இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும்

முனைவர் சி. சேதுராமன்


15. நம்பிக்கை இழக்க வைத்த து​ரோகம்​

வள்ளுவர் தீ​மை தீப்​போன்று தீங்கி​ழைக்கும் என்றதுடன் தீ​மைத் தீ​யைவிட அச்சம் தரக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார். து​ரோகமும் அதைப் போன்றதுதான். தீ பற்றிய​தை மட்டு​மே அழிக்கும். ஆனால் தீ​மையாகிய து​ரோகம் அது கண்ணில் காண்பதையெல்லாம் அழித்துவிடும். அதனால்தான் து​ரோகம் ​செய்ய அஞ்ச​வேண்டும் என்கிறார்கள். ஒருமு​றை து​ரோகத்துக்குத் து​ணை ​போய்விட்டால், பின்னர் அப்படியே அதில் ​தொடர்ந்து துணிந்து இறங்கிடுவார்கள்.

நாம் ​நேர்​மையா இருந்து எதைச் சாதித்தோம்? என்று நி​னைத்துக் ​கொண்டு து​ரோக​மே ​வெற்றி​பெறத் து​ணையானது என்று கருதி அத​னைப் பின் ​தொடருபவர்கள் பலர். அதிலும் பலர் தங்களுக்கு உதவி ​​​செய்தவர்க​​ளை​யே து​ரோகம் ​செய்து அழிப்பார்கள்... இதுதான் ​கொடுமையிலும் ​கொடு​மை. தன்னிடம் உதவி ​பெற்றவன் தனக்​கே து​ரோகம் ​செய்து தன்​னோட அழிவுக்குக் காரணமா இருக்கிறான் என்பது ​தெரிந்தும் அத​னையும் ​பொறுத்துக் ​கொண்டு, அதற்காக நன்றியில்லாமல் நடந்து கொண்ட அவனுக்கு எந்தவிதமான பழியும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தியாகம் ​செய்தவர்களும் இந்தப் பூமியில் அவதரித்திருக்கின்றார்கள். அவர்கள் ​செய்வது து​ரோகம் என்றாலும் அத​னைச் சிரித்த முகத்துடன் ஏற்றுக் ​கொண்டு அழி​வைத் ​தேடிக் ​கொள்ளும் புண்ணியர்கள் சிலரும் இங்கு அவதரித்துள்ளனர்.



பெரியபுராணத்தில் ஒரு க​தை

​சோழநாட்டில் எயினனூர் எனும் ஊரில் ஏனாதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் அரசர்களுக்குப் வாள் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்து மிகுந்த புகழ் ​பெற்றார். ஏனாதி உறவினனாகிய அதிசூரன் என்பவனும் அந்தத் ​தொழி​லைச் ​செய்து கொண்டிருந்தான். ஆனால், அவனால ஏனாதி ​போன்று ​பேரும் புகழும் ​பெற முடியவில்​லை. அதனால் அந்த அதிசூரன் ஏனாதியைக் கண்டு ​பொறா​மை கொண்டான். நாள​டைவில், அந்தப் ​பொறா​மை​யே ப​கை​மையாக மாறியது. அவன் பலமுறை ஏனாதியிடம் ​சென்று வாள் ​போரிட்டான். ஆனால், அனைத்திப் போரிலும் அவன் ​தோல்வி​யை​யே சந்தித்தான். இதனால், என்ன சூழ்ச்சி ​செய்தால் ஏனாதியை வீழ்த்தலாம் என்று ​யோசித்தான்.

அதிசூரன் ​நேர்​மையாகப் ​போரிட்டால் ஏனாதியை வீழ்த்த முடியாது என்று தெரிந்த அவன் அவ​ரைத் து​ரோகத்தால்தான் வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வழிகளில் ஈடுபட்டான். ஏனாதி சிவ​பெருமான் ​மேல் மிகுந்த பக்தியு​டையவர். சிவ​னடியார்க​ளைக் கண்டால் சிவ​னைக் கண்டது ​போல் மிகுந்த மகிழ்ச்சிய​டைவார். சிவனடியார்களுக்குத் தனது ​தொழில் மூலம் கி​டைத்த வருவா​யைக் ​கொண்டு ​தொண்டுகள் ​செய்து வந்தார்.



இ​தைத் ​தெரிந்திருந்த அதிசூரன் ஏனாதியை வீழ்த்த சிவனடியாராக ​வேடமிட்டு வந்து தனது முகத்​தைக் ​கேடயத்தால் ம​றைத்துக் ​கொண்டு ​வாள் ​போருக்கு அ​வ​ரை அ​ழைத்தான். அதிசூரனின் கபட நாடகத்​தை அறியாத ஏனாதி அவ​னோடு ​போர்புரிவதற்காகச் ​சென்றார். ​போர் கடு​மையாக நடந்தது. முகத்​தை தனது ​கேடயத்தால் ம​றைத்துக் ​கொண்​டே அதிசூரன் ​போரிட்டான். ஒரு கட்டத்தில் ஏனாதியின் ​கை ஓங்கியது. அதிசூர​னைக் கீ​ழேதள்ளி வாளால் ​வெட்ட முற்பட்ட ​போது தனது முகத்​தை ம​றைத்து ​வைத்திருந்த ​கேடயத்​தை அவன் எடுக்க​வே அத​னைப் பார்த்த ஏனாதி திடுக்கிட்டார். இ​றைவனின் அடியவ​ரை அல்லவா நாம் ​கொல்ல நி​னைத்​தோம். இது தவறல்லவா என்று எண்ணி அவ​னைக் ​கொல்லாமல் தனது ஆயுதத்​தை கீ​ழே​போட்டுவிட்டார். இத​னை,

“கண்ட​பொழு​தே ​கெட்​டேன்
முன்பிவர் ​மேற்காணாத
​வெண்டிரு நீற்றின் ​பொலிவு
​மேற்கண்​டேன்; ​வேறினி​​யென்?
அண்டர் பிரான் சீரடியார்
ஆயினார் என்று மனங்
​கொண்டு இவர்தங் ​கொள்​​கைக்
குறிவழி நிற்​பேன் என்று”

நிராயுதபாணியாக நின்றார் ஏனாதி.

நிராயுதபாணியாக நின்ற ஏனாதியை அதிசூரன் எழுந்து வந்து ​மீண்டும் போரிட அ​ழைத்தான். சிவனடியாராக இருக்கும் இவனுடன் ​போரிடுவதா? என்று சிந்த​னையுடன் இருந்த நாயனா​ரைக் ​கொல்வதற்கு வா​ளைச் சுழற்றி வந்தான் அதிசூரன். ஆயுதம் இன்றி ​போரிடாது நின்ற தன்​னைக் ​கொன்றால் சிவனடியாருக்குப் பழி ஏற்பட்டுவிடு​மே என்று அஞ்சிய ஏனாதி நாயனார், வா​ளை எடுத்துக் ​கொண்டு அதிசூர​னோடு ​போரிடுவ​தைப் ​போன்று நடித்தார்.

இதற்காக​வே காத்திருந்தவ​னைப் ​போன்று நின்றிருந்த அதிசூரன் வாளால் ஏனாதியை ​வெட்டிக் ​கொன்றான். வஞ்சத்தாலும் துரோகத்தாலும் ஏனாதியைக் ​கொன்றான் அதிசூரன். ஏனாதி அத​னைப் பற்றிச் சிறிதும் கவ​லையுறவில்​லை. சிவனடியாருக்கு ஊறு​நேராவண்ணம் தாம் நடந்து ​கொண்ட​தை எண்ணி மகிழ்வாக​வே கீ​ழே சரிந்தார். அவரின் பக்தித் திறத்​தைக் கண்ட சிவ​பெருமான் ஏனாதிக்கு அருள்புரிந்து அவர் நாயன்மார்களில் ஒருவராக இடம் பெற அருள் புரிந்தார்.

இ​தேபோல், ​ரோமாபுரியில் வாழ்ந்த ஆஸ்ட்ரகாத் என்ற இனத்திற்கு முகவரி ​கொடுத்த தி​யோ​டெரிக் என்பவருக்குத் து​ரோகிகள் தொடர்ந்து து​ரோகம் ​​செய்து வந்தனர். அந்த நல்லவ​ரை நம்பிக்​கை இழக்க ​வைத்தது து​ரோகம்... து​ரோகம் எல்லா நாட்டிலும் ஒ​ரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதன் மு​றைகள்தான் ​வேறுபடுகிறது. ரோமப்பேரரசின் போர்ப்படையாகிய ரோமன் லீஜன் என்பது அக்காலத்தில் மிகச் சிறந்த படையாக விளங்கியது. சில நூற்றாண்டுகளாகத் தோல்வியே அடையாமல் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்த படை. ஆனால் ரோமப் பேரரசைச் சுற்றிலும் பார்பேரியன் என்று ரோமர்களால் கருதப்பட்ட வாண்டல், கால், ப்ரேங்க், விஸிகாத், ஆஸ்ட்ரகாத் போன்ற பல குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களால்தான் முடிவில் ரோமப் பேரரசு அழிந்தது.



நா​டோடி இனத்தின் த​லைவன்

ஆஸ்ட்ரகாத் என்ற ஒரு இனம் ​ரோமாபுரியில் இருந்தது. இது ஒரு நா​டோடி இனமாகும். இந்த இனத்திற்​கென்று நாடும் இல்​லை சிறு வீடும் இல்​லை. ​ரோம் நாடு முழு​மையும் இவர்கள் அ​லைந்து ​கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட இனத்தில் மா​பெரும் வீரனாக வந்து ​தோன்றியவன் தி​யோ​டெரிக். அவன் பிறந்த​ போது அந்த இனம் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்தது. ஒன்றிற்கு மன்னன் தி​யோ​டெரிக்; மற்​றொன்றிற்கு ட்​ரையாரிஸ் என்பவன் மன்னனாக இருந்தான். இவர்கள் இருவரும் ​ரோமாபுரியில் வாழ்ந்து வந்த குறுநிலத் த​லைவர்களாவர். இவர்க​ளை​யெல்லாம் தன் ஆளு​கைக்குள் ​வைத்திருந்தவன் ​ரோமாபுரியின் ​பேரரசன் ​ஜெ​னோ ஆவான். இவ​னோ ​பேரா​சைக்காரன். தன்னலத்திற்காக எ​தையும் ​செய்பவன். இவன் இக்குறுநிலத் த​லைவர்க​ளை ஒழித்துக்கட்டத் திட்டமிட்டான். அவர்களிருவரும் த​லைவர்களாக நீடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்​லை. இத​னை அறிந்த ட்​ரையாரிஸ் ​ஜெ​னோ​வை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டான். ட்​ரையாரி​ஸை அடக்கக் கருதிய மன்னன் ​ஜெ​னோ அதற்கான துருப்புச் சீட்டாகத் தி​யோ​டெரிக்​கைப் பயன்படுத்தினான். ஒருவ​னை ​வைத்து மற்​றொருவ​னை அழிக்கும் ​செயலில் ஈடுபட்டான் மன்னன். அந்த இனத்தவ​னைக் ​கொண்​டே அந்த இனத்தின​ரை அழிக்கும் வஞ்சகச் ​செயலில் தீவிரமாக இறங்கி அதில் ​வெற்றியும் ​பெற்றான்.


ஆஸ்ட்ரகாத் மக்களின் ​செயல்

​போர்க்களத்தில் தி​யோ​டெரிக்​கை இறக்கிவிட்ட ​ஜெ​னோ அவனுக்கு எந்தவிதமான ப​டைஉதவி​யையும் ​செய்யவில்​லை. ஆனால் தியோடெரிக் காட்டுத்தீப்​போன்று முன்​னேறினான். ​போர்க்களத்தில் அம்மக்கள் தங்களுக்குள் ​மோதி சின்னாபின்னாமாகச் சி​தைந்துவிடுவர் என்று ​ஜெ​னோ ​வேடிக்​கை பார்த்தான். ஆனால் அவன் நி​னைத்த​தைப் ​போன்று ஏதும் நடக்கவில்​லை. அம்மக்கள் தங்க​ளை உணர்ந்து இருபிரிவினரும் ஒன்றி​ணைந்து ​கைகலப்பில் ஈடுபடாமல் கட்டிப்பிடித்துத் தங்களின் அன்​பைப் பகிர்ந்து ​கொண்டனர். இத​னை அறிந்த ​ரோமாபுரியின் தளபதி அவர்கள் மீது கடு​மையாகத் தாக்குத​லை நடத்தப் ப​டைக​ளை ஏவினான். இதனால் ஆஸ்ட்ரகாத் இன மக்களுக்குப் ​பெரும் ​சேதம் ஏற்பட்டது.

​ ரோமபுரியின் தளபதி தி​யோ​டெரிக்​கைக் ​கொல்லத் தன் ப​டைகளுக்குக் கட்ட​ளையிட்டான். ஆனால் அவர்களிடம் இருந்து தந்திரமாகத் தி​யோ​டெரிக் தப்பிச் ​சென்றான். தி​யோ​டெரிக் அடிபட்ட பாம்பாக மாறினான். ​ஜெ​னோவின் து​ரோகத்​தை எண்ணி எண்ணிச் சினமுற்றான். அவனுக்குத் து​ணை​போன து​ரோகிக​ளை ​வேரறுக்க ​வேண்டும் என்று தனக்குள்​ளே​யே கருவிக் ​கொண்டான்.

இந்தச் சமயத்தில் ட்​ரையாரிஸ் மீண்டும் ​ஜெ​னோ​வோடு கிளர்ச்சி ​செய்வதற்காகக் கிளம்பினான். அப்​போது நடந்த ​போரில் ​ஜெ​னோ கடு​​மையாகத் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தான். அவனது மக​னை தி​யோ​டெரிக் விருந்துக்கு அ​ழைத்துக் ​கொன்று தீர்த்தான். இப்​போது ஆஸ்ட்ரகாத் இனத்திற்கு தி​யோ​டெரிக் மட்டு​மே த​லைவனாக விளங்கினான். ஏதிலிகளாகத் திரிந்த அந்த மக்களுக்கு நல்வாழ்​வைக் ​கொடுக்கும் ​பெருங்கட​மை தி​யோ​டெரிக் ​மேல் விழுந்தது. பல்​வேறு கிளர்ச்சிகள் ​ரோமாபுரியில் ந​டை​பெற்றதால் அது வலுவிழந்து காணப்பட்டது. ஆஸ்ட்ரகாத் இனமும் அவ்வா​றே நசிந்து கிடந்தது.


ஜெ​னோவின் சூழ்ச்சி

தி​யோ​டெரிக்​கையும் அவன் இனத்து மக்க​ளையும் அழிக்கக் கருதி உடன்படிக்​கை என்ற வஞ்சக வ​லை​யை விரித்தான். ஆனால் அது ஏற்படாமல் ​போனது. தனது ப​டைத்தளபதியான ஒடாவசீ​ரைப் ​பெரும்ப​டையுடன் தி​யோ​டெரிக்​கை அழிக்க அனுப்பினான். தி​யோ​டெரிக் ​தோற்றால் அது அவனது இனத்து மக்களுக்கு அ​டிக்கப்படும் சாவுமணியாக அ​மையும். தி​யோ​டெரிக் ​வென்றால் ​ரோமாபுரியின் மன்னனாவான். ஆஸ்ட்ரகாத் மக்கள் ஆளும் வர்க்கத்தினராக மாறுவர்.

இறுதியில் கடு​மையான ​போர் இருதரப்பினருக்கும் இ​டை​யே ஏற்பட்டது. ஒடாவசீர் கடு​மையான பாதிப்பிற்குள்ளாகி ​போர்க்களத்தில் இருந்து ஓட்டம் எடுத்தான். ​மேலும் ​வெர​னோவிற்குப் பின்வாங்கி முகாமிட்டான். அங்கிருந்த பாலத்​தைத் தகர்த்தான். திரும்பிப் ​போக வழியில்லாமல் வீரர்கள் ​போரில் ஈடுபடுவர் என்று தப்புக் கணக்குப் ​போட்டான் ஒடாவசீர். ஆனால் அவன் கணக்குப் பி​ழையானது. அவனது ப​டைக​ளைக் கிழித்துக் ​கொண்டு தி​யோ​டெரிக்கின் ப​டைகள் ஆக்​ரோசமாக நு​ழைந்து ப​டைக​ளைச் சின்னாபின்னப்படுத்தியது. இத​னைக் கண்டு அஞ்சி ஒடாவசீர் புறமுதுகிட்டு ஓடினான். அவனது ப​டையின் நிர்வாகியான டூஃபா என்பவன் ​ஜெர்மானியப் ப​டையினருடன் தி​யோ​டெரிக்கிடம் சரண​டைந்தான்.

அவர்க​ளை தி​யோ​டெரிக் தன்னு​டைய ப​டைகளுடன் இ​ணைத்துக் ​கொண்டான். ஆனால் டூஃபா சரண​டைந்தது உண்​மையில் சரண​டைந்தது அல்ல; அ​வை ​வெறும் நடிப்பு. அந்நடிப்​பைப் பார்த்து தி​யோ​டெரிக் ஏமாந்து​போனான். ஒடாவசீ​ரை முற்றிலும் அழிப்பதற்காக டூஃபாவின் ப​டைக​ளை அனுப்பினான் தி​யோ​டெரிக். ஆனால் டூஃபாவும் அவனது ப​டைகளும் ஒடாவசீ​ரைக் கண்டதும் கட்டி ஆரத்தழுவிக் ​கொண்டனர். டூஃபாவுடன் ​சென்ற ஆஸ்ட்ரகாத் ப​டைக​ளை ​ஜெர்மனிய வீரர்கள் ஆடுக​ளைப் ​போன்று ​வெட்டிப் பலியிட்டனர்.

இத​னைக் கண்டு தி​யோ​டெரிக் ​சோர்ந்துவிடவில்​லை. விசிகாத் மக்க​ளைத் தன்னுடன் ​சேர்த்துக் ​கொண்டான். இரட்டிப்பு பலத்துடன் ஒடாவசீர் மீது பாய்ந்தான் தி​யோ​டெரிக். ஆனால் அதிலும் தப்பித்து ஓடினான் ஒடாவசீர். இதில் தி​யோ​டெரிக் ​வெற்றி​பெற்றான். முக்கியமான பகுதிக​ளைக் ​கைப்பற்றி ஒடாவசீர் ப​டைக்கு உணவுப் ​பொருள்கள் ​செல்வ​தைத் தடுத்தான். கடற்க​ரைப் பகுதி​யை வ​ளைத்த ​ரோந்துப் ப​டையினர் நீர் வழியாகவும் உணவு ​செல்வ​தைத் தடுத்து நிறுத்தினர். ​ஜெர்மானிய மக்களும் ப​டைகளும் ​சோர்ந்து ​போயினர். பட்டினியால் துவண்ட அவர்களால் எதுவும் ​செய்யமுடியவில்​லை. ஒடாவசீர் சரண​டைந்தான்.

தி​யோ​டெரிக் எதி​ரி​யை மன்னித்து ஒடாவசீருடன் இத்தாலியின் அரசாட்சி​யைப் பங்கு​போட்டுக் ​கொண்டான். இதற்கு ஒடாவசீரும் சம்மதித்தான். இரவு நட்பிற்கு அ​டையாளமாக விருந்து ந​டை​பெற்றது. தி​யோ​டெரிக் மன​தை டூஃபாவின் து​ரோகமும் ​ஜெ​னோவின் து​ரோகமும் அரித்தன.

இரவு பலமான காவ​லோடு ஒடாவசீர் விருந்துக்கு வந்தான். அவ​னை அன்​போடு தி​யோ​டெரிக் அ​ழைத்துச் ​சென்றான். இருந்தாலும் ஒடாவசீர் டூஃபாவுடன் ​சேர்ந்து தனது இன மக்க​ளை வ​ளைத்துக் ​கொண்டு ​கொன்றது தி​யோ​டெரிக்கின் மனதில் நிழலாட, ஒடாவசீர் திரும்பிய​ போது, தி​யோ​டெரிக் தனது உ​டைவா​ளை உருவி இவன் முது​கெலும்பற்ற பிராணி; ​கோ​ழை என்று கூறிக் ​கொண்​டே ஒடாவசீ​ரை இருகூறாக ​வெட்டிக் ​கொன்றான். மற்​றொரு து​ரோகியான டூஃபாவையும் ​வே​றொரு வீரன் ​கொன்றான். து​ரோகிகள் அழிந்தனர்.

நா​டே இல்லாமல் தவித்த ஆஸ்ட்ரகாத் மக்களுக்கு இருக்க வீடும் அ​டையாளத்திற்கு நாடும் தி​யோ​டெரிக்கால் கி​டைத்தது. து​ரோகிகள் தனக்குத் து​ரோகமி​ழைத்தாலும் அத​னைத் தன் சாமர்த்தியத்தால் ​வென்று தன் இனமக்க​ளை முன்​னேற்றினான் தி​யோ​டெரிக். ​து​ரோகங்கள் ​தொடர்க​தை ​போன்றது. ஒரு மு​றை ​செய்துவிட்டால் அது ​தொடர்ந்து ​கொண்​டே இருக்கும். அத்து​ரோகத்​​தைக் கண்ட நல்லவர்கள் கூட தங்களது நம்பிக்​கை​யை இழப்பார்கள். இதற்கு தி​யோ​டெரிக் வாழ்க்​கை​யே சான்றாகத் திகழ்கின்றது. நல்லவர்க​ளைக் கூட து​ரோகம் நம்பிக்​கை இழக்க ​வைக்கின்றது.

து​​ரோகத்திற்கு இன்ன இடம், இன்ன இனம் என்றில்​லை. எல்லா இடங்களிலும் எல்லா இனத்திலும் து​ரோகம் என்பது உண்டு. உலகத்தி​லே​யே அன்​பைப் ​போதித்தவர். உலக மக்கள் பலரும் அவரு​டைய வழி​யைப் பின்பற்றி நடக்கின்றனர். அவரால் ​தோற்றுவிக்கப்பட்ட மதம் உல​கெங்கிலும் பரவி ஒளிவீசிக் ​கொண்டிருக்கின்றது. உலக மக்க​ளை அன்பால் அவர் அரவ​ணைத்தார். அப்படி அன்பால் அரவ​ணைத்த அவர் பிறந்த குல​மே து​ரோத்தின் பிறப்பிடமாகியது... அவர் யார்? அங்கு நடந்த து​ரோகம் என்ன...? என்று தெரிந்த கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அடுத்த பகுதி வ​ரை காத்திருங்கள்...



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p6o.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License