இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

ஔவையார் பார்வை

முனைவர் மு. பழனியப்பன்


10. மறையா வாழ்க்கை

மனிதமனம் விந்தையானது. மனித மனமானது தான் சார்ந்திருக்கும் பொருளோடு உறவாடி, அதன் தன்மைகளை உடன் பெற்றுவிடுவது. சார்ந்திருக்கும் பொருள் மாற்றமடைந்தால் மனமும் தன் தன்மையில் மாறிவிடுகிறது. சிகப்பு நிறம் பிடிக்கிறது என்றால் சிகப்பு நிறப்பொருள்களையே மனம் தேடுகிறது. சில நாள்களில் யாரோ ஒருவர் சொல்ல நீல நிறம் பிடித்துவிடுகிறது. இதற்குப் பின் நீலநிறமே தன் நிறமாக மாறிவிடுகிறது. இப்படித்தான் மனித மனமும் அப்போதைக்கப்போது தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது.

நல்லவர்களோடு சேர்ந்தால், அவர்களுடன் நூலகத்திற்குச் செல்கிறது. வல்லவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடன் தொழில் பழகப் போகிறது. அல்லவர்களுடன் சேர்ந்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடுகிறது. மீட்டு எடுக்கமுடியாமல் அதல பாதாளத்திற்கு தீமைக்குழியில் விழுந்து விடுகிறது.

விஷமுள்ள பாம்புகள் புற்றுகளில் வசிக்கின்றன. விஷமில்லாப் பாம்புகளுக்கு புற்று அவசியம் இல்லை. நல்ல பாம்பு வாழ புற்று தேவை. ஏன் அதற்குப் புற்று தேவை? அதன் தீய குணத்தை அறிந்த மனிதன் அது புற்று இல்லாமல் இருந்தால் அதனைக் கொன்று ஒழித்துவிடுவான். அதனிடம் மனிதனைக் கொல்லும் விஷம் இருக்கிறது. பாம்பு பெரிதா, மனிதன் பெரிதா? என்ற போட்டியில் யாரும் வென்றுவிடலாம்.

தண்ணீர்ப்பாம்பு தண்ணீரிலேயே கிடக்கின்றது. அதற்கு விஷமில்லை. எனவே அதனை மனிதர்கள் துன்புறுத்துவதில்லை.

இந்தக் கருத்தை இன்னும் வேறுமாதிரி அணுகலாம். மனதில் வஞ்சம் இருப்பவர்கள் மறைந்து வாழ்வார்கள். மனதில் வஞ்சனை இல்லாதவர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்வார்கள். நல்லபாம்பிடம் விஷம் என்ற வஞ்சனை உள்ளது எனவே அது மறைந்து வாழ்கிறது. ஆனால் தண்ணீர் பாம்பிடம் விஷம் இல்லை. அது மறைந்து வாழ வேண்டிய அவசியமில்லை.

அப்படியானால் மறைந்து வாழ்பவர்கள் எல்லாம் வஞ்சனையாளர்களா? என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அதனை இன்னும் கூர்மைப்படுத்தி நம்மோடு வஞ்சனையாளர்கள் மறைந்து இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் எச்சரிக்கை உணர்வோடு நாம் இருக்க முடியும். வஞ்சனை செய்பவர்கள் வெளிப்பட நான் வஞ்சனை செய்பவன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு, தான் வேடிக்கை பார்க்கும் மறைமுக மனிதர்கள் அவர்கள். அவர்களை இனம் காணுவது மிகவும் கடினம். பகைத் தீயை வளர்த்த அவர்கள் அந்தத் தீயின் சுவாலையில் எரிந்துபோனவர்கள், சாம்பலில் நின்று கொண்டு சோககீதம் பாடுவார்கள். இதனையே;

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பார் கரவார்
கவரவிலா நெஞ்சத்தவர்

என்று பாடுகிறார் ஔவையார்.



எத்தனை பெரிய உண்மை. கரவுடையார் தம்மைக் கரப்பார். கரவிலா நெஞ்சத்தவர்கள் தம்மை மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நெஞ்சத்தில் வஞ்சனை உடையவர்கள் தம்மை மறைத்தே வஞ்சனைத் தீயை மூட்டுவர். இவர்களா செய்தார்கள்? என்று உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்களின் மறைமுகச் செயல்பாடுகள் இருக்கும்.

நல்லபாம்பின் உவமையைக் காட்டி நெஞ்சில் கரவுடையார் தன்மையை ஔவையார் பாடுகின்றார். நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்கள் என்ன பயனைப் பெறுவார்கள் என்றால் அதற்கு ஒரு பட்டியல் தருகிறார் ஔவையார்.

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்

என்பது அப்பட்டியல்.

வஞ்சனை இல்லாதவர்கள் நீர், நிழல் நிரம்பிய வயல்களைப் பெறுவர். பொதி பொதியாக நெல் போன்ற தானியங்களைப் பெறுவர். நல்ல புகழைப் பெறுவர். சிறப்பான வாழ்வினை வாழ்வர். நீடித்த ஆயுள் கிடைக்கும். ஊர் கிடைக்கும். பேர் கிடைக்கும்.

இத்தனையும் வஞ்சகம் செய்வார்க்குக் கிடைக்காது என்பதுதானே பொருள். எனவே நிலமும் பொதியும், நீடித்த ஆயுளும் வேண்டுமானால் வஞ்சனையை நாடாதே மனமே என்று அறிவுறுத்துகிறார் ஔவையார்.

மறையாமல் வாழ்பவர்களே என்றைக்கும் சரித்திரத்திலும் மக்கள் மனதிலும் மறையாமல் வாழ்பவர்கள் ஆவர்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p7j.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License