இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


45. நிறங்கள்

உலகில் ஒவ்​வொன்றும் ஒரு நிறத்தில் காணப்படுகின்றது, நிறங்கள் வாழ்க்​கையில் ஒன்றி நம்​மை வழி நடத்துவனவாக உள்ளன. இன்னும் கூட நம்​மை ஆளுகின்றன; ஆட்டுவிக்கின்றன. நம் உணர்வுக​ளை ​​வெளிப்படுத்தவும் பயன்படுகின்றன. ஒவ்​வொரு நிறத்திற்கும் ஒரு குணம் அதாவது பண்பு உண்டு. ஒவ்​வொரு நிறமும் ஏதாவது ஒரு தகவ​லை அல்லது நிகழ்வுக​ளை நமக்கு அறிவுறுத்துகின்றன. நிறங்கள் இயற்​கையான​வை; ​செயற்​கையாகவும் மனிதனால் உருவாக்கப்படுப​வை. இத்த​கைய நிறங்கள் நமது வாழ்​வை வழி நடத்துப​வையாக, வாழ்​வைத் தீர்மானிப்பதாக விளங்குகின்றன. நிறங்கள் குறித்த தங்களின் அனுபவங்க​ளை நமது முன்​னோர்கள் பழ​மொழிகள் வாயிலாகப் ​​பொதிந்து ​வைத்துள்ளனர். இந்நிறங்கள் குறித்த பழ​மொழிகள் மக்களின் குணநலன்க​ளை விளக்குவனவாக உள்ளன.

கருப்பு சிவப்பு

நிறங்கள் ஏழு. அதில் கருப்பு, சிவப்பு முதன்​மையான நிறங்களாகத் திகழ்கின்றன. மனிதர்கள் ​பெரும்பாலும் கருப்பு நிறத்​தை விரும்புவதில்​லை. சிவப்பு நிறத்​தை​யே விரும்புவர். கருப்பு எனில் ​வெறுக்கும் நிறமாகவும் துக்கத்​தைக் குறிக்கும் நிறமாகவும் மக்களால் கருதப்படுகிறது. சிவப்பு ​போராட்ட குணத்​தையும், ​கோபத்​தையும் குறிக்கும் நிறமாக உள்ளது. ஒருவர் ​கோபப்படும் ​போது அவரது கண்கள் சிவந்து காணப்படும். ஒருவர் துன்புறும்​ போது அவரது முகம் கருப்பாகவும் காணப்படும். இத​னை வழக்கில் ‘கருக்குளிச்சுக் காணப்படுகிறது’ என்று கூறுவர்.



ஒருவர் திருமணத்திற்கு மணமக​ளைத் ​தேர்ந்​தெடுக்கின்ற ​போது சிவப்பு நிறமு​​டைய ​பெண்​ணை​யே விரும்புவர். ​​பெண்ணும் சிவந்த நிறமு​டைய மணமக​னை​யே விரும்புவர். கருப்பு நிறமுள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் ​பெண்ணாக இருந்தாலும் அத​னைக் கு​றையாகக் கருதி தாழ்வு மனப்பான்​மையுடன் இருப்பர். அதிலும் ஆண்க​ளை விடப் ​பெண்கள் தாங்கள் சிவந்த நிறத்துடன் இருக்க ​வேண்டும் என்று ​பெரிதும் விரும்புவர். அதற்காக என்​னென்ன அழகு சாதனப் ​பொருள்கள் இருக்கின்ற​தோ அவற்​றை​யெல்லாம் பயன்படுத்துவர். ​மேலும் திருமணத்தில் சிவந்த நிறமு​டைய ​பெண்களுக்​கே அதிகமான எதிர்பார்ப்புகள் சமூகத்தில் உள்ளது. இதனால் கருப்பு நிறமு​டைய ​பெண்கள் விரக்தியான மனநி​லை​யை அ​டையும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு வீட்டில் ஒரு ​பெண் சிவப்பாகவும் மற்​றொரு ​பெண் கருப்பாகவும் இருப்பின் கருப்புநிறப் ​பெண் மனக் கு​றைபடக் கூடாது என்று ​பெரி​யோர்கள் கருதுவர். அவளுக்குத் தாழ்வு மனப்பான்​மை ஏற்பட்டுவிடக் கூடாது என்பத​னை வீட்டிலுள்ள ​பெரி​யோர்கள் அவ​ளை உயர்வாகக் கூறுவர். அவ்வாறு கூறும்​ போது,

“கருத்தப் பிள்​ளைக்கு ந​கை​போட்டுக் கண்ணால அழகு பாரு
​செவத்த புள்​ளைக்கு ந​கை​போட்டு ​செருப்பால அடி”

என்று கூறுவர்.

கறுப்பு நிறமு​டைய ​பெண்ணிற்குத் தாழ்வு மனப்பான்​மை வந்துவிடக் கூடாது என்ற ​நோக்கில் அவ​ளை உயர்த்திக் கூறுவர். கருப்பு நிறமு​டைய ​பெண் ந​கை அணிகின்ற ​போது அழகாக இருக்கும். சிவந்த நிறமு​டைய ​பெண்ணிற்கு எவ்வளவு ந​கை அணிவித்தாலும் அவளுக்கு அவ்வளவாக எடுப்பாக இருக்காது என்று கருப்பு நிறமுள்ள ​பெண் நி​னைத்துக் ​கொள்ள ​வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட பழ​​மொழி​யே இதுவாகும்.

​ இப்பழ​மொழி பெண்க​ளை இழிவுபடுத்தும் ​நோக்கில் அ​மைந்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மனமானது ஊனப்பட்டுவிடக் கூடாது என்று கருதிய நமது முன்​னோரின் உயர்ந்த ​நோக்கம் இதில் புலப்படுவது ​நோக்கத்தக்கது. இப்பழ​மொழியில் முன்​னோர்கள் எந்த அளவிற்கு உள நலப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் ​கொடுத்துள்ளனர் என்பது புலனாகிறது.



கருங்காடும் ​செங்காடும்

கரிய நிறமு​டைய மண்​ணைக் ​கொண்ட காட்டுப்பகுதி​யைக் கரிசல்காடு என்றும் கருங்காடு என்றும் கூறுவர். இக்கரிசல்காட்டில் மண் கருநிறமாகக் காணப்படும். இதில் நாம் நடக்கும் ​போது நமது காலில் ஒட்டும். அந்த மண்​ணைப் ​போன்​றே ​செம்மண் நிலத்​தைச் ​செங்காட்டு மண் என்பர். இதுவும் கருமண்​ணைப் ​போன்​றே காலி​லோ, உ​டையி​லோ ஒட்டினால் அப்படி​யே ஒட்டிக் ​கொள்ளும் தன்​மை வாய்ந்தது. மண்​ணைப் ​போன்​றே உறவுகளும், உறவுகள் என்றும் உதவக் கூடிய​வை. எப்​போதும் எதிலும் விட்டுக் ​கொடுத்துவிடாத தன்​மை வாய்ந்த​வை. அதனால்தான் திருமணம் ​செய்யும்​ போது உறவுகளுக்குள் ​பெண் பார்த்துத் திருமணம் ​செய்ய ​வேண்டும் என்று ​பெரி​யோர்கள் கூறுகின்றனர். குடும்பத்தில் ஏ​தேனும் சிக்கல்கள் ​தோன்றும் ​போது உறவுகள் ஒன்றுக்குள் ஒன்று விட்டுக் ​கொடுத்துச் ​செல்வர். உறவுகளில் ​பெண்​​ணெடுக்காது ​வெளியில் ​பெண்​ணெடுக்கும்​போது வாழ்க்​கையில் உறவுகள் நி​லைக்காது ​போய்விடும்.

இத​னை மனதிற் ​கொண்​டே நமது முன்​னோர்கள்,

“காலில ஒட்டின கருங்காட்டு மண்ணா?
​சே​லையில ஒட்டின ​செங்காட்டு மண்ணா?

என்ற பழ​மொழியி​னைக் கூறினர். உறவுக்குள் மணமுடித்தல் ​வேண்டும் என்று இப்பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

சிவந்த மூக்கு

சிலர் எப்​போதும் வி​ளையாட்டாக​வே ​பேசிக்​கொண்டிருப்பர். அவர் எந்தச் சூழலிலும் தம்​மை மாற்றிக் ​கொள்ளமாட்டார். இத​னைக் காணும் ​பெரியவர்கள் அவ​ரைப் பார்த்து,

“சிரிச்சாப்ல மூக்கு ​செவந்தாப்ல ​போயிரும்”

என்ற பழ​மொழி​யைக் கூறி அறிவுறுத்துவர்.

எப்​போதும் மனிதர்கள் ஒன்று​போல இருக்க மாட்டார்கள். அவர்களது மனநி​லை மாறிக்​ கொண்​டே இருக்கும். அப்​போது வி​ளையாட்டாகப் ​பேசினால் அது ​ஒருவருக்​கொருவர் ​மோதலில் ​கொண்டு ​போய் விட்டுவிடும். சிரித்துக் ​கொண்​டே இருப்பவர் திடீ​ரென்று ​கோபமுற்று சண்​டை சச்சரவில் இறங்கி விடுவார். அப்​போது வி​ளையாட்டாகப் ​பேசி​னேன் என்று கூறினாலும் மற்றவர் விட்டுவிடமாட்டார். அதனால் எப்​போதும் விளையாட்டுத்தனமாக நடந்து ​கொள்வ​தை ஒருவர் தவிர்த்தல் ​வேண்டும் என்ப​தை இப்பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

இப்பழ​மொழி, “வி​ளையாட்டு வி​னையாப் ​போயிரும்” என்ற பழ​மொழி​யை ஒத்திருப்பது ​நோக்கத்தக்கது. ​கோபப்படும் ​போது முகம் சிவந்துவிடும். அச்சிவப்பு சினத்தின் அறிகுறியாகும். இப்பழ​மொழியானது சிவப்பு நிறம் ​கோபத்தின் அ​டையாளம் என்ப​தை நமக்குத் ​தெளிவுறுத்துகின்றது.



மஞ்சளும் கண்ணும்

மனிதர்களில் சிலர் எப்​போதும் யா​ரையும் எ​தையும் சந்​தேகப்பட்டுக் ​கொண்​டே இருப்பர். இவ்வாறு சந்​தேக மனப்பான்​மை ​கொண்டவர்க​ளை யாராலும் மனநி​றைவு ​கொள்ளச் ​செய்ய முடியாது. சந்​தேகப்படுபவர்கள் இல்​லை​யெனில் அவ​ரை அவ​ரே சந்​தேகப்படுவார். இத்த​கையவர்கள் எப்போதும் அந்த மனநி​லையி​லே​யே வாழ்ந்து வருவார். இத்த​கை​யோரின் மனப்பண்​​பை,

“காமா​லைக் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத்தான் ​தெரியும்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

மஞசள் காமா​லை என்பது ஒருவித ​நோயாகும். இந்​நோய் வந்தவர்களுக்கு உடல் முழுவதும் மஞசளாக மாறும். அவரது கண்களுக்கு அ​னைத்தும் மஞ்சளாக​வேத் ​தோன்றும். சந்​தேகப்படுபவருக்கும் எப்​போதும் பிறர் ​மேல் ஏதாவ​தொரு வ​கையில் சந்​தேகம் இருந்து ​கொண்​டே இருக்கும். அவர்க​ளை மாற்ற​​வே முடியாது. அவராக மாறினால் மட்டு​மே அவரது இத்த​கைய மனப்பண்பு மாறும். எந்தச் சூழலிலும் எப்​போதும் சந்​தேக மனப்பான்​மையில் வாழ்தல் கூடாது என்ற வாழ்வியற் பண்பி​னை இப்பழ​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் இயம்பியுள்ளனர்.

கருப்பு, சிவப்பு ஆகிய இரு நிறங்கள் பழ​மொழிகளில் அதிகம் இடம் ​பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ​இந்நிறங்கள் குறித்த பழ​மொழிகள் அ​னைத்தும் மனிதர்களின் மனப்பண்​பைத் ​தெளிவுறுத்தும் வ​கையில் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது. நல்மனநலம் ​பெற்று நல​மோடு வாழ்​வோம் வாழ்க்​கை வசப்படும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p5as.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License