இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

37. ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதைகளில் சமூகப் பதிவுகள்


சி. சண்முகவடிவு
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஒசூர்.

முன்னுரை

சமகால மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை, நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தொடர்பான செய்திகளைப் பதிவு செய்யும் ஆவணங்களாக இலக்கியங்கள் அமைகின்றன. காலப்போக்கில் இலக்கியங்களின் வடிவங்கள் மட்டுமல்லாது பொருளிலும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு. இதனூடாகக் கவிதை நோக்குகையில் அதன் வளர்ச்சிப் படிநிலையில் நம் முன் விரியும் தமிழில் நவீனக் கவிதையின் தொடக்கத்தைத் தேடத் தொடங்கினால் பாரதி, வள்ளலார், சித்தர்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, விடுதலைக்கான சிந்தனையை எல்லாத் தளங்களிலிருந்தும் மக்களிடையே கொண்டு வந்து குவித்ததின் வழியாகக் கவிதை பல தளங்களிலும் பயணிக்கக் தொடங்கியது. அந்த வகையில் எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய கவிதைகள் பெண்ணியம், தலித்தியம், ஏகாதிபத்தியம் உலகமயமாக்கல் என விரிந்து பறந்து செழித்தது. படைப்பு என்பது சமூக, சூழலின் தாக்கத்தால் உருவானவையாகும். இருந்த போதிலும், ஆண், பெண் வெளிப்பாடுகள் வேறுபாடுகளைக் கொண்டே அமைகின்றன.

பெண் எப்போதும் பிறரைச் சார்ந்தே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அதற்கு அடிப்படை அவர்களின் பொருளாதாரச் சுய சார்பின்மையே ஆகும். இக்காரணத்தினால் தன் விருப்பம், கனவு, எல்லாவற்றையும் இழக்கிறாள். தன் மீதுசெலுத்தப்படும் ஆதிக்கத்தைப் பெண் வெறுப்புடன் எதிர் கொள்கிறாள். பெண்ணின் இவ்வலிகளை ஒரு பெண்ணால் தான் இயம்ப முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் நவீனப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கவிஞர் மட்டுமன்றி, கட்டுரையாளர், சிறுகதையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் என்ற பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. இவர் எழுதிய சரஸ்வதியின் ஆயுத எழுத்து என்ற கவிதை தொகுப்பு மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பெண்ணின் ஊன்றுகோல் கல்வி

‘அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு’ என்ற நிலை மாற்றம் அடைந்தாலும் கூட, முழுமையாக, முழு சுதந்திரத்தோடு பெண்களுக்குக் கல்வி போதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் வெற்றி பெற, வெற்றி பெற்ற பெண்கள் அவர்கள் கற்ற கல்விதான் ‘கை’ கொடுத்தது என்பது அவர்களது வரலாறு பேசுகின்றது. அதனால் பெண்கள் கல்வி பயில்வது அவசியம் என்பதை,

“பெண்ணுக்குக் கதிமோட்சம்
கல்விக்கோள் இல்லை
கல்விக்கோள்
கல்விதான் முதல் கணவன்
கைத்தலம் பற்றுபவன் இரண்டாவதே
புதியமனுதர்மம் எழுதினோம்” (1)

என்றுபெண்ணின் மனஆதங்கத்தை முன் வைக்கின்றார். அதாவது, பெண்களுக்கு வாழ்வில் வெற்றிக்கனியைப் பறிக்கக் கல்வி அவசியம், கல்விதான் கணவன். அப்பொழுதுதான் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் அறிவும் வந்தடையும், பெண்ணினம் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிறப்பு முதல் இறப்பு வரைபெண்ணின் செயல்பாடு தந்தை, சகோதரன், கணவன், மகன் எனஆண்களின் பிடியில் பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து பெண் வெளிவர ஒரே வழி கல்விதான் என்பது தெளிவாகின்றது.



பெண்மை மென்மை

பெண்கள் என்றாலே மென்மை உள்ளம் கொண்டவர்கள். கடுஞ்சொல் பேசாதவர்கள். எதையும் சகித்துக் கொள்ளக் கூடியவர்கள். குடும்பத்தைக் காப்பாற்றும் விளக்கு. ஆணை விட மேலான குணங்களைக் கொண்டவள் என்றெல்லாம் கூறி அடிமையாக்கிச் சுகம் காண்பது ஆண்கள் மனதளவில் பதிந்து விட்டது. பெண்களும் ஆண்களின் மகுடி வார்த்தைக்கு ஆட்பட்டப் பாம்பாக மாறிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி அடிமைப்படுத்தி விடுகின்ற நிலையை,

‘மானும் மலரும்
தேனும் இல்லை
மனுஎனஉரைப்போம்
பொன்னும் பூவும்
புதிரும் இல்லை
தெய்வமும் தாசியும்
வேசியும் இல்லை
பெண்களும் மனிதப் பிறவிகளே
பெண் ஒரு பாதி
ஆண் ஒரு பாதி
விரிப்போம் மனிதர் சிறகுகளே’ (2)

என மான், மலர், கடவுள் என்றெல்லாம் கூறிப் பெண்ணைக் கூண்டுக்கிளியாக மாற்றி இருப்பதைப் பார்க்க முடிகின்றது. அதனால் பெண்கள் விழிப்படைய வேண்டும் என்பதையும், இச்சமுகம் இருபாலருக்கும் உரியது, சமஉரிமை அளிக்க வேண்டும் என்பதையும் சிறைபட்ட கிளியை வெளிவரவும் மனச்சிறகிற்கு வழிகாட்டுகின்றார் ஆசிரியர்.

பெண் உணர்வை ஆணுக்கு உணர்த்துவது

பெண்களைப் பிறப்பு முதல் இறப்பு வரை துயர வடுக்களே ஆக்கிரமித்துள்ளன. பெண் சிசுவதை, பாலியல் வன்முறை, வரதட்சனைக் கொடுமை, முதிர்கன்னி, ஆணாதிக்கப் போக்கு, இடைவிடாது வேலை வாங்குவது என அனைத்து நிலையிலும் பெண் தண்டிக்கப்படுகின்றாள். இதற்கெல்லாம் ஆணின் அதிகாரம், அவனுக்கென்ற அடிமையாகக் கருதுவதுமாகும். இதை,

‘அடுத்து வரும் ஜென்மத்தில்
ஆணாகப் பிறந்திருந்தால்
பாடாய்ப் படுத்தாமல்
பாவையினைத் துணை சேர்ப்பேன்
அறுவை சிகிச்சையிலே
இப்போதே ஆணானால்
தட்சனையும் ‘லிஸ்ட்’டுமின்றி
பெண்ணை மணந்திருப்பேன்’ (3)

என்ற வரிகள் ஆண்கள் பெண்களின் நிலையில் இருந்து சிந்தித்துப் பார்க்க வழி காட்டுகின்றார். பெண் வாழும் வாழ்க்கையை ஆண் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் பெண்ணின் துன்பநிலை என்றும், ஆண் பிறவி பெண் எடுத்தால், பெண்களுக்கு நிகழும் வரதட்சனை, பாலியல் போன்ற துன்பங்கள் எல்லாம் நீக்குவர் என்பதை இங்குக் காண முடிகின்றது.



கயிறு தூக்கும் கயிறாகட்டும்

தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயம் வரும் பொழுதும், தனிச் சொத்துரிமை வரும் பொழுதும் இச்சமுகத்தை ஆண் தன்னுடையதாக்கிக் கொண்டான். அதன் நீட்சி புலிப் பல்லை ஆண் அணிந்தவன் பிற சமயத்தவரால் பெண்ணும் தாலி என்ற அடிமைச் சங்கிலியைஅணிய வேண்டியதாகி விட்டது. அதனால் அவளின் கனவுகள் யாவும் தூக்குக்கயிறாக மாற்றம் அடைந்து விட்டது என்பதை ஆசிரியர்,

‘கயிறு
தூக்குக் கயிறாக வேண்டாம்
உயரே
தூக்கும் கயிறாகட்டும்” (4)

என்ற வரிகளினால் பதிவு செய்கின்றார். பெண்ணுக்கு அணிவிக்கப்படும் கயிறானது அவளை வாழ்க்கையில் துன்பங்களில் இருந்து உயர்த்தும் கயிறாக அமைந்தால் பெண்களின் வாழ்க்கை நலமாக அமையும் என்பதைக் கூறுகின்றார்.

முதிர்க்கன்னி

பெண்கள் வேலைக்குச் சென்றே தங்கள் வாழ்வில் பாதிநாட்களைக் கழித்து விடுகின்றனர். சிலர் தன் தந்தையின் துன்பத்தைப் போக்கக் காலம் கடத்துகின்றனர். சகோதர சகோதரிகளுக்காகச் சிலர் காலம் கடந்து திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஆடவன் வருவான் கரம் பற்றுவான் என்று நினைத்த நிலை முற்றிலும் ஏமாற்றமே. இந்த நிலைக்கு ஆறுதலாக அமையும் ஆசிரியரின் வரிகள்,

“வனவாசம் தாண்டியும்
வந்துசேராதராமனைத் தவிர்த்துக்
கிளம்புகிறாள் சரஸ்வதி
தானேவில்லேந்தி” (5)

என்று பெண்கள் இனியாவது உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடு என்பதை வழிபடுத்துகின்றார்.

பெண்ணுடல் புண்ணுடலா?

பெண்ணைக் காமப் பொருளாகப் பார்க்கக் கூடிய மரபு இன்றும் உள்ளது. பெண்கள் என்றால் ஆணின் சுகத்துக்காகவும், அவனுக்குப் பணியாற்றவும் தான் கடவுள் படைத்தான் என்ற நிலை காண முடிகின்றது. அதனால் தான் இன்று பாலியல் வன் கொடுமை. இது சிறுமியர்களையும் விட்டு வைக்காமல் பெண்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அவலம் யாவரும் அறிந்ததுதான். இதை,

“கழுத்துக்குக் கீழ்த்தான்
பெண்ணின் பயன்பாடா?
ஆம் எனில்
மயக்கத்துக்கு
முண்டங்கள் போதுமோ…?” (6)

என இழிவுப் பண்பு கொண்ட ஆணைப் பார்த்துப் பெண் கேட்பதாக அமைத்துள்ளார். அதாவது, உன்னுடைய ஆசைக்கு என்றால் பிணம் போதாதா என்கின்றார். இன்று பிணத்தையும் விட்டு வைக்காத காமுகர்களைச் சாடியுள்ளார். இதை எதிர்த்துப் போராடும் எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வரவேண்டும் என்பதையே ஆற்றுப்படுத்துகின்றார்.



முடிவுரை

பெண்களை முன்னேற்றுவது கல்வி. அக்கல்வியை ஒவ்வொரு பெண்ணும் கற்றால் தான் வாழ்வில் தன் காலில் நிற்கமுடியும் என்பதைக் காட்டுகின்றது. சமுகம் பெண்ணை அடிமைப்படுத்த முயல்வதை விடக் கரம்பிடித்த ‘கை’ வாழ்வில் உயரத் தூக்குவதாக அமைந்தால் சிறப்பாக அமையும் என்பதை அறிய முடிகின்றது. பெண் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வது ஆணினத்திற்காக. ஆனால், அவ்வினம் இவளை ஒரு எலும்பு தோல் போர்த்திய உடம்பாகப் பார்ப்பது அவமானத்திற்கு உரியது என்பதைச் சமுதாயத்திற்கு ஆசிரியர் உணர்த்தியிருப்பது புலனாகின்றது.

குறிப்புகள்

1. ஆண்டாள் பிரியதர்ஷினி, சரஸ்வதியின் ஆயுத எழுத்து, குமரன் பதிப்பகம், ப.20

2. மேலது ப.12

3. மேலது ப.25

4. மேலது ப.39

5. மேலது ப.89

6. மேலது ப.53


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p37.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License