இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

39. புனிதவதியின் இறைச் சிந்தனை

ப. சரண்யா
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

பக்தி இலக்கியங்கள் பல்கிப் பெருகிய காலம் பல்லவர்கள் காலம். இக்காலத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி சைவ, வைணவத் தொண்டின் மூலம் பைந்தமிழை வளர்த்தனர். இவர்களுள் புனிதவதியான காரைக்காலம்மையாரின் இறைச்சிந்தனையும், புதுமைக் கருத்துக்களையும் ‘அற்புதத் திருவந்தாதி” வழி ஆராய்வோம்.

அம்மையின் வாழ்வும் அருள் பாடல்களும்

காரைக்காலில் தனதத்தனின் மகளாய்ப் பிறந்தவர். இளமை முதல் ஈசனின் பெருமையினை எண்ணியே வாழ்ந்தவர். பரமதத்தனின் மனைவியாய்ப் பாங்குடன் பரமனின் அடியவர்கட்குத் தொண்டு செய்து வாழ்ந்து, மாங்கனியால் கணவன் பிரிய பேயுருவைப் பெற்றவர் காரைக்காலம்மையார்.

1. அற்புதத் திருவந்தாதி
2. மூத்த திருப்பதிகம்
3. இரட்டை மணிமாலை

போன்ற நூல்களில் வழி சிவபெருமானைத் துதித்தவர். பண்ணோடு மகேசனைப் பாடி அருளிய நாயன்மார்களுள் குறிப்படத்தக்கவர். காலத்தால் முற்பட்டவர். சுடலை வருணனை அரவம் குறித்த அச்சத்தினை மிகுதியும் வெளிப்படுத்தியுள்ளார்.

இறைவடிவம்

இறைவனின் உருவச் சிறப்பினை கற்பனை நயத்தோடு

“காலையே போன்றிலங்கு மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு-மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்க
வீங்கிருளே போலு மிடறு”

என்று புகழ்ந்தவர் பிரிந்தோரிடத்தில் உன் உருவம் எது? என்று வினவுகிறார். இறைவா? உன் வடிவத்திற்கு நிகர் இல்லை என்றார். மேலும்;

“நீ எந்தெந்த வடிவத்தில் இறைவனைக் காண
விளைகின்றாயோ அந்தந்த வடிவத்தில் நானே
காட்சி தருவேன்”



என்ற கீதையின் கருத்தினையே
“எக்கோலத் தெவ்வுருவா யெத்தவஎகள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்”

என்று குறித்துள்ளார்.
“காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் காண்பார்க்கும்
சோதியாய்ச் சிந்தனையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரண்”

என்று இறைவனின் எளிமையினை எடுத்தியம்பியுள்ளார். நாயன்மார்களுள் ஒருவரான இவரும் திருமாலும், நான்முகனும் காணாத தன்மையினை உடையவர் ஈசன் என்றாலும் அடியவர்கட்கு அருட்காட்சி நல்குபவர் என்று குறித்துள்ளார்.

தனித்துவம் மிக்க கருத்துக்கள்

பேயுரு பெறல்

நாயன்மார்களுள் பேயுருவினை வேண்டிப் பெற்றவர்.

“… … … பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமன்தாள் பரவிநின்றார்” என்று சேக்கிழார்.

அற்புதத் திருவந்தாதியில் எம்மானார் எலும்பு மாலையணிந்து பேயும் தானுமாய்ச் சுடுகாட்டில் ஆடுபவர் என்கிறார். மேலும் இறைவனை உணராதவரே,

“பூக்கோல மேனிப் பொடிபூசி யென்பணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்”

என்கிறார்.

மற்றொரு பாடலில் பேய்களுடன் பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் கழலாட தாண்டவம் ஆடும் இடத்திற்கு உமையம்மையோடு செல்ல வேண்டாம் என்கிறார். பேராசிரியர் மது. ச. விமலானந்தம். இலக்கிய வரலாற்றில் காரைக்காலம்மையாரின் பாடல்களில் சுடலை வருணனை மிகுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையார் இளமை நீங்கி முதுமையை விநாயகரிடம் வேண்டிப் பெற்றதாக செவிவழிச் செய்தி நிலவுகிறது. மனித உடலை விடுத்துப் பேயுருவினைப் பெற்றதோடு இறைவனின் பேய்க்கோலத்தினையும் பாடியுள்ளார்.



வெறுப்பின்மை

கணவனுக்காக வாழ்ந்து பிரிந்த பின்பு பக்தியில் திளைத்தவர் என்றாலும், மற்ற நாயன்மார்களைப் போல் ‘வெறுத்தேன் மனை வாழ்க்கை’ என்றோ எம்பெருமானாகிய சிவனை வழிபடாது வாழ்நாளை வீண்நாளாகக் கழித்துவிட்டேன் என்றோ பாடவில்லை. பிறசமயத்தைச் சார்ந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர்கள் கடந்த கால வாழ்வை வீணாகக் கழித்ததற்காகக் கழிவிரக்கம் கொள்வதைப் போல் பாடவில்லை, “இறைவனைக் கண்டால் கண்குளிரக் கண்டும், கையாரத் தொழுதும், எண்ணார எண்ணத்தால் எண்ணியும், வானவனே! தீயில் ஆடுபவனே” என்று கூறி மகிழ்வேன் என்கிறார். ஈசனின் பெருமையினைப் பாடுவதே பெருமை என்கிறார்.

வீடுபேறு

சிவனை வணங்கினால் வினைப்பயன் தொடராது பிறவியாகிய கடலைக் கடக்கலாம், காலனை வெல்லலாம், கடுநரகத்தை கைவிட்டு விலகலாம், சிவனை அன்றி வேறு எவரையும் வணங்கமாட்டேன் என்றும்

“அண்டம் பெறினும் அதுவேண்டேன்”

என்றும் குறித்துள்ளார். இறைவனுக்கு தொண்டு செய்வதே பெறும்பேறு என்கிறார். இக்கருத்தினையே சேக்கிழார்

“கூடும் அன்பினில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டா விறலினர்”

என்றார். ஆழ்வாரோ,

“இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே”

என்றார்.

அரவு - அச்சம்

ஈசனின் தோற்றச் சிறப்பினைப் புகழும் அதே வேளையில் அரவினை அணிய வேண்டாம் என்கிறார்.

“அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் தீய அறவொழியச் சொல்”

என்றும் பரிவோடு வேண்டுகிறார்.

மதயானையின் தோலைப் போர்த்தியிருப்பதையோ, எலும்பு மாலை அணிந்திருப்பதையோ கண்டு அஞ்சவில்லை. அரவத்தைக் கண்டு அஞ்சியதோடு அரவம் மலைமகளிடம் சினம் கொண்டால் என் செய்வீர். பிறைசூடிய பெம்மானே பிறை வளராதிருப்பதற்குப் பாம்பே காரணம். ஆரவினை ஆபரணமாக அணிந்து சென்றால் பிச்சையிட மக்கள் அஞ்சுவர் என்கிறார். இறைவனின் வாகனம், கொடி உள்ளிட்ட அனைத்தும் ஆணவத்தை அடக்கியும், அன்பின் மிகுதியால் ஏற்கப்பட்டதும் ஆகும். காரைக்காலம்மையோ அரவின் அச்சத்தினை பல விதங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.



வரலாற்றுப் புதுமை

பிறந்து மொழி பயிலத் தொடங்கிய நாள் முதல் விரிசடையோன் புகழ் பாடியவர் கணவனால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர்.

“மானிளம் பிணைபோல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான்உம் தருளால் வாழ்வேன் இவ்விளங் குழவிதானும்
பான்மையால் உமது நாமம் என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்”

என்று பாடியுள்ளார் சேக்கிழார்.

மேலும் இறைவனாலே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். திருக்கயிலையைக் கைகளால் கடந்து சென்றவர். அந்தம் முதலாகத் தொடுக்கின்ற அந்தாதியில் இறைவனைப் பாடி மகிழ்ந்தவர். அறுபத்து மூவரில் ஏனையோர் சிவ ஆலயங்களில் நின்ற கோலத்தில் இருக்க, இவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் காணப்படுவது இவரது தனித்துவங்களில் தலையாயதாகும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p39.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License