இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

91.திருக்குர் ஆன் - திருக்குறள் ஒப்பீடு


பா. ரம்ஜான்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை - 18

முன்னுரை

வாழ்க்கை என்பது செயல் வடிவமாகும். எல்லாச் செயல்களும் வாழ்க்கைக்குப் பொருந்தி வருவதில்லை. அறிவின் வழியாகச் சிந்தித்துச் செயலாற்றும் செயல்கள்தான் நேர்மையான வாழ்வை உருவாக்குகின்றன. ஆனால், அறிவே பல நேரங்களில் வழி தவறிவிடுகின்றது. அறிவு, கல்வி, கலை ஆகியவற்றை வழி தவறாத நிலையில் வைத்து, நேர்வழியில் அமைத்து நிலைநிற்கச் செய்வதற்கு மெய்யறிவு இன்றியமையாத் தேவையாக உள்ளது.

பிரபஞ்சம், வாழ்வு இவற்றின் அடிப்படை உண்மைகள், பண்பின் உறுதியான மதிப்புகள், மனித நலன்கள் போன்றவற்றைப் பற்றிய தெளிவான கொள்கைகள் ஆகியவற்றைப் பற்றித் தன் தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு இறைவன் அருளிய ஞானம்தான் மெய்யறிவு என்று அழைக்கப்படுகின்றது. மனித வாழ்க்கைக்கு வெறும் அறிவு மட்டுமே போதாததால் மெய்யறிவின் துணை அவசியமாகின்றது.

மாபெரும் கோள்கள் முதல் சின்னஞ்சிறு அணுக்கள் வரை - கடல்கள், மலைகள் முதல் பனித்துளிகள் வரை - மிகப் பெரிய மரங்கள் முதல் சிறு புற்கள் வரை - பொருத்தமான இடங்களில் சரியான முறையில் அமைக்கப்பட்ட மனித அங்கங்கள் முதல் தோலின் வியர்வைத் துவாரங்கள் வரை - ஆண், பெண் படைப்பு முதல் இனப்பெருக்க ஏற்பாடு வரை - அறிவாற்றல் முதல் ஐம்புலன்களின் இயக்கம் வரை அனைத்தும் இவற்றைப் படைத்த வல்லமை மிக்க ஒருவன் இருப்பதை நமது பகுத்தறிவும் ஏற்றுக் கொள்கிறது.

இஸ்லாம் - இலக்கியம் எனும் சொல்லின் பொருள்

“இஸ்லாம்” என்ற அரபிச் சொல்லிற்குக் “கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல்” என்பது பொருளாகும். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவனுடைய ஏவல்களை நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் நிரம்பி இருப்பதால் இதற்கு “இஸ்லாம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இலக்கியம் என்ற சொல் பிற்காலத்தில் தோன்றியதாகும். “எல்லே இலக்கம்” (தொல்: 745) என்ற நூற்பாவிலுள்ள ‘இலக்கம்’ என்ற சொல்லை, இலக்கு + அம் எனப் பிரித்து, ‘நோக்கத்தை உடையது’ என்று பொருள் கொள்ளலாம். பின்னர், இலக்கு + இயம் = இலக்கியம் ஆகின்றது. இது நோக்கத்தை இயம்புவது, கூறுவது, ஒலிப்பது என்று பொருள் கொள்ளப்படுகின்றது.



உலகில் எத்தனை பொருட்கள் உள்ளனவோ அத்தனையும் ஒரு நியதிக்கு - ஒரு சட்டத்திற்கு உட்பட்டிருக்கின்றன என்பதனை நம்மால் உணர இயலுகின்றது. மனிதனின் நிலையைப் பற்றிச் சிந்தித்தாலும் அவனும் இயற்கைச் சட்டங்களுக்கு உட்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. பெரிய பெரிய கோள்கள் முதல் சின்னஞ்சிறு அணுக்கள் வரையிலான அனைத்தையும் தன் பிடியில் வைத்துள்ள வல்லமை வாய்ந்த சட்டம், ஒரு பெரிய ஆணையாளனால் இயற்றப்பட்ட சட்டமாகும். இவ்வாறு அவனால் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மட்டும் கீழ்படிந்து அதை நிறைவேற்றுவதால் “இஸ்லாம்” என்று அழைக்கப்படுகின்றது.

இலக்கியம் மனித இலட்சியத்தின் உயிர்நாடி; இலக்கை உடையது இலக்கியம்; வாழ்க்கையின் எதிரொளிகளாகவும், சமுதாயத்தின் வளர்ச்சியைக் காட்டும் மைல் கற்களாகவும் இலக்கியம் திகழ்கின்றது. இலட்சியத்தை உடையதும் உரைப்பதும் இலக்கியம் ஆகும். இலக்கியம் ஒரு நுண்கலை; அதற்கென ஒரு தனித்தன்மை உண்டு; அஃது ஒரு நிறுவனம் போலவும் அமைப்பு போலவும் இயங்குகின்றது எனவும், பயிரினம் போல் வளர்கின்றது எனவும் ஒப்பியலார் விவாதிப்பர்.

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

அல் குர்ஆன் என்பது இஸ்லாமியத் திருவேதமாகும். இது வழக்கத்தில் குர்ஆன் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வேத நூல் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனால் அவனுடைய திருத்தூதர் முஹம்மது நபி வழியாகவும் அருளப்பட்டது. இப்புனித நூலில் உள்ளவை நபி பெருமானாருடைய கருத்துக்களோ வாசகங்களோ அல்ல, இறைவனின் வேத வசனங்கள்; அனைத்தும் அவனால் அறிவிக்கப்பட்டவையாகும்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நமது திருநாட்டில் நல்லறங்கள் அழியத் தொடங்கிய காலத்தில் அறங்களை உலகிற்கு எடுத்துரைக்கத் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும். திரு + குறள் = திருக்குறள். குறுகிய வடிவினை உடையது; முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் பெற்று குறுகிய வடிவினைக் கொண்டு இருப்பதால் “குறள்” எனப்படுகிறது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.

மனித வாழ்க்கையில் எதிர்ப்படும் முக்கிய பிரச்சினைகளை எல்லாம் விளக்கும் வேதநூல் திருக்குர்ஆன். சிறிதும் பெரிதுமாக 114 அத்தியாயங்கள் கொண்ட இவ்வேதத்தை குர்ஆன் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டாலும், அஷ்ஷிபா (அருமருந்து), அந்நூர் (போரொளி), அர் ரஹ்மத் (அருட்கொடை) போன்ற பெயர்களாலும் இது குர்ஆன் என்ற சொல்லால் வருணிக்கப்படுகின்றது. இது ஒரு நாட்டிற்கோ ஒரு காலத்துக்கு மட்டுமோ ஒரு மொழியினருக்கோ ஒரு இனத்தவருக்கோ உரியதல்ல. உலகம் முழுமைக்கும் பொது உடைமை இப்பெரு நூல்.

திருக்குறள் 133 அதிகாரங்களுடன் எல்லாச் சமயங்கட்கும் பொதுவாக நின்று அறம் உரைத்த நூல். தமிழர் தம் பொதுமைப் பண்பையும் எதிர்கால உணர்வையும் ஞால மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நிகழவிருக்கும் ஊழிகளுக்கெல்லாம் வையகத்து வாழ்நெறி இது எனக் கற்பிக்கின்றது. திருக்குறளின் பல சிறப்புகளில் ஒன்று எச்சமயத்தையும் சாராதது என்பதாகும்.



அன்பும் அன்புடைமையும்

அன்பு என்பது நுண்பொருள். அதைக் காட்டுவது இயலாதது; உணர்த்த இயலும். ஒருவரது உள்ளத்தில் இருக்கும் அன்பை வெளிக்காட்ட குர்ஆனும் குறளும் கருத்துக்களை உரைக்கின்றன.

“மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள்; (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங் கொண்டவனாக, பெருமையாளனாக இருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்” (திருக்குர் ஆன் - 4: 36)

இவ்வாறு கூறியவாறு மனிதன் அன்புடன் நடந்து கொண்டால் இறைவனின் நேசத்திற்கு உட்பட்டவனாகத் திகழமுடியும் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது. இச் செய்தியானது;

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்” (குறள் - 71)

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் தமக்கு” (குறள் - 72)

என்ற குறள்களுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

உள்ளத்தில் உள்ள அன்பைப் பிறர் அறியாமல் தாழ்ப்பாள் இட்டுப் பூட்ட முடியாது. மெய்யன்புடையவரின் மன நெகிழ்ச்சியாகிய அன்பை அவர் சிந்தும் சிறிதளவாகிய கண்ணீரே வெளிப்படுத்தும். அன்பு இல்லாதவர் தம் உடைமைகள் எல்லாவற்றையும் பிறர்க்கு உதவாமல் தாமே வைத்துக் கொள்வர். ஆனால், அன்புடையவர் அவசியம் ஏற்பட்டால் தம் எலும்பையும் பிறருக்கு உரிமையாக்கி உதவுவர் என்று திருக்குறளின் அன்புடைமை என்ற அதிகாரம் முழுவதும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாக அமைந்துள்ளது.



நன்றியும் செய்ந்நன்றி அறிதலும்

“இறைவன் எத்தகையவனென்றால், அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து பின்னர், அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக (ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்தினான்; மேலும், (நீங்கள் பிரயாணம் செய்வதற்காகக்) கப்பலை தன் கட்டளைப்படி கடலில் அது செல்வதற்காக உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்; மேலும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்”

“சூரியனையும், சந்திரனையும் (முறைப்படுத்தித் தம் வழிகளில்) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க, அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், (மாறிமாறி வரும்) இரவையும், பகலையும் உங்களுக்கு அவன் வசப்படுத்தித் தந்தான்”

“(இவையன்றி) மேலும், எவற்றை நீங்கள் அவனிடம் கேட்டீர்களோ அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; ஆகவே, அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை நீங்கள் கணக்கிட்டு (எண்ணி வரையறுத்து) விட மாட்டீர்கள்; நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன்; மிக்க நன்றி கெட்டவன்” (திருக்குர்ஆன் - 14: 32 - 34)

இத்தகைய குர்ஆன் வசனங்கள், இறைவன் உலகிற்கு அளிக்கப்பட்ட நன்மைகளையும் மனிதன் நன்றியுள்ளம் கொண்டவனாகத் திகழ வேண்டும் என்பதனையும் வலியுறுத்திக் கூறுவனவாக அமைந்துள்ளன. இக்கருத்தானது வள்ளுவரின் செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது” (குறள் - 101)

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரிவார்” (குறள் - 104)

என்ற குறள் கருத்துக்களுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

நாம் ஓர் உதவியும் செய்யாத போது, பிறர் நமக்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது. பயன் தெரிந்த பண்பாளர் தமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவு சிறிதானாலும் அதனைப் பனையளவு பெரிதாகவே மதிப்பர். இவ்வாறு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பாங்கினைத் திருக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது.



புறங்கூறலும் புறங்கூறாமையும்

“விசுவாசிகளே! (தவறான) எண்ணத்தில் பெரும்பாலானவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக எண்ணத்தில் சில பாவமாகும்; (எவருடைய குறைகளையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்; உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம்; உங்களில் ஒருவர், தன்னுடைய சகோதரரின் மாமிசத்தை (அவர் இறந்து) சவமாயிருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது, அதனை வெறுத்து விடுவீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ், (பாவத்திலிருந்து தவ்பாச் செய்து மீள்வோரின்) பாவ மீட்சியை மிகுதியாக ஏற்பவன்; மிகக் கிருபையுடையவன்” (திருக்குர்ஆன் - 49: 12)

மேற்கூறிய திருமறை வசனமானது மனிதர்கள் புறம்பேசுதல் கூடாது என்பதையும் புறம்பேசினால் அதற்கான கைம்மாறையும் இறைக்கருத்தின் வாயிலாக உணர்த்துகின்றது.

“கண்நின்று கண்ணாச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்னோக்கிச் சொல்” (குறள் - 184)

எனும் குறட்பாவில் ஒருவர் கண்ணின் முன்பு நின்று கடுஞ்சொல் சொல்வதில் கூட தவறில்லை. அவன் இல்லா இடத்துப் பின்விளைவு கருதாது பழிப்புரை கூறுதல் தகாது என்ற கூற்றிற்கிணங்க புறங்கூறுதல் தவறு என்று வள்ளுவர் எடுத்தியம்பியுள்ளார்.

முடிவுரை

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என அறிவானது கூறுகின்றது. உலகின் திட்டமிட்ட அமைப்பு, ஒழுங்கான இயக்கம், இணக்கமான செயல்பாடு, அதன் எண்ணற்ற நன்மைகள் ஆகிய அனைத்தும் படைத்தவன் ஒருவனாக இருக்கின்றான், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று அறிந்து இறைவனைத் தொழ வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள் - 5)

இறைவனுடைய மெய்யான புகழை உணர்ந்து வணங்கினால் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் தொடர்வதில்லை என்பதனைத் தமிழ்மறையாகிய திருக்குறளின் வாயிலாக அறிந்து கொள்ள இயலுகின்றது.

பார்வை நூல்கள்

1. மௌலானா சையித் அபுல்அஃலா மௌதூதி - RISALA - E - DINIYAT PART - 1 (TAMIL) இதுதான் இஸ்லாம்

2. தமிழண்ணல் - புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு.

3. மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானி - ISLAMIC TEACHINGS - 1 (Tamil) இஸ்லாமியக் கொள்கை விளக்கம்.

4. முனைவர் ச. வே. சுப்பிரமணியன் - தமிழ் இலக்கிய வரலாறு.

5. தொகுப்பு Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் - வேத வரிகளும் தூதர் மொழிகளும்.

6. முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன் - திருக்குறள் பேரொளி.

7. சிற்பி பாலசுப்பிரமணியம் (உ.ஆ.) - திருக்குறள்.

8. தமிழண்ணல் - வாழ்க்கைக்கு ஒளிதரும் வள்ளுவம்.

9. தொகுத்தவர் எம். அப்துல் வஹ்ஹாப் - பொன்மொழி வரிசை - 4 திருக்குர்ஆன் பொன்மொழிகள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p91.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License