இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

93.புறநானூற்றில் அறம் சார்ந்த மரபு சிந்தனைகள்


முனைவர் பா. ரேணுகாதேவி
கௌரவ விரிவுரையாளர்,
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைஅரசினர் மகளிர் கல்லூரி, நாமக்கல்-- 637002.

முன்னுரை

அறக்கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைவது மனிதன் சிந்திக்கும் ஆற்றல் ஆகும். அவ்வாற்றலே அறம் பிறப்பதற்கு அடிப்படையாக அமையும் எனலாம். எனவே தான் க. பா. அறவாணன் அவர்கள், “மனிதனிடம் இருக்கும் மனம், அதனால் அவன் செய்யும் சிந்தனை, அவன் பேசும் பேச்சு, அவற்றால் விளையும் செயல் ஆகியவையே மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்குப் பிரித்துக் காட்டுகின்றன. உயர்த்திக் காட்டுகின்றன” என்கிறார். எனவே, புறநானூற்றில் உள்ள அறச் சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவது சிறப்பிற்குரியது.

நட்பறம்

புறநானூற்றில் நட்பறத்தை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை;

1. நன்றி அறிதல்

2. ஈகைப் பண்பு

3. நட்பு

என்பன.

நன்றி அறிதல் தொடர்பான செய்தியினைப் புறநானூறு (34) சுட்டிக்காட்டுகிறது.

பசுவினது மடியினை அறுத்த தீவினையாளருக்கும், பெண்டிரதுகர்ப்பத்தை அழித்தோருக்கும், அந்தணருக்குத் தவறு செய்த கொடியோருக்கும் தாம் செய்த பாவத்தினைப் போக்குவதற்கு வழி உண்டு என்றும், உலகம் தலைகீழாக மாறும் காலம் தோன்றினும் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகத்தினின்று தப்பமுடியாது என ஆலத்தூர் கிழார் கூறுவதைக் காணமுடிகிறது. இதனை,

“ஆன்முலைஅறுத்தஅறனிலோர்க்கும்
மாண்இழைமகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
குரவர்த்தப்பியகொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
நிலம்புடைபெயர்வதாயினும் ஒருவன்
செய்திகொன்றோர்க்குஉய்திஇல்என” (புறம்.34 1-6)

என்னும் பாடலடிகளில் மூலம் தெளியலாம்.



அதாவது, செய்நன்றி மறத்தல் மிகக் கொடிய பாவம் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. எனவே தான் வள்ளுவப் பெருந்தகை

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று” (குறள்.108)

கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

ஈகை என்பது ஒருவன் தான் படைக்கும் செல்வத்தால் பெறும் பயன் மற்றவர்க்குக் கொடுத்தலாகும். நக்கீரர் மக்களின் பொதுவியல் நோக்காக ஈகை என்பதற்கு,

“உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
செல்வத்துப் பயனேஈதல்” (புறம்.89, 5-7)

என்னும் பாடலடிகளில் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவு ஆகும் என்பதும், உடுக்கப்படும் உடை மேலே ஒன்றும், இடையிலே ஒன்றுமாக ஆகிய இரண்டும். இவைகளைத் தவிர மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய எல்லாப் பொருளையும் கொடுக்க வேண்டும் என்கிறார்.

புறநானூற்றில் நட்பு என்ற நீதிக்கோட்பாடு காணப்படுகின்றது. நல்ல நட்பினைப் பெறுவது பெறுவதற்கரிய பேறாகும் என்பர். நல்ல நட்பினைப் பெற்றுவிட்டால், அதை பாதுகாப்பானது எதுவும் இல்லை என்பதை,

“செயற்கரியயாவுள நட்பினது போல்
வினைக்கரியயாவுளகாப்பு” (குறள்.781)

என்ற நூற்பா வாயிலாக அறியலாம். சான்றாக,

1. கபிலர் - வேள்பாரி நட்பு

2. பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன்

3. ஔவையார் -அதியமான் நட்பு

என்பன.



வாழ்வியற் அறம்

வாழ்வியற் அறங்களாக ஏழைகளுக்கு உணவினை அளித்தல், மக்களின் விருந்தோம்பல் நிலை போன்றவற்றை உணர்த்துகின்றார். புறநானூற்றில் வாழ்வியற் அறமாக உணவினைக் கொடுத்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. நீரை முக்கியமாகக் கொண்டுள்ள உடம்புக்கெல்லாம், உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர். உடம்பு உணவை முதலாக உடையது. எனவே உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்தவர் இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் ஆவார் என்பதை,

“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே” (புறம்.18. 18-23)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

விருந்தோம்பலைப் பற்றிக் கூறும் போது, தம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்ற உண்டி முதலியவைகளை அளித்து மிக்க அன்போடும், ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது இல்வாழ்வார்க்குரிய தலைச்சிறந்த பண்பாடாகப் பழந்தமிழகம் போற்றுகிறது. புறநானூற்றில் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைச் சிறப்பிக்கும் போது, ஒரு நாள் மட்டும் செல்லவில்லை. இரு நாள்கள் மட்டும் செல்லவில்லை. புல நாள்களிலும் நெருங்கிப் பலருடன் கூடிச் சென்றாலும் முதல் நாளில் காட்டிய விருப்பத்தைப் போல காட்டுவான் என்பதும், மேலும், வரும் விருந்தினருக்குச் சுவையான உணவளித்து விருந்தோம்புவதே பழியற்ற வாழ்க்கை என்பதை,

“வருநர்க்குவரையாவசையில் வாழ்க்கை” (புறம்.1-.8)

என்ற வரியில் ஊன் பொதி பசுங்குடையார் என்ற புலவர் சோழன் இளஞ்சேட்சென்னி எப்பொழுதும் விருந்தினராய் வருபவர்க்கு வேண்டியதைக் குறைவுபடாமல் வழங்கும் குற்றமற்ற வாழ்க்கையாகும் என்கிறார். மேலும்,

“விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்” (புறம். 266, 10)

என்ற நூற்பாவில் விருந்து கண்டு ஒளிக்கும் தம் வாழ்க்கை நன்மையில்லாத இல்வாழ்க்கை என்பதைச் சோழன் இளஞ்சேட் சென்னியிடம் கூறுகின்றார்.



மனிதநேயஅறம்

மனிதநேயஅறம் எனும் அறக் கோட்பாடுகளில்,

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா” (புறம் 192, 1-2)

“பெரியோரைவியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறம் 192, 12-13)

என்னும் பாடலடிகள் மனிதநேயத்தை உணர்த்துகிறது.

வள்ளுவப் பெருந்தகை,

“பகுத்துண்டுபல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” (குறள்.322)

என்ற குறளின் கருத்திற்கேற்ப புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் குமணன் கொடுத்த செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் எனபதை,

“இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லார்க்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழவோயே” (புறம்.163, 5-7)

என்னும் பாடலடிகளின் மூலம் கிடைத்த செல்வத்தை மற்றும் பொருளைப் பிறருக்குப் பகுத்துக் கொடுப்பது மனிதநேயப் பாங்காகும்.

பிறருக்கு உதவும் கோட்பாடு புறநானூற்றில் மிகுந்துள்ளது. மக்களில் நல்லவர், தீயவர் என்ற வேறுபாடு அவர்களின் செயல்களிலே வெளிப்படுகின்றது.

இதனை நரிவெரூத்தலையார்,

“நல்லதுசெய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லதுசெய்தல் ஓம்புமின்” (புறம்.195, 6-7)



என்னும் பாடலடிகளில் ஒருவருக்கு நன்மை செய்யாவிட்டாலும், பிறருக்குத் தீமை செய்யக் கூடாது என்பதாகும். அதாவது மனிதனை நல்லநெறியில் செலுத்தும் வழிமுறையாகும். பிறருக்கு உதவவேண்டும் என்றாகும்.

அஞ்சாதஅறம்

புறநானூற்றில் அஞ்சாதஅறம் உள்ளது.

“வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழிவித்துத்தாம்
உள்ளியதுமுடிக்கும் உரனுடைய உள்ளத்து
வரிசைக்குவருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தக் அறியலன் கொல்? என்அறியலன் கொல்?” (புறம்.206, 2-7)

என்னும் பாடலடிகளின் மூலம் ஔவையார் பாட்டுப்பாடி பரிசு பெறும் நிலையில் இருந்தாலும், தன்மானம் இழக்கவில்லை என்றும், பொருளுக்காக ஒருவரையும் சார்ந்து வாழவில்லை என்பதும், இக்காலப் புலவர்கள் போலன்றி நிலத்தில் எவருக்கும் அஞ்சாது வாழ்ந்து மானிடரைப் போற்றும் விதமாக உள்ளதைக் கூறுகின்றார்.

வாழ்வியற் அறம்

புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை வாழ்த்தும் செய்திகள் உள்ளன. உதாரணமாக,

“பால்புரைபிறைநுதல் பொலிந்தசென்னி
நீலமணிமிடற்றுஒருவன் போல
மன்னுகபெருமநீயே…” (புறம்.91, 5-7)

என்னும் பாடலடிகளில் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியை நீ பால் போன்ற பிறைச் சந்திரன் நெற்றி போல விளங்கும் திருமுடியையும் நீலமணி போன்ற கரிய கழுத்தையும் உடைய சிவபெருமானைப் போல நிலைபெற்று வாழ்வாயாக என்றும் கூறுகின்றார். அதாவது சிவபெருமான் விசத்தை உண்ட பிறகும் உயிர்பெற்று நிலைத்து வாழ்ந்தான். அது போல அதியமானும் எந்த விதமான துன்பமும், கரணமும் வராமல் வாழவேண்டும் என்றும் வாழ்த்துகின்றார். மேலும்,

“... ... ... ... ... ... இவ்வேவானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழைஉறையினும்
உயர்ந்துசமந்தோன்றிப் பொலிகநும்நாளே” (புறம்.369, 15-18)

என்னும் பாடலடிகளின் மூலம் சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராச்சியம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒன்றாக அமர்ந்து இருந்த போது ஔவையார் இவர்களைப் பார்த்து, வானத்தில் விளங்கும் விண்மீன்களை விடவும், இடியுடன் முழங்கிப் பெய்கின்ற மழைத்துளியை விடவும் மிகுதியான நாட்கள் பெற்று வாழ்க என வாழ்த்துவதை உணரமுடிகிறது. இவ்வாறு வாழ்த்துவதே நீதிக் கோட்பாடாகும்.

முடிவுரை

புறநானூற்றில் அறநெறி உணர்த்தவும், அறிவூட்டிநெறிப்படுத்தவும் சமூகநோக்கில் பல்வேறு புலவர்கள் முயன்றுள்ளனர். சங்ககால மக்கள் மிகவும் நேர்மையாகவும், உன்னத தன்மையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர். நெறி தவறாமல் வாழ்வதற்கு அறம் முக்கியமானதாகும். மேலும், புறநானூற்றில தமிழர்கள் வளர்த்த நட்பறமும் வாழ்வியல் அறமும் அஞ்சாத அறமும் ஆகியன அறநெறி அடிப்படையிலே இயங்கியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

துணைநின்ற நூல்கள்

1. புலவர் அ. மாணிக்கனார், புறநானூறு மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17.

2. ச. வே. சுப்பிரமணியம்,தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108.

3. அ. மாணிக்கம், திருக்குறள் தெளிவுரை, தென்றல் நிலையம், சிதம்பரம்-1.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p93.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License