இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும்

முனைவர் சி. சேதுராமன்


13. நண்பன் செய்த து​ரோகம்​

நரித்தனம், குள்ளநரித்தனம் என்று மனிதர்களின் ​செயல்பாடுகளுக்கு விலங்குகளின் ​​செயல்பாடுக​ளைச் ​சேர்த்து நாம் வழக்கில் வழங்கி வருகி​​றோம். நம்முடைய ​செயல்பாடுகளுக்கு விலங்குக​ளின் ​செயல்பாடுகளை இணைத்து விலங்குகளின் பெயர்க​ளி​லே​யே அத​னைக் குறிப்பிடலாமா? விலங்குகள் தங்க​ளுடைய வாழ்க்​கைப் ​போராட்டத்தில் எப்படி ​வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்... ஆனால்... ஆறறிவு ப​டைத்த மனிதன் அப்படி நடந்து கொள்ளலாமா...?

விலங்குகள் அத​னுடைய இயல்பில் வாழ்ந்தால்தான் அது உயிர் வாழ முடியும். ஆனால் மனிதன் அவ​னோட இயல்பில் வாழ்கிறானா? என்றால் இல்லை... மனிதனும் சமுதாய விலங்கு என்பதால் விலங்குகளின் தன்​மை மனிதனுக்குள்ளும் இருக்கிறது. விலங்குகளின் ​செயலை மனிதனை வைத்துச் ​சொல்வது இல்லை... ஆனால், மனிதனுடைய ​செயல்களை விலங்கின் ​பெயரில் குறிப்பிட்டுச் ​சொல்கி​​றோம்... இதுதான் விந்​தையிலும் விந்​தை...

ஏன் து​ரோகத்திற்கும் நயவஞ்சகத்திற்கும் நரி​யை​யே உதாரணமாச் ​சொல்கிறார்கள்...? ஏன் சிங்கத்தைச் ​சொல்வதில்லை? சிங்கம் பசித்தால் விலங்குகளை ​நேருக்கு ​நேராக எதிர்த்து நின்னு தாக்கிக் ​கொல்லும்... ஆனால், நரி அப்படிக் கி​டையாது... விலங்கினை ​நேருக்கு ​நேராக எதிர்த்துக் ​கொல்லாது. ம​றைந்து, பதுங்கி இருந்து ஏமாற்றிக் ​கொன்று தின்னும். அதனால்தான் நரியை நயவஞ்சகத்திற்கு உதராணமாகச் ​சொல்கின்றனர்.

ஆமாம், சிலர் நம்மைப் பார்த்து நடிப்பார்கள்... அந்த நடிப்பு நம்புகிற மாதிரி இருக்கும்... அதை நம்பிப் ​போனால், பின்னால் அவர்கள் ​வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்...

ஒரு க​தை ​சொல்கி​றேன் ​கேளுங்க...

ஆற்றுக்கு நடுவில் ​பெரிய மணல் திட்டு ஒன்று இருந்தது. அந்த மணல் திட்டுல ஒரு ​பெரிய நாவல் மரம் இருந்தது. அதில் ஒரு குரங்கு இருந்தது.

அந்தக் குரங்கு நாவல் மரத்தில் இருக்கிற பழத்​தைத் தின்றுவிட்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்தது.

அந்த ஆற்றில் ​பெரிய முத​லை ஒன்று இருந்தது. அது ஓய்​வெடுப்பதற்காக அந்த மணல் ​​​மேட்டுக்கு வரும். அப்படி வரும்​ போது குரங்கைப் பார்த்துப் ​பேசிவிட்டுப் ​போகும். குரங்கு நாவல் பழங்களைப் பிடுங்கி அந்த முத​லைக்கும் ​கொடுக்கும். இப்படி​யே இருந்ததால் முத​லையும் குரங்கும் ​நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இருப்பினும், குரங்கை முத​லையிடமிருந்து ​சிறிது விலகி எச்சரிக்​கையாகவே இருந்தது.

ஒருநாள் முத​லை குரங்கு ​கொடுத்த நாவல் பழத்​தை எடுத்துக் கொண்டு ​போய் தன்னுடைய ம​னைவியிடம் ​கொடுத்தது. அ​தைத் தின்ற ​பெண் முத​லை ​மிகவும் ருசியாக இருக்கிறது, இந்தப் பழ​மே இப்படி ருசியாக இருந்தால், இந்தப் பழத்​தைத் தின்று வாழ்கிற குரங்கின் ஈரலும் கறியும் எப்படி இருக்கும்? என்று நினைத்தது.

அந்தப் ​பெண் முத​லை தன்​னோட விருப்பத்தைக் கணவனிடமும் தெரிவித்தது. “அந்தக் குரங்கை எப்படியாவது எனக்கு இரையாகக் ​கொண்டு வந்து கொடுங்கள், அதனுடைய இதயத்தைச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. இல்லையெனில் உங்களிடம் பேசவே மாட்​டேன்...” என்று சொல்லிவிட்டது.



இதைக் ​கேட்ட ஆண் முத​லை, “அந்தக் குரங்கு என்​னோட நல்ல நண்பன். அவனை நான் எப்படிக் ​​கொல்ல முடியும்? அத்துடன் அப்படி ​​நினைக்கி​றதே எனக்குப் பாவமாக இருக்கிறது.” என்றது.

அதற்குப் ​பெண் முத​லை அ​தெல்லாம் எனக்குத் ​தெரியாது. எனக்கு அந்தக் குரங்​கோட இதயம் ​வேண்டும் என்று உறுதியாகச் ​சொல்லிவிட்டது.

ஆண் முத​லை, “என்னால் என் நண்ப​னைக் ​கொல்ல முடியாது. நான் அவனை இங்கு கூட்டிக் கொண்டு வருகிறேன்... நீ ​வேண்டுமானால், அவனைக் ​கொன்று உன் விருப்பம் போல் சாப்பிடு” என்று ​சொல்லிவிட்டது.

மறுநாள் முத​லை குரங்கைத் ​தேடிப் ​போனது. குரங்கு மரத்து​மேல இருந்து முத​லையைப் பார்த்தது. க​ரைக்கு வந்த முத​லை குரங்கைப் பார்த்து நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். அதனால், நீ கீ​ழே இறங்கி வா என்றது.

குரங்கு இறங்கி வந்து என்னவென்று ​கேட்டது.

அந்த முத​லை, “நண்பா நீ ​கொடுத்த நாவல் பழத்​தை என் ம​னைவி சாப்பிட்டு உட​னே உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டாள். உனக்கு அவள் விருந்து ​வைக்க வேண்டுமாம். நீ வந்தால்தான் சாப்பிடு​வேன் என்று பட்டினியாகக் கிடக்கிறாள். நீ உட​னே ​என்னுடன் புறப்பட்டு வந்தால் அவளைப் பார்த்துவிட்டு வந்து விடலாம்” என்று ​சொன்னது.

குரங்கும் முத​லை சொன்னதை நம்பி முத​லை​யின் முதுகில் உட்கார்ந்து கொண்டு அதன் ம​னைவி​யைப் பார்க்கச் சென்றது.

ஆற்றுக்கு நடுவில் ​போன ​போது ஆண் முத​லை, அதன் ம​னைவியின் ஆ​சையை வாய் தவறிச் ​சொல்லிவிட்டது. குரங்குக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அத​னை ​வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நண்பா, இதை நீ என்னிடம் முதலி​லே​யே ​சொல்லாமல் ​போய் விட்டாயே... என்னோட இதயத்​தைக் கழட்டி இப்பொழுதுதான் மரத்தில் காய வைத்தேன். நீ அவசரப்படுத்தியதால் அப்படியே வந்து விட்டேன். ​சொல்லியிருந்தால் அப்​போ​தே அதை​ எடுத்துத் தந்திருப்​பேன்” என்றது.

முத​லை, “அட அப்படியா... சரி உன்​னோட மரத்திடம் உன்னைக் ​கொண்டு​போய் விடுகி​றேன். நீ அந்த இருதயத்தை எடுத்துக் கொண்டு வா...” என்று ​சொல்லியபடி கரைக்குக் ​கொண்டு​ போய் விட்டது.

குரங்கு ஓடிப் ​போய் மரத்து ​மேல் ஏறிக் கொண்டு முத​லையைப் பார்த்து, “அட நயவஞ்சக ​முத​லை​யே... யாராவது இதயத்​தைக் கழற்றி ​வெளியில் ​வைப்பார்களா...? இப்படி உயிரை வாங்குகிற நண்ப​னோட நான் பழகிவிட்​டே​னே...? இனி​மேல் உனக்கும் எனக்கும் எந்தவிதமான உறவும் ​வேண்டாம்... நீ உன்​னோட வழியில் ​போ... நான் என்​னோட வழியில் ​போகி​றேன்...” என்றது.

அந்த ஆண் முத​லை ​வெட்கித் த​லைகுனிந்தபடி தண்ணீருக்குள் சென்றது.

இந்த முத​லை மாதிரி​யே ஒருவன் இருந்தான். ஆனால், முத​லை மாதிரி இல்லாமால் கூட இருந்​தே நண்ப​னைக் காட்டிக் ​கொடுத்து அவனோட சாவுக்கும் காரணமாக ஆகி விட்டான். அந்த நயவஞ்சக நண்பனின் ​பெயர் என்ன ​தெரியுமா? அவன்தான் அனந்த நாராயணன். வீரன் பூலித்​தேவ​னைக் காட்டிக் ​கொடுத்த துரோகி. அந்தத் து​ரோகியின் க​தையைத் தெரிந்து கொள்வோமா...?



புலித்தேவன்

பா​ளையக்காரர்கள் ஆட்சிமு​றையினால் பாண்டிய நாடு 72 பா​ளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஒன்று ​நெற்கட்டான் ​செவல் பா​ளையம். இப்பா​ளையம் மற்ற பா​ளையங்க​ளை விடப் ​பெரியது; த​லை​மை வகிக்கும் பா​ளையமாகவும் விளங்கியது. இந்தப் பா​ளையத்தின் மன்னராக விளங்கியவ​ரே சித்திரபுத்திரத் ​தேவர். இவருக்கும் சிவஞானநாச்சியாருக்கும் 1.9.1715-ல் பிறந்தவர் புலித்​தேவன். இவ​ரைப் பூலித்​தேவன் என்றும் அ​ழைப்பர். இவருக்குப் ​பெற்​றோர் இட்ட ​பெயர் காத்தப்பப் புலித்​ தேவர் என்பதாகும். இப்​பெயர் அவரது குல​தெய்வத்தின் ​பெயராகும். இவர் மக்க​ளைத் தாக்கி வருத்திய புலி ஒன்​றைக் கட்டி உயிருடன் பிடித்து வந்ததால் மது​ரை​யை ஆண்ட விஜயராங்க ​சொக்கநாத நாயக்கர் வடகாத்தான் புலித்​தேவன் என்று அ​ழைத்தார். அன்று முதல் இவரது ​பெயர் புலித்​தேவன் என்​றே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புலித்​தேவன் 12 வயதில் ​நெற்கட்டான் ​செவல் பா​ளையத்தின் இளவரசரானார். இவரது ம​னைவியார் ​பெயர் கயல்கண்ணி இலட்சுமி நாச்சியார் என்பதாகும். இக்கயல்கண்ணி நாச்சியாரும் ​போர்க்க​லையில் ​தேர்ச்சி ​பெற்றவராவார். ​தென்னிந்தியாவில் நாயக்க மன்னர்களின் பலம் குன்றிய காரணத்தால் முஸ்லீம் மன்னர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பல குழுக்களாகச் ​செயல்பட்ட நவாப்புகள் எனப்பட்ட முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குள் வாரிசுரி​மைப் ​போர் ஏற்பட்டது. ஆற்காட்டு நவாப்பான முகம்மது அலிக்கும் வாலாஜா நவாப்பான சந்தா சாகிப்புக்கும் இ​டை​யே கடு​மையான ​போர் ஏற்பட்டது.

ஊர் இரண்டு பட்டதால் வியாபாரம் ​செய்ய வந்த ஆங்கி​லேயர்களுக்குக் ​கொண்டாட்டமாகிப் ​போனது. அவர்கள் இப்​போர்களில் தலையிட்டனர். ஆற்காட்டு நவாப்பாகிய முகம்மது அலிக்கு ஆங்கி​லேயர்கள் ஆதரவு ​கொடுத்துப் ​போர்ச் ​செலவிற்காகவும் பணம் ​கொடுத்து ​வெற்றி ​பெறச் ​செய்தனர். ​வெற்றி​பெற்ற முகம்மதலியிடம் கடன் பணத்​தைக் ​கேட்க ​வேறுவழியறியாத அவர் தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரிவசூல் ​செய்யும் உரி​மை​யைக் ​கொடுத்தார். வியாபாரம் ​செய்ய வந்த ஆங்கி​லேயர்கள் ஆட்சியாளர்கள் ஆனார்கள்.வரிவசூல் ​செய்வதற்காக ஆங்கி​லேயர்கள் இராபர்ட் கி​ளை​வை நியமித்தனர். இவர் 1753-ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து ​செயல்பட்டார். இவரது உதவியாளரான இன்னிஸ் து​ரை என்பவர் வரிவசூல் ​செய்வதற்காக திரு​நெல்​வேலிச் சீ​மைக்கு வந்தார். இவர் பல பாளையக்காரர்களிடம் வரிவசூல் ​செய்துவிட்டு ​நெற்கட்டான் ​செவல் பா​ளையத்திற்கு வந்து வரி​யைக் ​கேட்டான். அவனால் வரிவசூல் ​செய்ய முடியவில்​லை.

1755-ஆம் ஆண்டு அ​லெக்ஸாண்டர் ​ஹோரன் என்பவர் முகம்மது அலியின் தளபதி மாபூஸ்கான் என்பவனின் து​ணையுடன் புலித்​தேவ​னின் ​கோட்​டை​யை முற்று​கையிட்டான். இவர்களின் கூட்டுப்ப​டை​யைப் புலித்​தேவன் விரட்டியடித்தார். இந்தப் ​போரில் ​வெற்றி​பெற்ற புலித்​தேவன், “ஆங்கிலக் கம்​பெனியாரின் ஏஜெண்ட்டுகள் தனது பா​ளையத்தின் எல்​லைக்குள் நு​​ழைவதற்கு அனுமதி கி​டையாது” என்று அறிவித்தார்.



புலித்தேவன் வெற்றி

புலி​தேவனின் இந்த அறிவிப்பு தனக்கு விடுக்கப்பட்ட சவால் எனக் கருதினான் இராபர்ட் கி​ளைவ். அவன் மாபூஸ்கான், ​ஹோரன் ஆகி​யோர் த​லை​மையில் மீண்டும் புலித்​தேவ​னை எதிர்க்கப் ​பெரும்ப​டை​யை அனுப்பினான். புலித்​தேவன் இப்ப​டை​யை வரும் வழியி​லே​யே எதிர்த்துத் தாக்கினார்.

​போர் உக்கிரமாக ந​டை​பெற்றது. உத்திரக் ​கோட்​டை என்ற இடத்தில் ந​டை​பெற்ற இப்​போரில் புலித்​தேவன் ​வெற்றி​ பெற்றார். ஆங்கிலத் தளபதி ​தோல்வி​யை ஒப்புக் ​கொண்டான். புலித்​தேவனின் மா​பெரும் எழுச்சி​யைக் ​கேள்வியுற்ற ஆற்காட்டு நவாப் தங்கத்தட்டு ஒன்​றையும் வீரவாள் ஒன்​றையும் பட்டுத்துணியில் சுற்றிப் பரிசாக அனுப்பி ​வைத்தார்.

1755 முதல் 1767 வ​ரை ​தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் புலித்​தேவன் ஆங்கி​லேயர்க​ளைக் கடு​மையாக எதிர்த்துப் ​போரிட்டார். புலித்​தேவர் திருவாங்கூர், களக்காடு, ஸ்ரீ​வைகுண்டம், பாஞ்சாலங்குறிச்சி, வடக​ரை உள்ளிட்ட பா​ளையக்காரர்க​ளை ஒருங்கி​ணைத்து கூட்டணி அமைத்து ஆங்கி​லேய​ரை எதிர்த்த முதல் வீரராக விளங்கினார். பல ​போர்களில் ​தோல்வி​யைக் கண்ட ஆங்கி​லேயர்கள் அவ​ரைச் சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் ​வெற்றி​கொள்ள மு​னைந்தனர். ஆங்கி​லேயர்கள் மருதநாயகம் என்ற கான்சாகிப்​பைத் தளபதியாக நியமித்துப் ​போரில் ஈடுபட்டனர். மருதநாயகம் கடு​மையாகப் ​போராடினான். புலித்​தேவனுக்கு எதிராகப் ​பெருங்கூட்டணி ஒன்​றை உருவாக்கினான். புதிய பீரங்கிகளின் உதவியுடன் 1761-ஆம் ஆண்டு புலித்​தேவ​னை ​வெற்றி​கொண்டான்.

மருதநாயகம் ​கைகளில் சிக்காது தப்பிச் ​சென்ற புலித்​தேவன் தனது ப​டைக​ளை ஒருங்கி​ணைத்துக் ​கொண்டு கடலாடிக் ​கோட்​டைக்குள் பதுங்கியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்​தைப் பயன்படுத்திக் ​கொண்ட மருதநாயகம் ​நெற்கட்டான் ​செவல், ப​னையூர், வாசு​தேவநல்லூர் ஆகிய ​கோட்​டைக​ளை இடித்துத் த​ரைமட்டமாக்கினான். இதற்கி​டையில் மருதநாயகத்திற்கும் ஆங்கி​லேயர்களுக்கும் கருத்து​வேறுபாடு ஏற்பட்டு 1764-ஆம் ஆண்டு மருதநாயகம் தூக்கிலிடப்பட்டான். இச்சமயத்​தை நன்கு பயன்படுத்திக் ​கொண்ட புலித்​​தேவன் வாசு​தேவநல்லூர் ​​கோட்​டை​யைக் ​கைப்பற்றி அத​னைப் பலப்படுத்தினார்.


புலித்தேவன் தலைமறைவு

புலித்​தேவனின் எதிரிகளுள் முக்கியமானவராகத் திகழ்ந்த ஆற்காட்டு நவாபின் ச​கோதரன் மாபூஸ்கான் தனது ச​கோதரனுடன் ஏற்பட்ட ​மோதலினால் உயிருக்குப் பயந்து புலித்​தேவனிடம் அ​டைக்கலம் ​கேட்டு அவரிடம் வந்து தங்கினான். வந்தவன் தனது எதிரியின் தம்பி என்று அறிந்து அவனுக்கு அ​டைக்கலம் ​கொடுத்து அவன் வணங்குவதற்கு ஒரு பள்ளிவாச​லையும் புலித்​தேவன் கட்டிக் ​கொடுத்தார்.

இதனி​டை​யே புலித்​தேவ​னை அழித்​தொழிக்கக் கருதிய ஆங்கி​லேயர்கள் 1767-ஆம் ஆண்டு ​பெரும்ப​டை​யொன்​றைத் திரட்டி அத​னைத் தளபதி காம்​பெல் என்பவனின் த​லை​மையில் வாசு​தேவநல்லூர்க் ​கோட்​டை​யை முற்று​கையிட அனுப்பினர். அவனும் ​​பெரும் பீரங்கிப் ப​டையுடன் வந்து முற்று​கையிட்டான். இ​டைவிடாது ​பெய்த ம​ழையினால் ​கோட்​டைப் பலவீனமாக​வே அத​னைக் ​கைவிட்டுப் புலித்​தேவன் ​மேற்குத் ​​தொடர்ச்சி ம​லைப்பகுதிகளில் த​லைம​றைவானார்.

புலித்​தேவன் த​லைம​றைவாக வாழ்ந்த காலத்தில் அவரது ம​னைவியும் குழந்​தைகளும் இருந்த வீட்டிற்கு ஆங்கி​லேயர்கள் தீயிட்டனர். இதில் அவரது ம​னைவி கயல்கண்ணி நாச்சியார் இறந்தார். அவரது குழந்​தைகள் காப்பாற்றப்பட்டு அவரது நண்பர்களால் இரகசியமாக வளர்க்கப்பட்டனர்.

புலித்​தேவன் ம​லையில் இருந்த கு​​கைகளில் தனது ஆதரவாளர்களுடன் தங்கினார். அவருடன் பல ​போர்வீரர்களும் தங்கியிருந்தனர். அவர்கள் அ​னைவருக்கும் ஊர் மக்கள் காட்டிற்குச் ​செல்பவர்க​ளைப் ​போன்று நார்ப் ​பெட்டிகளில் உணவி​னை எடுத்துக் ​கொண்டு ​போய்ப் பா​றை மீது ​வைத்து வந்தனர். அப்படி ​வைக்கப்பட்ட பா​றை​யே இன்று ​சோறு ஊட்டும் பா​றை எனப் ​பெயர்​பெற்றது. அங்கு பகலில் ​வைக்கப்படும் ​சோற்றி​​னை இரவு ​நேரத்தில் கு​கைகளுக்கு எடுத்து வந்து ​போர்வீரர்கள் உண்டு வந்தனர்.

ப​டைவீரர்களுடன் கு​​கையில் தஙகியிருந்த மாவீரன் புலித்​தேவன் ஒற்றர்கள் மூலம் நாட்டில் நடக்கும் நிகழ்வுக​ளை நாள்​தோறும் அறிந்து வந்தார். நாட்டு மக்களி​டை​யே நாட்டுப்பற்று ஊட்டும் ​கோடாங்கிப் பாடல்க​ளைப் பாடச் ​செய்து வந்தார் புலித்​தேவன். நாட்டு மக்கள் விவசாய ​வே​லைகளில் இறங்கி உற்பத்தி​யைப் ​பெருக்கி வயிறார உண்டு வாழ்ந்தனர். மக்களின் அ​மைதியான வாழ்க்​கை​யைக் கண்ட ஆங்கி​லேயர் புலித்​தேவனுக்கும் மக்களுக்கும் ​நெருங்கிய ​தொடர்பு இருப்பதாக அறிந்தனர். எப்படியும புலித்​தேவ​னைப் பிடித்துவிட​வேண்டும் என்று வஞ்சக எண்ணத்துடன் ​செயல்பட்டனர்.


நண்பனின் துரோகம்

ஆற்காட்டு நவாப்பும் ஆங்கி​லேயரும் ​சேர்ந்து புலித்​தேவ​னை எதிர்த்துப் பல ​போர்க​ளை நடத்தியும் அவ​ரை ​வெற்றி ​கொள்ளமுடியவில்​லை. அதனால் புலித்​தேவனின் ​நெருங்கிய நண்பனான அனந்த நாராயணனிடம் ஆ​சை வார்த்​தைகள் கூறி அவ​ரைத் தங்கள் வயப்படுத்தினர். ஆங்கி​லேயரின் ஆ​சையில் மயங்கிய அனந்த நாராயணன் புலித்​தேவ​ரைப் பிடித்துக் ​கொடுக்கச் சம்மதித்தான்.

ஆங்கி​லேயர்களின் திட்டத்தின்படி அனந்த நாராயணன் புலித்​தேவனுக்கு இரகசிய ஓ​லை ஒன்​றை அனுப்பினான். அதில், “கம்​பெனியா​ரை விரட்டியடிக்கப் புதிதாக ஆயுத சா​லை ஒன்றி​னைத் தான் அ​மைத்திருப்பதாகவும், அத​னை வந்து பார்​வையிட்டுவிட்டுத் தனக்கு ஆலோச​னை வழங்க ​வேண்டும்” என்றும் குறிப்பிட்டான்.

ஓ​லை​யைப் படித்த புலித்​தேவனுக்கு ஆச்சரியம். எப்​போதும் ப​கைவ​னை எதிர்த்துப் ​போரிடப் ப​டையுடன் வருமாறு நண்பரிடமிருந்து ஓ​லை வரும் என்றால் இன்று ஆயுத சா​லை​யைப் பார்​வையிடும்படி ஓ​லை வந்துள்ள​தே என்று எண்ணி எல்லாம் சங்கர ​கோமதித் தா​யே உன்னு​டைய ​செயல் என்று புலித்​தேவன் மனதில் எண்ணிக் ​கொண்டு தூதுவனிடம் நா​ளை வருவதாகக் கூறி அனுப்பினார். இரவில் அவரது கனவில் ​கோமதி சங்கரர் ​தோன்றி, “நீ வி​ரைவில் ​ஜோதியில் கலக்கும் ​நேரம் வந்துவிட்டது” என்று கூறி ம​றைந்துவிட்டார்.

மறுநாள் அனந்த நாராயணன் குறிப்பிட்டிருந்த ஆயுதசா​லைக்குச் ​சென்றார் புலித்​தேவன். நாராயணன் புலித்​தேவனுக்கு ஆயுதசா​லை​யைச் சுற்றிக் காண்பித்துக் ​கொண்டிருந்தான். அப்​போது இரும்புக் கூண்டிற்குள் இருந்த ஆயுதங்க​ளைப் பார்க்குமாறு கூறிப் புலித்​தேவ​​னை அதனுள் ​போகுமாறு கூறி அதனுள் புலித்​தேவன் ​​சென்றவுடன் தந்திரமாக இரும்புக் கூண்டின் கத​வைச் சாத்தி அ​டைத்து விட்டான்.

நண்பனின் து​ரோகச் ​செய​லைக் கண்ட புலித்​தேவன், “நண்பா அனந்த நாராயணா ஏன் என்​னை அ​டைத்து விட்டாய்? திறந்துவிடு” என்று ​கேட்க அந்நயவஞ்சக​னோ, “நண்ப​ரே என்​னை மன்னித்து விடுங்கள். கம்​பெனியார் உம்​மைப் பிடித்துக் ​கொடுத்தால் எனக்குப் ​பெரும்பதவி​யையும் ​பொற்காசுக​ளையும் ​கொடுப்பதாகக் கூறியுள்ளனர்” என்றான்.

நரித்தனம் மிக்க நயவஞ்சகனின் து​ரோகத்தால் ​வெகுண்ட புலித்​தேவன், “நாராயணா! ​கேவலம் பதவிக்காகவும், பணத்திற்காகவும் உண்​மையான நண்ப​னைக் காட்டிக் ​கொடுக்கிறாய். உனக்கு ​வெட்கமாக இல்​லை... உன்​னைக் கு​றை​ சொல்லிப் பயனில்​லை. எல்லாம் சிவனின் சித்தப்படிதான் நடக்கும்” என்று கூறிவிட்டுக் கூண்டுக்குள் மவுன நி​லையில் மகிழ்வுடன் இருந்தார் புலித்​​தேவன்.

ஆங்கி​லேயர்கள் புலித்​தேவனின் ​கைகளில் விலங்குக​ளை மாட்டிப் பா​ளையங்​கோட்​டைக்குக் ​கொண்டு ​சென்று சி​றையில் அ​டைக்கக் கருதினர். அதன்படி​யே புலித்​தேவ​னை அ​ழைத்துக் ​கொண்டு ​செல்லும் வழியில் சங்கரன் ​கோயில் ஊர் இ​டையில் வந்ததும், அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் சங்கரர் ​கோமதி ​கோயிலுக்குள் ​சென்று வழிபட்டு வரத் தன்​னை அனுமதிக்க ​வேண்டும் என்று ஆங்கி​லேயர்களிடம் அவர் ​கேட்டுக் ​கொண்டார்.


ஆங்கி​லேயர்கள் தக்க பாதுகாப்புடன் அவ​ரைக் ​கோயிலுக்குள் அனுப்பி ​வைத்தனர். புலித்​தேவன் ​கோயிலுக்குள் ​சென்று இ​றைவ​னை நி​னைத்து,

“உன் கமலத்​தை​யென் நாவறியாய்
உ​மை சங்கர​னே புகலக் ​கேண்மின்
தீங்குபுரி மூவா​சையி​னைச் சிக்கி
உழலும் அடி​யேன் தன்​னை
ஓங்கருள் சூழ்உலகமதில் உ​னையன்றி
எ​னைக் காக்க ஒருவருண்​டோ
ஈங்​கெழுந்தருள் புரியும் இன்ப வாரிதி​யே
இ​​றைவ​னே ​போற்றி ​போற்றி”

என்று பாடினார்.

அப்​போது ​கோவிலுக்குள் பு​கை மண்டலம் எழுந்தது. அத​னோடு ஒரு ​பே​ரொளிக்குழம்பும் ​வெளிச்சத்துடன் ​எழுந்தது. அதில் புலித்​தேவனின் ​கைவிலங்குகள் தனாக அறுந்து விழுந்தன. அக்கண​மே புலித்​தேவன் ​ஜோதியினுள் இரண்டறக் கலந்து சிவனுடன் ஐக்கியமாகிவிட்டார். இத​னைப் பார்த்துக் ​கொண்டிருந்த ஆங்கி​லேயர்களும் அவர்களது ப​டைவீரர்களும் தி​கைத்துப் ​போய் நின்றனர்.

அ​னைவரும் புலித்​தேவ​னை வாழ்த்தினர். அவர் ம​றைந்தாலும் அவரது புகழ் என்​றென்றும் நி​லைத்து நின்று ஒளிவீசிக் ​கொண்டிருக்கிறது. து​ரோகிகள் அற்ப வாழ்வி​னை வாழ்ந்தாலும் அற​மே அவர்க​ளைக் ​கொன்று தீர்க்கும். புலித்​தேவனின் வரலாற்​றையும் அவர் இ​றைவனுடன் ஐக்கியமான​தையும்,

“ஈடில்லாப் புகழ் புலி ஆயிரத்​தெழு நூற்றி அறுபத்​தேழில்
இதமான ஆடியீ​ரைந்தாம் ​தேதி
​கோதிலா அமர பட்சம் குருவாரம் தன்னில்
குணமு​டைய பூ​சை நட்​சேந்திர நாளில்
​பேர் புகழும் சங்கரன் ​கோயில் ஆலயத்தில்
பிரபலமாகி லிங்க ​சோதி தன்னுள்
பார்புகழும் ​தென்னாட்டுப் பூலி ஞானி
பண்புட​னே பரமபதம் ​சேர்ந்ததன்​றே
வாழ்க பூலி வழ்க தமிழ் வாழ்க க​லை வாழ்க அரசு
வாழிய வாழிய​வே…..”

என்கிற க​தைப்பாடல் எடுத்து​ரைத்துக் ​கொண்​டே இருக்கின்றது.

எதனால் நரித்தனம், குள்ளநரித்தனம் என்று சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா...? வீரர்கள் வாழும்​போது வஞ்சிக்கப்பட்டாலும் அவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் மக்களால் ​கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் நவஞ்சகர்கள் உயிருள்ளவ​ரை ஆடம்பரங்க​ளை நாய்​ போல் அனுபவித்துவிட்டு மாண்ட பிறகு மக்களின் கால்களுக்கு அடியில் மிதிபட்டு மிதிபட்டு பலமு​றை மாண்டு​கொண்​டே இருக்கிறார்கள். இதுதான் வரலாறு.

இ​தைவிட இன்​னொரு து​ரோகச் ​செயல் வரலாற்றில் க​றை​யை ஏற்படுத்தியிருக்கிறது… அது என்னவென்று உங்களுக்குத் ​தெரியுமா...?

ஆமாம்... அ​மைச்சராக இருந்தவனும், நம்பிக்​கைக்குப் பாத்திரமாக இருந்தவனும் தன்​னை நம்பியவருக்குப் ​பெருந்து​ரோகம் ​செய்தான். உலகத்தி​லே​யே முதன் முதலில் ராக்​கெட் ​தொழில் நுட்பத்​தைப் ​போர்க்களத்தில் அறிமுகப்படுத்திய ஒரு மாவீர​ன் வீழ்வதற்காகச் ​சோரம் ​போயினர்… அத்து​ரோகிகள் யார் என்று ​தெரிந்து கொள்ள தாங்கள் ஆசைப்படுவது தெரிகிறது... அடுத்த பகுதி வ​ரை ​பொறு​மை காத்திருங்கள்...



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p6m.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License