விளையாட்டுகள்

சங்ககாலத் தமிழ் பெண்கள் தினைபுனம் காக்கையில் பொழுதுபோக்கிற்காகப் பலவகையான விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

ஊசல்

ஞாழல் மரக்கிளையில் தாழை விழுதால் கட்டிய ஊசலில் நெய்தல் மகளிர் விளையாடியுள்ளதை,

“ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழ்கயிற்றூ சறூங்கி” (அகம்.20.5-6)

என்ற பாடல் வரிகளும்,

தினைப்புனம் காக்கும் மகளிர் விளையாடுவதற்காக வேங்கை மரத்தில் ஊசல் கட்டியிருந்ந செய்தியினை,

“ஒண்டொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடுசினை யொழிந்து கோடிணர் கஞலிய
குறும்பொறை அயலாகு நெடுந்தாள் வேங்கை” (அகம்.368:3-5)

என்ற பாடல் வரிகளும் உணர்த்துகின்றன.

கழங்கு

கழங்கு என்பது சங்ககாலப் பெண்கள் தங்கள் இல்லங்களின் மேல்மாடத்தில் நூலால் வரிதலையுடைய பந்தையடித்து விளையாடியுள்ளனர். கழங்கு பற்றி புறநானூறு பாடல் ஒன்று உணர்த்துகின்றது.

“செறியாச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்” (புறம்-36)

பொன்னால் செய்த காய்களைக் கொண்டு கழங்காடி மகிழும் பெண்களைப் பற்றி இப்பாடல் உணர்த்துகிறது.

இதனையே பெறும்பாணாற்றுபடையும் கூறுகிறது.

“கூழுடை நல்லில் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ் பவைபோல்
பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க
... ... ... ... ...
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப உயர்நிலை
வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்” (பெ.ஆ.327-336)



கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி மெல்ல மெல்ல முத்தைப் போன்ற மணலிலே பொன்னால் செய்த கழலைக் கொண்டு விளையாடும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை இப்பாடலின் வழி அறியமுடிகிறது.

“கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோன்” (அகம்.49-1)

“கிளந்துணை யாயமொடு கழங்குட னாடினும்”(அகம்.17-2)

போன்ற பாடல்வரிகளும் கழங்கினை உணர்த்துகிறது.



ஆடைகள்

தற்பொழுது ஆடம்பரமான உலகில் ஆடை வகைகள் மிகுதியாக உள்ளன. எத்தனையோ வகையான வண்ண ஆடைகள் பருத்தி நூலால் நெய்யப்பட்டு முன்பு இருந்தன. இப்போது நெகிழியிலிருந்து கூட ஆடைகள் தயாரிக்கின்றனர். அறிவியல் வளர வளர ஆடை வளர்கின்றது. இன்று உலகில் சில பகுதிகளில் குறைந்த ஆடையுடைய மலைநாட்டு மக்கள் வாழ்கின்றனர். பெண்டிர் இடையை மறைத்தும், மார்பை மறைத்தும் மட்டுமே ஆடை அணிகின்ற நிலை இன்று கூட உண்டு.

தழை ஆடை

சங்க காலத்தில் தழை ஆடை உடுத்தும் மரபு இருந்தது. குறிஞ்சிப்பாட்டில் அதன் தலைவி தழையாடை உடுத்தியதைக் கபிலர் குறிப்பிடுகிறார்.

“பைவிரி அல்குல் கொய்தழை தைஇப்
பல்வேறு உருவின் வனப்புஅமை கோதைஎம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி” (கு.பா.102-104)

அடிவயிற்றை மறைப்பதற்காகத் தலைவி தழை உடையை அணிந்திருந்தாள் என்பது தெரிகிறது.

திருமுருகாற்றுப்படையில் குறமகள் தழையாடை உடுத்தியதும் தெரிகிறது.

“முடித்த குல்லை இலையுடை நறும்பு
செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு
சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்கல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரோடு” (தி.மு.ஆ201-205)

பட்டினப்பாலையிலும் இதுபோன்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

“பைந்தழை மா மகளிரோடு” (ப.பா.91)

காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவ சேரிப்பெண்டிர் தழை ஆடை உடுத்தியிருந்ததை இப்பாடல் கூறுகிறது.



ஆபரணங்கள்

ஒரு சமுதாயதயத்தின் நாகரீகத்தையும் வளர்ச்சியையும் காட்டுவன அணிகலன்கள். தொடக்கக் காலத்தில் இயற்கைப் பொருள்களாகிய தாவரங்களையும், செடி கொடிகளையும் மலர்களையும் ஆபரணம் போன்று அணிந்தனர். காதில் தளிரை அணிந்தனர். அதனைக் குழை என்று கூறினர். காதில் பூ இதழ்களை அணிந்தனர். பூ இதழ்கள் தோடு என்று பழங்காலத்தில் பெயர் பெறும். இப்போதும் காதணியைத் தோடு என்றுதான் கூறுகின்றோம். காழ் என்றால் விதை என்று பொருள், அரையில் சில் காழ், பல் காழ் என விதைகளை போன்ற பொருள்களை அணிந்திருந்தனர். காழ் என்பது மணிகளையும் குறித்தது அதனை மேகலை என்று கூறினர்.

பழங்காலத்தில் ஆபரணங்களை அணி, பூண், இழை, கலம் என்ற பல பெயர்களால் அழைத்தனர். அணிதல் என்பது ஆடை அணிதல் ஆகும். ஆடைகளையும் அணிகலன்களையும் கழற்றி மீண்டும் போட்டுக் கொள்ளலாம். ஆபரணத்தை அணிந்தவர்கள் நடக்கும் போதும், ஓடும் போதும் ஓசை கேட்டால் அந்த அணியைக் கலன் என்று அழைத்தனர். தோள்களிலும், கைகளிலும் தொடுக்கப்படுவதைத் தொடி என அழைத்தனர். ஒண்தொடி, ஆய்தொடி, செறிதொடி, பைந்தொடி என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இளம்பெண்கள் அணிந்த முன்கை வளையளைக் குறுந்தொடி என அழைத்தனர். சங்க மகளிர் அணிந்திருந்த அணிகலன்களைப் பற்றி மேலும் காண்போம்.

“சிறுகுழை துயல்வரும் காதின்” (பெ.ஆ.161)

ஆயன் மகள் காதுகளில் சிறுகுழை அணிந்திருந்தால் என்பதை பெறும்பாணாற்றுப்படை கூறுகிறது.

“புனல்ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்” (பெ.ஆ.312-316)

மகளிர் நீராடும் போது தன் காதணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நீராடுகின்றனர். அக்காதணியை மீன்கொத்திப் பறவை தனக்கு உணவு எனக் கருதித் தூக்கிக்கொண்டு சென்றுவிடுகின்றது.

“நூலின் வலவா நுணங்கு அரில்மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய” (பொ.ஆ.161-162)

கரிகால் வளவன் பாடினிக்கு முத்துக்களோடு பொருந்திய பொன்னாலான மாலையைக் கொடுத்தான் எனத் தெரிகிறது.

“பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு” (ம.கா.681)

இப்பாடல் மூலம் மதுரை நகரத்து மகளிர் முத்துக்கள் பொருந்திய மாலை அணிந்திருந்தனர் எனத் தெரிகிறது.

“நுண்பூண் ஆகம்வடுக்கொள முயங்கி” (ம.கா.569)

மேலே கூறியது போல் மதுரை நகரப் பரத்தையரும் அணிந்திருந்தனர் என்பது இப்பாடல் மூலம் தெரிகிறது.

“திருந்துகோல் எல்வளை”(கு.பா.167)

குறிஞ்சி நிலத்தலைவி ஒளி பொருந்திய வளையலை அணிந்திருந்தாள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

முடிவுரை

சங்ககாலத்தில் மகளிர் விளையாட்டுக்களை அம்மக்களின் பண்புகளுக்கேற்ப விளையாட்டினைத் தேர்ந்தெடுத்து பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே விளையாடியுள்ளனர் என்பது புலனாகிறது. சங்ககாலத்தில் மகளிர் ஆடை - ஆபரணங்கள் சமுதாயதயத்தின் நாகரீகத்தையும் வளர்ச்சியையும் தங்களின் செல்வங்கள் மிகுதியாக இருந்தமையையும் புலப்படுத்துகிறது.

குறிப்புகள்

அகம் - அகநானூறு

புறம் - புறநானூறு

பெ. ஆ - பெரும்பாணாற்றுப்படை

கு. பா - குறிஞ்சிபாட்டு

தி. மு. ஆ - திருமுருகாற்றுப்படை

ப .பா - பட்டினப்பாலை

பொ. ஆ - பொருணராற்றுப்படை

ம. கா - மதுரைக்காஞ்சி


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p29.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License