இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும்

முனைவர் சி. சேதுராமன்


14. அதிகாரி செய்த து​ரோகம்​

நல்லதை விரும்புவோரும் உண்டு. நல்லவர்க​ளையும் நல்லனவற்​றையும் விரும்பாதவர்களும் உண்டு. சில​பேர் நல்லவனாக நடித்து நல்லவர்களை ஏமாற்றித் து​ரோகம் செய்வதுண்டு. அதற்குக் காரணம் என்ன? எல்லாம் சுயநலம்தான். சிலருக்கு நல்லது ​செய்தா​லே பிடிக்காது... நல்லது ​செய்பவர்களை எப்படியாவது ஒழித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள்...

மகாபாரதத்தில் ஒரு க​தை வருகிறது. அ​தைக் ​கேளுங்க...

சுயநலம் ​கொண்டவர்கள் எப்படி நல்லவர்களை வீழ்த்துகிறார்கள் என்ப​தை விளக்கப் பீஷ்மர் சொன்ன கதைதான் இது.

முன்னொரு காலத்தில் புரிகை என்னும் நகரில் பௌரிகன் என்னும் மன்னன் இருந்தான். முற்பிறவியில் செய்த கர்மப் பயனால் அடுத்த பிறவியில், ஒரு சுடுகாட்டில் நரியாகப் பிறந்தான். நரி தன் முற்பிறவியைப் பற்றி எண்ணி வருத்தம் கொண்டது. அது பிறர் தரும் மாமிசத்தை உண்பதில்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் தருவதில்லை. உண்​மை​யை​யே பேசி வந்தது. விரதம் நியமங்களைத் தவறாமல் நிறைவேற்றி வந்தது. மரத்திலிருந்து தாமே உதிர்ந்த கனிகள்தாம் அதன் உணவு. அது விலங்காகப் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சாதுக்களைப் போல் விளங்கிற்று. தான் பிறந்த சுடுகாட்டை விட்டு வேறிடம் சென்று வசிக்க அது விரும்பவில்லை.

இந்த நரியின் போக்கைக் கண்ட மற்ற நரிகள், நரிகளுக்கு உள்ள பொதுவான வாழ்க்கை முறையையே அது மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கூறின. “சாதுக்களுக்கு விதிக்கப் பட்ட ஒழுக்கத்தை விட்டுவிட்டு நீ நரிக்குரிய பண்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். மயானத்தில் இருந்து கொண்டு மாமிசத்தை வெறுக்கக் கூடாது. நாங்கள் உண்பதை உனக்குத் தருகிறோம். சாதியின் இயல்புக்கு ஏற்ப நடந்துக் கொள்” என்றன.

மன அடக்கமும் பொறுமையும் உள்ள அந்த நரி இனிய சொற்களால் பதில் உரைத்தது. “பிறப்புக் காரணமாக நான் நரிகளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ள மாட்டேன். எந்தக் குலமாய் இருந்தாலும் ஒழுக்கத்தைப் போற்ற வேண்டும். எதைச் செய்தால் நம் இனத்தின் புகழ் பெருகுமோ, அதையே நான் செய்ய விரும்புகிறேன். சுடுகாட்டில் நான் வசிப்பது குற்றமாகாது. ஆத்மாதான் நல்ல செயல்களுக்குக் காரணமாக இருக்கிறது. ஒருவர் வாழும் இடத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பிறப்பு ஒருவருடைய ஒழுக்கத்திற்குக் காரணம் அன்று. ஒழுக்கம்தான் குலத்தை உயர்த்துகிறது. ஆத்மாதான் நல்ல செயல்களையும், கெட்ட செயல்களையும் செய்யத் தூண்டுகிறது. வசிக்கும் இடம் அன்று. ஆசிரமத்தில் இருக்கும் ஒருவன் அடாத செயல் புரிகிறான். ஆசிரமத்தில் இல்லாத ஒருவன் அறம் செய்கிறான். ஆகவே இருக்குமிடம் முக்கியமில்லை. நரியாகப் பிறந்ததால் - சுடுகாட்டில் வசிப்பதால் - மாமிசம் உண்ண வேண்டும் என்பதில்லை. ஆதலால் உங்கள் ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது” என்று கூறிற்று.



அந்த நரியின் ஒழுக்கம் மிக்க வாழ்க்கை காடெங்கும் உள்ள விலங்குகளால் பாராட்டப்பட்டது. ஒரு அரசப் புலி அந்த நரியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்றது. அத்தகைய ஞானம் நிறைந்த நரியை அமைச்சராக ஏற்க விரும்பியது. நரியை நோக்கி, “நண்பனே! உன் புகழை நான் அறிவேன், என்னுடன் இருந்து விடு. எனக்கு நல்வழி காட்டு. உனக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம். நான் பிறந்த புலி ஜாதி கொடூரமானது. ஆயினும் நீ என் இதயத்தில் இடம் பெற்று விட்டாய். என் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொள்” என்று கேட்டுக் கொண்டது.

வலிமை மிக்க புலியை நோக்கி நரி பணிவுடன், “வேந்தனே! உன் பெருமைக்கு ஏற்ப பேசினாய். தருமத்தில் விருப்பம் உள்ளவரை நீ தேர்ந்தெடுப்பது நியாயமானதே! நீதியில் அன்பும் தருமத்தில் பற்றும் நன்மையில் விருப்பமும் உள்ளவர்களை நீ கண் போல போற்ற வேண்டும். தந்தையைப் போல கருத வேண்டும். உன்னுடைய செல்வத்தில் திளைத்து இன்பம் பெற நான் விரும்பவில்லை. என்னுடைய போக்கு உன்னுடைய சேவகர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் கொடுமை செய்பவர்கள். நம்மிடையே மோதலை உண்டாக்குவார்கள். நீ நல்ல மனம் கொண்டு பாவிகளைக் கூட மன்னித்து விடுகிறாய். எல்லா நன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன. ஆனால் என் நிலைமையில் நான் திருப்தியடைகிறேன். எனக்குப் பதவி ஆசையில்லை. அரச சேவையையும் நான் அறியேன். அரச சேவையில் இருப்போர் பலவகையான நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும். காட்டில் வசிப்பது விரத நியமங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. எனது வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. நல்ல தண்ணீர், நல்ல காய், கனி, கிழங்கு ஆகியவற்றை உண்டு விரதமேற்றிருக்கும் எனக்கு அச்சத்துடன் கூடிய அரச வாழ்வு வேண்டாம். அரச சேவையில் ஈடுபட்டு வீண் அபவாதத்திற்கு ஆளாகி நாசம் அடைந்தோர் பலர். எனக்கு அந்தப் பதவி வேண்டாம்" என்றது நரி.

ஆனால் புலியோ வற்புறுத்தி வேண்டிக் கொண்டது. அதனால் நரி ஒரு நிபந்தனை விதித்தது. புலியை நோக்கி, “நீ உரிய மரியாதையை என்னைச் சார்ந்தவருக்குத் தர வேண்டும். எனது வாழ்க்கை முறையை நான் தொடர்ந்து மேற்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும். நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்க மாட்டேன். காரணம் பொறாமை உள்ளவர்கள் என் ஆலோசனையைத் திரித்துக் கூறுவார்கள். உன் இனத்தாரின் நடவடிக்கை பற்றி என்னிடம் நீ கேட்காமல் இருக்க வேண்டும். என் யோசனைகளைப் புறக்கணிக்கும் அமைச்சர்களை நீ தண்டிக்கக் கூடாது. அதுபோலவே சினம் கொண்டு என்னைச் சார்ந்தவர்களையும் நீ எதுவும் செய்யக் கூடாது” என்று கூறியது நரி.



புலி, நரி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. பின்னர் நரி அமைச்சர் பதவியை ஏற்றது.

அமைச்சரவையில் இடம் பெற்ற நரி புகழத்தக்க செயல்களைச் செய்து வந்தது. அதனால் அமைச்சர் அவையில் இருந்த மற்ற புலிகள் பொறாமையில் புழுங்கின. கொஞ்சம், கொஞ்சமாக நரியின் செயல்களைக் குறை கூறத் தொடங்கின. உள்ளத்தில் பகையும், உதட்டில் நட்பும் கொண்டு பழகத் தொடங்கின. எப்படியேனும் நரியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் எனக் கருதிய அவை பலப்பல கதைகளைக் கூறிப் பொருள் ஆசை காட்டி மனத்தை மாற்ற முயற்சி செய்தன. முடியவில்லை. எப்படியும் நரியைத் தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன.

அவை விலங்குகளுக்கு அரசனான புலிக்குத் தயாரித்து வைக்கப் பட்டிருந்த மாமிசத்தைத் தந்திரமாக நரியின் வீட்டில் வைத்து விட்டன. அதனால் பசியுடன் இருந்த அரசனுக்கு உரிய நேரத்தில் மாமிச உணவு கிடைக்கவில்லை. அரசப் புலியும் திருடனைத் தேடி வருமாறு ஆணை பிறப்பித்தது. அந்த நேரத்தில் நரியின் புகைப் புலிகள் அதன் மீது பழியைச் சுமத்தின. மாமிச உணவை, மிகச் சிறந்த மேதாவி என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் உம் அமைச்சனான நரி திருடிக் கொண்டுப் போய்த் தன்னிடத்தில் வைத்துக் கொண்டது என்று கூறின.

நரியின் திருட்டுச் செயல் கேட்ட அரசப் புலி சினம் கொண்டது. உடன் நரியின் பகைப் புலிகள் “இத்தகைய அற்பத்தனமான திருட்டு நரி எதைத்தான் செய்யாது? நீங்கள் நினைப்பது போல அந்த நரி அறிவு மிக்கது அல்ல. நாணயமானதும் அல்ல. தருமம் என்னும் பெயரில் அதருமம் செய்வதில் வல்லமை மிக்க நரியை எப்படித்தான் அமைச்சராக தேர்ந்தெடுத்தீரோ... தங்களுக்குரிய மாமிசத்தைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் அந்த நரிக்கு விரதம் ஒரு கேடா?அந்த நரிதான் மாமிசத்தைத் திருடியது என்பதை நிரூபிக்க இப்போதே போய் அதனைக் கொண்டு வருகிறோம்” என்று கூறி அப்படியே கொண்டு வந்தன.

அது கண்ட அரசப் புலி நரியைக் கொல்லத் தீர்மானித்தது.

இதனை அறிந்த புலியின் தாய் தன் மகனை நோக்கி, “மகனே... நன்கு ஆலோசித்துப் பார். வஞ்சனையாளர்களின் பேச்சை நம்பாதே... ஒரு வேலையைச் செய்பவரிடையே பொறாமை ஏற்படும். அந்தப் பொறாமை படிப்படியாகக் குரோத எண்ணத்தை வளர்க்கும். அதன் விளைவுதான் இப்போது நடப்பதும்... நன்கு யோசித்துப் பார். விரத சீலமுள்ள நரியா மாமிச உணவை நாடும்...? திருடும்...? பொய், மெய் போலவும், மெய் பொய் போலவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கும். அவற்றை ஆராய்ந்து அறிதல் மன்னனின் கடமை. ஆகாயம் கவிழ்ந்த வாணலியின் உள்பாகம் போலக் காட்சியளிக்கும். மின்மினிப் பூச்சிகள் நெருப்புப் பொறிகள் போல் தோன்றும். உண்மையில் ஆகாயத்தில் வாணலியின் தோற்றமும் இல்லை. மின்மினிப் பூச்சிகளிடம் நெருப்பும் இல்லை. எதையும் எண்ணிப் பார்த்து உண்மையைக் காண வேண்டும். அரசன் தன் மக்களில் யாரையும் கொல்ல முடியும். இது பெரிய காரியம் அன்று. உண்மை காண்பதுதான் பெரிய செயல். உண்மையைக் கண்டுபிடி. பாவிகளான மற்ற அமைச்சர்களின் பேச்சைக் கேட்காதே. பழுது எண்ணும் மந்திரிகளின் பேச்சைக் கேட்டால் உனக்கு அழிவு நிச்சயம் ஏற்படும். மேலான நரியைப் பகைக்காதே” என்று கூறிற்று.



அரசப் புலி ஆலோசித்துப் பார்த்தது. நரியின் மீது பழி சுமத்துதல் தவறு என உணர்ந்து கொண்டது. நரியை அணைத்துக் கொண்டது.நீதி நெறி உணர்ந்த நரிக்கு மான உணர்வு மிகுந்தது. பழிக்குப் பின் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்க விருப்பம் கொண்டது. ஆனால் புலி நட்பு முறையில் கண்ணீர் பெருக்கி நரியை அவ்வாறு செய்யாமல் தடுக்க முயன்றது. ஆனால் நரியோ தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தது. அது புலியை நோக்கி, "ஆரம்பத்தில் நீ என்னை நன்கு மதித்தாய். பிறகு பிறரின் சொல் கேட்டுப் பழி சுமத்தி அவமானப்படுத்தினாய். பதவியிலிருந்து நீக்கினாய். மீண்டும் பதவி பெற்றால் என் மீது உனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? நானும் எப்படி பழையபடி நம்பிக்கை கொள்ள முடியும்? முதலில் பாராட்டிப் பதவியில் அமர்த்திய பின் குறை கண்டு பழி சுமத்துதல் அரச நீதி ஆகாது. இனிமேல் நீயும் என்னிடம் பழையபடி இருக்க முடியாது. நானும் மனம் கலந்து பழக முடியாது. நண்பர்களும் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். பிளவு ஏற்பட்ட பிறகு ஒன்று கூடுதல் கடினம்” என்பன போன்ற நீதிகளைக் கூறிய பின் புலியிடம் விடை பெற்றுச் சென்றது நரி. ஆயினும் மன நிம்மதி இழந்து, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்து சுவர்க்கம் அடைந்தது' என்று கூறினார் பீஷ்மர்.

து​ரோகிகளால் நல்லவர்கள் எப்படி​யெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?

இப்படித்தான் தாய்நாட்டுக்காகப்​ போராடிய மாவீரர் ஒருவ​ரை மீர்சடக் என்பவன் து​ரோகத்தால் வீழ்த்தினான். இந்த மீர்சடக் என்பவ​னை மிர்சாதிக் முகம்மது மிர்னாதிக் என்றும் அ​ழைப்பார்கள். இவன் உயர் அதிகாரியாக, தீரன் திப்புசுல்த்தானின் நம்பிக்​கைக்கு உரிய ஆளாக இருந்தான். ஆனால், இ​தே மீர்சடக் ​பெருந்து​ரோகியாக மாறிட்டான். அது ஒரு ​பெரிய து​ரோகம்... பணத்துக்காவும் பதவிக்காகவும் பச்சோந்தியாக மாறி எதிரிகளின் எண்ணம் ஈ​டேறுமாறு ​செய்தான் து​ரோகி மீர்சடக்.


திப்பு சுல்த்தான்

1750-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் கர்நாடக மாநிலம், ​கோலார் மாவட்டத்தில் உள்ள ​​தேவனகள்ளி என்னுமிடத்தில் ​ஹைதர்அலிக்கும் அவரது இரண்டாவது ம​னைவி பாத்திமாவிற்கும் முதல் மகனாகப் பிறந்தார் திப்பு சுல்த்தான். திப்புவின் தந்​தை ​மைசூர் மன்னரின் ப​டையில் ​போர்வீரராகவும் சுயமாக ஒரு சிறிய ​போர்ப்ப​டையி​னையும் ​வைத்திருந்தார். ​திப்புவின் தாயாரின் இயற்​பெயர் ஃபகர்உன்நிஸா என்பதாகும். இவரின் தந்​தையான சாகில் தாரிக் என்பவர் ஆந்திராவில் உள்ள கடப்பா என்னும் பகுதிக்கு ​ஹைதராபாத் நிஜாமினால் ​பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். சாதாரண ப​டைவீரரான ​ஹைதர் அலியின் வீரம் திற​மை ஆகியவற்​றை அறிந்து அவரைத் திருமணம் ​செய்து ​கொள்ளச் சம்மதித்தார் ஃபர்உன்நிஸா.

திப்புசுல்த்தான் தனது தந்​தையிடம் இந்தியப் ​போர்க்க​லை​யையும் தனது தந்​தையின் இராணுவத்தில் பணியாற்றிய பி​ரெஞ்சு அதிகாரி ஒருவரிடம் ​மேல்நாட்டுப் ​போர்க்க​லை​யையும் கற்றுக் ​கொண்டார். இளம் வயதி​லே​யே திப்புசுல்த்தான் தந்​தையுடன் ​சேர்ந்து​கொண்டு ஆங்கி​லேயருக்கு எதிராகப் பல ​போர்களில் ஈடுபட்டார்.

1766-ஆம் ஆண்டு திப்புசுல்த்தான் தனது 15-அவது வயதில் தனது தந்​தையினால் ​கேரளாவில் ந​டை​பெற்ற ​போர்க்களத்திற்கு அ​ழைத்துச் ​செல்லப்பட்டார். 1769-ஆம் ஆண்டுவ​ரை ந​டை​பெற்ற முதல் ​மைசூர்ப்​ போரின் ​போது தனது 16-ஆம் வயதில் தளபதியாகப் ப​டை நடத்திச் ​சென்றார் திப்புசுல்த்தான்.

1775 முதல் 1782 வ​ரை ந​டை​பெற்ற முதல் ஆங்கி​லேய மராட்டியப் ​போர்களிலும் திப்புசுல்த்தான் பங்கு ​கொண்டார். மராட்டியத்திடமிருந்து சில பகுதிக​ளைப் ​பெற்று ​மைசூர் அர​சோடு இ​ணைத்தனர். இப்​போர்களின் முடிவில் ஆங்கி​லேயர்களின் ​கை ஓங்கியது. இதனால் பலம் ​பெற்ற ஆங்கி​லேயர்கள் ​ஹைதர் அலி​யையும் திப்புசுல்த்தா​னையும் எதிர்த்தனர். ஆனால் அவர்களுக்கு அஞ்சாது இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் ​போரிட்டனர்.

திப்பு ​பெற்ற ​சிறப்புகள்

1769-ஆம் ஆண்டு முதலாம் ​மைசூர்ப் ​போர் முடிவுக்கு வந்த​ போது ஆங்கி​லேயர்கள் திப்புவுடன் சமாதான உடன்படிக்​கைக்கு முன்வந்தனர். இந்த உடன்படிக்​கையின் ​போது திப்பு உடனிருந்தார். ஆங்கி​லேயர்களுக்காகப் பல உயர் அதிகாரிகள் கலந்து ​கொண்ட ​போது ​ஹைதர் அலியின் சார்பில் கலந்து ​கொண்ட திப்புவின் தி​றமை​யையும், அரசியல் அறி​வையும் ஆங்கி​லேயர்கள் கண்டு வியப்ப​டைந்தனர். இந்த உடன்படிக்​கையின் ​போது சமாதானம் ​செய்பவராகக் கலந்து ​கொண்ட ​ஹைதராபாத் நிஜாம் திப்புவின் மீது ​கொண்ட ஈடுபாட்டினால் ​ஹைதராபாத் நகருக்கு வருமாறு அ​ழைப்பு விடுத்தார். 6000 ப​டைவீரர்களுடன் திப்பு நிஜாம் அரச​வைக்கு நல்​​லெண்ணத் தூதுவராகச் ​சென்றார்.

நிஜாம் திப்புவிற்கு ஃப​ரே அலிகான், நவாப்உத்தவுலா ​போன்ற சிறப்புக​ளை வழங்கினார். திப்பு இச்சிறப்புக​ளை தனது 18-ஆவது வயதி​லே​யே ​பெற்றார். 1780-ஆம் ஆண்டு ​செப்டம்பரில் காஞ்சிபுரத்​தை அடுத்து ந​டை​பெற்ற ​பொல்லலார் ​போரில் ஆங்கிலப்ப​டை முற்றிலும் அழிக்கப்பட்டது. கர்னல் ​பெய்லி, அவருக்குத் து​ணையாக வந்த சர்​ஹெக்டர் மன்​றோ ​போன்​றோர் படு​தோல்வி அ​டைந்தனர். இது திப்புவிற்குக் கி​டைத்த மா​பெரும் ​வெற்றியாகும்.

ஆங்கி​லேயர்கள் தங்களது ஆயுதங்க​ளைக் ​கைவிட்டுவிட்டுத் தப்பித்​தோம் பி​ழைத்​தோம் என்று ​சென்​னைக்கு ஓடினர். கர்னல் ​பெய்லி திப்புவால் ​கைது​செய்யப்பட்டார். இது இந்தியாவில் ஆங்கி​லேயர்கள் அ​டைந்த மா​பெரும் ​தோல்வியாகும். திப்பு 1781-ஆம் ஆண்டு ஆங்கி​லேயரிடமிருந்து சித்தூர்க் ​கோட்​டை​யைக் ​கைப்பற்றிக் ​கொண்டார். ​சென்​னைக்கு அருகிலிருந்த ​​கோட்​டை​யை இழந்​ததை ஆங்கி​லேயர்கள் ​பெரிய ​தோல்வியாகக் கருதினர். 1782-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் நாள் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள அன்னக்குடி என்னுமிடத்தில் நடந்த ​போரில் ஆங்கிலப் ப​டையி​னை​ரை எதிர்த்துப் ​போரிட்டுத் ​தோற்கடித்தார். ஆங்கிலப் ப​டையின​ரையும் தளபதி​யையும் ஆங்கி​லேயர்க​ளையும் திப்பு சி​றைப்படுத்தினார். ஆங்கி​லேயர்களின் அ​னைத்து ஆயுதங்க​ளையும் தனதாக்கிக் ​கொண்டார். இங்ஙனம் மாவீரராக இள​மையிலிருந்​தே திப்பு விளங்கினார்.


மைசூர் அரசர் பதவி

ஹைதரலி காலமானதால் 1782-ஆம் ஆண்டில் திப்பு ​மைசூரின் அரசரானார். தந்​தையின் வழியில் ​தொடர்ந்து ஆங்கி​லேயர்க​ளைத் திப்பு எதிர்த்துப் ​போரிட்டார். ஆங்கி​​லேயருடன் நடந்த பல ​போர்களில் திப்பு ​வெற்றி ​பெற்றார். திப்பு​வை அடக்குவதற்காக பம்பாய் மாகாண ஆளுநர் பிரி​கேடியர் ​மேத்யூஸ் என்பவ​ரைப் புதிய தளபதியாக நியமித்து ​மைசூ​ரைத் தாக்குமாறு அனுப்பினார்.

​மைசூரின் வடக்குப் பகுதி​யைத் தாக்கிய இவர் திப்புவால் 1783-ஆம் ஆண்டு ​தோற்கடிக்கப்பட்டு ​கைது ​செய்யப்பட்டார். ஆங்கி​லேயர்கள் மீண்டும் 1783-ஆம் ஆண்டின் இறுதியில் கர்னல் புல்லர்ட்டன் த​லை​மையில் வடக்குப் பகுதி​யை மீண்டும் தாக்கி அத​னைக் ​கைப்பற்றிக் ​கொண்டனர். இப்​போர் 1769-ஆம் ஆண்டு ​தொடங்கி ​தொடர்ந்து 4 ஆண்டுகள் வ​ரை நீடித்தது. பல இடங்களில் இப்​போர் ந​டை​பெற்றது. இப்​போரில் இரு தரப்புகளுக்கும் ஓய்வு ​தே​வைப்பட்டது. ஆங்கி​லேயர்கள் முதலில் திப்புவுடன் ​போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்தனர். 1784-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் நாள் ஆங்கி​லேயர்களுக்கும் திப்புவிற்கும் மங்களூர் உடன்படிக்​கை ஏற்பட்டது. இவ்வுடன்படிக்கையின்படி ​போரில் அவரவர் ​கைப்பற்றிய பகுதிக​ளைத் திரும்ப ஒப்ப​டைப்ப​தென்றும் இருதரப்புகளிலும் உள்ள ​போர்க்​ ​கைதிக​ளை விடுவிப்ப​தென்றும் உடன்படிக்​கை முடிவு ​செய்யப்பட்டது.

இவ்வுடன்படிக்​கை இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆங்கி​லேயர்களுக்கு நிபந்த​னைகள் விதித்து அவர்களிடம் இருந்து ​கை​யொப்பம் ​பெற்ற சம்பவம் ​வே​றெப்​போதும் நடந்ததில்​லை என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் ராஜதந்திரத்துடன் திப்பு நடந்து ​கொண்டார். ஆங்கி​லேயர்களுக்கு இவ்​வொப்பந்தத்தினால் ஏதும் நன்​மைகள் கிட்டவில்​லை.

இவ்வுடன்படிக்​கை​யை அப்​போ​தைய இந்தியாவின் த​லை​மை ஆளுநரான வாரன்​ஹேஸ்டிங் ஏற்றுக் ​கொள்ளவில்​லை. தங்கள் நாட்டு மன்னருக்கு ஏற்பட்ட அவமானமாக இத​னை அவர் கருதி ​சென்​னை மாகாண அர​சையும் ஆளுந​ரையும் தண்டிக்க ​வேண்டும் என்று இங்கிலாந்து மன்னரிடம் அவர் ​கேட்டுக் ​கொண்டார்.

து​ரோகங்களின் கூட்டணி

இவ்வுடன்படிக்​கையால் ​ஹைதராபாத் நிஜாம், மராட்டியர்கள் ஆகி​யோர் கலக்கம​டைந்தனர். அவர்கள் திப்புவிடம் இழந்த பகுதிக​ளை மீட்க முடியாமல் ​போனது. இதனால் ​கொதிப்ப​டைந்த அவர்களிருவரும் திப்புவிற்கு எதிராகக் கூட்டணி அ​மைத்தனர். இருவரும் ஆங்கி​லேயருக்கு உதவி திப்பு​வை ஒழிக்க முயற்சித்தனர். இனத் து​ரோகிகள் ஆங்கி​லேயர்களுடன் ​சேர்ந்து சதி ​செய்யத் ​தொடங்கினர்.

ஆனால் திப்பு மராட்டியருக்கு பதானி​ப் பகுதி​யை விட்டுக் ​கொடுத்து அவர்களிருவரிடமும் நட்புணர்வுடன் நடந்து ​கொள்ள முயன்றார். ஆனால் மராட்டியர்கள் நயவஞ்சக எண்ணத்துடன் தங்களது பகுதிக​ளைப் ​பெற்றுக் ​கொண்டு ஆங்கி​லேயர்களுடன் கூட்டுச் ​சேர்ந்து ​கொண்டனர். இத்து​ரோகச் ​செயலுக்கு மராட்டியர் பிற்காலத்தில் மிகவும் வருந்த ​நேரிட்டது.


திருவாங்கூர் ப​டை​யெடுப்பு

1889-ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மீது திப்பு ​​போரிட்டுத் தாக்குதல் நடத்தினார். திப்புவின் தாக்குத​லைச் சமாளிக்க முடியாத திருவாங்கூர் மன்னர் ஆங்கி​லேயரின் உதவி​யை நாடினார். ஆங்கி​லேயர், மராட்டியர், நிஜாம், திருவாங்கூர் மன்னர் என நால்வர் இ​ணைந்து கூட்டணியாகத் திப்பு​வைத் தாக்கினர்.

இப்​போர் இரண்டாண்டுகள் ந​டை​பெற்றது. திப்புவின் தாக்குத​லை இந்நால்வர் அணியால் எதிர்​கொள்ள முடியவில்​லை. ஆங்கி​லேயர்கள் அ​மெரிக்கப் ​போரில் அனுபவம் ​பெற்ற காரன்வாலிஸ் என்பவ​ரை அ​ழைத்து கர்நாடகாவிற்கு அனுப்பி ​வைத்தது. இவரின் த​லை​மையில் மீண்டும் ​போர் ​தொடர்ந்தது. இவர் 1791-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் நாள் ​பெங்களூ​ரைக் ​கைப்பற்றினார். பின்னர் திடீ​ரென ஸ்ரீரங்கபட்டினக் ​கோட்​டை​யை முற்று​கையிட்டார். இத்தாக்குத​லை திப்பு எதிர்பார்க்கவில்​லை. அதனால் அவர் மலபார் பகுதியிலிருந்து திரும்பி வந்து ​போரிட்டார். இப்​போரில் ஆங்கி​லேயரின் ​கை ஓங்கியது. இறுதியில் ஸ்ரீரங்கபட்டணம் ​கோட்​டையினுள் ஆங்கிலப்ப​டை நு​ழைந்துவிட்டது.

திப்பு இப்​போரில் ஆங்கி​லேயருடன் உடன்பாடு ​செய்து ​கொண்டார். இதன்படி தனது அரசின் கால் பகுதியி​னையும் மூன்று ​கோடி ரூபாய்ப் பணமும் இழப்பீடாகத் தரச் சம்மதித்தார். உடனடியாகத் திப்புவால் இப்​பெருந்​தொ​கையி​னைச் ​செலுத்த முடியவில்​லை. இதனால் ஆங்கி​லேயர்கள் திப்புவின் இரு மகன்க​ளை பி​ணையாக அ​ழைத்துச் ​சென்றனர். திப்பு மிக வி​ரைவில் தான் ஒப்புக் ​கொண்ட ​தொ​கையி​னைச் ​செலுத்தி தனது இரண்டு மகன்க​ளை மீட்டுக் ​கொண்டார்.

இச்​செய​லைத் திப்பு தனக்கு ஏற்பட்ட ​பெரும் அவமானமாகக் கருதினார். இதன்பின் எந்த ஒரு உடன்படிக்​கைக்கும் ஆங்கி​லேயருடன் இணங்குவதில்​லை என்று முடி​வெடுத்தார். ஆங்கி​லேயர்க​ளைத் தனது பரம எதிரியாகக் கருதினார் திப்பு. பி​ரெஞ்சுக்காரர்களுடன் நட்பி​னைப் ​பெருக்கிக் ​கொள்ள விரும்பி தனது தூதுவர்க​ளைத் திப்பு ​நெப்​போலியனிடம் அனுப்பி உதவி ​கோரினார். ​நெப்​போலியனும் அதற்கு உதவுவதாகக் கூறித் தனது ப​டையுடன் ஆசியா​வை ​நோக்கிப் பயணமானார்.



மைசூர்ப் புலி

திப்பு அ​னைத்துத் து​றைகளிலும் திற​மை மிக்கவராகத் திகழ்ந்தார். ​போர்க்களத்தில் தனித்து விடப்பட்டாலும் கலங்காது ​வெற்றி வீரராக வலம் வந்தார் திப்பு. எத்த​கைய இக்கட்டான ​நேரத்திலும் மனஉறுதி​​யை இழக்காதவராக திப்பு விளங்கினார். சிறுவயதாக திப்பு இருந்த​போது இவருக்குப் ​போர்க்க​லை​யைக் கற்றுக் ​கொடுத்த பி​ரெஞ்சுக்காரர் ஒருவருடன் ​மைசூர்க் காட்​டை ஒட்டினாற் ​போன்ற பகுதியில் உலவிக் ​கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகக் காட்டிற்குள்ளிருந்த புலி ஒன்று அவர்கள் முன்பாக எதிர்ப்பட்டு இவர்க​ளைத் தாக்க முற்பட்டது. சுதாரித்துக் ​கொண்ட திப்பு புலி​யைக் ​கைத்துப்பாக்கியால் குறிபார்த்துச் சுட்டார். ஆனால் ​கைத்துப்பாக்கியில் குண்டுகள் இல்​லை. இத​னைக் கண்டு அஞ்சி நடுங்கிய பி​ரெஞ்சுக்கார் அதிர்ச்சியில் மயங்கிவிழுந்தார்.

திப்புசுல்த்தான் ​கைத்துப்பாக்கி​யைத் தூக்கி எறிந்துவிட்டு புலியின் மீது பாய்ந்து ​போரிட்டார். அ​ரைமணி​​ நேரப் ​போராட்டத்திற்குப் பின் புலி மயங்கி விழுந்தது. மயங்கிக் கிடந்த நண்ப​ரை மயக்கம் ​தெளிவித்து எழுப்பி கீ​ழே கிடந்த புலி​யைக் காட்டினார். பின்னர் புலி​யைத் தூக்கித் ​தோளில் ​போட்டுக் ​கொண்டு அரண்ம​னைக்கு நடந்து வந்தார். திப்புவின் வீரத்​தைப் பி​ரெஞ்சுக்காரர் அங்கிருந்தவர்களிடம் கூற அ​னைவரும் வியப்புற்றனர். இத​னை அறிந்த மக்கள் திப்புசுல்த்தா​னை ​மைசூர்ப்புலி என்று அ​ழைத்தனர்.

திப்புசுல்த்தான் சிறந்த வீரராக மட்டுமல்லாது நிர்வாகத் திறன் மிகுந்தவராகவும் விளங்கினார். திப்புவிற்கு இனம், ​மொழி கடந்து உலகம் முழுவதும் நண்பர்கள் இருந்தனர். ஜாக்​கோப்பியன் கிளப் என்ற ​பெயரில் கிளப் ஒன்​றைத் ​தொடங்கியிருந்த திப்பு சுல்த்தான் அதன் மூலம் ஐ​ரோப்பிய நண்பர்க​ளைப் ​பெற்றிருந்தார். அ​னைத்து மதத்தின​ரையும் திப்புசுல்த்தான் மதித்து நடந்தார். சிருங்​கேரி மடத்திற்குப் பல மானியங்க​ளை வழங்கினார். இந்துக் ​கோயில்களுக்கு அரசு மானியங்க​ளை வழங்கினார். சமயப் ​பொ​றையு​டையவராக விளங்கினார். திப்புவின் காலத்தில் வணிக் ​செழித்து வளர்ந்தது. இத​​னைக் கண்ணுற்ற மராத்தியரும் ஆங்கி​லேயரும் நிஜாமும் ​திப்புவின் மீது ​பொறா​மை ​கொண்டனர். ​பொறா​மைத் தீயில் கருகிய ஆங்கி​லேயர்கள் திப்பு​வை ஒழிக்கத் திட்டமிட்டனர்.



து​ரோகிகளின் ​செயல்கள்

ஆங்கி​லேயர்களின் நடவடிக்​கைக​ளை அறிந்த திப்பு ​பெரும்ப​டை திரட்டினார். ஆங்கி​​லேயர்கள் திப்பு​வை அடக்க ​வெல்​​லெஸ்லி என்பவனின் த​லை​மையில் ப​டைக​ளை அனுப்பினர். ​வெல்​லெஸ்லிக்குத் திப்புவின் நடவடிக்​கைகள் பிடிக்கவில்​லை. அதனால் திப்பு​வை ஒழிக்க எண்ணி 1799-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் ​தேதி ​வேலூரில் அப்​போது இருந்த 21000 ​போர் வீரர்க​ளைக் ​கொண்ட ப​டை ​ஜெனரல் ஹாரிஸ் த​லை​மையில் ​மைசூர் ​நோக்கிப் புறப்பட்டது.

இந்தப் ப​டையுடன் 20.2.1799-ஆம் நாள் ஆம்பூர் என்ற இடத்திற்கு அருகில் கர்னல் ​வெல்​லெஸ்லியின் த​லை​மையில் ​ஹைதராபாத் நிஜாமின் 16000 ​பேர்கள் ​கொண்ட ப​டை ஒன்றும் ​சேர்ந்து ​கொண்டது. கும்பினியாரின் பம்பாய்ப் ப​டையில் 6400 ​பேர்கள் ​ஜெனரல் ஸ்டூவர்ட் என்பவன் த​லை​மையில் திருச்சி​யை ​நோக்கிக் கிளம்பினர்.

​ ஜெனரல் ஹாரிஸ் என்ற ப​டைத்தளபதி தனது ப​டையுடன் 1799 மார்ச் மாதம் 5-ஆம் ​தேதி ​மைசூர் இராஜ்யத்தின் எல்​லை​யை வந்தடைந்தான். அதற்குப் பிறகு வடகிழக்குப் பகுதிகளான காளிமங்கலம், பங்களூர் முதலிய இடங்களுக்குப் புறப்பட்டுச் ​சென்றான். பம்பாய்ப் ப​டையும் ​பிப்ரவரி 21-ஆம் நாள் குடகு ராஜ்யத்தின் எல்​லை​யை வந்த​டைந்தது.

ஆங்கி​லேயர்கள் தன்மீது எவ்வாறு திடீ​ரென்று தாக்குதல் நடத்தினார்க​ளோ அது​போன்று தானும் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்த ​வேண்டும் என்று கருதி திப்பு குடகு எல்​லையில் சித்​தேசுவரா என்ற இடத்தில் ஸ்டூவர்ட் என்ற ஆங்கி​லேயனின் த​லை​மையில் வந்த ப​டைக​ளைத் தாக்கும் ​பொருட்டு 11800 ​பேர்கள் ​​கொண்ட ப​டையுடன் சித்​தேசுவரா​வை ​நோக்கி வந்தார். வருவதற்கு முன்னர் ஸ்ரீரங்கபட்டினத்துக் ​கோட்​டைக் காவ​லை ​சையத் சாகிப் என்பவனிடமும் மந்திரி பூர்ணய்யா என்பவனிடமும் ஒப்ப​டைத்துவிட்டு திப்பு ​சென்றார்.

சித்​தேசுவரா​வை ​நோக்கி திப்பு வருவ​தை அறிந்த ஆங்கி​லேயர் அவ​ரை எதிர்க்க மிகவும் தயராக நின்றனர். என​வே திப்பு அங்கிருந்து ​வெற்றிகரமாக ​பெரியபட்டினம் என்ற இடத்திற்குப் ​போய்ச் ​சேர்ந்தார். இதற்கி​டையில் ​ஜெனரல் ஹாரிஸ் என்ற தளபதியின் ப​டை கங்கனகள்ளி என்ற ஊரில் மதூர் என்ற ஆற்​றைக் கடந்து ​மைசூ​ரை ​நோக்கி வி​ரைந்து வந்துவிட்டது. இத​னை அறிந்த திப்பு ​பெரிய பட்டினத்திலிருந்து ஸ்ரீரங்கபட்டினத்திற்கு ப​டையுடன் ஓடிவந்தார்.

ஆனால் திப்பு வருவதற்கு முன்னதாக​வே ​ஜெனரல் ஹாரிசுடன் ​கோட்​டைக் காவலுக்கிருந்த பூர்ணய்யாவும் ​சையத் சாகிப்பும் ஆங்கி​லேயர்களுடன் இரகசிய உடன்படிக்​கையி​னைச் ​செய்து ​கொண்டனர். ஆங்கி​லேயர்களுடன் ​சேர்ந்து ​கொண்டு திப்புவிற்குத் து​ரோகமி​ழைக்கத் ​தொடங்கினர். ​​மைசூ​ரை ​நோக்கி வந்த ஹாரி​ஸை இவர்கள் இருவரும் தடுத்து நிறுத்தவில்​லை.

இதற்கி​டையில் பிளாயிட் த​லை​மையில் ​சென்ற கம்​பெனிப் ப​டையும் பம்பாயிலிருந்து வந்த ஸ்டூவர்ட் ப​டையும் ஒன்று ​சேர்ந்துவிடாதவாறு தடுத்து நிறுத்தும்படி குலாம் உதீர்க்கான் என்ற தன் தளபதி​யைத் திப்பு ஒரு ப​டையுடன் அனுப்பினார். ஆனால் அவன் ​பெருந்து​ரோகத்​தைச் ​செய்தான். இரண்டு ப​டைகளும் கலக்கும்படி அவன் பார்த்துக் ​கொண்​டே இருந்தான்.

இதனால் ஹாரிஸ் ​கோட்​டையின் ​வெளிமதில்சுவரின் காவல் தளத்​தை ஏப்ரல் 26-ஆம் ​தேதி இரவில் ​கைப்பற்றினான். இதற்கி​டை​யே திப்பு ஹாரி​சைச் சந்தித்து சமாதானம் ​செய்து ​​கொள்ள விரும்பினார். ஆனால் ஆங்கி​லேயர்கள் ​பெருந்​தொ​கை​யைக் ​கேட்டனர். இத​​னைக் ​கொடுக்க முடியாது என்றறிந்த திப்பு ​போ​ரைத் ​தொடர்ந்து நடத்துவது என்று முடி​வெடுத்தார்.



நயவஞ்சகன் மீர்சடக்

இந்நி​லையில் திடீ​ரென்று ​கோட்​டைச் சுவரில் ​மே மாதம் 3-ஆம் நாள் ஒரு விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசலின் வழியாக ஆங்கி​லேயர் நு​ழைவதற்கு முன்பு அவர்கள் திப்புவின் திவான்களான பூர்ணய்யா, மீர்சடக் மற்றும் திப்புவின் ப​டைத்தளபதி குலாம் உதிர்கான் என்பவ​​னையும் கண்டு​பேசி அவர்களின் ஒத்து​ழைப்​பைப் ​பெற்றனர்.

மீர்சடக் ப​டைத் த​லைவர்களில் ஒருவனான நாதிம் என்பவ​னை அ​ழைத்துக் ​கோட்​டைக் காவல் பட்டாளத்திற்கு மூன்றாம் ​தேதி சம்பளப் பட்டுவாடா ​செய்யப்படுவதால் நகருக்குள் வந்து சம்பளம் ​பெற்றுப் ​போகும்படி அறிக்​கை ஒன்று விடச் ​சொன்னான். அதனால் உள்​கோட்​டைக் காவல் வீரர்கள் நாதிம் கூறியபடி நகருக்குள் சம்பளப் பட்டுவாடாவிற்காகக் காத்துக் கிடக்கும் சமயத்தில் ஆங்கிலப் ப​டைகள் உள்புகுந்துவிட்டன.

து​ரோகிகள் தக்க சமயம் பார்த்து ​வெண்ணிறக் ​கைக்குட்​டைக​ளை வீசுவதன் மூலம் ​கோட்​டை மதில் மீதிருந்து ​சை​கை ​செய்து ஆங்கி​லேய​ரை உள்​ளே வரவ​ழைத்தனர். அவ்வாறு வந்த ஆங்கிலப் ப​டைகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று ​தெற்காகவும் மற்​றொன்று வடக்காவும் முன்​னேறி இறுதியில் இரண்டும் நகரின் கீழ்ப்புறத்தில் சந்திப்பது என்று முடிவு ​செய்தனர். அ​தோடு ​கோட்​டைக்குள் ​வெளி மதில் சுவர்களுக்கும் உள் மதில் சுவர்களுக்கும் இ​டை​யே தீயிடடுக் ​கொளுத்தி எஞ்சியுள்ள காவல் வீரர்களின் உயிருக்கு உயிராகத் திகழ்ந்த ​சையத் கபார் என்ப​னையும் மீர்சடக்கின் உதவியால் ​கொன்றனர்.

இ​தை அறிந்த திப்பு தா​னே ப​டைக்குத் த​லை​மை தாங்கிப் ​போ​ரை நடத்த முற்பட்டார். ஆனால் து​ரோகிகளின் ​செயல் ஈ​டேறியதால் ​கோட்​டையின் உள்புறமும் ​வெளிப்புறமும் ஆங்கி​லேயர் வசமாயின. இ​தை உணர்ந்த திப்புவின் மனம் திகில் அ​டைந்தது. சிதிலமடைந்திருந்த ​கோட்​டைச் சுவ​ரை உட​னே அ​டைக்குமாறு திப்பு உத்தரவிட்டுவிட்டு அரண்ம​னைக்குள் ​சென்றார். அங்கிருந்த ​​சோதிடர்கள் ​மே மாதம் 4-ஆம் ​தேதி ​கெட்ட நாள் என்றும் அ​தோடு திப்புவிற்கு அங்காரக ​தோஷம் கழிந்துவிடுகின்றது என்றும் அதற்குத் ​தோஷ பரிகாரம் ​செய்ய ​வேண்டும் என்றும் கூற​வே அவர்கள் ​சொன்ன​தை எல்லாம் திப்பு ​செய்தார்.

ஸ்ரீரங்க பட்டணத்துக் ​கோட்​டைச் சுவரின் வட​மேற்கு மூ​லையில் உ​டைந்திருந்த சுவ​ரைக் கட்டுமாறு திப்பு கூறிய​தை மீர்சடக் சரியாகச் ​செயல்படுத்தவில்​லை. ​வெறும் பூச்சாகப் பூசி அதில் ஆங்கிலப் ப​டை வருவதற்கு வழியும் அ​மைத்தான். இதனால் ஆங்கி​லேயர்களின் பீரங்கித் தாக்குதலில் சரிந்து விழுந்தது. இத​​னைக் ​கேள்வியுற்ற திப்பு எதிரில் எந்த அராசங்க அதிகாரியும் கண்ணில் படாததால் தா​னே ​போர்க்களத்தில் இறங்குவ​தென்று முடிவு ​செய்து தனது ​மெய்க்காப்பாளன் ராஜாக்கான் மற்றும் ​வே​லைக்காரர்கள் 20 ​பேர் ஆகி​யோருடன் சுவர் இடிந்த தி​சைக்குச் ​சென்றார்.


து​ரோகத்தால் வீழ்ந்த தீரன்

சுவர் இடிந்த இடத்திற்கு வந்த திப்புவிற்குத் திக்​கென்றிருந்தது. ஏ​னெனில் அங்கு யாரும் இல்​லை. அங்கு உல்லாசமாக உலாவந்த மீர்சடக்கும் ​கோட்​டையின் கில்​லேதாரான மீர்நாடியும் மட்டு​மே எதிர்ப்பட்டனர். இடிந்த சுவர்ப்பக்கம் சுமார் 600 அடி தூரத்தில் ஒரு உயரமான சுவர் இருந்தது. அதில் ஒரு சிறு கதவு வழியாகத் தன் வீரர்களுடனும் ​மெய்க்காப்பாளருடனும் திப்புசுல்த்தான் குதி​ரையில் ​சென்றார்.

அப்​போது அவ​ரைப் பின்​தொடர்ந்து​சென்ற மீர்சடக் மீர்நாடிம் இருவரும் தந்திரமாகக் ​கோட்​டைக் கதவின் உட்புறம் நின்று ​கொண்டு, அ​னைவரும் ​சென்ற பின்னர் கத​வைப் பலமாக மூடித் தாளிட்டனர். ​வேறு யாரும் கத​வைத் திறக்காதவாறு மீர்நாடிம் துப்பாக்கியுடன் ​மேல்த்தளத்தில் நின்று காவல் காத்தான்.

இத​னை அறியாத திப்பு தன் எதி​ரே வந்து பாய்ந்த ஆங்கி​லேயர்க​ளைத் தாக்கினார். இம்​மோதலில் அவருடன் வந்த அ​னைவரும் ​கொல்லப்பட்டனர். அப்​போது ​பெரிய குண்டு ஒன்று வந்து திப்புசுல்த்தானின் காலில் பட்டது. இதனால் தான் அங்கிருப்பது ஆபத்து எனத் ​தெரிந்து ​கொண்டு ​கோட்​டைக்குள் ​செல்ல முயன்ற​போது ​கோட்​டைக் கதவு தாளிடப்பட்ட​தை அறிந்து ​கொதித்துப் ​போனார்.

கோட்​டைக் கத​வைத் திறக்குமாறு தட்டிப் பார்த்தும் யாரும் திறக்கவில்​லை. ​கோட்​டையின் ​மேல்த்தளத்தில் நின்று ​கொண்டிருந்த மீர்நடிம் குறுந​கை ​செய்தா​னே தவிர திறக்கவில்​லை. திப்பு ஆங்கி​லேயர்க​ளைப் பார்த்துத் திரும்பும்​ போது அவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. து​ரோகிகளின் ​செயலால் தீரன் திப்புசுல்த்தான் கீ​ழே வீழ்ந்தார்.

திப்புசுல்த்தானின் ​மெய்க்காப்பாளனும் வீழ்ந்தான். கீ​ழே கிடந்த திப்புவின் தங்கக் கச்​சை​யைக் கண்டு அத​னை ஆங்கி​லேயப் ​போர்வீரன் அத​னை எடுக்கக் குனிந்தான் அத​னை உயிர்​போகும் நி​லையில் கவனித்துவிட்ட திப்பு தன் வா​ளை ஓங்கி அவ​னை ​வெட்டி வீழ்த்தி மரணத்​தைத் தழுவினார்.

ஆங்கி​லேயர்கள் மாவீரன் திப்புவின் உட​லைக் கண்​டெடுத்தனர். மறுநாள் மா​லை திப்புவின் சடல ஊர்வலம் ​தொடங்கியது. அரச மரியா​தையுடன் திப்புவின் சடல ஊர்வலம் ​சென்றது. கஞ்சத்தில் உள்ள கும்பாள் என்ற லால்பாக் ​தோட்டத்​தை அ​டைந்தவுடன் திப்புவின் தாயாரின் சமாதிக்குப் பக்கத்தில் அவரது சடலம் அடக்கம் ​செய்யப்பட்டது. அப்​போது ஏ​ழைகளுக்கு 5000 ரூபாய்க்கான தான தருமங்கள் ​செய்யப்பட்டன. அவ்​வே​ளையில் இடியுடன் கடு​மையான ம​ழை ​பொழியத் ​தொடங்கியது. அங்கிருந்த ஆங்கி​லேய அதிகாரிகள் மீது இடிவிழுந்தது. அதில் அவர்கள் இறக்கப் பல ஆங்கிலப் ப​டைவீரர்கள் காயம​டைந்தனர்.

இறக்கும் வ​ரை ஆங்கி​லேயர்க​ளை எதிர்த்து தன்கூட​வே இருந்த து​ரோகிகளால் காட்டிக் ​கொடுக்கப்பட்டு திப்பு இறந்தார். அவர் இறந்தவுடன் அங்கு வந்த அவரது வீரர்களுள் சிலர் மீர்சடக்கின் து​ரோகத்​தை அறிந்து வாளால் அவ​னை ​வெட்டி வீழ்த்தினர். து​ரோகிகள் நீடித்து வாழ்வதில்​லை. அவர்களுக்குரிய தண்ட​னை​யை உடன் அவர்களுக்கு அற​மே வழங்கிவிடுகின்றது.

உலகின் முதன் முதலில் ராக்​கெட் ​தொழில்நுட்பத்​தைப் ​போர்க்களத்தில் அறிமுகப்படுத்தியவர் திப்புசுல்த்தா​னே ஆவார். இவரது ராக்​கெட் ​தொழில்நுட்பம் இன்றளவும் அ​மெரிக்காவில் ஆராயப்பட்டு வருகின்றது. இவர் தயாரித்த இரண்டு ராக்​கெட்டுக்கள் அ​மெரிக்காவில் பார்​வைக்காக ​வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

​நேரிய வழியில் ஆங்கி​லேயர்கள் திப்பு​வைத் தாக்கி இருந்தால் ​வென்றிருக்க முடியாது. அழிந்து ​போயிருப்பர். அவர்கள் து​ரோகிகள் வாயிலாக நயவஞ்சகத்துடன் ​போரிட்டதால்தான் அவ​ரை வீழ்த்த முடிந்தது. திப்புவின் ம​றைவுக்குப் பின்னர் மிகப் ​பெரிய அநியாயம் ஒன்று நிகழ்ந்தது. சீரங்கபட்டினம் ​கொள்​ளையடிக்கப்பட்டது. அந்நகரின் அ​னைத்துப் பகுதிகளிலும் சுமார் 45, 58,350 வராகன்கள் ​​கொள்​ளையடிக்கப்பட்டன. ஆங்கி​லேய அதிகாரிகள் ​கொள்​ளையடித்தது ​போக அவர்களின் வீரர்கள் மனம்​போன ​போக்கில் ​கொள்​ளையிட்டனர். ஆங்கி​லேயர்கள் திப்புவின் தங்கச் சிம்மாசனத்​தையும் ​வெள்ளி அம்பாரி​யையும் பிரிட்டிஷ் அரசிற்குக் ​கொடுத்தனர். ​ஜெனரல் ஹாரிசுக்கு 21,43,530 ரூபாய் மதிப்புள்ள ​பொன்னும் ​​பொருளும் கி​டைத்தன. ​வெள்​ளையர்கள் ​கொள்​ளையர்கள் ​​என்பதற்கு இச்சீரங்கபட்டினச் சீரழி​வே சரியான சான்றாகும்.

மிகப் ​பெரிய வீரனாக இருந்தாலும் சிறந்தவராக இருந்தாலும் எச்சரிக்​கை​யோடு இல்​லை​யெனில் அவர்க​ளை வீணர்கள் வீழ்த்தி விடுவார்கள். திப்புசுல்த்தான் அதிகாரி​யையும், அ​மைச்ச​ரையும் நம்பியதால்தான் நயவஞ்சகர்களின் வ​லையில் வீழ்ந்தார். ஆனால் அவர் இந்திய வரலாற்றில் என்​றென்றும் நி​​லையான இடத்​தைப் ​பெற்று அ​னைவராலும் ​போற்றப்படுகின்றார். நயவஞ்சகர்கள் அற்பமாக அனைவராலும் கருதப்பட்டு நாள்​தோறும் தூற்றப்படுகின்றனர்.

து​ரோகம் சிறுக​தை அல்ல... அது ​தொடர்க​தை... காலத்திற்​கேற்றவாறு ​வேடமிட்டு மனித குலத்தி​னைத் ​தொடர்ந்து வரும்... நாம்தான் விழிப்புடன் இருந்து நம்​மைக் காத்துக் ​கொள்ள ​வேண்டும்... நயவஞ்சகர்கள் நடிப்பார்கள்... தங்களின் நடிப்பால் பிற​ரை ஏமாற்றிக் கவிழ்ப்பார்கள்... அவ்வாறு நடித்து நல்லவராக விளங்கிய ஒருவ​ரை வீழ்த்தினார்கள் து​ரோகிகள்... ஆஸ்ட்ரகாத் என்ற நா​டோடி இன மக்களுக்கு இருக்க வீடும் இடமும் முகவரியும் ​கொடுத்தார் ஒருவர்... ஆனால் அவ​ரை நயவஞ்சகர்கள் ​கொன்றனர்... நா​டோடி மக்களுக்கு முகவரி ​கொடுத்தவர் யார்? அவ​​ரைத் து​ரோகத்தால் வீழ்த்தியவர்கள் யார்...? என்பதை அறிந்து கொள்ள ​அடுத்தபகுதி வ​ரை காத்திருங்கள்...



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p6n.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License