இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

46. வண்ணங்கள் குறித்த மனித சிந்தனை வளர்ச்சி


முனைவர் ப. சிலம்பரசன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.

முன்னுரை

வண்ணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. ஆதிகாலந்தொட்டே மனிதன் இயற்கையில் காணப்படும் வண்ணங்களால் கவரப்பட்டு அதை ரசித்தும், அவற்றை இனங்கண்டு பயன்படுத்தியும் வந்துள்ளான். பண்டைக் குடிகள் வண்ணங்களால் ஈர்க்கப்பட்ட தன்மையினை ஓவியங்கள், சங்கச் செய்யுள்கள், சாயக்கலை ஆடை, அணிவகைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். மாதர்கள் வண்ணங்களுக்குச் சில மதிப்பீடுகளை ஏற்றி வைத்து, அவற்றுக்கான பண்புக் கூறுகளை குறியீடாக வைத்திருப்பதை இலக்கியங்களின் வாயிலாகக் காண முடிகிறது.

வண்ணம் - பெயராய்வு

வண்ணம் எனும் இச்சொல் தொல்காப்பியர் காலம் முதற்கொண்டே பயின்று வந்துள்ளது. தொல்காப்பியர் இச்சொல்லைப் பொருண்மை அடிப்படையில்,

1. இசைத் தொடர்பான குறிப்புகளை வெளிப்படுத்துதல்

2. நிறம் பற்றிய குறிப்புகளை வெளிப்படுத்துதல்

என இருவகை வண்ணங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

நிறம்

வண்ணத்தைக் குறிக்கும் சொற்களுள் ‘நிறம்’ என்பது முக்கியமான ஒன்றாகும். தொல்காப்பியக் காலத்தில் ‘நிறன்’ என்ற சொல் மிக அருகியே பயன்பட்டுள்ளது.

“பசப்பு நிறனாகும்” (தொல்.உரி.10)

எனும் நூற்பாவின் மூலம் இச்செய்தியை அறியலாம்.

வண்ணம், நிறம் என்னும் இரு சொற்களும் ஒத்த பொருள் உணர்த்தும் வகையில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், வண்ணம் எனும் சொல்லாட்சியே தொன்மை நிலையில் தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை வழங்கப்பட்டு வரும் சிறப்பை உணரமுடிகிறது.

வண்ணம் அறியப்படுதல்

வண்ணம் என்பது ஒளியோடு தொடர்புடைய அறிவியலாகும். ஒளியின் வேறுபாடுகளே வண்ணம் என்று வடிவெடுக்கின்றன. இந்த வண்ணங்கள் இல்லாவிடில் ஒளியை அடையாளம் காண இயலாது. வண்ணங்களைப் பற்றி ஆராயும் இயலை ‘Chromatics’ என்பர். தமிழில் இதனை ‘வண்ணவியல்’ எனலாம். ஐம்புலன்களுள் ஒன்றான கண்ணிலுள்ள ஒளியுணர் நரம்புகளில் ஒளி விழும்போது உண்டாகும் ஒருவகையான உணர்வே வண்ணத்தை அடையாளப்படுத்துகிறது. இயற்கையாகவே படைப்பில் உள்ள வண்ணங்கள் மற்றும் சாயமிடல் (Dyeing), ஓவியந்தீட்டல் அல்லது அச்சிடல்மூலம் நிறமிகளைக் (Pigments) கொண்டு உருவாக்கப்படும் வண்ணங்கள் அனைத்தும் கண்ணில் விழும் ஒளியின் தன்மையினால் உருவாக்கப்படுகின்றன.



வண்ணங்களும் குறியீடுகளும்

மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி; மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழிகளின் வகைகளுள் ஒன்றாக நிறத்தைக் குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இலக்கியங்களில் இந்நிறங்களைக் குறயீடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘நிறம் என்ற சொல் தொடக்கக் காலத்தில் பொதுத்தன்மையில்லாமல் சிவப்பை மட்டுமே பொருளாகக் கொண்ட இரத்தத்தின் நிறத்தையே குறித்தது’ என்று கோசம்பி குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் செந்நிறம் குறித்த பதிவுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க அக இலக்கியத்தில் மகளிர்தம் பாலியல் உணர்வை வெளிப்படுத்த ‘செந்நிறக் குறியீடு’ பயன்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வணி குறியீடு

தலைவன் பரத்தையர் காரணமாகப் பிரிந்த பிரிவின்கண் தலைவிக்குப் பூப்புத் தோன்றிய பன்னிரு நாட்களும் தலைவியை விட்டுப் பிரிந்துய்தலும் கூடாது என்கிறது தொல்காப்பியம்.

“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன் றுரையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான” (தொல்.கற்.46)

மேற்கண்ட நூற்பாவிற்கு; ‘தலைவிக்குப் பூத்தோன்றி மூன்று நாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று. இதனாற் பயன் என்னயெனின் அது கருத்தோன்றுங்காலம்’என்று உரை வகுத்துள்ளார் இளம்பூரனார்.

தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்கு உணர்த்த சேடியர் கோலங்கொண்டு பரத்தையர் மனைகட் செல்வாள். இத்தகைய சேடியர் கோலம் தான் செவ்வணி. இக்குறியீடுகள் தான் தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்கு உணர்த்தும். மேலும் பரத்தையற் பிரிவின் வகையில் உணர்த்தி உணரும் ஊடற்குரிய கிளவிகள் பதினொன்றில்.

“செவ்வணி யணிந்து சேவடியை விடும்புகழி” (நம்பி.205:7)

எனும் பாடலடியின் மூலம் செவ்வணி குறியீடு நிகழ்வு புலப்படுத்தப்படுகிறது. எனவே பூப்புச் செய்தியை அறிவிக்க ‘சிவப்பு நிறம்’ பயன்படுத்தியிருப்பது இலக்கணத்தின் வாயிலாகத் தெளிவாகிறது.



சங்க இலக்கியத்தில் செவ்வணிக் குறியீட்டு நிகழ்வு கற்புக்கால ஊடலில் பரத்தையர் பிரிவின்கண் தோன்றியதை,

“தோள்புதிய உண்ட பரத்தை இல்சிவப்புற
நாள்அணிந்து உவக்கும் சுணங்கறை யதுவை” (பரி.9:19-20)

என்று பரிபாடல் உணர்த்துகிறது. தலைவி பூப்பெய்திய செய்தியைப் பெண்கள் வண்ண நடையில் நாகரிகமாக வெளிப்படுத்த சிவந்த அனிகலன்களையும் சிவந்த ஆடையையும் தோழியை அணியச் செய்து தலைவனிடம் பரத்தைச்சேரி வழியே அனுப்பினாள் என்று பாடப்பட்டுள்ளது. இத்தகைய செயலில் ‘செவ்வணி நிகழ்வு’ குறிப்பாகப் பதிவாகியுள்ளது.

மேற்கூறிய கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நற்றிணைப் பாடலில்,

“எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
... ... ... ... ... ஒண்செங் காந்தள்
வாழை அம்சிலம்பின் உம்பு படக்குவை,
யாழ் ஓர்த்தன்ன இன்குரல் இனவண்டு”

என்ற பாடலில் தலைவி பூப்பு நீராடிய செய்தியைப் பரத்தையர் உடனிருக்கும் தலைவனுக்கு உணர்த்தும் வகையில் தனது தோழிக்குச் செந்நிற ஆடை, அணிகலன்கள், மலர்கள் ஆகியவற்றால் ஒப்பனை செய்து அவளைப் பரத்தையர் வீதியின் வழியே செல்லச் செய்கிறாள். தோழியின் இச்செவ்வணி அடையாளத்தைக் கண்ட தலைவன் காலம் தாழ்த்தாது தலைவியுடன் வந்து சேர்ந்து மகிழ்வான் என்பது செவ்வணிக் குறியீடு மூலம் புலனாகிறது. மாதவிலக்குக் காலங்களில் பெண்கள் சிவப்பு நிறத்தை அணிந்து கொள்வது மேற்கண்ட செய்திகளின் மூலம் அறியமுடிகிறது. இதுபோன்ற வழக்கம் பழங்குடி இன மக்களிடமும் இருந்தமையை அறியமுடிகிறது.

“ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல பழங்குடி மக்கள் மாதவிலக்கு காலத்தின்கண் பெண்களுக்குச் சிவப்பு நிறத்தைப் பூசிவிட்டார்கள். கபிர் பெண்களும் அப்படியே. இந்தியாவில் மாதவிலக்கு கண்ட பெண்கள் அந்த இரத்தத்தில் தோய்ந்த கைக்குட்டையைக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள்”

என்ற இக்கருத்தின் மூலம் புலவர்கள் தாம் கூறவந்த செய்தியைச் சிவப்பு நிறக் குறியீட்டின் வழி வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.

பொன்மை நிறக் குறியீடு

சங்க இலக்கியத்தில் பசலை நோய் பெரும்பாலும் களவொழுக்கத்தில் தலைவியின்பால் நிகழ்வதாகும். இதற்கென ஒரு தனி நிறம் இல்லை. தலைவியின் இயல்பான நிறத்தில் காணப்படும் மாற்றமே பசப்பு நிறமாகும். களவொழுக்கத்தில் தலைவன் பிரிவிற்கு ஆற்றாத தலைவி அவன் வரையாது விடுவானோ என்னும் அச்சமிகுதியும் அவள் உடல்நிற வேறுபாட்டிற்குக் காரணம் எனக் கூறலாம். தலைவன் தான் சென்ற பருவத்தே வராமையால் வருந்திய தலைவி, தான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவனிடம் கூறினால் நலமாகும் என்று தோழிக்குக் கூறுகிறாள்.

“நீர்வார் பைம்புதர் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டே”

எனும் இவ்வடிகள் மூலம் தலைவியின் பாலியல் உணர்ச்சிப் புறநிலைக் குறியீடுகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு குறியீடுகளின் வாயிலாக வெளிப்படுத்துவதற்கு இங்கு பொன்மை நிறம் பயின்று வந்துள்ளது. தலைவன் பிரிவால் தலைவிக்குப் பசலை நோய் வந்துவிட்டது. இதைத் தலைவனிடம் சென்று தோழியை உணர்த்தச் செய்வதன் பொருட்டு பீர்க்க மலரைக் காட்ட வேண்டும். இத்தகைய பீர்க்க மலரின் நிறம் தலைவனுக்குப் பசலை நோயின் நிறத்தை உணர்த்தும். எனவே இங்கு தலைவியின் பாலியல் உணர்வைப் புறநிலைப் பொருள்கள் வழி அதாவது பொன்மை நிறக் குறியீடு வழி தலைவனுக்கு உணர்த்தும் நோக்கு அறியமுடிகிறது.



வண்ணங்களும் ஓவியக் கலையும்

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து அவர்கள் வளர்த்தெடுத்த ஒவ்வொரு நாகரிகத்திலும் வண்ணங்கள் ஏதோவொரு வகையில் இணைந்து வந்துள்ளன. ஆதிமனிதன் தான் வரைந்த குகை ஓவியங்களுக்கு வண்ணங்கள் தீட்டப் பச்சிலை சாறுகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே மனித வாழ்வில் வண்ணங்கள் பற்றிய சிந்தனை வளரத் தொடங்கியது.

மக்கள் வாழும் உறைவிடங்கள் மன்குடிசையாயினும் மாளிகையாயினும் கலை உணர்வோடு வண்ணங்கள் பூசப்பட்டு வெண்கோலமிட்டுச் செம்மண் பூசி, எழிலுற வாழ்ந்து வந்தனர். சங்க இலக்கியக் காலத்தில் வண்ணம் தீட்டப்பெற்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததை,

“ஓவத்தன்ன வினைபுனை நல்லில்” (அகம் .98:11)

“புனைவினை நல்லில்” (அகம்.141:3)

“ஓவு கண்டன்ன இல்வரை” (நற்.268:4)

எனும் சங்க அக இலக்கியப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.

இறைக்கோவில்களின் சுவர்கள் மீது பூக்கள் மலர்ந்த கொடிகளும் அழகிய பாவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றிருந்ததை

“... ... ... ... ... கேழ்கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோள் சுவர்ப்
பாவையும் பலியெனப் பெறா” (அகம்.369:6-8)

“புனைகவர்ப் பாவை” (நற்.252:6-7)

சங்க அக இல்கியங்கள் சான்று காட்டுகின்றன.

வண்ண ஓவியங்களை வரைவதற்குத் துணியில் வண்ணந் தோய்ந்த எழுதுகோலினைப் பயன்படுத்தினர். இதனை,

“ஓவமாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய துகிலிகை” (நற்.118;7)


என்று நற்றிணையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார். இக்கருத்தினை ஒட்டியே, சிலப்பதிகாரத்தில் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற கோவலனுக்குத் தாழை மடலில் பூவரும்பின் முனை கொண்டுச் செம்பஞ்சுக் குழம்பால் தோய்த்து மாதவி வண்ண மடல் வரைந்தாள். இதனை இளங்கோவடிகள் பின்வருமாறு காட்டுகிறார்.

“சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை
வெண்பூ மல்லிகை வேருட் மிடைந்த
அம்செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர்பூழ் தாழை முடங்கல் வெண்கோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் சூண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவியற் ஆகி
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திதைக் கொழுமுகை அணி கைக்கொண்டு
... ... ... ... ... ... ... ... ... ... ” (சிலம்பு.வேற்.45-55)

இதுவே காப்பிய இலக்கியத்தில் முதல் வண்ணக் கடிதமாகும்.

முடிவுரை

வண்ணங்களுக்கும் சமூகங்களுக்கும் தொடர்பு இருப்பதை வண்ணங்களுக்குப் பல சொற்கள் இருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். வண்ணங்கள் சமூகத்தோடு கலந்திருப்பது போல் தனிமனிதனோடும் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன. வண்ணங்கள் தமக்குரிய சமூக மதிப்பீடுகளாலும் சமூகம் சாற்றி வைத்துள்ள பண்புக்குறியீடுகளாலும், மனிதர்களுக்கு பல்வேறு மன உணர்வுகளைத் தூண்ட வைக்கும் உந்துசக்திகளாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது..


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p46.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License