இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 7

ஔவையார் பார்வை

முனைவர் மு. பழனியப்பன்


7. சொல்லாமல் செய்வதே சிறப்பு

மனிதர்களில் இருவகை உண்டு என்று கணக்கிடுகிறார் ஔவையார். அவரின் கணக்கு புதுமையானதாக இருக்கிறது. மனிதர்கள் எல்லோருக்கும் கண்கள், காதுகள், மூக்கு, கைகள், கால்கள் எல்லாம் ஒரே அமைப்பில், ஒரே செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு இவை ஒன்றாக இருப்பதால் எல்லா மனிதர்களும் ஒரே நிலைப்பட்டவர்கள் என்று சொல்லிவிட இயலுமா?

உறுப்புகள் ஒன்றானாலும் மனிதர்க்கான சக்தி, அறிவு, உள்ளம் என்று பலவும் வேறுபடுகிறதே... ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார் ஔவையார்.

மனிதர்களின் உறுப்புகள் ஒன்றானாலும் அவர்களின் செயல்பாடுகள் இருவகைகளில் அமைகின்றன.

சொல்லாமலே செய்யத் தெரிந்தவர்கள் ஒரு குழுவினர். சொல்லித் தந்தும் செய்யத் தெரியாதவர்கள், செய்ய மறுப்பவர்கள் மற்றொரு குழுவினர்.

மரங்களிலே இருவகை உண்டு. விதைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிகளைத் தரும் மரங்கள் ஒரு புறம். பூக்களைத் தரமாலே காய்களைத் தரும் மரங்கள் மற்றொரு புறம். பூக்காமலே காய்க்கும் மரங்கள் உண்டா? நிறைய இருக்கின்றன. அத்தி மரம், ஆலமரம், பலா மரம், அரசமரம் போன்ற மரங்கள் பூவாமல் காய்களைத் தந்து நிற்கும் மரங்கள் ஆகும்.

பூக்காமலே காய்க்கும் மரங்களைப் போன்றவர்கள் முதல் குழுவினர். அதாவது சொல்லாமலே செயல்களைப் புரிந்து கொண்டு செய்யத்தக்கவர்கள். இவர்கள் மிக்க வலிமை உடையவர்கள். ஒரு இடத்திற்குச் சென்றால் சொல்லாமலே அச்செயலின் தன்மைகளை உணர்ந்து அறிந்து செயல்படுவர்கள் இவ்வகையினர்.

நிலத்தில் விதைகளை விதைக்கின்றோம். நீர் வார்க்கின்றோம். இருந்தாலும் பல விதைகள் முளைக்கின்றன. சில விதைகள் முளைக்காமல் பயனற்றுப் போய்விடுகின்றன. இதுபோன்று சொல்லித் தந்தும் செய்யாத பல மனிதர்கள் இருக்கின்றார்கள். இவ்விரு குழுவினரில் சிறந்தவர்கள் யார் என்பது சொல்லாமலே தெரிந்துவிடும்.

ஒரு கல்லூரி ஆசிரியர் மாணவர்களிடம் நாளைக்குச் செய்ய வேண்டுவன குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நாளைக்கு மாணவர்களாகிய நீங்கள் ஒரு சமுதாயப் பணிக்குச் செல்ல இருக்கிறீர்கள். திருவிழாவில் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, அனைவரும் திருவிழாவில் பங்கெடுத்துக் கொள்ளும் நல் வாய்ப்பினை நீங்கள் பெற்றுத்தரவேண்டும். ஆகவே அனைவரும் வெள்ளை நிறச் சட்டை, வெள்ளை நிற கால்சட்டை அணிந்து வரவேண்டும் என்று மாணவர்களிடம் சொன்னார். அப்போது மாணவர்கள், ஐயா எங்களிடம் வெள்ளைச் சட்டை உள்ளது. வெள்ளை கால்சட்டை இல்லை என்றனர். வெள்ளை கால்சட்டை என்பது வேறொன்றும் இல்லை. வெள்ளை பாண்ட் இதைத்தான் நான் வெள்ளைக் கால்சட்டை என்றேன் என்று ஆசிரியர் விளக்கம் தந்தார்.

அப்போது மாணவர்கள், ஐயா அதுதான் ஐயா வெள்ளைக் கால்சட்டை, வெள்ளை பாண்ட் எங்களிடம் இல்லை என்றார்கள். திருவிழாவிற்காக அனைவரையும் வெள்ளை கால் சட்டை தைக்கச் சொல்லமுடியாது. தைப்பதற்கான நேரமும் இல்லை, பொருளும் இல்லை. எனவே வெள்ளைச் சட்டை, கருப்பு கால்சட்டை அதாவது கருப்பு பாண்ட் போட்டுக் கொண்டு மாணவர்கள் வரவேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பெற்றது.

நன்றாகக் கவனியுங்கள். இப்போது ஒரு மாணவர் ‘‘ஐயா கருப்பு சட்டை வெள்ளை பாண்ட் தானே போட்டு வரவேண்டும்’’ என்றார். எல்லா மாணவர்களும் கொல் என்று சிரித்தார்கள். அதாவது கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். ஆனால் அந்த மாணவர் மனதில் விழுந்தது கருப்பு சட்டை, வெள்ளை பாண்ட்.

ஆசிரியர் கோபப்படாமல், எப்படி ஆசிரியர் சொல்வதைத் தப்பாகவே புரிந்து கொள்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அந்த மாணவர் ‘ஐயா கோபித்துக் கொள்ளாதீர்கள். கருப்பு சட்டை, வெள்ளை பாண்ட்தான் என்னிடம் உள்ளது, வெள்ளைச் சட்டை இல்லை’’ என்றான்.



இந்தப் பதிலில் மாணவரின் குறும்பு இருப்பதாகக் கருதினாலும் கருதலாம். அல்லது சொல்லாமல் செய்பவர்கள் வல்லவர்கள் நல்லவர்கள். சொல்லியும் செய்யாதவர்கள் முன்னேற்றத்தை இழப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே- தூவா
விதைத்தாலும் நன்று ஆகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு

என்பது ஔவையாரின் நல்வழிப் பாடலாகும்.

சொல்லாமல் செயலாற்றும் வல்லமை உடைய முதல் குழுவாக நம்மை இருக்கச் சொல்லி இப்பாடல் வலியுறுத்துகிறது. இவர்களே உலகில் முதன்மையானவர்கள். உலகம் வெற்றிகரமாக நடக்க இவர்களே தேவையானவர்கள்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p7g.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License